• Tuesday 17 June, 2025 12:37 AM
  • Advertize
  • Aarudhal FM

பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பபட்டவர்கள்

பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பபட்டவர்கள்

1) மோசே – எண்ணாகமம் 11:17,25
2) இஸ்ரவேலின் 70 மூப்பர் – எண் 11:25,26
3) பிலேயாம் – எண்ணாகமம் 24:2
4) ஒத்னியேல் – நியாயாதிபதி 3:9,10
5) கிதியோன் – நியாயாதிபதி 6:34
6) யெப்தா – நியாயாதி 11:29
7) சிம்சோன் – நியாயாதிபதி 14:6,19/15:14
8) சவுல் – 1 சாமுவேல் 10:10, 11:6, 19:23
9) தாவீது- 1 சாமுவேல் 16:13, 2 சாமு 23:1,2
10) சவுலின் சேவகர் – 1 சாமுவேல் 19:20
11) எலிசா – 2 இராஜா 2:9-15
12) அமாசாயி – 1 நாளாகமம் 12:18
13) அசரியா – 2 நாளாகமம் 15:1
14) சகரியா – 2 நாளாகமம் 24:20
15) யோசேப்பு – ஆதியாகமம் 41:38
16) காலேப் – எண்ணாகம் 14:2
17) யோசுவா – எண்ணாகமம் 27:18
18) ஆரோன் – சங்கீதம் 133:2,3 & லேவியராகமம் 21:12
19)தானியேல் – தானியேல் 5:11,12,
6:3, 4:8

கத்தியில் பறிபோன உயிர்… இன்று +2 தேர்வில் பாஸ்!

கத்தியில் பறிபோன உயிர்… இன்று +2 தேர்வில் பாஸ்! கொலை செய்யப்பட்ட இவரின் மார்க்தான் அனைவரின் மனதையும் கணக்க வைத்துள்ளது. கரூர் குளித்தலையில், தேர்வு எழுதிவிட்டு முடிவிற்காக காத்திருந்த ஷியாம் சுந்தர் மகா மாரியம்மன் கோயில் திருவிழாவில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், +2 தேர்வில் ஷியாம் 351 மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். இன்று மார்க்கை பார்த்த பெற்றோரும், நண்பர்களும் கண்ணீரில் மூழ்கி இருக்கின்றனர்.

தந்தை உயிரிழந்த சோகத்துடன் 12ம் வகுப்புதேர்வு எழுதிய மாணவன் – எவ்வளவு மார்க் தெரியுமா?

தந்தை உயிரிழந்த சோகத்துடன் தேர்வெழுதி அதில் தேர்ச்சியடைந்த மாணவனுக்கு பொது மக்கள் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சிவகங்கையில் தந்தை உயிரிழந்த சோகத்துடன் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பொது தேர்வெழுதிய நிலையில் 341 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்:

மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, தேர்வு எழுதிய 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகளில் பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். ஒட்டுமொத்தமாக அரசு பள்ளிகள் சதவிகிதமும், தனியார் பள்ளிகள் சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் பதிவான 94.56 தேர்ச்சி சதவிகிதத்தை காட்டிலும், நடப்பாண்டில் 0.49 சதவிகிதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. இந்நிலையில் சிவகங்கையில் தந்தை உயிரிழந்த சோகத்துடன் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பொது தேர்வெழுதிய நிலையில் 341 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டுநராக பணிபுரிந்த அப்பா

சிவகங்கை ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் செந்தில்வேலன் சிவகங்கை மன்னர் மேல் நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு உயிரி கணிதம் பயின்று வந்த நிலையில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொது தேர்வு துவங்கி நடைபெற்று முடிந்த நிலையில் செந்தில்வேலனும் அதற்கு தன்னை தயார் படுத்தி தேர்வெழுத காத்திருந்தபோது முதல் நாளான 3 ஆம் தேதி தமிழ் தேர்வெழுத காலையில் தயாரானபோது நிலையில் திடிரென செந்தில்வேலனின் தந்தை தர்மலிங்கம் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார்.

தந்தை இறுதிச்சடங்கில் பங்கேற்ற மாணவன்

இருந்தபோதிலும் அந்த துக்கத்தையும் மறந்து செந்தில்வேலன் தேர்வு மையம் சென்று தமிழ் தேர்வை எழுதியதுடன் தேர்வு முடிந்து வீட்டிற்கு திரும்பியதும் தந்தை தர்மலிங்கத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார். இன்று தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் செந்தில்வேலன் 341 மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றியடைந்துள்ளார். இதனை தனது தாயிடம் மாணவன் தெரிவித்த நிலையில் கனவரின் புகைப்படம் முன்பு கதறி அழுத தாய் அவருக்கு ஆறுதல் கூறியதுடன் மாணவனுக்கு ஆசீர்வாதம் செய்தார். மாணவன் செந்தில்வேலன் தனது தந்தையின் கனவான மருத்துவத்துறையில் சிறந்து விளங்குவதே தனது லட்சியமென சூளுரைத்தார். தந்தை உயிரிழந்த சோகத்துடன் தேர்வெழுதி அதில் தேர்ச்சியடைந்த மாணவனுக்கு பொது மக்கள் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று மரணம்… இன்று தேர்ச்சி… தேர்வு பயத்தில் தற்கொலை செய்த மாணவியின் மதிப்பெண்கள் 413

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் புண்ணியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஆர்த்திகா பாபநாசத்தில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதி இருந்தார். இன்று ரிசல்ட் வெளியான நிலையில் நேற்று மாணவி தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி வீட்டின் மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று ரிசல்ட் வெளியான நிலையில் மாணவி தேர்ச்சி பெற்றுள்ளார். அந்த மாணவி 600 மதிப்பெண்களுக்கு மொத்தம் 413 மார்க் எடுத்துள்ளார்.

அதன்படி தமிழ் பாடத்தில் 72 மதிப்பெண்களும், ஆங்கில பாடத்தில் 42 மதிப்பெண்களும், பிசிக்ஸ் பாடத்தில் 65 மதிப்பெண்களும், கெமிஸ்ட்ரியில் 78 மதிப்பெண்களும், பாட்டனியில் 70 மதிப்பெண்களும், ஸ்வாலஜியில் 80 மதிப்பெண்களும் எடுத்துள்ளார்.

மேலும் மாணவி அவசரப்பட்டு தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று அதிகமாக மார்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

TN 12th Result 2025: சாலை விபத்தில் உயிரிழந்த மாணவன் +2 தேர்வில் தேர்ச்சி.. சோகத்தில் குடும்பத்தினர்

வேடசந்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 12-ம் வகுப்பு மாணவன் பொது தேர்வில் 443 மதிப்பெண்கள் பெற்றார்.

தமிழகத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றன. பிளஸ் 2 தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள், 3316 தேர்வு மையங்களில் எழுதியிருந்தனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்கூட்டியே இன்றே வெளியாகியுள்ளன. தமிழகத்தில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 91.94 சதவீதமும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.71 சதவீதமும் தனியார் பள்ளிகளில் 98.88 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் +2 தேர்வு எழுதியவர்கள் 20,725அதில் மாணவர்கள் 9,716 பேர், மாணவிகள் 11,009. இத்தேர்வில் 19,668 பேர் தேர்ச்சி  பெற்றுள்ளனர். தேர்வு எழுதியதில் மொத்தம் 94.90% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களும், 92.70% பேரும், மாணவிகளும் 96.84% தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 94.90% தேர்ச்சி பெற்று தமிழக அளவில்  20வது திண்டுக்கல் மாவட்டம் இடத்தில் உள்ளது. 

இந்த நிலையில், திண்டுக்கல், வேடசந்தூர் அருகே உள்ள மல்வார்பட்டி ஊராட்சி ஒத்தையூரை சேர்ந்தவர்கள் பாலமுருகன் அமராவதி தம்பதி. பாலமுருகன் வேடசந்தூரில் கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ளார். அமராவதி வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சத்துணவு ஆர்கனைசராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சுகுமார் என்ற மகனும் சுபாஷினி என்ற மகளும் உள்ளனர். சுபாஷினி மாரம்பாடியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

சுகுமார்(18) திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் குரூப் படித்து பொதுதேர்வு எழுதி முடித்திருந்தார். இந்தநிலையில் கடந்த 6-ம் தேதி சுகுகுமார் இருசக்கர வாகனத்தில் வேடசந்தூர் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கி விட்டு ஊருக்கு திரும்பும் போது, தட்டாரப்பட்டி பிரிவு அருகே ஆட்டோ மோதி படுகாயம் அடைந்தார். அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் இருந்த சுகுமார் சிகிச்சை பலனின்றி கடந்த 21ஆம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் சுகுமார் 433 மதிப்பெண்கள் (74 சதவீதம்) பெற்றிருந்தார். சிறு வயது முதலே கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்ற கனவில் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், சாலை விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TN 12th Achievers : 70 வயதில் 12-ம் வகுப்பு தேர்ச்சி…

ஆச்சரியத்தில் ஆழ்த்திய மூதாட்டிமுதல் முயற்சியிலேயே 12-ம் வகுப்பு பொதுத்தேரிவ்ல் 600க்கு 346 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார் 70 வயது மூதாட்டி. கோயம்புத்துரை சேர்ந்த ராணி என்ற மூதாட்டி, கணவன் இறந்த பிறகு வீட்டில் தனியாக இருந்த அவர், வீட்டில் இருந்தே படித்து 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். யோகா, இயற்கை மருத்துவம் தொடர்பான பட்டப்படிப்பில் சேரப் படிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

TN 12th Result 2025 Live : 95.03% பேர் தேர்ச்சி.. முதலிடத்தைப் பிடித்த அரியலூர்.. சாதித்து காட்டிய மாணவர்கள்!

TN Board 12th Result 2025 Live : தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9 மணிக்கு வெளியாகியது. மாணவர்கள் https://results.digilocker.gov.in/ மற்றும் https://tnresults.nic.in/ என்ற இணையதள முகவரிகள் மூலம் முடிவுகளை அறிந்துகொள்ளலாம். முடிவுகள் குறித்த உடனுகுடன் செய்தி இதில் நேரலையில் இந்த பதிவில் மூலம் வழங்கப்படுகிறது.

TN 12th Result 2025 at tnresults.nic.in : தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்களில் முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் முடிவுகளை https://tnresults.nic.in/https://results.digilocker.gov.in/ மற்றும் https://www.dge.tn.gov.in/ என்ற இணைய முகவரிகள் மூலம் ஆன்லைனில் அறிந்துகொள்ளலாம்.

இந்தாண்டு மாணவர்கள் – 3,47,670, மாணவியர்கள் – 4,05,472 என மொத்தம் 7,53,14 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டு மொத்தம் 95.03% தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு தேர்ச்சி 0.47% அதிகம் ஆகும். இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகள் 3.54 % அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு மதிப்பெண்கள் பட்டியல் வரும் மே 12-ம் முதல் விநியோகிக்கப்படும்.

வேலையில் ஜாக்கிரதையாய் நில், ராஜாக்களுக்கு முன்பாக நில்

பேராசிரியையாகிய நான் என்னுடைய வழக்கமான வகுப்பை முடித்துவிட்டு என் இடத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். அப்பொழுது பின்னால் இருந்து ஓர் அன்புக் குரல். “மேடம், மேடம் கொஞ்சம் நில்லுங்க. நான் உங்களிடம் பேசணும். நில்லுங்க மேடம்” என்று கூறிக்கொண்டே ஏஞ்சல் ஓடி வந்தாள். “என்னை பார்ப்பதற்காகவா வருகின்றாய் நீ?” என கேட்ட மாத்திரத்தில், “எஸ் மேம்”, என்று கூறிக்கொண்டு என் அருகில் வந்தாள்.

“மேம் உங்களுக்கு மிகவும் நன்றி மேம். எனக்கு ஒரு புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. அதற்கு நீங்கள் தான் காரணம். இந்த சந்தோஷமான செய்தியை உங்களிடம் சொல்லிவிட்டு போகலாமே என்று தான் ஓடி வந்தேன் மேடம்” என்று ஏஞ்சல் கூறியதைக் கேட்டு நின்றேன். “வாழ்த்துகள் ஏஞ்சல். ஆனா உனக்கு நான் எந்தப் பருவத்திலேயும் வகுப்புகள் எடுத்தது இல்லையே? எந்த வகையில் நான் தான் காரணமென எனக்கு நன்றி சொல்லுகிறாய் ஏஞ்சல்?” என்று ஆச்சரியமாகக் கேட்டேன்.

“மேம் எங்களுக்கு நீங்கள் வகுப்புகள் எடுத்தது இல்லை. ஆனால் ஒருமுறை நீங்கள் எங்கள் வகுப்பை தாண்டிச் செல்லும் பொழுது நாங்கள் கூச்சலிட்டு சத்தமாக பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்து, எங்கள் வகுப்பிற்குள் வந்தீர்கள். நாங்களும் நீங்கள் ஏதோ மொக்கையாக அறிவுரை சொல்லப் போகிறீர்கள் என்று முதலில் நினைத்தோம். ஆனால் நீங்கள் எங்கள் வகுப்பில் கல்வியின் முக்கியத்துவத்தை ஒரு உண்மை நிகழ்வை முன்வைத்துக் கூறினீர்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு பன்னாட்டு ஐடி நிறுவனத்தின் வேலைவாய்ப்பிற்கான நேர்காணலில் நான் கலந்து கொண்டேன். முதல் 2,3 சுற்றுகள் தேர்வு நடைபெற்று அதில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டோம். கடைசியாக குழு விவாத சுற்று நடந்தது. அதில் ஏதாவது ஒரு தலைப்பில் எல்லோரையும் பேசச் சொன்னார்கள்.

யார் எதைப் பேசுவது, எப்படி பேசுவது என்று தெரியாமல் தடுமாறிய பொழுது, எனக்கு நீங்கள் கூறிய கதை நினைவில் இருந்தபடியால், நான் நிறுவனத்தாரிடம், ‘என்னை மிகவும் உத்வேக படுத்திய ஒருவரைப் பற்றி பேசலாமா?’ என்று கேட்டு, நீங்கள் சொன்ன கதையை அப்படியே சொல்லி முடித்தேன். அங்கு இருந்த அனைவரும் எழுந்து நின்று கை தட்டியதுடன், ‘யூ ஆர் அப்பாயின்டட்’ என்று சொல்லி முடித்தார்கள்” எனக் கூறினாள்.

யாருடைய கதையைக் கேட்டு அத்தனை பேரும் எழுந்து நின்றார்கள் என்பது தானே உங்கள் கேள்வி? வாருங்கள் கதைக்குள் பயணிப்போம்.

ஒரு எட்டு வயது மதிக்கத்தக்க கருப்பினத்தை சார்ந்த ஒரு சிறுவன், படிப்பில் மிகவும் ஆர்வம் கொண்டவன். தன் அம்மாவிடம் சென்று “அம்மா நான் படிக்கணும், அம்மா நான் படிக்கணும்..’ என்று அடம் பிடிக்கிறான். கருப்பு இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பள்ளிப்படிப்பு மறுக்கப்பட்ட காலம் அது, ஆகையால் சிறுவனை அம்மாவால் பள்ளியில் சேர்க்க இயலவில்லை. ஒரு நாள் அம்மா தன் குட்டி பையனை கையோடு கூட்டிக்கொண்டு தான் பணிபுரியும் இடத்திற்குச் சென்றார்.

அங்கு அம்மாவின் தோழி ஒருவர், “உனக்கு ஒண்ணு தெரியுமா? சற்று தொலைவில் உள்ள நகரில் நம்மை போன்ற கருப்பு இனத்தைச் சேர்ந்தவர்களை ஒரு பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு நிபந்தனை. அரை நாள் படிக்க வேண்டும் அரை நாள் அந்தப் பள்ளியில் வேலை செய்ய வேண்டும்”, என்றார். இதைக் கேட்டவுடன் என்னவோ தனக்காகவே இதைச் சொன்னதாக நினைத்துக் கொண்டு வேகவேகமாக அம்மாவிடம் ஓடி வந்து, “அம்மா நான் பள்ளிக்குச் சென்று வருகிறேன்” என்று கூறிவிட்டு, அம்மாவின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் சென்று விட்டான் சிறுவன்..

அந்த காலகட்டத்தில் இப்பொழுது இருப்பது போல் போக்குவரத்து வசதிகள் இல்லை, வழி தெரியாது. அவ்வளவு ஏன் கையில் ஒரு டாலர் கூட இல்லை. ஆனாலும் பள்ளியை நோக்கி நடக்க ஆரம்பித்தான் சிறுவன் . அந்த பள்ளி அவன் இருக்கும் இடத்திலிருந்து 500 கிலோ மீட்டருக்கு அப்பால் இருப்பதை அவன் அறியவில்லை. அவன் நடந்து போக போக, வரும் வழியில் காணும் வண்டிகளில் வருபவர்களிடம் உதவி கேட்டு தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தான்.

இரண்டு நாள் பயணத்திற்குப் பிறகு சாப்பிடாமல் இருந்ததாலும், பயணக் களைப்பாலும் மிகவும் சோர்வாக உணர்ந்தான். தூரத்தில் ஒரு கட்டடத்தில் வெளிச்சம் வருவதைக் கண்டு, அங்கே சென்று உறங்கலாம் என்று அங்கு சென்று, இரவெல்லாம் உறங்கிவிட்டான். காலையில் எழுந்து பார்க்கும் பொழுதுதான் அது ஒரு கப்பல் துறைமுகம் என்று தெரியவந்தது. அங்கு ஒரு கப்பல் வந்து நின்றது. அதில் நிறைய மனிதர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

உயர் அதிகாரி போல் மிடுக்காக இருந்த ஒரு மனிதரிடம் சென்று, “நானும் இந்த வேலையைச் செய்யலாமா?” என‌க் கேட்டான். அவரோ, “நீ இவ்வளவு சின்னப் பையனாக இருக்கிறாய். நீ எப்படி இந்த வேலையை செய்வாய்?” என்றார். “இந்த வேலையை என்னிடம் கொடுத்துப் பாருங்கள் நான் எப்படி செய்கிறேன் என்று பாருங்கள்” என்ற அவனது ஆர்வத்தைக் கண்டு வியந்து, வேலையைச் செய்யுமாறு கூறினார்..

அந்தக் குட்டிப் பையனும் சுறுசுறுப்பாக மற்றவர்கள் செய்யும் வேலைகளை விட ஒரு மடங்கு அதிகமாகவே செய்தான். ஆதலால் அவனுக்குக் கொடுக்க நினைத்த ஊதியத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே கொடுத்து அனுப்பினார். அந்த குட்டிப் பையன் அந்த டாலர்களை எடுத்துக் கொண்டு நேராக ஒரு உணவு விடுதிக்குச் சென்று வயிறார உண்டான்..

பிற்காலத்தில் தன்னுடைய சுயசரிதையில், ‘நான் எவ்வளவோ சத்தான உணவுகளையும், ருசியான உணவுகளையும் என்னுடைய அம்மா செய்து கொடுத்து உண்டு உள்ளேன். ஆனால் நானே சம்பாதித்து அதில் சாப்பிட்ட சுகம் வேற மாதிரி சந்தோஷத்தை கொடுத்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்..

சிறுவன் அப்படியே நடந்து செல்கிறான். பள்ளியை அடைந்தவுடன் எல்லோரும் அங்கு சேர்க்கைக்காக வரிசையில் நின்று கொண்டே இருக்கிறார்கள். அவனும் கடைசியாக சென்று நின்று கொள்கிறான். எல்லா குழந்தைகளும் அம்மா அல்லது அப்பாவுடன், இல்லையென்றால் இருவருடனும் சேர்ந்து வந்திருந்தனர். ஆனால் நம் ஹீரோ தனியாக, பழைய துணியுடன், பரட்டை தலையுடன் ஏதோ வேற்று கிரகத்தில் இருந்து வந்த ஜந்துவைப் போல் அந்த வரிசையில் நின்றிருந்தான்.

அவனது முறை வரும் போது தலைமை ஆசிரியர் மேலும் கீழுமாக அவனைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். “நான் படிக்க வேண்டும். என்னையும் இந்த பள்ளியில் சேர்த்து கொள்ளுங்கள்” என்றான். “நிஜமாகவே நீ இந்த பள்ளியில் படிக்க வேண்டுமா? சரி அப்படியென்றால் இந்த அறையை சுத்தம் செய்து காட்டு” எனக் கூறினார்.

சிறுவன் குடுகுடுவென ஓடிச்சென்று தனக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் எல்லோரிடமும் கேட்டு கேட்டுப் பெற்று, அந்த அறையை முழுவதுமாக சுத்தம் செய்தான். எடுத்த பொருட்களை எல்லாம் மீண்டும் அதே இடத்தில் சரியாக வைத்தான். பின்பு தலைமை ஆசிரியரிடம் சென்று “நான் வேலையை முடித்து விட்டேன்” என்றான்.

“அப்படியா! வா சென்று பார்க்கலாம்”, என சிறுவனை அழைத்துச் சென்றார் ஆசிரியர். தன் கையில் வைத்திருந்த வெண்ணிற கைக்குட்டையை எடுத்து மேசையின் அடிப்புறமாக துடைத்துப் பார்த்தார். வெண்ணிறம், வெண்ணிறமாகவே இருந்தது. சிறு அழுக்குகூட இல்லை. சுற்றிலும் பார்த்த ஆசிரியர் ஆச்சரியமடைந்து, “உன்னை பள்ளியில் சேர்த்துக் கொள்கிறேன்” என்றார்.

தன்னுடைய சுயசரிதையில் ‘என் வாழ்க்கையில் நான் நூற்றுக்கணக்கான நேர்காணல்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் இருந்ததிலேயே மிகவும் கடுமையான நேர்காணல் என்பது என் பள்ளி சேர்க்கைக்காக என்னுடைய தலைமை ஆசிரியர் கொடுத்த தேர்வு’ என்று பின்னாளில் அவர் குறிப்பிட்டுள்ளார்..

தலைமையாசிரியர், “இவ்வளவு நன்றாக இந்த அறையை எப்படி சுத்தம் செய்தாய்?” என்று கேட்டார். அவனும் “நான் 3 முறை இந்த அறையை சுத்தம் செய்தேன். முதல் முறை நீங்கள் சுத்தம் செய்யச் சொன்னீர்களே என்பதற்காக சுத்தம் செய்தேன். இரண்டாவது முறை நான் இந்தப் பள்ளியில் படிக்கப் போகின்றேன். எனக்கு பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்கள் இந்த அறையில் வந்து கல்வி கற்றுக் கொடுக்கப் போகிறார்கள். அவர்களுக்காக இரண்டாவது முறை சுத்தம் செய்தேன்.

மூன்றாவது முறை ‘நான் Booker T Washington’. நான் எதைச் செய்தாலும் என்னால் இயன்ற வரை சிறப்பாகத்தான் செய்து கொடுப்பேன். அவ்வாறே இந்த அறையையும் சுத்தம் செய்தேன்” என்று கூறி முடித்தான். இந்த ஒரு குணம்தான் சிறுவன் புக்கர் வாஷிங்டனை பிற்காலத்தில் அமெரிக்காவின் மிகச்சிறந்த கல்வியாளராக மாற்றியது..

எந்தப் பள்ளியில் நீ சேருவதற்கு தகுதி இல்லை, உன்னை போன்றவர்கள் படிப்பதற்கே தகுதி இல்லை என்று உதைத்து தள்ளினார்களோ, எந்த பள்ளியில் எங்களுக்கு சரி நிகராக உட்காருவதற்கு உனக்கு தகுதி இல்லை என்று சொன்னார்களோ, அதுபோன்ற பள்ளிகளுக்கு எல்லாம் மேலாக அவரை போன்றவர்களுக்காக கல்வியாளர் புக்கர் டி. வாஷிங்டன் 1881 இல் பள்ளியை நிறுவினார்; படிப்படியாக உயர்ந்த இந்தப் பள்ளி 1985இல் பல்கலைக்கழக அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது. ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் உரிமைகள் அமைப்பின் தலைவராகவும் வாஷிங்டன் இருந்தார்..

=> வளர்ச்சி என்பது இதுதான். யாரெல்லாம் எனக்கு நிகராக நீ இருக்க முடியாது என்று ஓரம் கட்டினார்களோ, உனக்கு நிகராக இருக்க என்னால் முடியாது; ஆனால் உன்னை விடவும் மேலே உயர என்னால் முடியும் என்று ஆணித்தரமாக உயர்ந்து காண்பித்த மேதையின் கதை.

இந்தக் கதையைத்தான் குழு விவாதத்தில் ஏஞ்சல் தான் விரும்பிய தலைப்பில் பேசினார். வேலைக்கான ஆணையையும் பெற்றாள். கடவுளின் ஒத்தாசையுடன் எந்த வேலையைச் செய்தாலும் அதில் அர்ப்பணிப்போடு செயலாற்றினால், நாம் எந்த உயரத்தையும் தொடலாம்..

-> தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான். நீதிமொழிகள் 22 : 29

யாரை நேசிக்கின்றீர்கள்

நீங்கள் வாழ்க்கையில் யாரை அதிகமாய் நேசிக்கின்றீர்கள் என்ற கேள்வியை நான் கேட்டால். ஒருவரது அல்லது இருவரது பதிலை கூறுவீர்கள். உண்மைத்தான். நாம் யாரையும் நேசிக்காமல் இருக்க முடியாது.

  1. ஒன்று எம்மை நேசிக்காத நபர்களை நாம் நேசிப்போம். அவர்கள் மீது நம்பிக்கை வைப்போம்.
  2. இரண்டு எம்மை நேசிக்கும் நபர்களின் நேசத்தை புரிந்துகொள்ளாதவர்களாக அவர்களை தள்ளி வைப்போம். பொதுவாக இவ்விரண்டிலும் தான் முழு மனித வர்க்கமே தடுமாறுகின்றது.

உன்னை நேசிக்காத நபர்களை நீ நேசிக்கின்றாயா? அல்லது உன்னை நேசிக்கும் நபர்களின் உண்மையான அன்பை புரிந்துகொள்ளாத நபராக இருக்கின்றாயா? என்பதை நிச்சயமாக நீ சிந்திக்க வேண்டும்.

ஆமாம். விளங்க வைக்கிறேன். நான் திருமண வயதை அடைந்தபோது நான் சிந்தித்த இரு பெண்கள் ஒரு கிறிஸ்தவ நிறுவனத்தில் ஊழியம் செய்து வந்தனர். அதில் ஒரு பெண் என்னை விரும்பினாள். ஆனால் அவளது அன்பை நான் புரிந்துகொள்ள இயலவில்லை. காரணம் – நான் அதே இடத்திலிருந்த இன்னொரு பெண்ணை நேசித்ததே. சில காலம் சென்ற போதுதான் இரண்டாமவள் – நான் நேசித்தவள் – எனது நேசத்திற்கு உகந்தவள் அல்ல என்பதை உணர்ந்தேன். அதற்கிடையில் என்னை நேசித்தவள் என்னை விட்டு விலகி சென்றுவிட்டாள்.


தற்பொழுது எனக்கு இரு பிள்ளைகள் இருக்கின்றார்கள். மகனை நான் அதிகமாக நேசிப்பதினால் – அவனுக்கு செலவு செய்யும்போது எவ்வித கணக்கும் பார்ப்பதில்லை. ஆனால் மகளுக்கு செலவு செய்யும்போது கணக்கு பார்கிறேனே… ஏன்? உண்மையில் மகனை விட மகளே அதிகமாக என்மீது அன்பு காட்டுகின்றாள் என்பதை நான் நன்கு அறிந்திருந்தும் ஒரவஞ்சனை எனக்குள் தலைதுாக்குவதை உணர்ந்திருக்கிறேன்.

நான் பணிபுரியும் கிறிஸ்தவ அலுவலகத்தில் எனது உயர் அதிகாரி தான் விரும்பும் நபர்களுக்கு பதவி உயர்வு கொடுப்பதை அதிகமாக நேரங்களில் கண்டிருக்கிறேன். தான் விரும்பாத நபர்களுக்கு எவ்வித உயர்வையோ உரிய கனத்தையோ கொடுப்பதில்லை. காலப்போக்கில் அவர் யாரை நேசித்து பதவி உயர்வு கொடுத்தாரோ அவர்களே இவரோடு வேலை செய்ய முடியாது அல்லது சம்பளம் போதாது என விலகி சென்றதை கண்டிருக்கிறேன். அதேநேரம் அவர் யாரை நேசிக்காமல் ஒதுக்கினாரோ அவர்களே அவருக்கு அதிக நன்மை செய்துள்ளார்கள்.

இப்ப சொல்லுங்கள்… நாம் யாரை நேசிக்கிறோம், உங்களை நேசிப்பவர்களை அவர்களின் நேசத்தை அசட்டை செய்கின்றீர்களா அல்லது உங்களை உண்மையாக நேசிக்காதவர்களின் மாயைக்குள் அகப்பட்டுள்ளீர்களா

நீதிமொழிகள் 7 ம் அதிகாரத்தின் 22ம் 23ம் வசனம் கூறுகிறது

உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவது போலும், ஒரு குருவி தன் பிராணணை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத் தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது

நன்மையைத் தேடுங்கள்…

நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்..ஆமோஸ் 5:14

தீமையை அநுபவிப்பவர்கள் யாரால் தீமை நடந்ததோ அவர்களை ஆசீர்வதிக்கமாட்டார்கள். நம்பியவர்களுக்கு துரோகம் செய்வது தீமை.. மனச்சாட்சிக்கு விரோதமாக செயல்படுவது தீமையை சார்ந்தது. தீமையின் பலனை சந்ததிகள் அநுபவிப்பவர்கள்.

நீங்கள் நன்மையை தேடவேண்டும்.. தீமைக்கு விலகி இருங்கள். உங்களால் எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ செய்யுங்கள்.. நன்மையை தேடுங்கள்.. நன்மைக்கு நிச்சயம் ஆண்டவர் உங்களுக்கு நல்ல பலன் தருவார். வாழ்ந்திருக்கச் செய்வார்..

நீங்கள் செய்கிற நன்மை ஒரு நாளும் வீணாகாது.. மனிதர்கள் நீங்கள் செய்த நன்மையை மறந்துப்போகலாம். உங்களுக்கே தீமை செய்து இருக்கலாம். கவலைப்படாதீங்கள்.. நீங்கள் செய்த நன்மையை ஆண்டவர் மறக்க மாட்டார்..

நீங்கள் நன்மையை தேடும்போது நீங்கள் சொல்லுகிறபடி ஆண்டவர் உங்களோடு இருப்பார். உங்கள் சொல் கேட்கப்படும்.. ஆண்டவர் உங்களோடு இருந்து உங்கள் காரியங்களை வெற்றி அடையச்செய்வார். ஆண்டவரை நம்புங்கள்..!!!