• Monday 13 October, 2025 09:49 PM
  • Advertize
  • Aarudhal FM

குழந்தை வரம் கேட்டவளின் உயிரைப் பறித்த கொடூரம்

குழந்தை வரம் கேட்டது தப்பா… உயிரைப் பறித்த கொடூரம்

உ.பி.,யில், 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த அனுராதா(35), தாந்தரீகம் செய்யும் சந்துவின் உதவியை நாடியுள்ளார்.

சந்துவோ அனுராதாவுக்கு பேய் ஓட்ட வேண்டும் எனக் கூறி, உதவியாளர்களுடன் சேர்ந்து அவரது கழுத்தை அழுத்தி, வலுக்கட்டாயமாக வாயை திறந்து கழிவு நீரை குடிக்க வைத்துள்ளார். இதில் உடல்நலம் மோசமடைந்த அனுராதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்னும் மூடநம்பிக்கைகளில் சிக்கி இருப்பவர்களை என்ன செய்வது?

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து 3 பேர் பலி

கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவர் உள்பட இருவர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியுள்ளது.ரயில் மோதியதில் பள்ளி வேன் 50 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்ததில் இருவர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.இந்த விபத்தில் படுகாயமடைந்த வாகன ஓட்டுநர், பள்ளிக் குழந்தைகள் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள் அளித்துள்ள தகவலின் படி, ஓட்டுநர் மற்றும் 5 பள்ளிக் குழந்தைகள் வேனில் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.கேட் கீப்பரின் கவனக் குறைவால் ரயில்வே கேட் மூடப்படாததே விபத்துக்குக் காரணம் என்றும் முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான் பரிசுத்தமானவன் எனக்கூறி பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மத போதகர் கைது.

கன்னியாக்குமரியில் உடல்நலக் குறைவால் சபைக்கு வந்த பெண் ஒருவரை மதபோதகர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன்.

சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும் போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார். சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார் ரெஜிமோன்.

இதனால் அந்த பெண் கூச்சலிட்டுக் கொண்டு ஓடிச்சென்று தனது உறவினர்களிடமும், போலீஸிடமும் புகார் கூறியுள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் ரெஜிமோனை கைது செய்துள்ள நிலையில், அவர் சபையிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

தினமும் பாதாம் பால் பருகுங்கள்

10 பாதாம் கொட்டைகளை இரவு ஊறவைத்து விடவும். மறுநாள் காலை பாதாமின் தோலை உரித்துவிட்டு அரைத்து, ஒரு கப் பாலில் சேர்த்துக்கொள்ளவும்.

அதனுடன் ஒரு துண்டு இஞ்சி, ஒரு சிட்டிகை ஜாதிக்காய் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை சேர்க்கவும். இந்த பாலை தினமும் பருகி வருவதால் உடலில் ஆரோக்கியம் பெருகுவதுடன் நமக்கு ஏற்படும் பதற்றம், கவலை ஆகியவற்றையும் நீக்குகிறது.

நீங்க லேட்டாவா தூங்குறீங்க கெட்டுச்சு போங்க..

ஏன் என்றால்.. இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை நாம் உறங்கும்போது, உடல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது.

11-1 மணிக்கு கல்லீரல், பித்தப்பை நச்சு நீக்கம்;

1-3 மணிக்கு ஆழ்ந்த உறக்கம், கனவுகள்;

3-5 மணிக்கு சிறுநீரகம், குடல் கழிவு நீக்கம்;

5-6 மணிக்கு உடல் விழித்தெழத் தயார் என உடலியல் ரீதியாகப் பல அற்புதங்கள் நம்மை அறியாமலேயே நிகழ்கின்றன! இதைதான் நாம டிஸ்டர்ப் பண்றோம்…

திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரண வழக்கை இப்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனப் பல்வேறு எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தினர். இதற்கிடையே அஜித் குமார் மரண வழக்கு சிபிஐக்கு மாற்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

சிவகங்கை மாவட்டத்தில் வழக்கு ஒன்றில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் உயிரிழந்தார். போலீசார் தாக்குதலே அவரது மரணத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இந்த வழக்கு ஏற்கனவே சிபிஐசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையே திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரண வழக்கு சிபிஐக்கு மாற்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், விசாரணைக்குத் தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்இது தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், கடந்த 28-6-2025 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவர், திருப்புவனம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் வேதனையடைந்தேன்.இது யாராலும் நியாயப்படுத்தப்பட முடியாத, காரணம் சொல்லித் தப்பிக்க முடியாத செயல். இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாகச் சம்பவம் நடந்த அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இத்தகைய வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகளின்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு அரசு நடவடிக்கைநேற்றைய தினம் , 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கும் மாற்றப்பட்டது. இன்று சம்பந்தப்பட்ட மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். துணைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்படி சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து எத்துக்கப்பட்டு வருகிறது.துயர மரணத்தை அடைந்துள்ள அஜித்குமார் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு நான் பேசினேன். நடைபெற்ற துயரச் சம்பவத்திற்கு எனது வருத்தத்தை அவர்களிடம் தெரிவித்தேன். நியாயமான, ஒளிவுமறைவற்ற, எவ்விதப் பாரபட்சமுமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அஜித்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளேன்.சிபிஐக்கு மாற்றம்சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இவ்வழக்கில் சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் காவல் துறையைச் சேர்ந்த ஐவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிடுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பைத் தமிழ்நாடு அரசு வழங்கும்.

இந்து கோயிலாக மாறிய கிறிஸ்தவ தேவாலயம்

ராஜஸ்தான் கிராம மக்கள் மீண்டும் இந்துக்களாக மாறியதால் கோயிலாக மாறிய தேவாலயம்

அர்ச்சகராக மாறிய கிறிஸ்தவ மத போதகர்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ் வாரா மாவட்டம் சோட்ல குடா கிராமத்தில் பழங்குடியின மக் கள் அதிகளவில் வசிக்கின்றனர்.கவுதம் கராசியா என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றி உள்ளார். இதையடுத்து அந்த கிராமத்தில் தனக்கு சொந்தமான இடத்தில் தேவாலயம் (சர்ச்) கட்டி பிரார்த்தனை செய்து வந் துள்ளார்.இந்த சூழ்நிலையில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய கிராம மக்கள் மீண்டும் இந்து மதத்துக்கு மாற முடிவு செய்தனர். இதையடுத்து, தேவாலயத் துக்கு காவி வண்ணம் தீட்டினர். சுவரில் இருந்த சிலுவை குறி யீட்டை அழித்துவிட்டு இந்து மத குறியீடுகளை வரைந்துள்ளனர்.இந்நிலையில், அந்த கோயி லில் பைரவர் சிலை பிரதிஷ்டை விழா நேற்று முன்தினம் நடை பெற்றது. முன்னதாக, அந்த சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட் டனர். கிறிஸ்தவ மத போதக ராக இருந்த கவுதம், இந்தக் கோயிலின் அர்ச்சகராக இருப் பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு அந்த கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

மிளகாய் பொடி தூவி, கழுத்தை மிதித்து கணவர் கொலை!

மிளகாய் பொடி தூவி, கழுத்தை மிதித்து கணவர் கொலை!

திருமணத்தை மீறிய உறவு, குடும்பங்களை சிதைத்து வருகிறது. அப்படியொரு சம்பவம் கர்நாடகாவின் காடஷெட்டிஹள்ளியில் நடந்துள்ளது. காதலருடன் சேர்ந்து கணவரின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, பின்னர் தனது கால்களால் கழுத்தை மிதித்து மனைவி கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சடலத்தையும் கோணியில் கட்டி 30 கி.மீ அப்பால் எடுத்துச் சென்று வீசி வந்ததையும் கைதான மனைவி ஒப்புக் கொண்டுள்ளார்.

மனைவியை கொன்று சடலத்துடன் உறங்கிய கணவன்

கன்னியாகுமரி கருங்கல் பகுதியில் நடந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மனைவியை கொன்றுவிட்டு சடலத்தின் அருகே 12 மணி நேரம் உறங்கிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்ததால் மரியாதை கிடைக்கவில்லை என்றும், மதுபோதையில் இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கொஞ்ச நேர கோபம் என்ன பண்ணிருக்கு பார்த்தீங்களா?

வாய், மூக்கில் ரத்தம்… பள்ளியில் 7 வயது மாணவன் மரணம்

காலையில் மகிழ்ச்சியாக பள்ளி சென்ற சிறுவன், மாலையில் உயிரிழந்த சம்பவம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடந்துள்ளது. தனியார் CBSE பள்ளியில் 2-ம் வகுப்பு பயின்ற மாணவனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் சென்றபோது, வாய், மூக்கில் ரத்தம் கசிந்தவாறு மாணவன் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இறப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.