• Tuesday 22 October, 2024 07:52 AM
  • Advertize
  • Aarudhal FM

கிறிஸ்துவ மதம் மாறிய தலித் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு; மீண்டும் தேசிய ஆணையம் அமைக்கும் மத்திய அரசு

தலித் சமூகத்திலிருந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதங்களுக்கு மாறியவர்களின் தகுதிநிலையை கண்டறிய மத்திய அரசின் சார்பில் சர்வதேச ஆணையம் அமைக்கப்பட உள்ளது.

தலித் சமூகத்திலிருந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதங்களுக்கு மாறியவர்களின் தகுதிநிலையை கண்டறிய மத்திய அரசின் சார்பில் சர்வதேச ஆணையம் அமைக்கப்பட உள்ளது.

சர்வதேச ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து விவாதித்து வருவதாகவும்,  விரைவில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

இந்த ஆணையத்தை அமைக்க சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் மற்றும் பணியாளர் மற்றும் பயிற்சி துறை அனுமதியளித்துள்ளது. மேலும் இதுதொடர்பான அலோசனைகளை உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகம், சமூநீதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

உச்சநீதிமன்றத்தில், தலித் சமூகத்திலிருந்து இஸ்லாம் மற்றும் கிரிஸ்துவ மதங்களுக்கு மாறியவர்கள், எஸ்சி- இட ஒதுக்கீடு கேட்டு மனு அளித்துள்ளனர்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் , ஆர்டிகல் 350 படி இந்து, சீக்கியம்,  புத்த மதத்தில் உள்ள எஸ்சி சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே எஸ் சி சமூகத்தினர் என்று கருதப்படுவார்கள் என்று குறிப்பிடுகிறது.  முதலில் இந்துக்கள் மட்டுமே என்றிருந்த சட்டம் 1956-ல் சீக்கியர்களையும் 1990-ல் புத்த மதத்தை சேர்ந்தவர்களை சேர்த்துகொள்ளலாம் என்று திருத்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஆக்ஸ்டு 30-ம் தேதி நடைபெற்ற விசாரணையில், இஸ்லாம் மற்றும் கிஸ்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கும் எஸ்சி இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்ற மனுக்களின் விசாரணையின் போது, இதுதொடர்பான அரசின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள 3  வாரங்கள்வரை கால அவகாசம் தந்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணையை அக்டோபர் 11 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்படும் தேசிய ஆணையத்தில் 3 முதல் 4 பேர் இடம் பெறுவார்கள் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் கிட்டதட்ட ஒரு வருடம் காலம் வழங்கப்பட்டு, ஆணையம் பரிந்துரைக்கும்  தரவுகளின் அடிப்படையில் வழக்கு.

மதம் மாறிய தலித் சமூகத்தினருக்கு, இட ஒதுக்கீடு வழங்கப்படுவது தொடர்பாக இதற்கு முன்னால் இருந்த அரசிடமும்  கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

மன்கோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அக்டோபர் 2004-ம் ஆண்டு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆணையம் 2007ம் ஆண்டு மே, மாதம் அதன் அறிக்கையை அளித்தது. இதில் எஸ்சி சமூகத்தின்  சமூகநிலைக்கும், அவர்கள் தழுவிய மதத்திற்கு எந்த தொடர்புமும் இல்லை. எப்படி எஸ்டி பிரிவினருக்கு மதத்திற்கு அப்பாற்பட்டு இட ஒத்துக்கீடு வழங்கப்படுகிறதோ அதுபோலவே எஸ்சி சமூகத்தினருக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. கலத்திற்கு சென்று முறையாக ஆய்வு செய்யவில்லை என்று அப்போதைய அரசு இந்த பரிந்துரைகளை ஏற்க மறுத்தது குறிப்பிடதக்கது.    இந்நிலையில் தற்போது அமைக்கப்பட உள்ள ஆணையம் எப்படி செயல்பட உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.  

கிறிஸ்துவ தலித் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மதம் மாறிய எஸ்சி/எஸ்டி சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் கொடுக்க வேண்டும் என்ற வழக்கில், மத்திய அரசு 3 வாரங்களுக்குள் அதன் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மதம் மாறிய எஸ்சி/எஸ்டி சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் கொடுக்க வேண்டும் என்ற வழக்கில், மத்திய அரசு 3 வாரங்களுக்குள் அதன் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தலித் சமூகத்தினர் இஸ்லாம் மற்றும் கிருஸ்துவ மதங்களுக்கு மாறுகையில், அவர்களுக்கு ஒடுக்கப்பட்டவர்களுக்கான  இட ஒதுக்கிடு சலுகை வழங்கப்பட வேண்டும்  என்று பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ். கே காயுல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் அபயா எஸ் ஒகா, விக்ரம் நாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர்  ஜெனரல் திஸ்சூர் மேத்தா கூறுகையில் “ இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள், சமூக படிநிலையில் சிறிது மேன்மை அடைவதால், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்வது தொடர்பான கேள்வி எழுகிறது’ என்று கூறினார்.

பொது நல வழக்கின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் புஷன் கூறுகையில்” 1950 ஆண்டு வெளியான சட்டம்படி பட்டியலின சமூகத்தினர் என்பவர்கள் இந்து, புத்தம், சீக்கியம் மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறுவது மதத்தின் பெயரில் தீண்டாமையை கடைபிடிப்பதாகும்.

மேலும் அவர் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கையை குறிப்பிட்டார் இதில் “ மாதம் மாறிய தலித் சமூகத்தினரும், இந்து தலித் சமூகத்தினரைப் போலவே ஒடுக்குமுறையை சந்திப்பதாக கூறினார்.

இந்நிலையில் நீதிபதி காயுல் கூறுகையில் “ இட ஒதுக்கீடுட்டின் கீழ் மீண்டும் இட ஒதுக்கீடு வழங்குவதா? ஏற்கனவே இது ஓபிசி சமூகத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது பட்டியலின சமூகத்தினருக்கு வழகுங்வதில் சட்டத்தில் இடம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் விசாரணையை அக்டோபர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.