• Thursday 18 December, 2025 06:42 AM
  • Advertize
  • Aarudhal FM

கர்த்தர் தந்த கருவிகளை . . . . . .

ஆசிரியர்: டேவிட் தன்ராஜ்

இறைவனுடன் இடைப்படும் நேரத்தில்

இனிய ஒலியெழுப்பி

இடையூறு செய்கிறது

இரக்கமற்ற கைப்பேசி

அன்பான மனைவியுடன்

அளவளாவிடும் நேரத்தை

அளவில்லாமல் அபகரிக்கிறது

ஆபத்தான அலைபேசி

களைத்து வரும் கணவருக்கு

களைப்பு தீரும் நேரத்தை

கருணையே இல்லாமல்

களவாடுகிறது கைப்பேசி

குழந்தைகளுடன் கொஞ்சும் நேரத்தில்

குறுக்கே வந்து

குழப்பம் தருகிறது

கொலைகார தொலைபேசி

பள்ளிச் சென்றிடும் பிள்ளைகளை

பாழும்கிணற்றில் தள்ளிவிட

பாதைக் காட்டி வருகிறது

பாழாய்போன தொலைபேசி

பெற்றோர் பிள்ளை உறவுகளை

பிரித்து வைத்து 

பதம் பார்த்து

பேதம்பண்ணுது தொலைபேசி

மெய்தகவலை பொய்யென்றும்

பொய்தகவலை மெய்யென்றும்

புளுகிவருகுது புரட்டி வருகுது

புண்ணாக்கு தொலைபேசி

உழைப்பை கெடுத்து

உணவை தடுத்து

உயிரை வாங்குது

உதவாக்கரை தொலைபேசி

காதல் வலையில் தள்ளுகிறது

காமப்பசிக்கு அழைக்கிறது

கயவர்கள் கையிலுள்ள

 களவாடிய கைப்பேசி

கர்த்தர் தந்த கருவிகளை

கருத்தாய் பயன்படுத்தி

கர்த்தருக்கு மகிமையை

கருத்தாய் செலுத்திடுவோம்