- 19
- 20250615
கொரோனா பாதிப்பு 7121 ஆக உயர்வு.. ஒரே நாளில் 6 பேர் பலி

கொரோனா பாதிப்பு 7121 ஆக உயர்வு.. ஒரே நாளில் 6 பேர் பலி
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 7,121 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 306 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா என கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரியம் இல்லாத கொரோனா என அரசு தெரிவித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் மெல்ல உயர்வதால், மீண்டும் லாக்டவுன் வருமோ? என்ற பீதி ஏற்பட்டுள்ளது.