• Saturday 6 September, 2025 08:32 PM
  • Advertize
  • Aarudhal FM

மதம் மாறிய பேரூராட்சி தலைவர் பதவி பறிப்பு: உத்தரவை உறுதி செய்தது உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

மதம் மாறியதை மறைத்து பேரூராட்சித் தலைவர் தேர்தலில் வென்ற அதிமுக பெண் கவுன்சிலரின் தலைவர் பதவியை பறித்த உத்தரவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதிப்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பேரூராட்சிக் கவுன்சிலர் அய்யப்பன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தேரூர் பேரூராட்சியில் 2022-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் 8-வது வார்டில் போட்டியிட்டு கவுன்சிலரானேன். பேரூராட்சித் தலைவர் பதவி பட்டியலினத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த தேர்தலில் 2-வது வார்டு அதிமுக கவுன்சிலர் அமுதாராணி வெற்றி பெற்றார். அவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். 2005-ம் ஆண்டிலேயே மதம் மாறி கிறிஸ்தவ மதத்தில் இணைந்து, கிறிஸ்தவரை திருமணம் செய்தவர். இந்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் வேறு மதத்துக்கு மாறினால், அவர் பட்டியலினப் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுப் பலனைப் பெற முடியாது.

இந்​நிலை​யில், கிறிஸ்​தவ​ரான அமு​தா​ராணி, தான் இந்து பட்​டியலினத்​தைச் சேர்ந்​தவர் என்று கூறி தேர்​தலில் போட்​டி​யிட்​டு, வெற்றி பெற்​றார். இது சட்​ட​விரோத​மானது. எனவே, தேரூர் பேரூ​ராட்​சித் தலை​வ​ராக உள்ள அமு​தா​ராணி​யின் பட்​டியலின சாதிச் சான்​றிதழை ரத்து செய்​து, அவரை தலை​வர் பதவி​யில் இருந்து தகுதி நீக்​கம் செய்து உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறி​யிருந்​தார்.

இந்த மனுவை தனி நீதிபதி விக்டோரியா கௌரி விசாரித்து, “இந்து பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவ மதம் மாறி, கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டதற்கு அனைத்து ஆவணங்களும் உள்ள நிலையில், பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறி வேட்புமனுத் தாக்கல் செய்தபோதே, அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும்.

ஒரு​வர் ஒரே நேரத்​தில் இரு சலுகைகளை அனுபவிக்​கக் கூடாது. இது அரசி​யலமைப்​புச் சட்​டத்தை ஏமாற்​றும் செய​லாகும். எனவே, அமு​தா​ராணி தலை​வர் பதவியி​லிருந்து தகுதி நீக்​கம் செய்​யப்பட வேண்​டும்” என்று உத்​தர​விட்​டார்.

இந்த உத்​தரவை எதிர்த்து அமுதா​ராணி மேல்​முறை​யீடு செய்​தார். இதை விசா​ரித்து நீதிப​தி​கள் ஜி.ஆர்.சுவாமி​நாதன், கே.​ராஜசேகர் அமர்வு பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது

இந்த வழக்​கின் உண்​மை​யான பிரச்​சினை அமு​தா​ராணி கிறிஸ்தவ மதத்தை ஏற்​றுக்​கொள்​கிறா​ரா, அவர் ஞானஸ்​நானம் பெற்​றாரா என்​பது​தான். மனு​தா​ரர் ஞானஸ்​நானம் பெற்​றுக்​கொண்​டது உறு​திப்​படுத்​தப்​படு​கிறது. ஒரு​வர் ஒரு மதத்​திலிருந்து மற்ற மதத்​துக்கு மாறு​வது என்​பது அரசி​யலமைப்​பின் அடிப்​படை உரிமை​யாகும்.

ஆனால், ஞானஸ்​நானத்​துக்​குப் பிறகு புதிய அடை​யாளத்தை மறைத்​து, அரசி​யலமைப்​புச் சட்​டம் வழங்​கி​யுள்ள உரிமை​களை அனுபவிக்​கும் நோக்​கத்​துக்​காக, பட்​டியல் இன சமூக நிலை​யில் தொடரும்​போது சிக்​கல் ஏற்​படு​கிறது.

இந்த வழக்​கில் மேல்​முறை​யீட்டு மனு​தா​ரர் கிறிஸ்தவ மதத்​தைத் தழுவி உள்​ளார் என்​பது ஆதா​ரங்​களு​டன் நிரூபிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, தனி நீதிப​தி​யின் உத்​தரவு உறுதி செய்​யப்​பட்​டு, மேல்​முறை​யீட்டு மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு உத்​தர​வில் தெரி​வித்​துள்​ளனர்.