• Tuesday 1 July, 2025 12:39 PM
  • Advertize
  • Aarudhal FM

அகமதாபாத் விமான விபத்து… டாடா நிறுவனத்திற்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு

ஏர் இந்தியா விமான விபத்தைத் தொடர்ந்து, குறிப்பிட்ட ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த டாடா நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘போயிங் 787- 8 டிரீம்லைனர்’ விமானம் விபத்திற்குள்ளானதில், அதில் இருந்த 242 பேரில் 241 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகலை ஏற்படுத்தியுள்ள சூழலில், இது ”டாடா குழும வரலாற்றின் இருண்ட நாள்…” எனக் குறிப்பிட்டுள்ளார் அக்குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன்.

இந்த நிலையில், ’ஏர் இந்தியா’ நிறுவனம் இயக்கும் ‘போயிங் 787- 8’, ‘போயிங் 787- 9’ ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, எரிபொருள் சோதனை, கேபினின் காற்றழுத்தம், எலக்ட்ரானிக் என்ஜின் கட்டுப்பாடு சார்ந்த அமைப்புகள், Take off தொடர்பான சோதனை, ஹைட்ராலிக் சோதனை உள்ளிட்ட 6 வகையான சோதனைகளை விமானம் புறப்படும் முன்பு மேற்கொள்ள வேண்டும் எனவும், விமான கட்டுப்பாட்டு ஆய்வுகளை மறு உத்தரவு வரும் வரை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மின்னணு கட்டுப்பாடு சார்ந்த அமைப்புகளை 15 நாட்களுக்கு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான அறிக்கையை விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே, அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை ஏர் இந்தியா தலைமைச் செயல் அதிகாரி காம்பெல் வில்சன் சந்தித்துப் பேசினார்.  சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, விமான விபத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் காம்பெல் வில்சன் விவரித்ததாகக் கூறப்படுகிறது

170 அறைகள்… பக்கிங்காம் அரண்மனையை விட பெரிய வீட்டில் வசிக்கும் இந்திய பெண் – பரப்பளவு என்ன தெரியுமா?

இங்கிலாந்து அரசக் குடும்பத்திற்கு சொந்தமான பக்கிங்காம் அரண்மனையைவிட மிகப்பெரிய
இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே மிகவும் பெரிய அரண்மனை என்று சொன்னால், அது, குஜராத் மாநிலத்தில் உள்ள லட்சுமி விலாஸ் அரண்மனை தான், இது பரோடாவின் கெய்க்வாட் குடும்பத்திற்கு சொந்தமானது. இது உலகின் மிகப்பெரிய தனியாருக்கு சொந்தமான வீடாக இருக்கிறது. இந்த அரண்மனை, இங்கிலாந்து அரசருக்கு சொந்தமான பக்கிங்காம் அரண்மனையை விட மிகப் பெரியது. பரோடாவின் முன்னாள் ஆட்சியாளர்களான கெய்க்வாட் குடும்பத்தினருக்கு உள்ளூர் மக்களிடையே இன்றும் மிகுந்த மரியாதை உள்ளது. இந்த குடும்பம் தற்போது சமர்ஜித் சிங் கெய்க்வாட் மற்றும் அவரது மனைவி ராதிகா ராஜே கெய்க்வாட் ஆகியோரால் வழிநடத்தப்படுகிறது.
1978ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி பிறந்த ராதிகா ராஜே கெய்க்வாட் குஜராத்தின் வான்கனேர் பகுதியைச் சேர்ந்தவர். இவரது தந்தை டாக்டர் எம்.ஜே.ரஞ்சித் சிங் ஜாலா, ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றுவதற்காக, அரச பட்டத்தை துறந்தார். லட்சுமி விலாஸ் அரண்மனையின் பரப்பளவு 3,04,92,000 சதுர அடி. ஆனால், லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையின் பரப்பளவு வெறும் 8,28,821 சதுரடி தான். அத்துடன், தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரூ.15,000 கோடி மதிப்பிலான அன்டிலியா வீட்டின் பரப்பளவு 48,780 சதுரடி மட்டுமே.
லட்சுமி விலாஸ் அரண்மனையில் சுமார் 170 அறைகள் உள்ளன. 1890ஆம் ஆண்டில் மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட் 3வது மன்னரால் கட்டப்பட்டது. அந்த நேரத்தில் சுமார் 1,80,000 பிரிட்டன் பவுண்ட் செலவு செய்து கட்டப்பட்டது. இந்த அரண்மனை வளாகத்திற்குள் ஒரு கோல்ஃப் மைதானமும் இருக்கிறது