• Sunday 9 November, 2025 05:06 PM
  • Advertize
  • Aarudhal FM

கிங்டம் நெட்வொர்க் செய்தித்தாளுக்கான சிறப்பு பிரார்த்தனை

பரமன்குறிச்சி பூரண கிருபை ஏ.ஜி. சபையில், நவம்பர் 2, 2025 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற வழக்கமான ஆராதனையின் போது, “கிங்டம் நெட்வொர்க் செய்தித்தாளுக்கான சிறப்பு ஜெப நேரம் ஒதுக்கப்பட்டது.இந்த ஆன்மீக முக்கியத்துவமிக்க நிகழ்வில் சபையின் தலைமை போதகர் Rev. A. பெமிலிட்டன் அவர்கள் செய்தித்தாள் ஊழியத்திற்காக சிறப்பு ஜெபத்தை முன்னின்று நடத்தினார். ஜெபத்தின் போது அவர், “இந்த ஊடக ஊழியம் தேவனுடைய ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஒரு சக்தியான கருவியாக பயன்படட்டும். பத்திரிகையின் வழியாக உண்மை செய்திகளும் சுவிசேஷ ஒளியும் பலரது வாழ்க்கைகளிலும் வெளிச்சம் தரட்டும்” என ஆர்வமுடன் வேண்டினார்.ஜெப நேரத்தில் கிங்டம் நெட்வொர்க் அலுவலக பணியாளரும் சபையின் உதவி போதகருமான Pastor. B. கிருபன் யோசுவா அவர்கள் அருகில் இணைந்து, தேவனுடைய கிருபையினால் இந்த ஊடக ஊழியம் தொடங்கி இன்று வரை பல பகுதிகளில் ஆசிர்வாதமாக இயங்கி வருவதைக் குறித்து சாட்சியமளித்தார். அவர் மேலும், “இந்த ஊடகப் பணிகள் மானிடப் புகழுக்காக அல்ல, தேவனுடைய மகிமைக்காகவே” என வலியுறுத்தி, அனைவரும் இணைந்து ஜெபிக்க ஊக்கமளித்தார்.சபை விசுவாசிகள் அனைவரும் ஒன்றிணைந்து, கிங்டம் நெட்வொர்க் செய்தித்தாள் ஒவ்வொரு ஆசிரியர், ரிப்போர்டர், மற்றும் தொழில்நுட்ப குழுவினரின் ஆரோக்கியத்திற்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தேவனுடைய பாதுகாப்பு நிலைத்திருக்க வேண்டும் என மனமார்ந்த ஜெபம் செய்தனர். அதேபோல, செய்தித்தாள் வழியாக சமூக நலன், உண்மை செய்திகள், கிறிஸ்தவ மதிப்புகள், மற்றும் சமாதானம் பரவ வேண்டும் என்பதற்காகவும் அனைவரும் வேண்டினர்.ஜெபத்தின் முடிவில், சபை தலைமை போதகர் Rev. A. பெமிலிட்டன் அவர்கள் செய்தித்தாள் பிரதியை உயர்த்திப் பிடித்து, தேவனுடைய ஆசீர்வாதத்துடன் அர்ப்பணித்து, “இந்த பத்திரிகை தமிழகம் முழுவதும் தேவனுடைய நாமம் மகிமைப்படும்படி வல்லமையுடன் பயன்படட்டும்” என்று இறுதி ஆசீர்வாத ஜெபம் செய்தார்.

மதவெறி தாக்குதலால் அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டு மீண்டு வந்து சாதித்து இயேசுவுக்கு நன்றி கூறிய ஜெமிமா

jemima

மும்பை: மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வென்ற பிறகு, நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் ஆனந்த கண்ணீர் சிந்தினார். இயேசு கிறிஸ்துவத்துக்கு என் நன்றிகள்.. அவர்தான் என்னுடைய ஆட்டத்திற்கு காரணம் என்று ஜெமிமா ரோட்ரிகஸ் நன்றி தெரிவித்தார். இந்தியாவின் இந்த வெற்றி, உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வழிவகுத்தது. இப்போட்டியில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவின் 339 ரன்கள் என்ற பெரிய இலக்கை இந்திய அணி துரத்திப் பிடித்தது. நவி மும்பையில் நடைபெற்ற ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 அரையிறுதிப் போட்டியில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று இந்திய மகளிர் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அதிகபட்ச ரன் சேஸிங்

டாக்டர் டி.ஒய். பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் வியாழக்கிழமை நடந்த இப்போட்டியில், ஆஸ்திரேலியா நிர்ணயித்த 338 ரன்கள் என்ற இலக்கை இந்திய மகளிர் அணி, 9 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் எட்டியது. உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே அதிகபட்ச ரன் சேஸிங்காகப் பதிவாகியுள்ளது. இறுதிப் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது. இந்த ஆட்டம் அதே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. 339 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, ஷஃபாலி வர்மா (10 ரன்கள்) சீக்கிரமே அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். கிம் கார்த் வீசிய பந்தில் வெளியேறிய ஷஃபாலியைத் தொடர்ந்து, 13/1 என்ற நிலையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் களமிறங்கினார்.

இந்திய அணி வெற்றி

ஜெமிமா ரோட்ரிக்ஸுடன் இணைந்த ஸ்மிருதி மந்தனா, அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். எனினும், 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்மிருதி மந்தனா விக்கெட்டை கார்த் கைப்பற்றினார். இதனால், 9.2 ஓவர்களில் 59/2 என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கவனமாக ஆடினார். மறுமுனையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். இருவரும் இணைந்து 53 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தனர். ஜெமிமா 57 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஹர்மன்பிரீத் தனது பொறுப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார். இந்தப் பார்ட்னர்ஷிப் 99 பந்துகளில் 100 ரன்களையும், 140 பந்துகளில் 150 ரன்களையும் கடந்தது. ஹர்மன்பிரீத் தனது 65 பந்துகளில் அரை சதம் அடித்தார், இது உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் அவரது மூன்றாவது அரை சதமாகும். 31.2 ஓவர்களில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது. ஆஸ்திரேலிய அணியின் ஃபீல்டிங்கில் ஏற்பட்ட தவறுகளும், நெருக்கடியும் அதிகரிக்கவே, அன்னபெல் சதர்லேண்ட் வீசிய பந்தில் ஹர்மன்பிரீத் கவுர் (89 ரன்கள்) ஆட்டமிழந்தார். 35.3 ஓவர்களில் இந்திய அணி 226/3 என்ற நிலையில் இருந்தது. ஹர்மன்பிரீத் – ஜெமிமா ஜோடி 167 ரன்கள் சேர்த்து புதிய உலகக் கோப்பை நாக் அவுட் சாதனை படைத்தது.

தீப்தி ஷர்மா

இதையடுத்து களமிறங்கிய தீப்தி ஷர்மா (24 ரன்கள்), அதிரடியாக விளையாடினாலும், ரன் அவுட்டாகி வெளியேறினார். 40.5 ஓவர்களில் 264/4 என்ற நிலையில் இருந்த இந்திய அணிக்கு, ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது மூன்றாவது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார். 115 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் அவர் இந்த சதத்தைப் பூர்த்தி செய்தார்.

அணியின் அதிரடி ஆட்டம் தொடர்ந்தது. ரிச்சா கோஷ் அதிரடியாக சிக்ஸர்களை விளாசி, வெற்றி இலக்கை நெருங்க உதவினார். இறுதி 8 ஓவர்களில் இந்தியாவுக்கு 63 ரன்கள் தேவைப்பட்டது. சவுதர்லேண்ட் மற்றும் கார்னர் பந்துகளில் பவுண்டரிகளை விளாசி, ரிச்சா கோஷ் (26 ரன்கள்) இந்தியாவுக்கு 34 ரன்கள் தேவைப்படும் நிலையில் ஆட்டமிழந்தார். இறுதி 24 பந்துகளில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சோஃபி மோலினெக்ஸின் 47வது ஓவரில் ஜெமிமா பவுண்டரி அடித்து ரன்களைக் குறைத்தார். சவுதர்லேண்டின் 48வது ஓவரில் ஜெமிமா 2 பவுண்டரிகள் அடிக்க, கடைசி 14 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. டைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில், அமன்ஜோத் சிங் வெற்றிக்கான ரன்களை எடுத்தார். இந்திய அணி 9 பந்துகள் மீதமிருக்க, 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

ஜீசசுக்கு ஜெமிமா ரோட்ரிகஸ் நன்றி

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வென்ற பிறகு, நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் ஆனந்த கண்ணீர் சிந்தினார். இயேசு கிறிஸ்துவத்துக்கு என் நன்றிகள்.. அவர்தான் என்னுடைய ஆட்டத்திற்கு காரணம் என்று ஜெமிமா ரோட்ரிகஸ் நன்றி தெரிவித்தார். வெற்றிக்குப் பிறகு ஜெமிமா கூறுகையில், “இந்த வெற்றிக்காக இயேசுவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். என்னால் தனியாக இதை செய்திருக்க முடியாது. என் அம்மா, அப்பா, பயிற்சியாளர், மற்றும் என்னை நம்பிய ஒவ்வொருவருக்கும் நன்றி. கடந்த ஒரு மாதம் மிகவும் கடினமாக இருந்தது. இது ஒரு கனவு போல உணர்கிறேன், இன்னும் முழுமையாக நம்ப முடியவில்லை,” என்றார். மேலும், “மூன்றாவது பேட்டிங் வரிசையில் ஆடியது குறித்து கேட்டபோது, “நான் மூன்றாவது வரிசையில் ஆடுவது எனக்குத் தெரியாது. களத்திற்குச் செல்வதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் நான் மூன்றாவது வரிசையில் பேட் செய்யப் போவதாகக் கூறப்பட்டது. இது என்னைப் பற்றியது அல்ல. இந்தியாவுக்காக இந்த போட்டியை வெல்ல வேண்டும் என்பதே எனது நோக்கம். இதற்கு முன் முக்கியமான போட்டிகளில் தோற்றிருக்கிறோம். இன்று எனது அரை சதம் அல்லது சதம் பற்றியது அல்ல, இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம்,” என்று அவர் விளக்கினார்.

ஜெமிமா சர்ச்சை

முன்னதாக ஜெமிமா ரோட்ரிகஸின் தந்தையான இவான் ரோட்ரிக்ஸ், மும்பையில் உள்ள பிரபல கர் ஜிம்கானாவில் கிறிஸ்துவ மத கூட்டங்களை நடத்தியதாக புகார் வைக்கப்பட்டது. அவர் அனுமதி வாங்கியே கூட்டங்களை நடத்தி இருந்தார். இருந்தாலும் இது மதமாற்றக் கூட்டங்கள் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அப்போது ஜெமிமா கடுமையான அழுத்தத்திற்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டார். அவரின் கிரிக்கெட் வரலாற்றில் அது மிக மோசமான காலம் ஆகும். இப்போது அதே ஜெமிமா.. இந்திய அணியை வெற்றிபெற வைத்து நன்றி ஜீசஸ் என்று கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

போஸ்ட் ஆபீஸ் வங்கி வேலை வாய்ப்பு; 348 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 29 Oct 2025 

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் (IPPB) பணிபுரிய அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிகிரி தகுதிக்கு நிர்வாகி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் மொத்தம் 348 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் மட்டும் 17 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Executive 

காலியிடங்களின் எண்ணிக்கை: 348

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 01.08.2025 அன்று 20 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 30,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/ippblaug25/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு தற்போது தபால் அலுவலகத்தில் ஜி.டி.எஸ் எனப்படும் கிராம அஞ்சல் ஊழியர்களாக பணியாற்றி வருபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.10.2025

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.750

உலகிலேயே முதல் AI போர் விமானம்.. வரலாற்றுச் சாதனை படைத்த அமெரிக்க நிறுவனம்!

AI JET

30 Oct 2025

முழுக்க முழுக்க AI தொழில்நுட்பத்தில் இயங்கும் போர் விமானம் அமெரிக்காவில் உருவாகி உள்ளது. X-BAT எனப்படும் இந்த ஃபைட்டர் ஜெட், விமானி இல்லாமல் இயங்கும் தன்மை கொண்டது.

ராணுவ மற்றும் விமான தொழில்நுட்ப மேம்பாட்டில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான KRATOS Defense & Security Solutions , உலகில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவால் இயக்கக்கூடிய போர் விமானத்தை உருவாக்கியுள்ளது. XQ-58A Valkyrie என பெயரிடப்பட்ட இந்த விமானம், பொதுமக்கள் மற்றும் விமானத் துறை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும், எதிர்காலப் போர் செயல்பாட்டைப் பற்றிய விவாதத்தையும் தூண்டும் வகையில் இருக்கிறது.

விமானி இல்லாத போர் விமானம்

XQ-58A Valkyrie-யின் முக்கியப் பண்புகளில் முதலாவதாக இடம் பெறுவது இதன் பறக்குதலும், போர்துறையில் மனித வில்லையேற்றம் இல்லாமல் செயல்படுவதும் ஆகும். மனித படைப்பான விமானி இல்லாமல், செயற்கை நுண்ணறிவு (AI) முறையில் முழுமையாக தீர்மானங்களை எடுத்துக் கொள்ளும் திறன் கொண்டது என்று நிறுவனம் அறிவித்துள்ளது.இது சாதாரண விமானம் என்பதைக் காட்டிலும் பலமடங்கு சக்தி வாய்ந்தது; ஏனெனில் Valkyrie ஒரு போர் விமானமாக கணிக்கப்பட்டு அதிநவீன லக்னகள், தந்திரோபாய இயக்கங்கள், ஆபத்துக்களை மதிப்பீடு செய்வது போன்ற பணிகளை மனிதர்களின் உடனடி ஒத்துப்போக்கின்ற பதிலுக்கு இல்லாமல், AI சிந்தனைகளினால் மேற்கொள்கிறது.

போர் விமானத்தின் சிறப்பு

இந்த விமானத்தை வடிவமைக்கக் கூடியவர்களின் கருத்துப்படி, Valkyrie ஒரு “லாயல் விங்-மேன்” போல செயல்படுவதாகும். அதாவது மனிதன் இயக்கும் பிரதான போர் விமானங்களின் உதவியாளராக இருந்து, முக்கியமான போர் திட்டங்களில், விசாரணைப் பொருட்களை சேகரித்து தரலாம். விமானிகளைப் பின்பற்றும் விதத்தில் கட்டளைகளை ஏற்று செயல்படக் கூடியது என்பது Valkyrie-யின் தனிச் சிறப்பாகும்.

தொழில்நுட்ப ரீதியாகப் பார்க்கும் போது, இந்த விமானம் புனிதமான ரன்வே தேவையின்மையை குறிக்கிறது. வழக்கமான போர் விமானங்கள் போல நீண்ட ஓட்டத் தளங்களோ அல்லது பரபரப்பான விமான நிலையங்களோ தேவைப்படாமல், நிலத்திலிருந்து துரிதமாக ஏவிக் கொண்டு போக்குவரத்துக் குறைந்த அதிவேக ஏவுகணைகளைப் பயன்படுத்தி வானில் எழுந்து செயல்பட வாய்ப்பு உள்ளது.

போர்துறை தந்திரத்தில் இதன் பயன்கள் பலவாகும். முதலில், மனித விமானிகளை நேரடியாக அனுப்புவதால் வரும் உயிர் பாதிப்பு அபாயத்தை குறைக்க முடியும். ஆபத்தான திரைப்பிரதேசங்களில் நீண்டநேரம் பறக்கும் திறன் கொண்ட Valkyrie, சோர்வு பாதிப்புகளை ஒருபோதும் எதிர் கொள்ள போவதில்லை.

புதிய மாற்றம்

எதிர் நாட்டு ரகசிய உளவுத்துறை மற்றும் போர் நடைமுறைகளுக்கு இது புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். AI வல்லமையைப் போர் சூழலில் முழுமையாக நம்ப வேண்டி உள்ளதால், தகவல் மற்றும் ஆபத்து மதிப்பீடு முடிவுகளை மனித உத்தரவுகளுடன் இணைத்துச் செயல்பட வேண்டியதாயிருக்கும். Valkyrie-யின் தொழில்நுட்ப அம்சங்களுக்கு பிறகும், விற்பனை மற்றும் ஆணையம் தொடர்பான அம்சங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Valkyrie போன்ற கருவிகள் எதிர்காலப் போர்களில் மனிதர்களின் பங்கு குறையும் அல்லது மாறும் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் எழுகின்றன. முக்கியமாக, KRATOS நிறுவனத்தின் அறிவிப்பு உலகளாவிய ராணுவ ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. XQ-58A Valkyrie-யின் பரிசோதனைக்கு பின்பு, இதே வகை விமானங்கள் உலகளாவிய பாதுகாப்பு நிலைமையிலும் தொழில்நுட்ப போட்டியிலும் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க உள்ளதாக சிறந்த நிபுணர்கள் மதிப்பீடு செய்கிறார்கள்.

10, 12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

CBSE Public Exam 2026: Public Exam Schedule for Class 10, 12 Released

CBSE 10, 12 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு, பிப்ரவரி 17 முதல் மார்ச் 10 மற்றும் ஏப்ரல் 9 வரை நடைபெறும். 45 லட்சம் மாணவர்கள் 46 நாடுகளில் எழுத உள்ளனர்.

2025-26 கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை மத்திய இடைநிலை கல்வி வாரியமான CBSE வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்தாண்டு பிப்ரவரி 17 முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கணிதப்பாடத்தில் தொடங்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிரெஞ்சு மொழிப்பாடத்துடன் நிறைவடையும் வகையில் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று, அடுத்தாண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்கும் +2 பொதுத்தேர்வு, ஏப்ரல் 9 ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பை பொறுத்தவரை, உயிரி தொழில்நுட்பம் பாடத்துடன் தொடங்கும் பொதுத்தேர்வு, data science எனப்படும் தரவு அறிவியல் பாடத்துடன் நிறைவடைகிறது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தமாக 204 பாடங்களை, சுமார் 45 லட்சம் பேர் எழுத இருப்பதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா மட்டுமின்றி 46 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் சிபிஎஸ்இ பொதுத்தேர்வை எழுத இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்கள் எவ்வித குழப்பமும் இன்றி தேர்விற்கு தயாராக ஏதுவாக, தேர்வு தொடங்குவதற்கு 110 நாட்களுக்கு முன்பே அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வின் முழு அட்டவணையை டவுன்லோடு செய்ய https://www.cbse.gov.in என்ற லிங்கில் சென்று Examinations என்ற டேப்பை கிளிக் செய்யவும். அந்த மெனுவில் Data Sheet என்பதை கிளிக் செய்யவும். அதன்பின் “CBSE Date Sheet X–XII Final 2026” என்பதை கிளிக் செய்து சிபிஎஸ்இ தேர்வின் முழு அட்டவணையை PDF வடிவில் டவுன்லோடு செய்து கொள்ளவும்.

சுட்டுக் கொல்லப்பட்டார் சுவிசேஷகர். சார்லி கிரிக்

சார்லி கிர்க், 32 வயது அமெரிக்கா சுவிசேஷகர் ‘நேற்றையதினம் குறிப்பிட்ட பல்கலைக் கழகத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார். இவர் சமரசம் இல்லாமல் கர்த்தருடைய வார்த்தையை போதித்தவர். அமெரிக்க மக்களின் பாவங்களை தைரியமாக கண்டித்தார். மக்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பை சந்தித்தே ஆக வேண்டும் என எச்சரித்தார்.

நேற்று utha university ல பேசி கொண்டிருக்கும் போது கழுத்தில் சுடப்பட்டார். இவர் இளம் வயதில் அமெரிக்க மக்களால் அறியப்பட்டவர். விவாகரத்து, வேதத்துக்கு முரணான ஆண்-ஆண், பெண்-பெண் திருமணம், கருக்கலைப்பு போன்றவற்றை எதிர்த்தார். பல்கலை மாணவர்கள் இடையில் மாபெரும் மாற்றம் கொண்டுவந்தவர். சுவிசேஷத்தை தைரியமாக பிரசங்கித்த இவர் ஒரு யூதர். அவரது திடீர் மரணம் அமெரிக்க திருச்சபைகளுக்கு மிகப் பெரிய இழப்பு!
-சத்தியம் ஒருபோதும் சமரசம் செய்வதில்லை

TET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

TET தேர்வுக்கு விண்ணப்பிக்கு இன்றுடன் அவகாசம் நிறைவு.பணியில் இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியில் தொடர TET தேர்ச்சி அவசியம்.TET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 10ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.TET தேர்வுக்கு விண்ணப்பிக்கு இன்றுடன் அவகாசம் நிறைவு என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் 10ம் தேதி மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று TET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியில் தொடர, பதவி உயர்வு பெற TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு ‘டெட்’ தேர்வு நடத்த தமிழக அரசு பரிசீலனை

சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்துவதற்கு தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2010 ஆக.23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்படி அனைத்து விதமான பள்ளிகளிலும் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாடம் பயிற்றுவிக்கும் இடை நிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த சட்டம் தமிழகத்தில் 2011-ல் தான் நடைமுறைக்கு வந்தது. அதன்பின் தமிழகத்தில் டெட் தேர்ச்சி அடிப்படையிலேயே ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் டெட் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்வு எழுத விருப்பம் இல்லாதவர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அதிரடியாக உத்தரவிட்டது.

இந்த அறிவிப்பால் தமிழகத்தில் சுமார் 1.5 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. மேலும், தனியார் பள்ளிகளிலும் லட்சக்கணக்கான ஆசிரியர்களின் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை செயலர் சந்திரமோகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், சட்ட நிபுணர்களின் பரிந்துரையின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் எனவும், ஆசிரியர்கள் டெட் தேர்ச்சி பெறும் ஏதுவாக ஆண்டுக்கு 2 முறை தேர்வை நடத்தவும் முடிவாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் கூறியது: “உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி 2 ஆண்டுகளில் 4 டெட் தேர்வுகள் நடத்தப்படும். அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆசிரியர்கள் தேர்ச்சிபெற வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பு நவம்பரில் டெட் தேர்வு நடைபெற உள்ளது. தொடர்ந்து உடனடியாக ஜனவரி அல்லது பிப்ரவரியில் அடுத்த டெட் தேர்வை நடத்த இருக்கிறோம்.

மேலும், ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு டெட் தேர்வு நடத்துவது குறித்தும் பரிசீலனை செய்து வருகிறோம். தற்போது வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் தமிழகம் திரும்பியதும், இந்த முடிவுகள் குறித்து அவரிடம் ஆலோசனை செய்யப்படும். அதன்பிறகே, இந்த விவகாரத்தில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும்” என்று அவர்கள் தெரிவித்தனர்

எம்மா குஷ்மேன் என்ற மாமனிதரை பற்றி உங்களுக்கு தெரியுமா?

மண்ணில் : 1863 – விண்ணில் : 1931

ஊர் : பர்லிங்டன், நியூயார்க்

தரிசன பூமி : கொனியா, ஆசியா மைனர்

முதலாம் உலகப் போரின்போது ஆர்மீனிய இனப்படுகொலை உலக வரலாற்றின் கொடுமையான காலங்களில் ஒன்றாகும். துருக்கியர்கள் சுமார் ஒரு மில்லியன் (10 லட்சம்) ஆர்மீனியர்களைக் கொன்றனர். மேலும் பெண்களையும் குழந்தைகளையும் கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார்கள். ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் நகரங்களை விட்டு பாலைவனத்தில் சாகும் வரை நடக்க பலவந்தம் படுத்தப்பட்டனர். தேவன் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட மிஷனரிகள் மூலம் தனது பரலோக அன்பை இந்த வெறுப்பு மற்றும் கொடுமையால் நிரம்பிய மக்களுக்கு கூட வெளிப்படுத்துவதை செறியெனக் கண்டார். இப்படி தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களில் ஒருவர் தான் எம்மா குஷ்மேன்.எம்மா டார்லிங் குஷ்மேன். ஆசியா மைனரின் மிகப்பெரிய நகரமான கொனியாவில் (அப்போஸ்தலன் பவுல் காலத்தின் ‘இக்கோனியா பட்டண’) உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றிய ஒரு அமெரிக்க செவிலியர். எம்மா அமெரிக்கர்கள் மற்றும் ஆர்மீனியர்களை வெறுக்கும் அதே காயமடைந்த துருக்கியர்களை பராமரித்தும். மருத்துவமனையின் தலைமை செவிலியராகவும் இருந்தார். ஒருமுறை காயமடைந்த துருக்கியர் ஒருவர் அவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவற்றில் பொருத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவின் படத்தை அகற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். குஷ்மேன் அதற்க்கு. “இல்லை. மக்களுக்கு தேவன் அன்பாய் இருக்கிறார் என்று போதித்த பரம வைத்தியராகிய இயேசுவின் படம் இது. அவர் அதைக் போதித்ததாலும், அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற என்னை அழைத்ததாலும், நான் உன்னை குணமாக்க உதவ இங்கே நிற்கிறேன்.” என்று உறுதியாகப் பதிலளித்தார். அந்த நபர் குணமடைந்த பிறகு இந்த விஷயத்தைக் குறித்து யோசிக்கலாம் என்று எண்ணினார். ஆனால் அவர் மருத்துவமனையில் செலவிட்ட நேரத்திலே. குஷ்மேன் மற்றும் பிற ஆர்மீனிய செவிலியர்களிடம் கிறிஸ்துவின் அன்பைக் கண்டார். அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்குள். அவர் முழுவதுமாய் மனமாறினார். எவ்வளவு தைரியமிக்க அன்பான பெண்மணியாய் திகழ்ந்தார் எம்மா!முதல் உலகப் போரின்போது, கொடூரமான இனப்படுகொலையின் மத்தியில், குஷ்மேன் மற்றும் அவரது செவிலியர் குழு காயமடைந்த துருக்கியர்களுக்கும் ஆர்மீனியர்களுக்கும் சிகிச்சை வழங்கினர். அவரது வாழ்க்கையே ஒரு நூலிழையில் ஊசலாடுவதுபோல் இருந்தாலும், அவர் பல ஆர்மீனிய சிறுவர்களையும் சிறுமிகளையும் மரண தறுவாயிலிருந்து காப்பாற்றினார். போரினால் அனாதையான அநேக குழந்தைகளை பராமரித்தார். அவர் அவர்களுக்கு எழுத. படிக்க கற்றுக்கொடுத்து. தையல் மற்றும் தோல் வெட்டுதல் போன்ற வேறு சில திறன்களைக் கற்றுக்கொள்ளவும் உதவினார். தன் முடிவு பரியந்தம் தன் மிஷனரி அழைப்பிற்கு உண்மையாக இருந்தார் எம்மா குஷ்மேன்.

பிரியமானவர்களே. நீங்கள் உங்கள் எதிரிகளை நேசிக்கிறீர்களா

கிறிஸ்தவ பள்ளியில் படித்த.. நிர்மலா சீதாராமனை மதம் மாற்றினார்களா?

டெல்லி: மதமாற்ற புகாரில் கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றன. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய சிபிஎம் கட்சியின் கேரள எம்பி ஜான் பிரிட்டாஸ், “நிர்மலா சீதாராமன் கிறிஸ்தவ பள்ளியில் படித்தார் அவரை யாராவாது மதம் மாற்றினார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் துர்க் ரயில் நிலையத்தில், கேரளாவை சேர்ந்த மூன்று கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது மத மாற்றம் செய்தல் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இவர்கள் ஊழியம் செய்வதற்காக நாராயண்பூர் என்கிற ஊருக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு பழங்குடியின குடும்பத்தினருக்கு கிறிஸ்தவ மதம் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அந்த குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு கன்னியாஸ்திரிகள் வேலைவாய்ப்பு பெற்று கொடுத்திருக்கிறார்கள். மூன்று கன்னியாஸ்திரிகள் மற்றும் நாராயண்பூரை சேர்ந்த 21 வயது பழங்குடி சமூகத்தை சேர்ந்த இளம்பெண் ஆகியோர் துர்க் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்திருக்கின்றனர்.

அப்போது அங்கு வந்த இந்துத்துவா அமைப்பை சேர்ந்த நபர்கள், இளம்பெண்ணை மதமாற்றம் செய்து கடத்துவதாக ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் கன்னியாஸ்திரிகளை கைது செய்திருக்கின்றனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில் 21 வயது இளம்பெண், தன்னை யாரும் கடத்தவில்லை, விருப்பப்பட்டுதான் கன்னியாஸ்திரிகளுடன் சென்றேன் என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சிபிஎம் கட்சியின் கேரள எம்பியனா ஜான் பிரிட்டாஸ் குரல் எழுப்பியிருக்கிறார். அவர் பேசியதாவது, “பாஜக தலைவர்களான ஜே.பி. நட்டா, பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் அனைவரும் கிறிஸ்தவப் பள்ளிகளில் படித்தவர்கள்தான். நீங்கள் கிறிஸ்தவராகிவிட்டீர்களா? இல்லையே, இந்துவாகத்தானே இருக்கிறீர்கள்.

அதேபோல, மருத்துவ சேவை மற்றும் கல்வித் துறைகளில் பாராட்டத்தக்க சேவை வழங்கும் கிறிஸ்தவர்களையும், கன்னியாஸ்திரிகளையும் நீங்கள் துன்புறுத்தக் கூடாது. இத்தகைய செயல்கள் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும். நாட்டில் ஒவ்வொருவருக்கும் மத சுதந்திரம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

கேரள பாஜக இந்த விவகாரத்தில் கடுமையான நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. கன்னியாஸ்திரிகள் ஜாமீன் கோரி துர்க் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். சத்தீஸ்கரில் ஆளும் கட்சியாக பாஜக இருக்கிறது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜாமீன் மனுவை எதிர்க்கவில்லை என்று கேரள பாஜக கூறி வந்திருந்தது. ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜாமீனை எதிர்த்தனர். எனவே, கேரள பாஜகவின் கூற்று பொய் என நிரூபணம் ஆகி இருப்பதாக சிபிஎம் விமர்சித்திருக்கிறது.