• Saturday 18 October, 2025 11:20 AM
  • Advertize
  • Aarudhal FM

நாட்டிலேயே முதல்முறை; சேலத்தில் ஏலியனுக்கு கோவில் கட்டிய சித்தர் – இனி எல்லாமே ஏலியன்கள் தானாம்

 Aug 2, 2024, 11:53 PM

ஏலியன் கோவில் – சேலம் மாவட்டம் மல்லமுப்பம்பட்டி பகுதியில் சிவ கைலாய ஆலயத்தில் இரட்டை ஆருடை சிவலிங்கம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு கடவுள் சிலைகள் ஒவ்வொரு சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளன. ராமர் போர் முடிந்து ஓய்வு பெற்ற இடம் என்று கருதப்படுவதால் ராமகவுண்டனூர் என்ற பெயர் பெற்றுள்ளதால் அம்பு எய்தும் கோலத்தில் இங்கு ராமர் சிலை அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிது.

இந்த கோவிலை லோகநாதன் என்றசித்தர் பாக்கியா நடத்தி வருகிறார். நாட்டிலேயே வேறெங்கும் இல்லாத வகையில் ஏலியனை கடவுளாக பாவித்து அதன் சிலை பாதாளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாக்யா சித்தர் கூறுகையில், “உலகில் சிவன் படைத்த முதல் தெய்வம் ஏலியன் தான். உலகிலேயே ஏலியனின் முதல் சிலை இங்கு தான் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் சிலை அமைப்பதற்கு முன்பாக ஏலியனிடம் அனுமதி பெறப்பட்டதாம். ஏலியன் தெய்வங்கள் அனுமதி கொடுத்ததன் அடிப்படையிலேயே சிலை அமைக்கப்பட்டுள்ளதாம்.

இனிவரும் காலங்களில் ஏலியன்களின் வருகை அதிகமாக இருக்குமாம். அளவில்லாத சக்தியை கொண்ட ஏலியன்கள் உலகிற்கு எந்த தீங்கும் செய்ய மாட்டார்கள். அதற்காக தான் இந்த கோவிலை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

thanks to asianet news tamil