• Tuesday 14 April, 2026 09:02 AM
  • Advertize
  • Aarudhal FM

காதலியை பல துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த காதலன்

காதலியை பல துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த காதலன்

விசாகப்பட்டினத்தில் நெஞ்சை பதறவைக்கும் கொடூரம் அரங்கேறியுள்ளது. ரவீந்தர்(35) என்பவர் காதலி மோனிகாவை(29) துண்டு துண்டாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்துள்ளார். ரவீந்தருக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில், மனைவி ஊருக்கு சென்ற போது, காதலியை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். திடீரென ஏற்பட்ட சண்டையால், கோபத்தில் இப்படி செய்ததாக அவர் போலீசில் தெரிவித்துள்ளார். காணாமல் போன பெண்ணின் தலையை போலீசார் தேடி வருகின்றனர்.

மிளகாய் பொடி தூவி, கழுத்தை மிதித்து கணவர் கொலை!

மிளகாய் பொடி தூவி, கழுத்தை மிதித்து கணவர் கொலை!

திருமணத்தை மீறிய உறவு, குடும்பங்களை சிதைத்து வருகிறது. அப்படியொரு சம்பவம் கர்நாடகாவின் காடஷெட்டிஹள்ளியில் நடந்துள்ளது. காதலருடன் சேர்ந்து கணவரின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, பின்னர் தனது கால்களால் கழுத்தை மிதித்து மனைவி கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சடலத்தையும் கோணியில் கட்டி 30 கி.மீ அப்பால் எடுத்துச் சென்று வீசி வந்ததையும் கைதான மனைவி ஒப்புக் கொண்டுள்ளார்.

மனைவியை கொன்று சடலத்துடன் உறங்கிய கணவன்

கன்னியாகுமரி கருங்கல் பகுதியில் நடந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மனைவியை கொன்றுவிட்டு சடலத்தின் அருகே 12 மணி நேரம் உறங்கிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்ததால் மரியாதை கிடைக்கவில்லை என்றும், மதுபோதையில் இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கொஞ்ச நேர கோபம் என்ன பண்ணிருக்கு பார்த்தீங்களா?