• Monday 20 October, 2025 07:39 PM
  • Advertize
  • Aarudhal FM

சென்னை YMCA மைதானத்தில் நண்பர்களுடன் மகிழ்ச்சியில் இருந்த இளைஞர் மரணம்

சென்னை YMCA மைதானத்தில் நண்பர்களுடன் மகிழ்ச்சியில் இருந்த இளைஞர் மரணம்

சென்னை நந்தனம் YMCA மைதானத்தில், இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர், சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்த, திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த கார்த்திக் எனத் தெரியவந்துள்ளது. கிரிக்கெட் போட்டியில் தனது நண்பர்கள் வெற்றி பெற்றதை, ஆரவாரத்துடன் கொண்டாடிய போது, திடீரென இந்த இளைஞர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். உடனடியாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.