• Monday 16 June, 2025 09:17 AM
  • Advertize
  • Aarudhal FM

கொரோனா பாதிப்பு 7121 ஆக உயர்வு.. ஒரே நாளில் 6 பேர் பலி

கொரோனா பாதிப்பு 7121 ஆக உயர்வு.. ஒரே நாளில் 6 பேர் பலி

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 7,121 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 306 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா என கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரியம் இல்லாத கொரோனா என அரசு தெரிவித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் மெல்ல உயர்வதால், மீண்டும் லாக்டவுன் வருமோ? என்ற பீதி ஏற்பட்டுள்ளது.

வேகமெடுக்கும் கொரோனா 591 பேர் பலியான சோகம்

வேகமெடுக்கும் கொரோனா.. 591 பேர் பலியான சோகம்

வீரியம் குறைவான கொரோனா என அரசு விளக்கம் அளித்து வரும் நிலையில், பலிக எண்ணிக்கை உயர்வதால் லாக்டவுன் அச்சம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 391 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவர் உள்பட புதிதாக 4 பேரும், நடப்பாண்டில் மொத்தமாக 59 பேரும் உயிரிழந்தது மத்திய சுகாதாரத்துறை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. கர்ப்பிணிகள், முதியோர் பாதுகாப்பாக இருங்கள்!

498 பேருக்கு கொரோனா 8 பேர் மரணம்!

நாடு முழுவதும் 24 மணிநேரத்தில் புதிதாக 498 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தில் புதிதாக 8 பேர் உட்பட 221 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். வீரியம் இல்லாத கொரோனா என விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், பலி அதிகரிப்பதால் மீண்டும் லாக்டவுன் ஏற்படுமோ என மக்கள் பீதியடைந்துள்ளனர்.