• Thursday 1 May, 2025 02:47 PM
  • Advertize
  • Aarudhal FM

மத்திய அரசின் தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்

மத்திய தேர்வாணையத்தின் தேர்வை எழுதுபவர்கள் | கோப்புப் படம்

புதுடெல்லி: மத்திய அரசின் தொழில்நுட்பம் அல்லாத பணியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பல்வகைப்பணி (தொழில்நுட்பம் அல்லாத) ஊழியர் மற்றும் ஹவில்தார் (சிபிஐசி & சிபிஎன்) தேர்வு, 2024-ஐ அக்டோபர் – நவம்பரில் கணினி அடிப்படையில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தவுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலகங்களில் அரசிதழ் பதிவு பெறாத சி பிரிவு, பொது மத்திய சேவை, அமைச்சு நிலை அல்லாத பணி, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் பல்வேறு அரசியல் சட்டப்படியான அமைப்புகள் / சட்டப்பூர்வ அமைப்புகள் / தீர்ப்பாயங்கள் ஆகியவற்றில் பல்வகைப் பணி ஊழியர் மற்றும் மத்திய மறைமுக வரிகள் வாரியம், சுங்கத்துறை, மத்தியப் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு ஆகியவற்றில் ஹவில்தார் பணிக்குப் போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதியினரும் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடைவர்கள் ஆவர்.

பதவி, வயது வரம்பு, கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பற்றி 27.06.2024 அன்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஆணையத்தின் இணையதளமான ssc.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் 31.07.2024 (23:00 மணி). இணையதளம் மூலமாக கட்டணம் செலுத்த கடைசி நாள் 01.08.2024 (23:00மணி). ஆந்திரப்பிரதேசத்தில் 10, தமிழ்நாட்டில் 7, தெலங்கானாவில் 3, புதுச்சேரியில் 1 என 21 மையங்களில் 2024, அக்டோபர் – நவம்பர் மாதங்களில் தென்மண்டலத்திற்கான கணினி வழி தேர்வுகள் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

­­­­­தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய ரயில்வே துறையில் உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான (Apprenticeship) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் தொழில்பழகுநர் (அப்ரண்டிஸ்) பயிற்சியின் கீழ் 2,438 பணியிடங்களுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பணி விவரம்

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அந்தமான், நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளுக்கு இந்த பயிற்சி அறிவிப்பு பொருந்தும். 

பணி அனுபவம் இல்லாதவர்கள், கோவை பணிமனை, பெரம்பலூர், பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனை, திருவனந்தபுரம், சேலம், பாலக்காடு, அரக்கோணம், தாம்பரம், ராயபுரம், பொன்மலை, திருச்சிராப்பள்ளி, மதுரை, ஆவடி ஆகிய பகுதிகளில் உள்ள ரயில்வே பணிமனை, மருத்துவமனை ஆகிய அலுவலகங்களில் தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது.

ஃபிட்டர், வெல்டர், ஆய்வக டெக்னீசியன், ப்ளமர், கார்பெண்டர், பெயிண்டர், எலக்ட்ரிசியன், மெக்கானிக், வையர்மென் உள்ளிட்ட பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மொத்த பணியிடங்கள் – 2,438

கல்வித் தகுதி விவரம்:

ஃபிட்டர், வெல்டர், ஆகிய பதவிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

ஆய்வக உதவியாளர் பணிக்கு 12-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10+2 என்ற முறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஐ.டி.ஐ. பிரிவில் ஃபிட்டர், மெக்கானிஸ்ட், மோட்டர் வாகன மெக்கானிக் உள்ளிட்ட பணிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 15 பூர்த்தியடைந்தவராகவும் 22 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:

பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் மதிப்பெண்கள், சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மெடிக்கல் டெஸ்ட் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மெரிட் லிஸ்ட் தயாரித்து அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஊக்கத்தொகை:

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தொழில்பழகுநர் பயிற்சிக்கு மாத ஊக்கத்தொகை வழங்கப்படும். 

ஃபிட்டர் பிரிவில் இரண்டாடு காலம் தொழில்பழகுநர் பயிற்சி வழங்கப்படும். மற்ற பிரிவுகளில் ஓராண்டு முதல் ஓராண்டு மூன்று மாதங்கள் வரை பயிற்சி வழங்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்:

தொழில்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். பழங்குடியின/ பட்டியலின பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். 

எப்படி விண்ணப்பிப்பது?

தெற்கு ரயில்வேயின் தொழில் பழகுநர் பயிற்சிக்கு  விண்ணப்பிக்க https://sronline.iroams.com/rrc_sr_apprenticev1/recruitmentIndex – என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

பயிற்சி வழங்கப்படும் பிரிவுகள், அதற்கான தகுதிகள், ஊக்கத்தொகை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://sronline.iroams.com/rrc_sr_apprenticev1/notifications/Act%20Apprentices%20Notification%202024-25%20with%20enclosures.pdf – என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.08.2024

மத்திய அரசின் தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்

மத்திய தேர்வாணையத்தின் தேர்வை எழுதுபவர்கள் | கோப்புப் படம்

புதுடெல்லி: மத்திய அரசின் தொழில்நுட்பம் அல்லாத பணியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பல்வகைப்பணி (தொழில்நுட்பம் அல்லாத) ஊழியர் மற்றும் ஹவில்தார் (சிபிஐசி & சிபிஎன்) தேர்வு, 2024-ஐ அக்டோபர் – நவம்பரில் கணினி அடிப்படையில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தவுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலகங்களில் அரசிதழ் பதிவு பெறாத சி பிரிவு, பொது மத்திய சேவை, அமைச்சு நிலை அல்லாத பணி, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் பல்வேறு அரசியல் சட்டப்படியான அமைப்புகள் / சட்டப்பூர்வ அமைப்புகள் / தீர்ப்பாயங்கள் ஆகியவற்றில் பல்வகைப் பணி ஊழியர் மற்றும் மத்திய மறைமுக வரிகள் வாரியம், சுங்கத்துறை, மத்தியப் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு ஆகியவற்றில் ஹவில்தார் பணிக்குப் போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதியினரும் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடைவர்கள் ஆவர்.

பதவி, வயது வரம்பு, கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பற்றி 27.06.2024 அன்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஆணையத்தின் இணையதளமான ssc.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் 31.07.2024 (23:00 மணி). இணையதளம் மூலமாக கட்டணம் செலுத்த கடைசி நாள் 01.08.2024 (23:00மணி). ஆந்திரப்பிரதேசத்தில் 10, தமிழ்நாட்டில் 7, தெலங்கானாவில் 3, புதுச்சேரியில் 1 என 21 மையங்களில் 2024, அக்டோபர் – நவம்பர் மாதங்களில் தென்மண்டலத்திற்கான கணினி வழி தேர்வுகள் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு… விண்ணப்பிக்க ரெடியா?

இந்தியாவிலுள்ள அரசு வங்கிகளுக்குத் தேவையான ஊழியர்களும் அதிகாரிகளும் வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS- Institute of Banking Personnel Selection) மூலமாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் (Clerk) பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள் விவரம்: இந்திய அளவில் 6,128 காலிப்பணியிடங்களுக்கும், தமிழ்நாட்டில் 665 காலிப்பணியிடங்களுக்கும் ஆள்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கான தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஜூலை 21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி:இந்தப் பணிக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இளங்கலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:விண்ணப்பதாரர் ஜூலை 1ஆம் தேதி 20 வயது நிரம்பியவராகவும், 28 வயது அல்லது 28 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. இது குறித்த விரிவான தகவல்களுக்கு வங்கிப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ரூ. 850 பதிவுக் கட்டணம் செலுத்தி, தங்களது அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து, விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.175 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதி: ஜூலை 21ஆம் தேதிக்குள் இணைய வழியில் மட்டும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பட்டியலினத்தவர், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இத்தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 12 முதல் 17ஆம் தேதி வரை இப்பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களிலுள்ள மையங்களில் அல்லது இணைய வழியில் இப்பயிற்சி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த இறுதியான விவரங்கள் www.ibps.in இணையதளத்தில் பதிவிடப்படும்.

பயிற்சியை அடுத்து, முதல் நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதத்திலும், முதன்மைத் தேர்வு அக்டோபர் மாதத்திலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையம்:நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: இணைய வழியில் மட்டும் நடைபெறும் முதல் நிலை, முதன்மைத் தேர்வுகளின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இத்தேர்வுகளைத் தமிழ் அல்லது அங்கில மொழிகளில் எழுதலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.ibps.in/wp-content/uploads/CRP_Clerks_XIV_Final_Notification_28.6.24.pdf என்கிற இணைப்பைப் பார்வையிடவும்.

வளைகுடாநாட்டில்கார்பென்டர், பெயின்டர்களுக்குவேலை: சென்னையில் 19-ம்தேதிநேர்காணல்

சென்னை: தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் மா.லதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்ற கார்பென்டர், ஸ்டீல் பிக்ஸர், ஹெல்பர், மேசான், அலுமினியம் பேப்ரிகேட்டர், டக்ட்மேன், பர்னிச்சர் பெயின்டர், பர்னிச்சர் கார்பென்டர், பிளம்பர், ஏசி டெக்னீசியன் ஆகிய பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம். வயது 40-க்குள் இருக்க வேண்டும்.

ஊதியத்துடன் உணவு, விசா, தங்கும் வசதி ஆகியவையும் வழங்கப்படும். இப்பணிகளுக்கான நேர்காணல் ஜூலை19-ம் தேதி (வெள்ளிக்கிழமை)அன்று காலை 9 மணிக்கு சென்னை கிண்டி தொழிற்பேட்டை ஒருங்கிணைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள (தொழிற்பேட்டை பஸ் நிலையம் அருகில்) அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடைபெறும்.

நேர்காணலுக்கு வருவோர் தங்கள் சான்றிதழ்கள் (பயோடேட்டா, பாஸ்போர்ட் ஒரிஜினல் மற்றும் நகல்),ஆதார் நகல், போட்டோ ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் கூடுதல் விவரங்களுக்கு 044-22505886, 22502267 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். (வாட்ஸ் அப் எண் 95662-39685).

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு செல்வோர் வேலை கிடைத்த பின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு சேவை கட்டணமாக ரூ.35,400 மட்டும் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் 1,000 கூடுதல் காலியிடங்கள்

சென்னை: இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1,768 காலி பணியிடங்களுடன் கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்த்து நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2023-24-ம் கல்வி ஆண்டுக்காக 1,768 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு கடந்த பிப்.9-ம் தேதி அறிவிப்புவெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர் பதவியில் கூடுதலாக 1,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.

இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு வரும் 21-ம் தேதி (ஞாயிறு) தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வை 26,510 பேர் எழுதஉள்ளனர். தற்போது புதிதாக 1,000 காலியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் டிஆர்பி மூலம் நிரப்பப்படும் மொத்த காலி ணியிடங்களின் எண்ணிக்கை 2,768 ஆக அதிகரித்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு… எப்போது விண்ணப்பிக்கவேண்டும்?

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 2438 பயிற்சிப் பணியிடங்களுக்கான (Apprentice) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்தப் பயிற்சிப் பணியிடங்களில் சேர தேர்வு எழுதத் தேவையில்லை. ஐடிஐ, 10, 12ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்: கோவை போத்தனூர், சென்னை பெரம்பூர், ராயபுரம், ஆவடி, தாம்பரம், சேலம், அரக்கோணம், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்பட தெற்கு ரயில்வேயின் பல்வேறு பணிமனைகளில் பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதற்கான தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக் காலம்: பணியின் தன்மைக்கேற்ப ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை சம்பளத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது.

தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஐடிஐ படிப்பு அல்லது 10, 12ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வித் தகுதிக்கேற்ப பணியின் தன்மை மாறுபடும் எனத் தெற்கு ரயில்வேயின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு போன்ற இடங்களைச் சேர்ந்தவராகவும், ஆந்திரப் பிரதேசத்தின் எஸ்பிஎஸ்ஆர் நெல்லூர், சித்தூர் அல்லது கர்நாடகத்தின் தட்சிண கர்நாடகம் பகுதியைச் சேர்ந்தவராக மட்டும் இருக்க வேண்டியது கட்டாயம்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர் பணி அனுபவம் இல்லாதவராக இருந்தால், 15 வயது நிரம்பியவராகவும், 22 அல்லது 24 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. இது குறித்த விரிவான தகவல்களுக்குத் தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: https://sr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,4,1618,1905 என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ரூ.100 பதிவுக் கட்டணம் செலுத்தி, தங்களது அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து, விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

முக்கியத் தேதி: ஆகஸ்ட் 12 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணைய வழியில் மட்டும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, மதிப்பெண், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு: https://sr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,4,1618,1905 என்கிற இணைப்பைப் பார்வையிடவும்.

Thanks to hindu news

அரசு வேலைக்கு செல்ல வேண்டுமா? டிஎன்பிஎஸ்சியில் தேர்வாவது ரொம்ப ஈஸி! நிறைய படிக்க வேண்டாம்!

Sunday, July 28, 2024, 10:15

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கட் ஆப் வாங்குவது மிகவும் எளிதானது. இந்த பயிற்சியை பெற்றிருந்தால் போதுமானது. அரசு வேலை நிச்சயம் கிடைக்கும் என்கிறார்கள். இதனால் ஏராளமான மாணவர்கள் தற்போது பழைய முறைக்கு திரும்புவது போல் இந்த பயிற்சியை பெறுகிறார்கள். தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணி நியமனம் செய்ய தமிழக அரசு தேர்வாணையம் என்ற டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளை நடத்தி ஆட்களை பணியமர்த்தி வருகிறது. விஏஓ முதல் உயர் பதவி வரை அனைத்துக்கும் இந்த ஆணையம் தேர்வு நடத்துகிறது. மத்திய அரசில் செம ஜாப்.. 2006 பணியிடங்கள்.. பிளஸ் டூ முடிச்சிருந்தால் போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க அரசு பணியில் சேருவதற்கான டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வில் தட்டச்சு பயிற்சிக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இதனால் டைப் ரைட்டிங் எனப்படும் தட்டச்சு பயிற்சி படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதாவது தட்டச்சு பயிற்சியில் சேர்க்கை சதவீதம் 10 சதவீதம் ஆகும் என பயிற்சி நிறுவனத்தினர் தெரிவிக்கிறார்கள். தமிழக அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளை நடத்துகிறது. Advertisement இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இதில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகளை முடித்தவர்கள், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதி வருகிறார்கள். அப்போது அவர்கள் இந்த தொழில்நுட்பச் சான்றிதழை பெற்றிருப்பதன் மூலம் எளிதில் கட் ஆப் மதிப்பெண்களைப் பெற்று அரசு வேலை வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

Thanks to  one india news

கார் தருவாங்க.. பெரிய அதிகாரம்.. பல ஆயிரம் சம்பளம்! டிஎன்பிஎஸ்சி தரும் சான்ஸ்.. நெருங்கும் டெட் லைன்

Thursday, July 25, 2024, 16:00

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளுக்கான விண்ணப்பம் செய்யும் கால அவகாசம் முடிந்துவிட்டது. இந்த தேர்வு விரைவில் நடக்க உள்ளது. இன்னும் சில நாட்களே உள்ளன தேர்வு நடக்க. குருப் 2, 2ஏ பணிகளில் அடங்கிய 2,327 காலிப் பணியிடங்களுக்கான இந்த விண்ணப்பங்களை செய்து உள்ளது. இந்த போட்டித் தேர்விற்கு 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பம் அனுப்பி உள்ளனர். . குருப் 2 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு இதனால் மிக கடுமையானதாக இருக்க போகிறது. போட்டி உச்சத்தில் இருக்கும். இதனால் சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு பணியிடத்திற்கு 340 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். மத்திய அரசில் செம ஜாப்.. 2006 பணியிடங்கள்.. பிளஸ் டூ முடிச்சிருந்தால் போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க இலவச பயிற்சி: அதோடு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கி விட்டன. மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட தலைநகரங்களில் இதற்கான வகுப்புகள் தொடங்க உள்ளன. இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் இதற்கான ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2 வாரங்களில் இதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிநடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. Advertisement பதவிகள் என்னென்ன?: இந்த தேர்வு மூலம் கிடைக்கும் பதவிகள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம். ஸ்டாலின் டேபிளுக்கு போன லெட்டர்.. எத்தனை வருடமாக அரசு ஊழியர்கள் ஏங்குறாங்க.. வருது குட்நியூஸ் ஜூனியர் வேலைவாய்ப்பு அதிகாரி (மாற்றுத் திறனாளிகள் அல்லாதவர்கள்) சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் திணைக்களத்தில் நன்னடத்தை அதிகாரி தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் துணைப் பதிவாளர், பதிவுத் துறையில் தரம்-II வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சியில் (வேலைவாய்ப்பு பிரிவு) இளைய வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத் திறனாளிகள்) விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளர் காவல் ஆணையர் அலுவலகத்தின் புலனாய்வுப் பிரிவில் சிறப்புப் பிரிவு உதவியாளர் குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புப் பிரிவில் சிறப்புக் கிளை உதவியாளர் (மாநில உளவுப் பிரிவு) கோவை புது பேருந்து நிலையம்.. பேருக்குதான் ஹைடெக்! பஸ் நிக்காது, லைட் எரியாது, கழிவறை பக்கம் “ம்ஹூம்” இதில் விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளர், துணைப் பதிவாளர், பதிவுத் துறையில் தரம்-II, குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புப் பிரிவில் சிறப்புக் கிளை உதவியாளர் (மாநில உளவுப் பிரிவு), காவல் ஆணையர் அலுவலகத்தின் புலனாய்வுப் பிரிவில் சிறப்புப் பிரிவு உதவியாளர் ஆகிய பதவிகள் நல்ல பவர் நிறைந்த பதவிகள் ஆகும். இவற்றில் சிலவற்றிற்கு அரசின் கார் கிடைக்கும். அதேபோல் சில பதவிகளுக்கு 40 – 60 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். டிஎன்பிஎஸ்சி அறிவித்த குரூப்-2 பதவிகளில் 116 இடங்களுக்கும், குரூப்-2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 413 இடங்களுக்கும் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் முதல்நிலைத் தேர்வை எழுதினார்கள். அதில் வெற்றி பெற்ற 57 ஆயிரத்து 641 பேர் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு எழுத அழைக்கப்பட்டார்கள். அவர்களில் 51 ஆயிரத்து 987 பேர் முதன்மைத் தேர்வை கடந்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 25-ந் தேதி எழுதி இருந்தார்கள். கோவையையே மிரள வைத்த.. ஐஏஎஸ், ஐபிஎஸ்.. விசாரித்த போலீசுக்கு ஷாக்.. அத்தனையும் போலி! இவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் கடந்தாண்டு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மதியம் என இரு வேளைகளில் 186 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடந்தன. குறிப்பாக காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது. முதன்மைத் தேர்வு எழுதிய தேர்வர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு நீண்ட தாமதத்திற்கு பிறகு நிறைவு பெற்றது. அரசு வெளியிட்ட தகவலின்படி, குரூப்-2 பதவிகளில் 161 இடங்களும், குரூப்- 2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 990 இடங்களும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 15:12.2022 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வாணைய ஆண்டுத்திட்டம் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதையடுத்து குரூப்-2 தேர்வு முடிவுகள் 2024 ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. விதிகள் மாற்றம்: இப்படிப்பட்ட நிலையில்தான் மீண்டும் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நிலையில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிநடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. இந்த தேர்வுக்கு ஜூலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 19ம் தேதி கட்டணம் செலுத்த கடைசி நாள் ஆகும். 2327 காலிப்பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடக்கிறது.

Thanks to one india news

டிகிரி + இன்ஜினியரிங் முடித்திருந்தாலே போதும்.. பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை! சான்ஸை மிஸ் பண்ணாதீங்க

July 25, 2024, 10:39

 சென்னை: பிரபல ஐடி நிறுவனத்தில் டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். சர்க்கரை அட்டைதாரர்களுக்கு ஹேப்பி.. இனி ரேஷனில் நிம்மதி.. திண்டுக்கல் ரேசன் கடையில் அதிரடியை பாருங்க நம் நாட்டில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் குவாட்ரண்ட் டெக்னாலஜிஸ் (Quardrant Technologies). இந்த நிறுவனம் என்பது தகவல் தொழில்நுட்பத்துறையில் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. கல்லீரல் காக்கும் கற்பகவிருட்சம் அமிர்தவல்லி இலை.. இதய நோயாளிகளின் அருமருந்தாகும் சீந்தில் இலைகள் குறிப்பாக கூற வேண்டும் என்றால் Cloud, Data & Analytics, Accessibility, Business Intelligence, Quality Testing, DevOps, AI & ML, CRM, ERP, Big Data மற்றும் Application Development உள்ளிட்ட முக்கிய பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ZOHOவின் அடுத்த ஆஃபர்.. விண்ணப்பிக்க ஜுலை 31 கடைசி நாள்.. ஆகஸ்ட் 3ல் இண்டர்வியூ.. தென்காசியில் பணி இந்நிலையில் தான் தற்போது குவாட்ரண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் ஜாவா டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இளங்கலை பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டல் இன்ஜினியரிங் அல்லது அது சார்ந்த துறையில் படிப்பை முடித்திருக்க வேண்டும். Advertisement HCL வேலைவாய்ப்பு.. அனுபவம் எதுவும் வேண்டாம்.. BBA முடித்தவர்களுக்கு ‛ஜாக்பாட்’ விண்ணப்பம் செய்வோருக்கு Primary Skills ஆக Jaa, Spring, Boot, MVC, Hibernate மற்றும் SQL தெரிந்திருக்க வேண்டும். அதில் பணியாற்றி இருந்தால் இன்னும் சிறப்பானதாக இருக்கும். கன்டரி ஸ்கீல்ஸாக எச்டிஎம்எல், சிஎஸ்எஸ், ஜாவா ஸ்கிரிப்ட் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதில் பணியாற்ற தெரிந்திருந்தால் பிளஸ் பாயிண்டாக இருக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ZOHO -வின் புதிய வேலைவாய்ப்பு.. அனுபவம் வேண்டாம்.. டிகிரி மட்டுமே போதும்.. சென்னையிலேயே பணி நியமனம் இதுதவிர ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். Debugging திறமை மற்றும் பிரச்சனைகளை சமாளிக்கும் திறமை கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி இந்த பணிக்கான சம்பளம் குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். மேலும் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Quadranttechnologies.com என்ற இணையதளம் சென்று ஆன்லைனில் இப்போதே விண்ணப்பம் செய்வது நல்லதாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.