• Monday 16 June, 2025 05:50 PM
  • Advertize
  • Aarudhal FM

பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு..

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. மாணவர்கள் வசதிக்காக பழைய பஸ் பாஸையே பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். முதல் நாளிலேயே நேரத்திற்கு பள்ளிக்கு சென்றுவிடுங்கள். தற்போது கொரோனா மெல்ல தலை தூக்கி வருவதால், எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். எனவே முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றை பயன்படுத்துவதை மறக்காதீர்கள்.

இந்திய வேதாகம சங்கத்தின் புதிய அப்டேட் பைபிள் மொழிபெயர்ப்பு

இந்திய வேதாகம சங்கத்தின் புதிய அப்டேட் பைபிள் மொழிபெயர்ப்பு

எதற்காக இதை நாம் பயன்படுத்த வேண்டும்…

காரணங்களை அறிந்து கொள்வோம்

  • Re – Edited Version (நம்முடைய தமிழ் மொழிபெயர்ப்பின் Updated Translation)

மிக முக்கியமானதை மட்டுமே,
அதுவும் மிகவும் எளிமையாக படிப்பதற்காக,
Point by Point -ஆகவே பதிவு செய்திருப்பதால், இறுதி வரை கண்டிப்பாக வாசிக்கும் படியாக அன்போடு வேண்டுகிறேன் 🙏🏻

முதலாவது :
✨ பரிசுத்த வேதாகமத்தை மாற்றுதல் என்பது வேறு.
✨ பரிசுத்த வேதாகமத்தின் நம்முடைய தமிழ் மொழிபெயர்ப்பை அடுத்த தலைமுறைக்கு கொண்டு போவதற்காக, இன்னும் சிறப்பாக Update செய்வது என்பது வேறு.

  • என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உன்னதமான தேவனாகிய கர்த்தருடைய வார்த்தையாகிய : பரிசுத்த வேதாகமம் 💯% Perfect.
ஒருவராலும் மாற்றவோ, அழிக்கவோ முடியாது.

  • கர்த்தருடைய வார்த்தை : எப்போதுமே மாறாதது.

ஆகவே,
Translation Updation என்பது வேறு.
அது தவிர்க்கவே முடியாத காலத்தின் கட்டாயம்.

  • ஏனென்றால் : ஒரு மொழி என்பது காலா காலத்திற்கும் : எழுத்துகளிலும், வார்த்தைகளிலும் & பேச்சு வழக்கிலும் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.

குறிப்பாக, நம்முடைய தமிழ்நாட்டில் மிஷினரிகள் (சீகன் பால்க் முதல் பல மிஷினரிகள்) கர்த்தருடைய வார்த்தையை :
அடுத்தடுத்த தலைமுறைக்கு சரியாக கொண்டு போய் சேர்ப்பதில் மிக கவனமாக செயல்பட்டார்கள்.

ஆகவே, நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிற நம்முடைய தமிழ் மொழிபெயர்ப்பு 150 ஆண்டுகளுக்கு மேலாக எந்த Updation -ம் இல்லாமல் இருப்பதால்,

இப்போது இருக்கிற இளம் தலைமுறை முதல் வருகிற அடுத்த தலைமுறைக்கும் கர்த்தருடைய வார்த்தையை கவனமாக, சரியாக கொண்டு போய் சேர்க்க வேண்டிய மிகக் கட்டாயமான அவசியத்தை உணர்ந்து,

❤️ Bible Society of India (BSI) தற்போது நம்முடைய இந்த தமிழ் மொழிபெயர்ப்பை Updation செய்து வெளியிட்டு இருப்பது :

  • மெய்யாகவே கர்த்தருடைய மாபெரும் கிருபையே !….

💥 Translation Updation -ல் 5 மிக முக்கிய அம்சங்கள் உள்ளன.

  • ✨ 1). எழுத்துகளில் Updation
  • ✨ 2). வார்த்தைகளில் (By Words) Updation
  • ✨ 3). இலக்கண பிழைகளை சரிசெய்து, Grammatical Mistakes Correction & Updation
  • ✨ 4). வசனங்களின் Concept -ல் உள்ள பிழைகளை சரிசெய்து Concept Accuracy Updation
  • ✨ 5). சிறப்பு அம்சங்களில் உள்ள Updations

❤️ 1). எழுத்தில் Updation :

உதாரணத்திற்கு :
லை என்ற எழுத்து நம்முடைய தமிழ் மொழிபெயர்ப்பில், பழைய எழுத்து, அதாவது : என்ற எழுத்தில் ஒரு சுழி இருக்கும்.
அது : லை – என்று, மாற்றமடைந்து பல ஆண்டு காலமாகிறது.

  • என் பிள்ளைகளே கேட்டார்கள். தமிழில் இப்படி ஒரு எழுத்து இல்லவே இல்லையே – என்று !….
  • இப்போது, இந்த Updated Translation -ல் இது அனைத்தும் (இதே போலவே : “னை” – என்ற எழுத்தும்) சரி செய்யப்பட்டு விட்டது.

இப்படி இன்னும் பல…. (Tamil Font -ம் எளிதாக படிப்பதற்கு ஏதுவான Font -ஐ தான் பயன்படுத்தி இருக்கிறார்கள்).

❤️ 2). வார்த்தைகளில் Updation :

🔥 ஜாதி – என்ற மிகத் தவறான வார்த்தை : முற்றிலும் களையப்பட்டு அதற்கு பதிலாக :

  • தேசங்கள், மக்களினம் என்ற சரியான வார்த்தை Update செய்யப்பட்டு இருக்கிறது (“புறஜாதிகள்” – என்ற வார்த்தை : “பிற ஜனத்தார்” என்று சரியாக Update செய்யப்பட்டு இருக்கிறது).

மேலும், இஸ்ர வே ல் என்ற வார்த்தை :
எபிரேய உச்சரிப்பில் உள்ளபடி :

  • இஸ்ர யே ல் (ஏல்) என்று சரியான உச்சரிப்பில் Update செய்யப்பட்டு இருக்கிறது.
  • இஸ்ம வே ல் – இஸ்ம யே ல் (ஏல்)
  • மிகா வே ல் – மிகா யே ல் (ஏல்)
    என்று மிகச்சரியாக Update செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும், புரியவே புரியாத பல வார்த்தைகள் மிகச்சரியாக Update செய்யப்பட்டு இருக்கிறது :

யோபு – 33 : 23 -ல் :

  • சாமாசி பண்ணுகிற தூதனானவர் – என்ற புரியாத வார்த்தை :
  • மத்தியஸ்தம் (Mediate) பண்ணுகிற தூதனானவர் – என்று மிகச் சரியாக Update செய்யப்பட்டு இருக்கிறது.

நீதிமொழிகள் 25 : 12 :

  • அபரஞ்சிப் பூஷணம் என்ற புரியாத வார்த்தை :
  • பசும்பொன் ஆபரணம் – என்று மிகச் சரியாக Update செய்யப்பட்டு இருக்கிறது.

ஆதியாகமம் – 42 : 23 -ல் :

  • துபாசி என்ற புரியாத வார்த்தை :
  • மொழிபெயர்ப்பாளன் (Translator – interpreter) – என்று மிகச் சரியாக Update செய்யப்பட்டு இருக்கிறது.

லேவியராகமம் – 4 : 9 (இன்னும் பல வசனங்களில் உள்ள) :
மிகவும் கொச்சையாக இருக்கிற வார்த்தை :

  • சிறுநீரகங்கள் (Kidneys) – என்று, மிகச் சரியாக Update செய்யப்பட்டு இருக்கிறது.

✨ மேலும், பல வசனங்களில் உள்ள :

  • அகத்தியமாய் – என்ற புரியாத வார்த்தை :
  • அவசியமாய் / நிச்சயமாய் – என்று, சரியாக Update செய்யப்பட்டு இருக்கிறது.

இப்படி இன்னும் பல….

  • சுருக்கம் கருதி இத்துடன், இதை முடிக்கிறேன்.

❤️ 3). இலக்கண பிழைகளை சரிசெய்து, Grammatical Updation :

உதாரணத்திற்கு :
ஒருமை, பன்மை (Singular, Plural) பிழைகள் பல இடங்களில் சரி செய்யப்பட்டு இருக்கிறது.

  • லூக்கா – 2 : 32 :
  • என் கண்கள் கண்ட து – என்பதை :
  • கண்ட – என்று,
  • இலக்கண பிழை சரி செய்யப்பட்டு, Grammatical Updation -ம் செய்யப்பட்டு இருக்கிறது.

❤️ 4). வசனங்களின் Concept -ல் மிகச்சரியான (Accuracy) Updation :

உதாரணத்திற்கு :
ரோமர் – 5 : 20 -ல் :

  • மீறுதல் பெருகும் படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது – என்று, (பாவம் இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்பதற்காகவே ஆண்டவர் வேதத்தை கொடுத்தார் – என்று மிக அபத்தமான அர்த்தம் ஆகக்கூடிய மாபெரும் Blunder Mistake -ஆக இருப்பது : மிகச் சரியாக :
  • நியாயப்பிரமாணம் வந்தபடியால் மீறுதலின் மிகுதி தெரிந்தது – என்று மிகச் சரியாக Accurate -ஆக Update செய்யப்பட்டு இருக்கிறது.

நீதிமொழிகள் – 16 : 4

  • தீங்குநாளுக்காக துன்மார்க்கனையும் “உண்டாக்கினார்” – (கர்த்தருடைய படைப்பின் நோக்கமே தவறான நோக்கமுடையது என்ற அபத்தமான அர்த்தம் ஆகக்கூடிய) Blunder Mistake -ஆக இருப்பது :
  • தீங்குநாளுக்காக துன்மார்க்கனையும் “வைத்திருக்கிறார்” – மிகச் சரியாக Update செய்யப்பட்டு இருக்கிறது.

யோவான் – 8 : 23 -ல் :

  • நான் உயர்விலிருந்துண்டானவன் (ஆண்டவராகிய இயேசுவும் படைக்கப்பட்ட ஒரு படைப்பு தான் – என்று, அவரே சொல்கிறாரே : என்று, மிகத் தவறான, அபத்தமான அர்த்தம் ஆகக்கூடிய) Blunder Mistake -ஆக இருப்பது :
  • நான் மேலேயிருந்து வந்தவர் – என்று மிகச்சரியாக Update செய்யப்பட்டு இருக்கிறது.

இப்படி, இன்னும் பல வசனங்களில், பிழையாக இருப்பது : சரி செய்யப்பட்டு மிகச் சரியான Updations செய்யப்பட்டு இருக்கிறது.

  • சுருக்கம் கருதி, இத்துடன் முடிக்கிறேன்.

5). சிறப்பு அம்சங்களில் Updation :

✨ அடிக்குறிப்புகள்,
✨ இணைவசனங்கள்,
✨ ஒவ்வொரு புத்தகத்திற்கும் முன்னுரை (அந்த புத்தகத்தின் கருப்பொருள், முக்கிய நபர்கள், முக்கிய பகுதிகள் போன்றவை)
✨ ஒவ்வொரு சம்பவங்களுக்கும், பகுதிகளுக்கும் ஏற்ற தலைப்புகள்
✨ ஒவ்வொரு சம்பவமும், பகுதிகளும் : இதே சம்பவம், இதே பகுதி : பரிசுத்த வேதாகமத்தின் மற்ற புத்தகத்திலும் எங்கிருக்கிறது என்ற Reference அந்தந்த தலைப்புகளுக்கு கீழேயே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

உதாரணத்திற்கு :
🔥 மத்தேயு – நற்செய்தியை படிக்கும் போது அதில் 3 -ஆம் அதிகாரத்தில் -13 முதல் 17 வசனங்கள் வரையுள்ள : இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானம் – சம்பவம்

  • மற்ற சுவிசேஷங்களில் எங்கிருக்கிறது என்ற Reference :
  • அந்த தலைப்பின் கீழேயே குறிப்பிடப்பட்டு உள்ளது.

✨ மேலும், பல வார்த்தைகளுக்கான விளக்கங்கள் :

  • அடிக்குறிப்பு பகுதியில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

உதாரணத்திற்கு :
மத்தேயு – 23 : 5 -ல் :

  • காப்பு நாடா என்பதின் விளக்கத்தை :
  • அடிக்குறிப்பு பகுதியில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

✨ மேலும் : மூன்றாம் மணி நேரம், ஒன்பதாம் மணி நேரம் என்றால் :

  • நம்முடைய நேரப்படி அது எந்த நேரம் என்பதும்,

மத்தேயு – 14 : 25 -ல் :

  • நான்காம் ஜாமம் – என்றால் அது எந்த நேரம் என்கிற விளக்கம் :
  • அதே Page -ன் அடிக்குறிப்பு பகுதியில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

❤️ மேலும், இறுதிப்பகுதியில் :
பிற் சேர்க்கைகள் – என்ற பகுதியில் :

  • அருஞ்சொல் அகராதி என்ற தலைப்பில் :
  • பல வார்த்தைகளுக்கான விளக்கங்கள் உள்ளன.
  • உதாரணத்திற்கு : “அம்பறாத்தூணி” – என்றால் என்ன ? என்ற வார்த்தைக்கான விளக்கம்.

✨ பழைய ஏற்பாட்டுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் இடையில் நடந்த வரலாற்று சுருக்கம்
✨ வேதாகம காலக் கணிப்பு – புதிய வரைபடங்கள்

போன்ற இத்தனை சிறப்பு அம்சங்களையும் கொண்டு வெளிவந்திருக்கிறது :

  • இந்த : Re – Edited Version

My Final Conclusion :

  • இதை வேறு ஏதோ ஒரு மொழிபெயர்ப்பு என்று நினைத்து விடக் கூடாது.

💥 இது நம்முடைய கையில், நாம் வைத்திருக்கிற நம்முடைய தமிழ் மொழிபெயர்ப்பின் Updation தான் இந்த Re – Edited Version

  • என்பதை நாம் சரியாக புரிந்து கொண்டு,

இதை வாங்கி நாம் பயன்படுத்துவதன் மூலம்,

  • இப்போது இருக்கிற நம்முடைய இளம் தலைமுறைக்கும்,
  • வரப்போகிற அடுத்த தலைமுறைக்கும் மிகச் சரியாக நம்முடைய பரிசுத்த வேதாகமத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டியது நம்முடைய மாபெரும் தலையாயக் கடமை என்பதின் Seriousness மிகத் துல்லியமாக நமக்கு புரியும் என்று கிறிஸ்துவுக்குள் நம்புகிறேன் !

By Bro. Muthu Kumar copy-Yaso

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான “எட்டு போடுதல்”

🔴ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான “8 போடுதல்” பயிற்சி – அதன் பின்னணி தெரியுமா?ஓட்டுநர் உரிமம் (Driving Licence) என்பது, பொதுவெளியில் வாகனம் ஓட்ட உத்தியோகபூர்வமாக அனுமதி தரும் ஆவணம். இந்த உரிமத்தைப் பெறுவதற்கான ஒரு முக்கியத் தேர்வாகவே “8 போடுதல்” பயிற்சி (Figure-8 Test) RTO அலுவலகத்தில் நடத்தப்படுகிறது.

🔴எதற்காக ‘8’ வடிவத்தில் வண்டி ஓட்டச் சொல்கிறார்கள்?

8 என்ற எண் வடிவத்தில் வண்டி ஓட்டச் சொல்வதற்கான காரணம், ஓட்டுநரின் இயக்கத் திறனையும், நிலைத்தன்மையையும் சோதிப்பதற்காக ஆகும். இது ஒரு சவாலான பயிற்சி:

🔹வலப்பக்கம், இடப்பக்கம் திருப்புதல் திறன்

🔹குறைந்த இடைவெளியில் வாகன கட்டுப்பாடு

🔹பாதுகாப்பான யூ-டர்ன் பழக்கவழக்கம்

🔹பதட்டமின்றி வாகனம் ஓட்டும் மனநிலை

🔴ஏன் 8 என்ற வடிவம்?

🔹8 என்பது தொடக்கமும் முடிவும் இல்லாத தொடரும் வடிவம்.

🔹இந்த வடிவத்தில் வாகனத்தை ஓட்டுவது சாலையில் வரும் வளைவுகளுக்கும், கடுமையான சுழற்சி திருப்பங்களுக்கும் தயாராக வைத்துக்கொள்ளும் பயிற்சி.

🔹சைக்கிள் அல்லது டூ வீலர் ஓட்டும் பொழுது, கால்கள் தரையில் பதியாமல் வாகனத்தை நிலைபேறாக கட்டுப்படுத்தி சுழற்ற வேண்டும்.

🔹இது ஓட்டுநரின் பாதுகாப்பு, கவனம், திறமை ஆகியவற்றின் அளவுகோலாக பார்க்கப்படுகிறது.

🔴முக்கிய குறிப்பு:

🔹சிலர் “8 போடாமல்” விலக்குகள் தேட முயற்சிக்கிறார்கள். ஆனால், இது பாதுகாப்பு கற்றலுக்கே உங்களுக்கே தேவையானது என்பதை உணருங்கள்.

🔹“8 போடுதல்” என்பது உரிமம் பெறுவதற்கான ஒரு தேவை மட்டுமல்ல, வாழ்க்கை பாதுகாப்புக்கான முன்னோடியும் ஆகும்

🔴விளக்கம்:ஓட்டுநர் உரிமம் பெறும் முன் செய்யும் “8 போடுதல்” ஒரு கணித வடிவத்தைக் காட்டும் பயிற்சி அல்ல. அது ஒரு பயிற்சி வடிவம். இது, முன்னேற்பாடான சாலை பயணத்திற்கான அறிவாற்றலை வளர்க்கும் பயிற்சி.-

வெற்றி ரகசியத்தின் படிகள் – ஒரு குட்டி கதை

ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே! என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது. மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர். இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறார், அதற்கு இவ்வளவு அலங்காரமா!

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!

கட்டளைகள் பறந்தன, காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது. மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது. மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான். மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா? தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்! அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?’

தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை! பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?

அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள். இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள், காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார். நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை, என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு! என்றான் மன்னன்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள்

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

  1. ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.
  2. அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பது. எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே

ஒரு பிரசங்கியார் ஏன் தனது பிரசங்கத்தில் தடம் புறள்கிறார்?

1 தான் நினைப்பது எல்லாம் கர்த்தர் பேசுவதாக கருதும் போது….

2. தான் வாசிக்கும் வேதாகமத்திற்கு இறுதி அதிகாரம் என்று நம்புவது சரி.ஆனால் அதில் தனக்கு கிடைத்த வெளிப்பாடுக்கும்அதே இறுதி அதிகாரம் இருப்பதாக கருதி சபை யாரை அச்சுறுத்தி பேசும் போது,

3. வேதாகம கொள்கைகளை போதிப்பதாக கருதி தனது விருப்பத்தை தனது சபையில் தேவ திட்டம் இதுதான் என்று துணிகரமாக பேசும் போது

4. சபையாரோடு நேரடியாக பேசி தீர்க்க வேண்டியதை தீர்க்க இயலாமல் கோழைத்தனமாக பிரசங்கத்தின் வாயிலாக தனக்கு கிடைத்த பலிபீடத்தை தவறாகப் பயன்படுத்தி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் போதுஎப்பேர்ப்பட்ட பிரசங்கியாரும் தடம் புறழ்வதற்கான அபாயம் உண்டு.

அவசியம் செல்போனில் இருக்க வேண்டிய எண்கள் உங்க போனில் இந்த எண்கள் இருக்கிறதா?

அவசியம் செல்போனில் இருக்க வேண்டிய எண்கள்உங்க போனில் இந்த எண்கள் இருக்கிறதா.?

போக்குவரத்து அத்துமீறல் – 94875991001

போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832

குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

முதியோருக்கான அவசர உதவி -1253

தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி -88832150001

கடலோர பகுதியில் அவசர உதவி 1093

ரத்த வங்கி – 1910

கண் வங்கி – 1919

நம் பிள்ளைகள் மேற்படிப்பு தொடர தகவல்கள்

ப்ளஸ் -2 வகுப்பிற்கு பின் படிக்க இவ்வளவு வாய்ப்புகள் உள்ளது

என்ன படிக்கலாம் மாணவர்களின் பார்வைக்கு கொண்டுசெல்லுங்கள் பயன் பெறுங்கள்…
+2வில் physics, chemistry, maths, biology படித்த மாணவர்களுக்கு

Science Courses (3 Years)

Bsc Physics
Bsc Chemistry
Bsc Botany
Bsc Zoology
Bsc Computer science
Bsc Mathematics
Bsc PCM
Bsc CBZ
Bsc Forestry
Bsc Dietician & Nutritionist
Bsc Home Science
Bsc Agriculture Science
Bsc Horticulture
Bsc Sericulture
Bsc Oceanography
Bsc Melsorology
Bsc Arthopology
Bsc Forensic Science
B.Sc IT with cyber security
Bsc Food technology
Bsc Diary Technology
Bsc Hotel Management
Bsc Fashion Design
Bsc Mass Communication
Bsc Electronic Media
Bsc Multimedia
Bsc 3D Animation

Commerce Courses
+2 வில் commerse group எடுத்தவர்களுக்கு மட்டும்

CA Chatted Account
CMA Cost Management Account
CS Company Secretary (Foundation)
B.Com Regular
B.Com Taxation &Tax Procedure
B.Com Travel & Tourism
B.Com Bank Management
B.Com Professional
BBA /. BBM Regular
BFM Bachelor of Financial Management
BMS
BAF

Humanities Courses

Advertising
BS General
Criminology
Economics
Fine Arts
Foreign languages
Home Science
Interior Design
Journalism
Library Science
Physical Education
Political Science
Psychology
Social Work
Sociology
Travel and Tourism

Management Courses

Business Management
Bank Management
Event Management
Hospital Management
Hotel Management
Human Resources Managemet
Logistics Management

+2வில் எல்லா group படித்தவர்களும் படிக்கலாம்
Law Courses (3/5 Years)

LLB,
BA+LLB
B.Com + LLB
BBM+LLB,
BBA. +LLB

+2வில் physics, chemistry, maths, biology படித்த மாணவர்களுக்கு
MEDICAL COURSES

MBBS
BUMS Unani
BHMS Homeopathy
BAMS Ayurveda
BSMS Sidha
BNYS Naturopathy
BDS Dental
BVSc Veterinary.

PARAMEDICAL COURSES

Nursing
Pharm D
B.Pharm
D.Pharm
M. Pharm
Anesthesia technical
Cardiac Care technical
Perfusion technology
Cathllab technology
Clinical Optometry
Dental Hygiene
Dental Mechanic
Dental Technician
Health Inspector
Medical imaging & Tech…
Medical Lab technician
Medical Records tech
Medical X Ray Technician
Nuclear Medicine Tech
Occupational Therapist
Operation theater Tech
Ophthalmic Assistant
PHYSIOTHERAPY
Radiographic Assistant
Radiotherapy Technician
Rehabilitation Therapy
Respiratory Therapy Tech.
Blood Transfusion Tech..
Bsc Renal Dialysis

B.E. / Tech Engineering (4year)

Petro chemical Engineering
Petroleum Engineering
Civil Engineering
Mechanical Engineering
Aeronautical Engineering
Aerospace Engineering
Agricultural Engineering
Architecture Engineering
Automobile Engineering
Automation & Robotics Eng.
Artificial Intellegence
Cyber security
Avionics Engineering
Biomedical Engineering
Bio technological Eng..
Chemical Engineering
Ceramics Engineering
Computer Science Engi..
Electronics &Comm.Engi.
Electrical & Electronics Engi.
Environmental Science Engi.
Information Science Engi
Industrial Engineering
Industrial Production Engi..
Instrumental Technology
Marine Engineering
Medical Electronics Engi..
Mining Engineering
Manufacturing Science Engi.
Naval Architecture Engi….
Nanotechnology Engi..
Polymer Technology Engi..
Silk Polymar Engi…
Carpet Technology Engi…
Textile engineering
Robotics
Genetic

*POLYTECHNIC (10 th class)

Civil engineering
Mechanical engineering
Automobile engineering
Computer science engi…..
Electronics and communication Engineering
Electrical engineering
Petro chemical engineering

2வில் commerse group படித்த மாணவர்களுக்கு
Management
(new job opportunity Courses 2/3/5Years Duration):

BBA /BBM
BBA Aviation
BBA Air Cargo Management
BBA Aeronautical
BBA Retail Marketing
BBA Customer Care Management
BBA Airline & Airport Management
BBA Cargo Management
BBA Office Management
BBA Store Management
BBA Mall Management
BBA Logistics

BCA SAP
BCA Cloud Computing

MBA Logistics
Aviation
HR
Management

Architecture (5 years +2)
B.Arch (NATAis Compulsory)
M.Arch .

      இன்னும் பல படிப்புகள் உள்ளன      

மாணவர் ,மாணவியர்கள் தங்களது பெற்றோர்களுடன் கலந்தாலோசித்து நல்லதொரு
பிரிவை தேர்ந்தெடுத்து பயில்வதற்கு நல்வாழ்த்துக்கள் .🫱🏻‍

சாத்தான்குளம் கிணற்றில் மூழ்கி இறந்த 5 பேரின் உடல்களுக்கு கனிமொழி அஞ்சலி! கதறிய உறவினர்கள்

சாத்தான்குளத்தில் கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது உடல் வைக்கப்பட்டுள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.

வாகனத்தில் மொத்தம் இருந்த 8 பேரில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 4 மணி நேர மீட்புப் பணிக்குப் பின் 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்று (18/05/2025) திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்து உயிரிழந்த 5 பேரின் உடலுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும், அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார். தஞ்சையை சேர்ந்த 8 பேர் கொண்ட குடும்பத்தினர் சாத்தான்குளம் அருகே வெள்ளாளன்விளை பகுதியில் இன்று நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக ஆம்னி காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.

சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்து கார் நிலைத்தடுமாறு ஓடியது. அப்போது அங்கிருந்த சாலையோர கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக கார் விழுந்தது.

இதில் காரில் இருந்த ஒரு குழந்தை உள்பட 8 பேர் கிணற்றுக்குள் மூழ்கினர். அப்போது காருக்குள் இருந்த இரு ஆண்களும் ஒரு பெண்ணும் கார் கதவை திறந்து கிணற்றில் இருந்து தப்பி வெளியே வந்துவிட்டனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்களிடம் நடந்ததை கூறி கதறியுள்ளனர்.

உடனே மீரான்குளம் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். கிணறு சுமார் 50 அடி ஆழத்திற்கு இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் இறங்கி காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சாத்தான்குளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

அந்த 5 பேரின் சடலங்களுக்கும் கனிமொழி அஞ்சலி செலுத்திய போது அவர்களது உறவினர் கதறி அழுத போது கனிமொழி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று ராணுவம் முக்கிய அறிவிப்பு

புதுடில்லி: இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு பிறகு, நடந்தது என்ன என்பது குறித்து இன்று (மே 11) ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். அப்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது.

கடந்த நான்கு நாட்களாக இந்தியா – பாகிஸ்தான் மோதல் உச்சத்தில் இருந்தது. போர் மேலும் தீவிரமடைய இருந்த நிலையில், நேற்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டன என மத்திய வெளியுறவு துறை செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார்.

ஆனாலும் நேற்றிரவு பல இடங்களில் வெடிகுண்டுகள் சத்தம் கேட்கிறது. இது என்ன போர் நிறுத்தம் என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பி இருந்தார். பல்வேறு இடங்களில் வானில் ட்ரோன்கள் பறந்தது. நமது பாதுகாப்பு படையினர் வானில் இடைமறித்து துல்லியமாக சுட்டு வீழ்த்தினர்.

போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி பெறுவதற்கு ராணுவத்தினருக்கு தகுந்த உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்திருந்தது. அதன்படி ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வந்தது. நள்ளிரவுக்கு மேல் மெல்ல மெல்ல இயல்பு நிலை துவங்கியது. காஷ்மீரில் பூஞ்ச், ஜம்மு, ரஜோரி, அக்னூரில் இயல்பு நிலை திரும்பியது.

தற்போது தான் ட்ரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல் ஏதும் நடக்கவில்லை. இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு பிறகு, நடந்தது என்ன என்பது குறித்து இன்று (மே 11) ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். அப்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது

இல்லாவிட்டால்

இல்லாவிட்டால்→

1) இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை – எபி 9:22

2) விசுவாசம் இல்லாமல் தேவனை பிரியப்படுத்த முடியாது – எபி 11:6

3) பரிசுத்தம் இல்லாமல் தேவனை தரிசிக்க முடியாது – எபி 12:14

4) கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்தது – யாக் 2:26

5) அன்பு இல்லாவிட்டால் நான் ஒன்றுமில்லை – 1 கொரி 13:2

6) சிட்சை இல்லாவிட்டால் பிள்ளைகள் இல்லை – எபி 12:8

7) என்னையல்லாமல் (இயேசு) உங்களால் ஒன்றும் செய்ய முடியாது – யோ 15:5