• Tuesday 1 July, 2025 01:40 PM
  • Advertize
  • Aarudhal FM

மிளகாய் பொடி தூவி, கழுத்தை மிதித்து கணவர் கொலை!

மிளகாய் பொடி தூவி, கழுத்தை மிதித்து கணவர் கொலை!

திருமணத்தை மீறிய உறவு, குடும்பங்களை சிதைத்து வருகிறது. அப்படியொரு சம்பவம் கர்நாடகாவின் காடஷெட்டிஹள்ளியில் நடந்துள்ளது. காதலருடன் சேர்ந்து கணவரின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, பின்னர் தனது கால்களால் கழுத்தை மிதித்து மனைவி கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சடலத்தையும் கோணியில் கட்டி 30 கி.மீ அப்பால் எடுத்துச் சென்று வீசி வந்ததையும் கைதான மனைவி ஒப்புக் கொண்டுள்ளார்.