• Tuesday 14 October, 2025 11:29 PM
  • Advertize
  • Aarudhal FM

IAS மற்றும் IPS உள்ளிட்ட உயர் பணியில் சேர அழைப்பு

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 24 வகையான குடிமை பணிகளின் 979 பணியிடங்களுக்கு ஒன்றிய அரசின் மத்திய பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இன்று முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.பெண்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு (SC/ ST) விண்ணப்ப கட்டணம் இல்லை என்றும் மற்றவர்கள் ரூ. 100/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.21 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.கல்வித் தகுதி ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.முதல் நிலை தேர்வு வருகிற மே 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இது பற்றிய மேலும் விவரங்களை,https;//upsc.gov.in/sites/default/files/NOTIF-CSP-2025-Engl-220125-pdf என்ற முகவரியில் இணையத்தில் அறிந்து கொள்ளலாம்.தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிக அளவில் விண்ணப்பித்து நன்கு படித்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்.அன்புடன்,(மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி) முழுநேர உறுப்பினர்,மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம்,தமிழ்நாடு.