• Wednesday 22 January, 2025 08:08 AM
  • Advertize
  • Aarudhal FM

நாம் செய்யும் பிரசங்கம் எப்படி இருக்கிறது

இளம் தலைமுறை ஊழியர்களின் பிரசங்கங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன… தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்த்தால் அது துக்கத்தையே ஏற்படுத்துகிறது…..

ஆ…….. ஐ……….. ஊ…… ன்னு கத்துராய்ங்க…. மைக்கை உதட்டில் வைத்து கொண்டு ரிசீவ் பவர்…. ன்னு ஓயாமல் சொல்லி…. சொல்லி கழுதை போல கனைக்கிறார்கள்…. அதிலும் ஒரு பக்கம் ஒன் டு ரிதம் போட்டு காட்டு கத்தம் கத்தி…. ஹார்ட் அட்டாக் வராதவனுக்கெல்லாம் வந்திரும் போல…… டேய் என்னடா பண்றீங்க ன்னு உலகத்தாரின் பரியாசத்திற்கும் கேலி கிண்டலுக்கும் உரியதாக மாறுகிறது.

பிரசங்கம் செய்யும் போது மேடையில் அங்கும் இங்கும் வெறி பிடித்த நாயை போல அலைகிறார்கள்…. ஏன் என்று தெரியவில்லை. ஒரு இடத்தில் நின்று கொண்டு நிதானமாக பேசினால் என்ன…. இதை எங்கிருந்து கற்றுக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.நிதானமாக அழகாக தெளிவாக பேசலாமே… ரொம்பவே வேகம் வேகமாக பேசுகிறார்கள்…. அது மக்கள் மனதில் எப்படி நிற்கும். நிதானமாக பேசினால் தான் எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்கள் மனதில் இருக்கும். அது கிரியை செய்யும்.

எடுக்கிற வசனத்திற்கும் பிரசங்கத்திற்கும் சம்பந்தம் இல்லை… ஏதோ ஒரு வசனத்தை வைத்து பேசுகிறார்கள்…தேவ சமூகத்தில் கிடைக்கும் மன்னா இன்று மண்ணாகி போனது.

மற்ற ஊழியர்களுக்கு கீழ் உட்கார்ந்து கற்றுக் கொள்ள ஆசை இல்லை… மற்றவர்களின் பிரசங்கத்தை கேட்பதும் இல்லை மதிப்பதும் இல்லை…

மொத்தத்தில் வசனத்தை தெளிவாக பேசும் ஊழியர்கள் தேசத்தில் குறைந்து விட்டார்கள்.காரணம் வேதம் வாசிக்கும் தியானிக்கும் பழக்கம் ஊழியர்களிடம் இப்போது குறைந்து விட்டது.

அவரவர்களுக்கு ஏற்றப்படி வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். அதை குறித்து அவர்கள் எவருக்கும் பயப்படுவதில்லை.

நாம் செய்யும் பிரசங்கத்தில்…

இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைப்பட வேண்டும்.
இரட்சிப்பு
மனந்திரும்புதல்
உயிர்மீட்சி
புதுப்பிப்பு
சுத்திகரிப்பு
இயேசு கிறிஸ்துவின் வருகை
ஆத்தும ஆதாயம்
ஞானஸ்நானம்
பரிசுத்தத்தின் அவசியம்.
சபையின் நோக்கங்கள்
பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம்.. அதன் முக்கியத்துவம்.
பரலோகம்
தூதர்களின் பணிகள்
சாத்தானின் பொய்களும் அவனது தந்திரங்கள் என்னென்ன…
அவனின் முடிவு எப்படி இருக்கும்.
நரகம் பாதாளம்… யாருக்கு
கடைசி காலம் எப்படி இருக்கும்.

இப்படி அனைத்து சாரம்சமும் ஒரு பிரசங்கத்தில் இருக்க வேண்டும். ஒரு பிரசங்கி என்பவன் ஒரு துப்பாக்கி வைத்து இருப்பவனை போல அல்ல.. யாரையாவது குறிவைத்து சுட…. மாறாக அவன் ஒரு பெரிய அணுகுண்டை கையில் வைத்திருக்கிறவனுக்கு சமானம். ஒரு அணுகுண்டுக்கு இருக்கும் வல்லமையை விட பிரசங்கத்திற்கு அதிகம் வல்லமை உண்டு. காரணம் எந்த அணுகுண்டும் சரீரத்தை உடைக்க முடியும் ஆனால் இருதயத்தை உடைக்க முடியாது. பிரசங்கம் மட்டுமே மனிதர்களின் இருதயத்தை உடைக்கும் வல்லமை படைத்தது. பிரசங்கிகள் தேவனின் வாயாக இருக்கிறார்கள். தேவனுடைய ஆவியானவரே அந்த பாத்திரத்தில் இருந்து பேசுகிறார். ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் பிரசங்கிகள்.

அது மட்டுமல்ல இப்போது உள்ள கால சூழ்நிலையில் எல்லாருடைய கையிலும் மொபைல் கேமாராவோடு உள்ளது. எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டும் என்றாலும் பதிவு செய்யலாம் ஆகவே மிகவும் கவனத்துடன் பிரசங்கம் செய்ய வேண்டும். இந்த கவனம் இல்லை என்று சொன்னால் கேலிக்கூத்தாக மாறி விடும்.

மொத்தத்தில் பிரசங்க மேடையில் தேவ பிரசன்னம் இல்லை…. தேவனுக்கு பயப்படும் பயம் இல்லை. ஏதோ ஒரு பட்டிமன்ற பேச்சாளர்களை போல பேசும் இவர்களை கொண்டு பரலோக ராஜ்ஜியத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை….

சிறுமிக்கு பாலியல் தொல்லை வளர்ப்புத் தந்தை கைது

மேட்டுப்பாளையம்,; சிறுமுகையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வளர்ப்புத் தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

சிறுமுகையை சேர்ந்த 15 வயது சிறுமி சற்று மனநலம் குன்றியவர். இவரது வளர்ப்புத் தந்தை கடந்த தீபாவளி பண்டிகையின் போது, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, பக்கத்து வீட்டு பாட்டி ஒருவரிடம், சிறுமி சொல்லியுள்ளார்.இதனால் சந்தேகம் அடைந்த அந்த பாட்டி, சைல்ட் ஹெல்ப் லைன் மூலமாக தொடர்பு கொண்டு குழந்தைகள் நல அலுவலரிடம் தெரிவித்தார். அவர்கள் வந்து ஆய்வு செய்ததில், வளர்ப்பு தந்தை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து சிறுமுகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வளர்ப்புத் தந்தையை பிடித்து, மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் அவரை போக்சோவில் கைது செய்தனர்.—-

15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை தந்தை கைது

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் கிராமத்தைச் சேர்ந்தவர் சார்லஸ் இவரது மனைவி இன்பத்தாய் இருவருக்கும் திருமணம் முடிந்து ஆண், ஒன்றும் பெண் ஒன்றும் உள்ளது.

இந்த நிலையில், தனது மகளான 15 வயது சிறுமிக்கு மது போதையில் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக தந்தை சார்லஸ் மீது கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த சிறுமி புகார் அளித்துள்ளார்..

இந்த நிலையில் காவல் ஆய்வாளர் கோகிலா பாலியல் தொல்லை அளித்த சார்லஸ் என்பவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக தந்தை தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது ஓட்டப்பிடாரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

அம்மாவின் போனில் ஆபாச வீடியோ பார்த்து கொடுமை

உலகம் எதை நோக்கிப் போகிறது என்றே தெரியவில்லை. 13 வயது சிறுவன் ஒருவன், 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் ஆந்திராவில் அடிகொப்பகா என்ற இடத்தில் நடந்துள்ளது. வீட்டுக்கு அருகில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது, இந்த கொடுமையை செய்திருக்கிறான். அம்மாவின் போனில் ஆபாச வீடியோ பார்த்துவிட்டு, இந்த குற்றத்தை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெற்றோரே கவனிங்க.

உஷார் மக்களே.. இப்படித்தான் ஏமாத்துவாங்க!

சைபர் க்ரைம் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், எப்படியெல்லாம் மோசடியாளர்கள் ஏமாற்றுவார்கள் என ஒரு லிஸ்ட்டை போலீசார் வெளியிட்டுள்ளனர். • உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துவிட்டதாக கூறி வீடியோ காலில் பணம் கேட்பார்கள் • 1% வட்டியுடன் லோன் தருகிறோம் என்பார்கள் • வாட்ஸ் அப்பில் SBI REWARDS என வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் திடீரென கால் செய்து OTP கேட்டால் சொல்ல வேண்டாம்.

பனி காலத்தில் ஏற்படும் சளி, மூக்கடைப்பு, தும்மல் குணமாக மருத்துவர் கூறுவது

பனி காலத்தில் ஏற்படும் சளி, மூக்கடைப்பு, தும்மல் குணமாக மருத்துவர் சிவராமன் கூறுவது என்ன?
நீங்கள் பனி காலத்தில் ஏற்படும் சளி, மூக்கடைப்பு, தும்மல் ஆகியவற்றால் அவதிப்படுகிறீர்களா? அப்படியென்றால், அவற்றில் இருந்து குணமாக மருத்துவர் சிவராமன் கூறியதை நாங்கள் இங்கே தருகிறோம்

காலத்தில் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டீஸ் இருப்பவர்கள், சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் ஆகிய நீர்க் காய்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.

நமது பாரம்பரிய இயற்கை உணவுகளில் உள்ள மருத்துவக் குணங்களையும் சித்த மருத்துவத்தில் உள்ள சிறப்புகளையும் அறிவியல் மொழியில் பேசி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பரப்பியவர் மருத்துவர் சிவராமன்.

நீங்கள் பனி காலத்தில் ஏற்படும் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டிஸால் அவதிப்படுகிறீர்களா? அப்படியென்றால், அவற்றில் இருந்து குணமாக மருத்துவர் சிவராமன் யூடியூப் சேனலில் கூறியதை நாங்கள் இங்கே தருகிறோம். சிலருக்கு பனிக் காலம் என்றாலே சளி, மூக்கடைப்பு, தும்மல் ஏற்படும். இது உடல்நிலை, சூடு காரணமாக ஏற்படுகிறது.

இப்படி பனிக் காலத்தில் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டீஸ் இருப்பவர்கள், சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் ஆகிய நீர்க் காய்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார். அப்படி, சாப்பிட வேண்டிய சூழல் இருந்தால், மிளகு தூவி சாப்பிட அறிவுறுத்துகிறார்.

அதே போல, பனிக் காலத்தில் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டீஸ் இருப்பவர்கள் இனிப்பு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், பால் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்.

சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டீஸ் இருப்பவர்கள், சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் ஆகிய நீர்க் காய்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.

நமது பாரம்பரிய இயற்கை உணவுகளில் உள்ள மருத்துவக் குணங்களையும் சித்த மருத்துவத்தில் உள்ள சிறப்புகளையும் அறிவியல் மொழியில் பேசி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பரப்பியவர் மருத்துவர் சிவராமன்.

நீங்கள் பனி காலத்தில் ஏற்படும் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டிஸால் அவதிப்படுகிறீர்களா? அப்படியென்றால், அவற்றில் இருந்து குணமாக மருத்துவர் சிவராமன் யூடியூப் சேனலில் கூறியதை நாங்கள் இங்கே தருகிறோம். சிலருக்கு பனிக் காலம் என்றாலே சளி, மூக்கடைப்பு, தும்மல் ஏற்படும். இது உடல்நிலை, சூடு காரணமாக ஏற்படுகிறது.

இப்படி பனிக் காலத்தில் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டீஸ் இருப்பவர்கள், சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் ஆகிய நீர்க் காய்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார். அப்படி, சாப்பிட வேண்டிய சூழல் இருந்தால், மிளகு தூவி சாப்பிட அறிவுறுத்துகிறார்.

அதே போல, பனிக் காலத்தில் சளி, மூக்கடைப்பு, தும்மல் என சைனசிட்டீஸ் இருப்பவர்கள் இனிப்பு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், பால் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்.

மேலும், சைனசிட்டீஸ் இருந்தாலும், ஜுரம், உடல்நலப் பிரச்னை இல்லை என்றால் தலைக்கு குளிக்கலாம் என்கிறார். மேலும், சுக்கு தைலம், நொச்சி தைலம் ஆகியவற்றை தேய்த்துக்கொள்ளலாம் என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார்.

சைனசிட்டீஸ் இருப்பவர்கள் தூதுவலை, கற்பூரவல்லி, வெற்றிலை, மிளகு ஆகியவற்றைப் போட்டு, 2 டம்ப்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து கால் டம்ப்ளராக்கி கசாயம் குடிக்க வேண்டும் என்று மருத்துவர் சிவமரான அறிவுறுத்துகிறார். மேலும், மிளகு பாவனம் செய்து சாப்பிடலாம் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

அப்பாவின் அன்பை விட ஐபோன் பெரிதா..?

அப்பாவின் அன்பை விட ஐபோன் பெரிதாகிபோன மகாராஷ்ட்ராவில் 10ஆம் வகுப்பு பயிலும் சிறுவன் ஒருவன், தனது தந்தையிடம் ஐபோன் வாங்கி தருமாறு கேட்டுள்ளான். ஏழை விவசாயியான அவனது தந்தையோ, தனது வறுமை நிலையை எடுத்துக் கூறி, அதை வாங்கி தர மறுத்துவிட்டார். இந்த ஆத்திரத்தில் அங்குள்ள மரத்தில் சிறுவன் தூக்கிட்டுக் கொள்ள, அதே மரத்தில் தந்தையும் தூக்கிட்டு உயிரை மாய்த்துவிட்டார். வறுமையிலும் தன்னை படிக்க வைத்த அப்பாவின் அன்பை விட, ஐபோன் பெரிதாகிவிட்டதா?

விசுவாசம் நமது வாழ்க்கையில் எப்போது எல்லாம் காணப்பட வேண்டும்

1) துன்பங்களில் – 2 தெச 1:4
2) உபத்திரவங்களில் – 2 தெச 1:4
3) பொல்லாங்கன் (பிசாசு) உடன் போராடும் போது – எபேசி 6:16
4) வியாதி நேரத்தில் – யாக் 5:15
5) ஜெபிக்கும் போது – மத் 21:21
6) இருதயம் கலங்கும் போது – யோ 14:1

யாரை கனம் பண்ண வேண்டும் ?

1) தாய், தகப்பனை – யாத் 20:12
2) புருஷனை – எஸ்தர் 1:20
3) மனைவியை – 1 பேதுரு 3:7
4) முதிர் வயது உள்ளவர்களை – லேவி 19:32
5) முடி நரைத்தவர்களை – லேவி 19:32
6) கர்த்தரை – நிதி 3:9
7) ராஜாவை – 1 பேது 2:17
8) கர்த்தருக்கு பயந்தவர்களை – சங் 15:4
9) உத்தம விதவைகளை – 1 திமோ 5:3
10) எல்லாரையும் – 1 பேது 2:17

கொள்ளையடிக்கிறவர்களுக்கு மாத சம்பளம் இலவச உணவு, பயண செலவு

IT-யில் வேலை பார்ப்பவர்களுக்கு இணையாக கொள்ளை கும்பலிலும் சலுகைகள் இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? உ.பி.யில் செல்போன் திருடும் கும்பல் மாதம் ₹15,000, இலவச உணவு, பயணச் செலவு என சலுகைகள் வழங்குகிறது. கொள்ளை சம்பவத்தில் ஒன்றில் கைதான பிறகு, ஜார்கண்டை சேர்ந்த மனோஜ்குமார் என்பவரது இந்த கும்பல் பற்றி தகவல் வெளிவந்துள்ளது.