• Wednesday 15 October, 2025 07:49 AM
  • Advertize
  • Aarudhal FM

காது குடைய buds யூஸ் பண்றீங்களா? எச்சரிக்கை

காதில் இயற்கையாகவே உற்பத்தியாகும் மெழுகு போன்ற திரவம், நாளடைவில் கெட்டியாகி அதுவே வெளியே விழுந்துவிடும். ஆனால், பட்ஸ், குச்சி (அ) வேறு எதைக் கொண்டும் காதை குடையும்போது கொஞ்சம் தவறினாலும் செவிப்பறை சேதமடைய வாய்ப்புள்ளது. மேலும், காதுகேளாமை, குமட்டல் & வாந்தியுடன் கூடிய நாள்பட்ட தலைச்சுற்றல், சுவை குன்றுதல், ஏன் சில நேரம் முகத்தில் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தும் உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

இதை சாப்பிட்டால் HEART ATTACK எச்சரிக்கை

பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை, மீண்டும் பயன்படுத்துவது ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த உணவுகளை சாப்பிட்டால் இதயநோய், புற்றுநோய், உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. ஆனால், ஹோட்டல்களில் 60% அளவுக்கு, எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்படுகிறதாம். டெல்லி, மும்பை, கொல்கத்தாவை ஒப்பிட சென்னை பரவாயில்லையாம். எனினும், வடை, பஜ்ஜி, போண்டா, சில்லி சிக்கன் சாப்பிடுமுன் யோசிக்கவும்

குழந்தை வரம் கேட்டவளின் உயிரைப் பறித்த கொடூரம்

குழந்தை வரம் கேட்டது தப்பா… உயிரைப் பறித்த கொடூரம்

உ.பி.,யில், 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த அனுராதா(35), தாந்தரீகம் செய்யும் சந்துவின் உதவியை நாடியுள்ளார்.

சந்துவோ அனுராதாவுக்கு பேய் ஓட்ட வேண்டும் எனக் கூறி, உதவியாளர்களுடன் சேர்ந்து அவரது கழுத்தை அழுத்தி, வலுக்கட்டாயமாக வாயை திறந்து கழிவு நீரை குடிக்க வைத்துள்ளார். இதில் உடல்நலம் மோசமடைந்த அனுராதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்னும் மூடநம்பிக்கைகளில் சிக்கி இருப்பவர்களை என்ன செய்வது?

போதை மருந்து கொடுத்து மாணவனை சீரழித்த ஆசிரியை

மும்பையில், 40 வயது ஆங்கில ஆசிரியை ஒருவர், 16 வயது மாணவனுக்கு மது மற்றும் மாத்திரைகள் கொடுத்து ஓராண்டாகப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி ஆண்டு விழாவில் நெருங்கிப் பழகிய ஆசிரியை, தனது தோழியின் உதவியுடன் மாணவனை மயக்கி இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து 3 பேர் பலி

கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவர் உள்பட இருவர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியுள்ளது.ரயில் மோதியதில் பள்ளி வேன் 50 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்ததில் இருவர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.இந்த விபத்தில் படுகாயமடைந்த வாகன ஓட்டுநர், பள்ளிக் குழந்தைகள் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள் அளித்துள்ள தகவலின் படி, ஓட்டுநர் மற்றும் 5 பள்ளிக் குழந்தைகள் வேனில் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.கேட் கீப்பரின் கவனக் குறைவால் ரயில்வே கேட் மூடப்படாததே விபத்துக்குக் காரணம் என்றும் முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான் பரிசுத்தமானவன் எனக்கூறி பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மத போதகர் கைது.

கன்னியாக்குமரியில் உடல்நலக் குறைவால் சபைக்கு வந்த பெண் ஒருவரை மதபோதகர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன்.

சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும் போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார். சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார் ரெஜிமோன்.

இதனால் அந்த பெண் கூச்சலிட்டுக் கொண்டு ஓடிச்சென்று தனது உறவினர்களிடமும், போலீஸிடமும் புகார் கூறியுள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் ரெஜிமோனை கைது செய்துள்ள நிலையில், அவர் சபையிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

பைபிளில் ஈரானின் சுவாரஸ்யமான செயல்

பைபிளில் ஈராக்கின் முக்கியத்துவம்

மிகவும் சுவாரஸ்யமானது, மனதைத் தொடும் மற்றும் கல்வி கற்பிக்கும்.

உங்களுக்குத் தெரியுமா?

1. ஏதேன் தோட்டம் ஈராக்கில் இருந்தது.

2. மெசபடோமியா, இப்போது ஈராக்கில் உள்ளது, நாகரிகத்தின் தொட்டில்!

3. நோவா ஈராக்கில் பேழையைக் கட்டினார்.

4. பாபேல் கோபுரம் ஈராக்கில் இருந்தது.

5. ஆபிரகாம் தெற்கு ஈராக்கில் உள்ள ஊர் நகரைச் சேர்ந்தவர்!

6. ஈசாக்கின் மனைவி ரெபெக்காள் ஈராக்கில் உள்ள நாகோரைச் சேர்ந்தவர்.

7. யாக்கோபு ஈராக்கில் ராகேலைச் சந்தித்தார்.

8. யோனா ஈராக்கில் உள்ள நினிவேயில் பிரசங்கித்தார்.

9. ஈராக்கில் உள்ள அசீரியா இஸ்ரவேலின் பத்து கோத்திரங்களைக் கைப்பற்றியது.

10. ஆமோஸ் ஈராக்கில் கூக்குரலிட்டார்!

11. ஈராக்கில் உள்ள பாபிலோன் எருசலேமை அழித்தது.

12. ஈராக்கில் தானியேல் சிங்கக் குகையில் இருந்தார்!

13. ஈராக்கில் 3 எபிரேய குழந்தைகள் நெருப்பில் இருந்தனர்.

14. பாபிலோன் மன்னர் பெல்ஷாத்சார் ஈராக்கில் “சுவரில் எழுதப்பட்டதை” கண்டார்.

15. பாபிலோன் மன்னர் நேபுகாத்நேச்சார் யூதர்களை ஈராக்கிற்கு சிறைபிடித்தார்.

16. எசேக்கியேல் ஈராக்கில் பிரசங்கித்தார்.

17. ஞானிகள் ஈராக்கிலிருந்து வந்தவர்கள்.

18. பேதுரு ஈராக்கில் பிரசங்கித்தார்.

19. வெளிப்படுத்தலில் விவரிக்கப்பட்டுள்ள “மனிதப் பேரரசு” ஈராக்கில் உள்ள ஒரு நகரமான பாபிலோன் என்று அழைக்கப்படுகிறது!

மேலும், அது உங்களுக்குத் தெரியுமா?

இஸ்ரேல் பைபிளில் அடிக்கடி குறிப்பிடப்படும் தேசம். ஆனால் எந்த தேசம் இரண்டாவது என்று உங்களுக்குத் தெரியுமா? அது ஈராக்!

இருப்பினும், பைபிளில் பயன்படுத்தப்படும் பெயர் அதுவல்ல. பைபிளில் பயன்படுத்தப்படும் பெயர்கள் பாபிலோன், கல்தேயன், ஷினார் தேசம் மற்றும் மெசொப்பொத்தேமியா. மெசபடோமியா என்ற வார்த்தைக்கு இரண்டு நதிகளுக்கு இடையில், இன்னும் சரியாகச் சொன்னால் டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகளுக்கு இடையில் என்று பொருள். ஈராக் என்ற பெயருக்கு ஆழமான வேர்களைக் கொண்ட நாடு என்று பொருள். உண்மையில் ஈராக் ஆழமான வேர்களைக் கொண்ட ஒரு நாடு, பைபிளில் இது மிகவும் குறிப்பிடத்தக்க நாடு. அதற்கான காரணம் இதுதான்:

👉ஏதேன் ஈராக்கில் இருந்தது-ஆதியாகமம் 2:10-14
👉ஆதாமும் ஏவாளும் ஈராக்கில் படைக்கப்பட்டனர்-ஆதியாகமம் 2:7-8
👉சாத்தான் ஈராக்கில் முதன்முதலில் தோன்றினார்-ஆதியாகமம் 3:1-6
👉நிம்ரோத் பாபிலோனை நிறுவினார் & பாபேல் கோபுரம் ஈராக்கில் கட்டப்பட்டது-ஆதியாகமம் 10:8-97; 11:1-4
👉மொழிகளின் குழப்பம் ஈராக்கில் நடந்தது-ஆதியாகமம் 11:5-11
👉ஆபிரகாம் ஈராக்கில் உள்ள ஒரு நகரத்திலிருந்து வந்தார்-ஆதியாகமம் 11:31; அப்போஸ்தலர் 7:2-4
👉ஈசாக்கின் மணமகள் ஈராக்கிலிருந்து வந்தாள்-ஆதியாகமம் 24:3-4; 10
👉யாக்கோபு ஈராக்கில் 20 ஆண்டுகள் கழித்தார்-ஆதியாகமம் 27:42-45; 31:38
👉முதல் உலகப் பேரரசு ஈராக்கில் இருந்தது-தானியேல் 1:1-2;2:36-38
👉வரலாற்றில் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஈராக்கில் உள்ள ஒரு நகரத்தில் ஏற்பட்டது-யோனா 3
👉எஸ்தர் புத்தகத்தின் நிகழ்வுகள் ஈராக்கில்-எஸ்தரில் நடந்தன
👉நாகூம் புத்தகம் ஈராக்கில் உள்ள ஒரு நகரத்திற்கு எதிரான தீர்க்கதரிசனம்-நாகூம்
👉புத்தகம் அல்லது வெளிப்படுத்தல் பாபிலோனுக்கு எதிரான தீர்க்கதரிசனங்களைக் கொண்டுள்ளது, இது ஈராக் தேசத்தின் பழைய பெயராக இருந்தது-வெளிப்படுத்துதல் 17 & 18

இஸ்ரேலைத் தவிர வேறு எந்த தேசமும் ஈராக்கை விட அதிக வரலாற்றையும் தீர்க்கதரிசனத்தையும் கொண்டிருக்கவில்லை.

ஆச்சரியமாக இருக்கிறதா??? 🤔

நீங்கள் ஏதாவது கற்றுக்கொண்டீர்களா???
மற்றவர்களுக்கு கல்வி கற்பிக்க பகிரவும்

பைபிள் ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி!!!

தினமும் பாதாம் பால் பருகுங்கள்

10 பாதாம் கொட்டைகளை இரவு ஊறவைத்து விடவும். மறுநாள் காலை பாதாமின் தோலை உரித்துவிட்டு அரைத்து, ஒரு கப் பாலில் சேர்த்துக்கொள்ளவும்.

அதனுடன் ஒரு துண்டு இஞ்சி, ஒரு சிட்டிகை ஜாதிக்காய் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை சேர்க்கவும். இந்த பாலை தினமும் பருகி வருவதால் உடலில் ஆரோக்கியம் பெருகுவதுடன் நமக்கு ஏற்படும் பதற்றம், கவலை ஆகியவற்றையும் நீக்குகிறது.

என்ன நீங்க 5 மணிநேரத்துக்கு கம்மியா தூங்குறீங்களா? அச்சச்சோ

ஒரு நாளைக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குபவர்களுக்கு ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்றவை ஏற்பட்டு மாரடைப்பு, பக்கவாதம் வரலாம் → நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடைந்து புற்றுநோய் வரும் வாய்ப்பு ஏற்படலாம் டைப் 2 நீரிழிவு வரலாம் → குறைவான தூக்கம் பசியை கட்டுப்படுத்தும் லெப்டின் & கிரெடின் ஹார்மோன்கள் சமநிலையை இழக்கும். இதனால் அதிக பசி ஏற்பட்டு, உடல் பருமன் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

நீங்க லேட்டாவா தூங்குறீங்க கெட்டுச்சு போங்க..

ஏன் என்றால்.. இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை நாம் உறங்கும்போது, உடல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது.

11-1 மணிக்கு கல்லீரல், பித்தப்பை நச்சு நீக்கம்;

1-3 மணிக்கு ஆழ்ந்த உறக்கம், கனவுகள்;

3-5 மணிக்கு சிறுநீரகம், குடல் கழிவு நீக்கம்;

5-6 மணிக்கு உடல் விழித்தெழத் தயார் என உடலியல் ரீதியாகப் பல அற்புதங்கள் நம்மை அறியாமலேயே நிகழ்கின்றன! இதைதான் நாம டிஸ்டர்ப் பண்றோம்…