• Monday 9 March, 2026 11:13 PM
  • Advertize
  • Aarudhal FM

2 மாத குழந்தையை அடுப்பில் போட்டு கொன்ற தாய்

தெலுங்கானா,

குழந்தை அழும்போது அருவரணைக்க வேண்டிய தாயே, குழந்தையை அடுப்பில் போட்டு கொரும் அரங்கேறியுள்ளது.
தெலுங்கானாவில், 2 நாட்களாக குழந்தை அழுதுகொண்டிருந்ததால் எரிச்சலடைந்த தாய், 2 மாத ஆண் குழந்தையின் வாயில் துணியை அடைத்து, கை கால்களை கட்டி எரியும் அடுப்பில் போட்டு கொன்றுள்ளார்.
கணவர் வேலைக்கு சென்றபோது இது நடந்துள்ளது. இந்நிலையில், இப்படியுமா நாட்டில் ஒரு தாய் இருக்கிறார் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்துள்ளது.

சொந்த ஊரிலேயே IT வேலை மெகா சர்ப்ரைஸ்

சொந்த ஊரிலேயே IT வேலை! நெல்லை, விருதுநகர், ஈரோட்டில் மினி டைடல் பார்க்! முதல்வர் 1800 மெகா சர்ப்ரைஸ்

சென்னை: தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை மாநிலத்தின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு செல்லும் உன்னத நோக்கில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்களை தமிழக அரசு மிகச்சிறப்பாக உருவாக்கி வருகிறது.. இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று புதிய மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக இந்த மூன்று முக்கியத் திட்டங்களுக்கும் இன்று அடிக்கல் நாட்டினார்.

3 மாவட்டங்களில் நவீன பூங்காதொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டங்கள் சுமார் 117 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ளன.. அதன்படி, திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டி கிராமத்தில் 39.06 கோடி ரூபாயிலும், விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு கிராமத்தில் 38.72 கோடி ரூபாயிலும், ஈரோடு மாவட்டம் கங்காபுரம் கிராமத்தில் 39.87 கோடி ரூபாயிலும் இந்த நவீனப் பூங்காக்கள் கட்டப்படவுள்ளன.

இந்த மினி டைடல் பூங்காக்கள் ஒவ்வொன்றும் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளன.. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், பி.பி.ஓ மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் இயங்குவதற்குத் தேவையான அனைத்து அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளும் இதில் இடம்பெறும்..நேரடி வேலைவாய்ப்புஒவ்வொரு பூங்காவிலும் தலா 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் என மொத்தம் 1,800 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு இதன் மூலம் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது..

ஏற்கனவே விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மினி டைடல் பூங்காக்கள் திறக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.. மேலும் திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புதிய மாவட்டங்களில் தொடங்கப்படும் இந்தத் திட்டங்கள் இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்..

இன்று ஸ்டாலின் அடிக்கல்இந்தத் திட்டங்களின் முக்கிய நோக்கமே அந்தந்த மாவட்டங்களில் வசிக்கும் படித்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு தங்களின் சொந்த ஊரிலேயே உயர்தரமான வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகும்.. இதனால் உள்ளூர் பகுதிகளில் சமூக-பொருளாதார வளர்ச்சி மேம்படுவதுடன், ஒட்டுமொத்த மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இது பெரும் வலுசேர்க்கும்..இன்று நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

சமூக நீதி மற்றும் சமத்துவ சிந்தனையில் ஈடுபட்ட ஆர். நல்லக்கண்ணு ஐயா இயற்கை எய்தினார்

R. Nallakannu (ஆர். நல்லக்கண்ணு) அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் தனித்த இடம் பிடித்த தலைவர்களில் ஒருவர்.அவர் எளிமை, நேர்மை, தியாகம் ஆகியவற்றின் உருவாக விளங்கினார்.1925 டிசம்பர் 26ஆம் தேதி திருவைகுண்டத்தில் பிறந்தார்.இளமையிலிருந்தே சமூக நீதி மற்றும் சமத்துவ சிந்தனையில் ஈடுபட்டார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) முக்கிய தலைவராக உயர்ந்தார்.விவசாயிகள் மற்றும் ஏழை மக்களின் உரிமைக்காக போராடினார்.பல முறை கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தார்.அவரது வாழ்க்கை முழுவதும் தியாகப்பாதையில் நடந்தார்.அரசியலில் இருந்தும் சொத்து சேர்க்காத தலைவர் என போற்றப்பட்டார்.அவரது எளிய உடை மற்றும் எளிய வாழ்க்கை அனைவருக்கும் எடுத்துக்காட்டு.நீர் வளம், நிலம், விவசாயம் குறித்து தீவிரமாக குரல் கொடுத்தார்.தமிழ்நாட்டின் நதிகள் இணைப்பு பற்றி தொடர்ந்து பேசினார்.மக்களோடு நெருக்கமாக பழகும் பணிவு அவருக்கு இருந்தது.அவர் பேசும் வார்த்தைகள் தெளிவும் தாராளமும் கொண்டவை.இளைஞர்களை சமூகப்பணிக்குள் இட்டுச் செல்ல ஊக்குவித்தார்.அவரது அரசியல் வாழ்க்கை ஏறத்தாழ எட்டு தசாப்தங்கள் நீண்டது.எதிர்க்கட்சியினரும் அவரை மதித்தனர்.அவரது நேர்மைக்கு எல்லோரும் சாட்சி.அவர் வாழ்ந்தது போலவே அமைதியாக மறைந்தார்.2026 பிப்ரவரி 25 ஆம் தேதி அவர் காலமானார்.அவரது மறைவு தமிழக அரசியலுக்கு பெரிய இழப்பாக கருதப்பட்டது.அரசியல் கட்சிகள் அனைத்தும் இரங்கல் தெரிவித்தன.முதல்வர் மற்றும் பல தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.கம்யூனிஸ்ட் கொடியில் அவரது உடல் மூடப்பட்டது.கட்சித் தொண்டர்கள் கண்கலங்கினர்.சமூக ஆர்வலர்கள் அவரை “நேர்மையின் சின்னம்” என குறிப்பிட்டனர்.அவரது இறுதி ஊர்வலம் எளிமையாக நடைபெற்றது.பெரிய ஆடம்பரம் எதுவும் செய்யப்படவில்லை.அவரது சிந்தனைகள் தான் அவரின் பெரும் சொத்து என கூறப்பட்டது.அரசியல் வாழ்க்கையில் அவர் கற்றுத்தந்த பாடங்கள் பல.நேர்மை இருந்தால் நீண்ட பயணம் செய்யலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு.அவரது வாழ்வு ஒரு பாடநூல் போன்றது.ஏழைகளுக்காக குரல் கொடுத்த குரல் இனி இல்லை.ஆனால் அவர் விதைத்த எண்ணங்கள் நிலைத்திருக்கின்றன.தமிழக அரசியல் வரலாற்றில் அவரது பெயர் நிலைத்திருக்கும்.அவரது தியாகம் இன்றைய தலைமுறைக்கு சிந்தனை தருகிறது.சொல்லிலும் செயலும் ஒன்றாக இருந்த தலைவர் அவர்.அவரை நினைக்கும் போது எளிமை நினைவிற்கு வருகிறது.அவரது சேவைகள் வரலாற்றில் பதிந்துள்ளன.நல்லக்கண்ணு என்ற பெயர் நேர்மையின் அடையாளம்.அவரது மறைவு பலரது மனதில் வெற்றிடத்தை ஏற்படுத்தியது.ஆனால் அவர் வாழ்ந்த வாழ்க்கை அனைவருக்கும் உத்வேகம்.அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.சமூக நீதி காக்க அவர் போராடிய பாதை தொடரட்டும்.அவரது நினைவு என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.நல்லக்கண்ணு அவர்கள் தமிழகத்தின் பொக்கிஷம்.அவரை என்றும் மரியாதையுடன் நினைவுகூர்கிறோம்.

கிங்டம் நெட்வொர்க் செய்தித்தாளுக்கான சிறப்பு பிரார்த்தனை

பரமன்குறிச்சி பூரண கிருபை ஏ.ஜி. சபையில், நவம்பர் 2, 2025 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற வழக்கமான ஆராதனையின் போது, “கிங்டம் நெட்வொர்க் செய்தித்தாளுக்கான சிறப்பு ஜெப நேரம் ஒதுக்கப்பட்டது.இந்த ஆன்மீக முக்கியத்துவமிக்க நிகழ்வில் சபையின் தலைமை போதகர் Rev. A. பெமிலிட்டன் அவர்கள் செய்தித்தாள் ஊழியத்திற்காக சிறப்பு ஜெபத்தை முன்னின்று நடத்தினார். ஜெபத்தின் போது அவர், “இந்த ஊடக ஊழியம் தேவனுடைய ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஒரு சக்தியான கருவியாக பயன்படட்டும். பத்திரிகையின் வழியாக உண்மை செய்திகளும் சுவிசேஷ ஒளியும் பலரது வாழ்க்கைகளிலும் வெளிச்சம் தரட்டும்” என ஆர்வமுடன் வேண்டினார்.ஜெப நேரத்தில் கிங்டம் நெட்வொர்க் அலுவலக பணியாளரும் சபையின் உதவி போதகருமான Pastor. B. கிருபன் யோசுவா அவர்கள் அருகில் இணைந்து, தேவனுடைய கிருபையினால் இந்த ஊடக ஊழியம் தொடங்கி இன்று வரை பல பகுதிகளில் ஆசிர்வாதமாக இயங்கி வருவதைக் குறித்து சாட்சியமளித்தார். அவர் மேலும், “இந்த ஊடகப் பணிகள் மானிடப் புகழுக்காக அல்ல, தேவனுடைய மகிமைக்காகவே” என வலியுறுத்தி, அனைவரும் இணைந்து ஜெபிக்க ஊக்கமளித்தார்.சபை விசுவாசிகள் அனைவரும் ஒன்றிணைந்து, கிங்டம் நெட்வொர்க் செய்தித்தாள் ஒவ்வொரு ஆசிரியர், ரிப்போர்டர், மற்றும் தொழில்நுட்ப குழுவினரின் ஆரோக்கியத்திற்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தேவனுடைய பாதுகாப்பு நிலைத்திருக்க வேண்டும் என மனமார்ந்த ஜெபம் செய்தனர். அதேபோல, செய்தித்தாள் வழியாக சமூக நலன், உண்மை செய்திகள், கிறிஸ்தவ மதிப்புகள், மற்றும் சமாதானம் பரவ வேண்டும் என்பதற்காகவும் அனைவரும் வேண்டினர்.ஜெபத்தின் முடிவில், சபை தலைமை போதகர் Rev. A. பெமிலிட்டன் அவர்கள் செய்தித்தாள் பிரதியை உயர்த்திப் பிடித்து, தேவனுடைய ஆசீர்வாதத்துடன் அர்ப்பணித்து, “இந்த பத்திரிகை தமிழகம் முழுவதும் தேவனுடைய நாமம் மகிமைப்படும்படி வல்லமையுடன் பயன்படட்டும்” என்று இறுதி ஆசீர்வாத ஜெபம் செய்தார்.

மதவெறி தாக்குதலால் அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டு மீண்டு வந்து சாதித்து இயேசுவுக்கு நன்றி கூறிய ஜெமிமா

jemima

மும்பை: மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வென்ற பிறகு, நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் ஆனந்த கண்ணீர் சிந்தினார். இயேசு கிறிஸ்துவத்துக்கு என் நன்றிகள்.. அவர்தான் என்னுடைய ஆட்டத்திற்கு காரணம் என்று ஜெமிமா ரோட்ரிகஸ் நன்றி தெரிவித்தார். இந்தியாவின் இந்த வெற்றி, உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வழிவகுத்தது. இப்போட்டியில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவின் 339 ரன்கள் என்ற பெரிய இலக்கை இந்திய அணி துரத்திப் பிடித்தது. நவி மும்பையில் நடைபெற்ற ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 அரையிறுதிப் போட்டியில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று இந்திய மகளிர் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அதிகபட்ச ரன் சேஸிங்

டாக்டர் டி.ஒய். பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் வியாழக்கிழமை நடந்த இப்போட்டியில், ஆஸ்திரேலியா நிர்ணயித்த 338 ரன்கள் என்ற இலக்கை இந்திய மகளிர் அணி, 9 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் எட்டியது. உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே அதிகபட்ச ரன் சேஸிங்காகப் பதிவாகியுள்ளது. இறுதிப் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது. இந்த ஆட்டம் அதே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. 339 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, ஷஃபாலி வர்மா (10 ரன்கள்) சீக்கிரமே அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். கிம் கார்த் வீசிய பந்தில் வெளியேறிய ஷஃபாலியைத் தொடர்ந்து, 13/1 என்ற நிலையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் களமிறங்கினார்.

இந்திய அணி வெற்றி

ஜெமிமா ரோட்ரிக்ஸுடன் இணைந்த ஸ்மிருதி மந்தனா, அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். எனினும், 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்மிருதி மந்தனா விக்கெட்டை கார்த் கைப்பற்றினார். இதனால், 9.2 ஓவர்களில் 59/2 என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கவனமாக ஆடினார். மறுமுனையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். இருவரும் இணைந்து 53 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தனர். ஜெமிமா 57 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஹர்மன்பிரீத் தனது பொறுப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார். இந்தப் பார்ட்னர்ஷிப் 99 பந்துகளில் 100 ரன்களையும், 140 பந்துகளில் 150 ரன்களையும் கடந்தது. ஹர்மன்பிரீத் தனது 65 பந்துகளில் அரை சதம் அடித்தார், இது உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் அவரது மூன்றாவது அரை சதமாகும். 31.2 ஓவர்களில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது. ஆஸ்திரேலிய அணியின் ஃபீல்டிங்கில் ஏற்பட்ட தவறுகளும், நெருக்கடியும் அதிகரிக்கவே, அன்னபெல் சதர்லேண்ட் வீசிய பந்தில் ஹர்மன்பிரீத் கவுர் (89 ரன்கள்) ஆட்டமிழந்தார். 35.3 ஓவர்களில் இந்திய அணி 226/3 என்ற நிலையில் இருந்தது. ஹர்மன்பிரீத் – ஜெமிமா ஜோடி 167 ரன்கள் சேர்த்து புதிய உலகக் கோப்பை நாக் அவுட் சாதனை படைத்தது.

தீப்தி ஷர்மா

இதையடுத்து களமிறங்கிய தீப்தி ஷர்மா (24 ரன்கள்), அதிரடியாக விளையாடினாலும், ரன் அவுட்டாகி வெளியேறினார். 40.5 ஓவர்களில் 264/4 என்ற நிலையில் இருந்த இந்திய அணிக்கு, ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது மூன்றாவது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார். 115 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் அவர் இந்த சதத்தைப் பூர்த்தி செய்தார்.

அணியின் அதிரடி ஆட்டம் தொடர்ந்தது. ரிச்சா கோஷ் அதிரடியாக சிக்ஸர்களை விளாசி, வெற்றி இலக்கை நெருங்க உதவினார். இறுதி 8 ஓவர்களில் இந்தியாவுக்கு 63 ரன்கள் தேவைப்பட்டது. சவுதர்லேண்ட் மற்றும் கார்னர் பந்துகளில் பவுண்டரிகளை விளாசி, ரிச்சா கோஷ் (26 ரன்கள்) இந்தியாவுக்கு 34 ரன்கள் தேவைப்படும் நிலையில் ஆட்டமிழந்தார். இறுதி 24 பந்துகளில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சோஃபி மோலினெக்ஸின் 47வது ஓவரில் ஜெமிமா பவுண்டரி அடித்து ரன்களைக் குறைத்தார். சவுதர்லேண்டின் 48வது ஓவரில் ஜெமிமா 2 பவுண்டரிகள் அடிக்க, கடைசி 14 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. டைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில், அமன்ஜோத் சிங் வெற்றிக்கான ரன்களை எடுத்தார். இந்திய அணி 9 பந்துகள் மீதமிருக்க, 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

ஜீசசுக்கு ஜெமிமா ரோட்ரிகஸ் நன்றி

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வென்ற பிறகு, நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் ஆனந்த கண்ணீர் சிந்தினார். இயேசு கிறிஸ்துவத்துக்கு என் நன்றிகள்.. அவர்தான் என்னுடைய ஆட்டத்திற்கு காரணம் என்று ஜெமிமா ரோட்ரிகஸ் நன்றி தெரிவித்தார். வெற்றிக்குப் பிறகு ஜெமிமா கூறுகையில், “இந்த வெற்றிக்காக இயேசுவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். என்னால் தனியாக இதை செய்திருக்க முடியாது. என் அம்மா, அப்பா, பயிற்சியாளர், மற்றும் என்னை நம்பிய ஒவ்வொருவருக்கும் நன்றி. கடந்த ஒரு மாதம் மிகவும் கடினமாக இருந்தது. இது ஒரு கனவு போல உணர்கிறேன், இன்னும் முழுமையாக நம்ப முடியவில்லை,” என்றார். மேலும், “மூன்றாவது பேட்டிங் வரிசையில் ஆடியது குறித்து கேட்டபோது, “நான் மூன்றாவது வரிசையில் ஆடுவது எனக்குத் தெரியாது. களத்திற்குச் செல்வதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் நான் மூன்றாவது வரிசையில் பேட் செய்யப் போவதாகக் கூறப்பட்டது. இது என்னைப் பற்றியது அல்ல. இந்தியாவுக்காக இந்த போட்டியை வெல்ல வேண்டும் என்பதே எனது நோக்கம். இதற்கு முன் முக்கியமான போட்டிகளில் தோற்றிருக்கிறோம். இன்று எனது அரை சதம் அல்லது சதம் பற்றியது அல்ல, இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம்,” என்று அவர் விளக்கினார்.

ஜெமிமா சர்ச்சை

முன்னதாக ஜெமிமா ரோட்ரிகஸின் தந்தையான இவான் ரோட்ரிக்ஸ், மும்பையில் உள்ள பிரபல கர் ஜிம்கானாவில் கிறிஸ்துவ மத கூட்டங்களை நடத்தியதாக புகார் வைக்கப்பட்டது. அவர் அனுமதி வாங்கியே கூட்டங்களை நடத்தி இருந்தார். இருந்தாலும் இது மதமாற்றக் கூட்டங்கள் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அப்போது ஜெமிமா கடுமையான அழுத்தத்திற்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டார். அவரின் கிரிக்கெட் வரலாற்றில் அது மிக மோசமான காலம் ஆகும். இப்போது அதே ஜெமிமா.. இந்திய அணியை வெற்றிபெற வைத்து நன்றி ஜீசஸ் என்று கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

போஸ்ட் ஆபீஸ் வங்கி வேலை வாய்ப்பு; 348 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 29 Oct 2025 

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் (IPPB) பணிபுரிய அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிகிரி தகுதிக்கு நிர்வாகி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் மொத்தம் 348 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் மட்டும் 17 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Executive 

காலியிடங்களின் எண்ணிக்கை: 348

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 01.08.2025 அன்று 20 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 30,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/ippblaug25/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு தற்போது தபால் அலுவலகத்தில் ஜி.டி.எஸ் எனப்படும் கிராம அஞ்சல் ஊழியர்களாக பணியாற்றி வருபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.10.2025

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.750

உலகிலேயே முதல் AI போர் விமானம்.. வரலாற்றுச் சாதனை படைத்த அமெரிக்க நிறுவனம்!

AI JET

30 Oct 2025

முழுக்க முழுக்க AI தொழில்நுட்பத்தில் இயங்கும் போர் விமானம் அமெரிக்காவில் உருவாகி உள்ளது. X-BAT எனப்படும் இந்த ஃபைட்டர் ஜெட், விமானி இல்லாமல் இயங்கும் தன்மை கொண்டது.

ராணுவ மற்றும் விமான தொழில்நுட்ப மேம்பாட்டில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான KRATOS Defense & Security Solutions , உலகில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவால் இயக்கக்கூடிய போர் விமானத்தை உருவாக்கியுள்ளது. XQ-58A Valkyrie என பெயரிடப்பட்ட இந்த விமானம், பொதுமக்கள் மற்றும் விமானத் துறை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும், எதிர்காலப் போர் செயல்பாட்டைப் பற்றிய விவாதத்தையும் தூண்டும் வகையில் இருக்கிறது.

விமானி இல்லாத போர் விமானம்

XQ-58A Valkyrie-யின் முக்கியப் பண்புகளில் முதலாவதாக இடம் பெறுவது இதன் பறக்குதலும், போர்துறையில் மனித வில்லையேற்றம் இல்லாமல் செயல்படுவதும் ஆகும். மனித படைப்பான விமானி இல்லாமல், செயற்கை நுண்ணறிவு (AI) முறையில் முழுமையாக தீர்மானங்களை எடுத்துக் கொள்ளும் திறன் கொண்டது என்று நிறுவனம் அறிவித்துள்ளது.இது சாதாரண விமானம் என்பதைக் காட்டிலும் பலமடங்கு சக்தி வாய்ந்தது; ஏனெனில் Valkyrie ஒரு போர் விமானமாக கணிக்கப்பட்டு அதிநவீன லக்னகள், தந்திரோபாய இயக்கங்கள், ஆபத்துக்களை மதிப்பீடு செய்வது போன்ற பணிகளை மனிதர்களின் உடனடி ஒத்துப்போக்கின்ற பதிலுக்கு இல்லாமல், AI சிந்தனைகளினால் மேற்கொள்கிறது.

போர் விமானத்தின் சிறப்பு

இந்த விமானத்தை வடிவமைக்கக் கூடியவர்களின் கருத்துப்படி, Valkyrie ஒரு “லாயல் விங்-மேன்” போல செயல்படுவதாகும். அதாவது மனிதன் இயக்கும் பிரதான போர் விமானங்களின் உதவியாளராக இருந்து, முக்கியமான போர் திட்டங்களில், விசாரணைப் பொருட்களை சேகரித்து தரலாம். விமானிகளைப் பின்பற்றும் விதத்தில் கட்டளைகளை ஏற்று செயல்படக் கூடியது என்பது Valkyrie-யின் தனிச் சிறப்பாகும்.

தொழில்நுட்ப ரீதியாகப் பார்க்கும் போது, இந்த விமானம் புனிதமான ரன்வே தேவையின்மையை குறிக்கிறது. வழக்கமான போர் விமானங்கள் போல நீண்ட ஓட்டத் தளங்களோ அல்லது பரபரப்பான விமான நிலையங்களோ தேவைப்படாமல், நிலத்திலிருந்து துரிதமாக ஏவிக் கொண்டு போக்குவரத்துக் குறைந்த அதிவேக ஏவுகணைகளைப் பயன்படுத்தி வானில் எழுந்து செயல்பட வாய்ப்பு உள்ளது.

போர்துறை தந்திரத்தில் இதன் பயன்கள் பலவாகும். முதலில், மனித விமானிகளை நேரடியாக அனுப்புவதால் வரும் உயிர் பாதிப்பு அபாயத்தை குறைக்க முடியும். ஆபத்தான திரைப்பிரதேசங்களில் நீண்டநேரம் பறக்கும் திறன் கொண்ட Valkyrie, சோர்வு பாதிப்புகளை ஒருபோதும் எதிர் கொள்ள போவதில்லை.

புதிய மாற்றம்

எதிர் நாட்டு ரகசிய உளவுத்துறை மற்றும் போர் நடைமுறைகளுக்கு இது புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். AI வல்லமையைப் போர் சூழலில் முழுமையாக நம்ப வேண்டி உள்ளதால், தகவல் மற்றும் ஆபத்து மதிப்பீடு முடிவுகளை மனித உத்தரவுகளுடன் இணைத்துச் செயல்பட வேண்டியதாயிருக்கும். Valkyrie-யின் தொழில்நுட்ப அம்சங்களுக்கு பிறகும், விற்பனை மற்றும் ஆணையம் தொடர்பான அம்சங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Valkyrie போன்ற கருவிகள் எதிர்காலப் போர்களில் மனிதர்களின் பங்கு குறையும் அல்லது மாறும் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் எழுகின்றன. முக்கியமாக, KRATOS நிறுவனத்தின் அறிவிப்பு உலகளாவிய ராணுவ ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. XQ-58A Valkyrie-யின் பரிசோதனைக்கு பின்பு, இதே வகை விமானங்கள் உலகளாவிய பாதுகாப்பு நிலைமையிலும் தொழில்நுட்ப போட்டியிலும் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க உள்ளதாக சிறந்த நிபுணர்கள் மதிப்பீடு செய்கிறார்கள்.

10, 12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

CBSE Public Exam 2026: Public Exam Schedule for Class 10, 12 Released

CBSE 10, 12 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு, பிப்ரவரி 17 முதல் மார்ச் 10 மற்றும் ஏப்ரல் 9 வரை நடைபெறும். 45 லட்சம் மாணவர்கள் 46 நாடுகளில் எழுத உள்ளனர்.

2025-26 கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை மத்திய இடைநிலை கல்வி வாரியமான CBSE வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்தாண்டு பிப்ரவரி 17 முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கணிதப்பாடத்தில் தொடங்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிரெஞ்சு மொழிப்பாடத்துடன் நிறைவடையும் வகையில் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று, அடுத்தாண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்கும் +2 பொதுத்தேர்வு, ஏப்ரல் 9 ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பை பொறுத்தவரை, உயிரி தொழில்நுட்பம் பாடத்துடன் தொடங்கும் பொதுத்தேர்வு, data science எனப்படும் தரவு அறிவியல் பாடத்துடன் நிறைவடைகிறது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தமாக 204 பாடங்களை, சுமார் 45 லட்சம் பேர் எழுத இருப்பதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா மட்டுமின்றி 46 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் சிபிஎஸ்இ பொதுத்தேர்வை எழுத இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்கள் எவ்வித குழப்பமும் இன்றி தேர்விற்கு தயாராக ஏதுவாக, தேர்வு தொடங்குவதற்கு 110 நாட்களுக்கு முன்பே அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வின் முழு அட்டவணையை டவுன்லோடு செய்ய https://www.cbse.gov.in என்ற லிங்கில் சென்று Examinations என்ற டேப்பை கிளிக் செய்யவும். அந்த மெனுவில் Data Sheet என்பதை கிளிக் செய்யவும். அதன்பின் “CBSE Date Sheet X–XII Final 2026” என்பதை கிளிக் செய்து சிபிஎஸ்இ தேர்வின் முழு அட்டவணையை PDF வடிவில் டவுன்லோடு செய்து கொள்ளவும்.

சுட்டுக் கொல்லப்பட்டார் சுவிசேஷகர். சார்லி கிரிக்

சார்லி கிர்க், 32 வயது அமெரிக்கா சுவிசேஷகர் ‘நேற்றையதினம் குறிப்பிட்ட பல்கலைக் கழகத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார். இவர் சமரசம் இல்லாமல் கர்த்தருடைய வார்த்தையை போதித்தவர். அமெரிக்க மக்களின் பாவங்களை தைரியமாக கண்டித்தார். மக்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பை சந்தித்தே ஆக வேண்டும் என எச்சரித்தார்.

நேற்று utha university ல பேசி கொண்டிருக்கும் போது கழுத்தில் சுடப்பட்டார். இவர் இளம் வயதில் அமெரிக்க மக்களால் அறியப்பட்டவர். விவாகரத்து, வேதத்துக்கு முரணான ஆண்-ஆண், பெண்-பெண் திருமணம், கருக்கலைப்பு போன்றவற்றை எதிர்த்தார். பல்கலை மாணவர்கள் இடையில் மாபெரும் மாற்றம் கொண்டுவந்தவர். சுவிசேஷத்தை தைரியமாக பிரசங்கித்த இவர் ஒரு யூதர். அவரது திடீர் மரணம் அமெரிக்க திருச்சபைகளுக்கு மிகப் பெரிய இழப்பு!
-சத்தியம் ஒருபோதும் சமரசம் செய்வதில்லை

TET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

TET தேர்வுக்கு விண்ணப்பிக்கு இன்றுடன் அவகாசம் நிறைவு.பணியில் இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியில் தொடர TET தேர்ச்சி அவசியம்.TET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 10ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.TET தேர்வுக்கு விண்ணப்பிக்கு இன்றுடன் அவகாசம் நிறைவு என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் 10ம் தேதி மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று TET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியில் தொடர, பதவி உயர்வு பெற TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.