• Tuesday 22 October, 2024 07:52 AM
  • Advertize
  • Aarudhal FM

மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி தஞ்சையில் கிறிஸ்தவர்கள் ஜெப நடை பயணம்

மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து கலவரங்கள் நீடித்து வருகிறது. இதனால் அம்மாநில பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று தஞ்சை மிஷனரி தெருவில் அகில இந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி ஜெப நடை பயணம் நடந்தது.

இதற்கு கூட்டமைப்பின் சேர்மன் பிஷப் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறும் போது :- மணிப்பூர் மாநிலத்தில் அமைதியும், சமாதானமும் ஏற்பட வேண்டும். இயல்பு நிலை திரும்ப வேண்டும். இதனை வலியுறுத்தி அனைத்து கிறிஸ்தவ கூட்ட மைப்பு சார்பில் ஜெப நடை பயணம் மேற்கொண்டோம். மேலும் தஞ்சை மாவட்ட த்தில் கிறிஸ்துவ பணி மேற்கொண்ட மிஷனரிகளுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்றார்.

இந்த ஜெப நடை பயணத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர் .

கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனி விழா

கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாளான குருத்தோலை ஞாயிறு, திருநாள் நிகழ்ச்சி இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றது.

கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனி விழா! title=

கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாளான குருத்தோலை ஞாயிறு, திருநாள் நிகழ்ச்சி இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றது

குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு இன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையில் உள்ள பழமையான புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தில் நான்கு கிலோமீட்டர் தூரம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் குருத்தோலை கையில் ஏந்தி பவனியாக ஊர்வலம் வந்து தேவாலயத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர் .

வண்ணாரப்பேட்டை ஆரோக்கியநதர் ஆலயம் பங்குத்தந்தை வர்கீஸ் ரோசாரியோ தலைமையில் 1000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு ஆராதனையில் ஈடுபட்டனர். குருத்தோலை முக்கிய பிரார்த்தனையின் போது வருகின்ற 19 ஆம் தேதி நடக்கக்கூடிய தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்கவும் என பங்குத் தந்தை கிறிஸ்தவ பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். 

கோவையிலும், பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். கோவை காந்திபுரம் சி எஸ் ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் சார்பில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் ஆலயம் முன்பாக துவங்கியது. இதில், ஆயர் தலைவர் டேவிட் பர்னபாஸ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயச்சந்திரன் பொருளாளர் ரவி இன்பசிங்,உதவி ஆயர் சாம் ஜெபசுந்தர்,சபை ஊழியர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காந்திபுரம் சி‌ எஸ் ஐ‌ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் இருந்து துவங்கிய ஊர்வலத்தில், ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் குருத்தோலைகளை கையில் ஏந்திக்கொண்டு ஓசன்னா ஓசன்னா எனும் இயேசுவின் திரு நாமத்தை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.