• Saturday 6 September, 2025 08:36 PM
  • Advertize
  • Aarudhal FM

எம்மா குஷ்மேன் என்ற மாமனிதரை பற்றி உங்களுக்கு தெரியுமா?

மண்ணில் : 1863 – விண்ணில் : 1931

ஊர் : பர்லிங்டன், நியூயார்க்

தரிசன பூமி : கொனியா, ஆசியா மைனர்

முதலாம் உலகப் போரின்போது ஆர்மீனிய இனப்படுகொலை உலக வரலாற்றின் கொடுமையான காலங்களில் ஒன்றாகும். துருக்கியர்கள் சுமார் ஒரு மில்லியன் (10 லட்சம்) ஆர்மீனியர்களைக் கொன்றனர். மேலும் பெண்களையும் குழந்தைகளையும் கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார்கள். ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் நகரங்களை விட்டு பாலைவனத்தில் சாகும் வரை நடக்க பலவந்தம் படுத்தப்பட்டனர். தேவன் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட மிஷனரிகள் மூலம் தனது பரலோக அன்பை இந்த வெறுப்பு மற்றும் கொடுமையால் நிரம்பிய மக்களுக்கு கூட வெளிப்படுத்துவதை செறியெனக் கண்டார். இப்படி தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களில் ஒருவர் தான் எம்மா குஷ்மேன்.எம்மா டார்லிங் குஷ்மேன். ஆசியா மைனரின் மிகப்பெரிய நகரமான கொனியாவில் (அப்போஸ்தலன் பவுல் காலத்தின் ‘இக்கோனியா பட்டண’) உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றிய ஒரு அமெரிக்க செவிலியர். எம்மா அமெரிக்கர்கள் மற்றும் ஆர்மீனியர்களை வெறுக்கும் அதே காயமடைந்த துருக்கியர்களை பராமரித்தும். மருத்துவமனையின் தலைமை செவிலியராகவும் இருந்தார். ஒருமுறை காயமடைந்த துருக்கியர் ஒருவர் அவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவற்றில் பொருத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவின் படத்தை அகற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். குஷ்மேன் அதற்க்கு. “இல்லை. மக்களுக்கு தேவன் அன்பாய் இருக்கிறார் என்று போதித்த பரம வைத்தியராகிய இயேசுவின் படம் இது. அவர் அதைக் போதித்ததாலும், அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற என்னை அழைத்ததாலும், நான் உன்னை குணமாக்க உதவ இங்கே நிற்கிறேன்.” என்று உறுதியாகப் பதிலளித்தார். அந்த நபர் குணமடைந்த பிறகு இந்த விஷயத்தைக் குறித்து யோசிக்கலாம் என்று எண்ணினார். ஆனால் அவர் மருத்துவமனையில் செலவிட்ட நேரத்திலே. குஷ்மேன் மற்றும் பிற ஆர்மீனிய செவிலியர்களிடம் கிறிஸ்துவின் அன்பைக் கண்டார். அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்குள். அவர் முழுவதுமாய் மனமாறினார். எவ்வளவு தைரியமிக்க அன்பான பெண்மணியாய் திகழ்ந்தார் எம்மா!முதல் உலகப் போரின்போது, கொடூரமான இனப்படுகொலையின் மத்தியில், குஷ்மேன் மற்றும் அவரது செவிலியர் குழு காயமடைந்த துருக்கியர்களுக்கும் ஆர்மீனியர்களுக்கும் சிகிச்சை வழங்கினர். அவரது வாழ்க்கையே ஒரு நூலிழையில் ஊசலாடுவதுபோல் இருந்தாலும், அவர் பல ஆர்மீனிய சிறுவர்களையும் சிறுமிகளையும் மரண தறுவாயிலிருந்து காப்பாற்றினார். போரினால் அனாதையான அநேக குழந்தைகளை பராமரித்தார். அவர் அவர்களுக்கு எழுத. படிக்க கற்றுக்கொடுத்து. தையல் மற்றும் தோல் வெட்டுதல் போன்ற வேறு சில திறன்களைக் கற்றுக்கொள்ளவும் உதவினார். தன் முடிவு பரியந்தம் தன் மிஷனரி அழைப்பிற்கு உண்மையாக இருந்தார் எம்மா குஷ்மேன்.

பிரியமானவர்களே. நீங்கள் உங்கள் எதிரிகளை நேசிக்கிறீர்களா