• Thursday 17 July, 2025 06:29 PM
  • Advertize
  • Aarudhal FM

பரமன்குறிச்சியில் ஆசிரியர் அடித்ததால் மாணவன் தற்கொலை

திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி சமத்துவபுரத்தை சேர்ந்த மாணவன் முத்துகிருஷ்ணன் (15) பரமன்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டுப்பாடம் எழுதி வரவில்லை எனக்கூறி பள்ளி ஆசிரியர் மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன், நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.