• Monday 5 May, 2025 11:17 AM
  • Advertize
  • Aarudhal FM

யார் தேவ ஜனங்கள் ? அவர்களின் அடையாளங்கள்

தேவனுடைய ஜனங்கள் என்பது நமக்கு கிடைக்கப் பெற்றுள்ள மாபெரும் சிலாக்கியம். அப்.பேதுரு தனது முதலாவது நிருபத்தின் இரண்டாம் அதிகாரத்தில் நாம் யார் என்பதை பல கோணங்களில் அழகாக விளக்குகிறார்.

1 பேதுரு 2ஆம் அதிகாரத்திலிருந்து

1. மறுபடி பிறந்த குழந்தைகள். – 2:3

2. ஜீவனுள்ள கற்கள். – 2:5

3. தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததி. – 2:9

4. பரிசுத்த இராஜரீக ஆசாரிய கூட்டம். – 2:5,9

5. தேவனுடைய ஜனங்கள். – 2:10

6. தேவனுக்கு அடிமைகள். – 2:16

7. திருப்பப்பட்ட மந்தை. – 2:25

இவைகளில் தேவனுடைய ஜனங்கள் என்பது நம்மை அடையாளப்படுத்தும் வார்த்தை. நாம் யார்? நமது மேன்மை என்ன? நாம் யாருடையவர்கள்? நமது உரிமை என்ன? நமது பொறுப்பு என்ன? நம்மை குறித்ததான நோக்கம் என்ன? போன்றதான ஏராளமான காரியங்களை இந்த வார்த்தை வலியுறுத்துகிறது.

நம்முடைய பழைய நிலை, நாம் தேவ ஜனங்களாக இருக்கவில்லை என்பதாகும். ஆனால் தேவனுடைய ஜனங்கள் என்கிற இந்த சிலாக்கியம் அவருடைய இரக்கத்தினால் நமக்கு கிடைத்திருக்கிறது (2:10, 1:4).

தேவ ஜனங்கள் என்பது நமது சிலாக்கியத்தை மட்டுமல்ல, நம்முடைய பொறுப்பையும் வலியுறுத்துகிறது.

தேவனுடைய ஜனங்கள் எப்படிப்பட்டவர்களாக வாழவேண்டும் என்பதை பேதுரு கீழேயுள்ள வசனங்களில் கூறுகின்றார்

1. அந்நியரும் பரதேசிகளும் என்ற மனநிலையோடு வாழுங்கள். – 2:11

2. மாம்ச இச்சைகளை விட்டு விலகுங்கள். – 2:11

3. மற்றவர்களுக்கு முன் நல் நடக்கை உள்ளவர்களாய் இருங்கள். – 2:12

4. மனிதக் கட்டளைகளுக்கு கீழ்ப்படியுங்கள். – 2:13

5. தேவனுக்கு அடிமைகளாய் இருங்கள். – 2:16

6. எல்லாரையும் கனம் பண்ணுங்கள். – 2:17

7. பாடுகளை பொறுமையோடு சகித்திருங்கள். – 2:20, 21

தேவனுடைய ஜனங்கள் நாம் என்ற மேன்மையை உணர்ந்தவர்களாய், அதற்கேற்ற வாழ்க்கை வாழ தேவன் நமக்கு கிருபை செய்வாராக.

Thanks to கே. விவேகானந்த் 

நாம் பிறருக்கு ஆசீர்வாதமாய் இருப்பது எப்படி?

மனிதர்கள் வாழுகின்ற இந்த சமுதாயத்தில் போட்டியும், பொறாமையும், சண்டைகளும், வன்கண்களும் நிறைந்து இருக்கிறது. இதன் நடுவில் ஒரு தேவ பிள்ளை எங்கே இருந்தாலும் (பள்ளிக்கூடம், கல்லூரி, அலுவலகம்) பிறருக்கு ஆசீர்வாதமாக இருப்பது எப்படி? (1 பேதுரு 3:8,9)

செய்ய வேண்டியவைகள்:

1. ஒரு மனமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)
2. இரக்கமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)
3. சகோதர சிநேகமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)
4. மன உருக்கமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)
5. இணக்கமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)

செய்யக்கூடாதவைகள்:

1. தீமைக்கு தீமை செய்யாதீர்கள். (1 பேதுரு 3:9)
2. உதாசீனத்திற்கு பதிலாக உதாசீனப்படுத்தாதீர்கள். (1 பேதுரு 3:9)

இவ்விதம் வாழ்வோம் என்றால், “எந்த சூழ்நிலையிலும் நாம் பிறருக்கு ஆசீர்வாதமாக இருப்போம்.”

கே. விவேகானந்த்

எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று

(1 பேதுரு 4:7-11)

ஆகையால்…

1. தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். 7 வச.

2. ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். 7 வச.

3. ஊக்கமான அன்புகூறுங்கள். 8 வச.

4. முறுமுறுப்பில்லாமல் உபசரியுங்கள். 9 வச.

5. நல்ல உக்கிராணக்காரர் போல உதவி செய்யுங்கள். 10 வச.

6. தேவனுடைய வசனத்தின்படி போதியுங்கள். 11 வச.

7. தேவனை மகிமைப்படுத்துவதையே செய்யுங்கள். 11 வச.

தேவனால் பிறந்தவனின் அடையாளம்

( 1 யோவான் நிருபத்திலிருந்து ) தேவனால் பிறந்தவர்களை நாம் எப்படி அடையாளம் காண முடியும் ?
அப்.யோவான் தனது முதலாவது நிருபத்தில் “தேவனால் பிறந்தவனின் 7 அடையாளங்களை” குறிப்பிடுகிறார்.

1. இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பான். 5:1

2. நீதி செய்கிறவனாயிருப்பான். 2:29, 3:10

 3. பாவம் செய்யமாட்டான். 3:8, 5:18

4. தேவ வார்த்தைக்கு செவிகொடுப்பான். 4:6

 5. அன்புள்ளவனாயிருப்பான். 4:7

 6. உலகத்தை ஜெயிக்கிறவனாயிருப்பான். 5:4, 4:4

 7. தன்னை காக்கிறவனாயிருப்பான். 5:18

Thanks to Bro. Vivek

பரத்திலிருந்து வருகிற ஞானம்

தேவனுடைய பிள்ளைகள் இந்த உலகத்தில் தேவஞானமுள்ளவர்களாய் வாழ வேண்டியது அவசியம். தேவஞானமென்பது லெளகிகமானதல்ல, அது பரத்திலிருந்து இறங்கிவருவதாகும். அந்த பரமஞானத்தின் 7 தன்மைகளை யாக்கோபு தனது புத்தகத்தில் விளக்குகிறார்.

பரத்திலிருந்து வருகிற ஞானம். யாக் 3:17

1. சுத்தமுள்ளது
2. சமாதானமுள்ளது
3. சாந்தமுள்ளது
4. இணக்கமுள்ளது
5. இரக்கமும், நற்கனிகளும் நிறைந்தது
6. பட்சபாதமில்லாதது
7. மாயமற்றது.

Thanks to Bro. vivekananth

ஒரேதரம் செய்துமுடித்தார்

ஒரேதரம் செய்துமுடித்தார்.” (எபிரெயர் 7:27)
லேவி கோத்திர ஆசாரியர்களுக்கும், நமது மகா பிரதான ஆசாரியராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை விளக்கும் எபிரெய ஆசிரியர், கிறிஸ்துவின் செயலை ஒரேதரம் செய்து முடித்தார் என்று எழுதுகின்றார்.

கிறிஸ்து எதை ஒரேதரம் செய்து முடித்தார்?

1. ஒரேதரம்… பாடுபடும்படி இந்த பூமியில் வெளிப்பட்டார். (எபி 9:26, 25)
2. ஒரேதரம்… எல்லாருடைய பாவங்களையும் சுமந்து தீர்த்தார். (எபி 9:28)
3. ஒரேதரம்…  தம்மை தாமே பலியிட்டார்.  (எபி 7:27)
4. ஒரேதரம்… நம்மை பரிசுத்தமாக்கியிருக்கிறார். (எபி 10:10)
5. ஒரேதரம்… மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்து, நம்மையும் அந்த சிலாக்கியத்திற்கு உட்படுத்தினார். (எபி 9:12)
6. ஒரேதரம்… நித்திய மீட்பை நமக்கு உண்டு பண்ணினார். (எபி 9:12)
7. இனி இரண்டாந்தரம்… தமக்காக காத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி தரிசனமாவார். (எபி 9:28)

Thanks to கே. விவேகானந்த்

இயேசு கிறிஸ்து பிறந்தார் ஏன்? எப்படி? எங்கு?

மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இப்பூமியில் பிறந்தவர்களே. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வித்தியாசமானது. ஆகவேதான் அவருடைய பிறப்பு உலகம் முழுவதும் நினைவு கூறப்படுகிறது. மத்தேயு 1:16

கிறிஸ்துவின் பிறப்பை குறித்து வேதம் கூறும் சத்தியம்.

  1. தாவீதின் சந்ததியில் பிறந்தார். (ரோமர் 1:5, 2 தீமோ 2:8)

    வாக்குத்தத்தங்களின் நிறைவேறுதலாய் பிறந்தார் (லூக் 1:69, 75)

    1. கன்னிகையின் குமாரனாய் பிறந்தார். (கலா 4:5)

    “ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும்” (கலா 4:5). ஸ்திரீயினிடத்திற்தான் பிள்ளைகள் பிறக்கிறார்கள் என்றாலும், இயேசு கிறிஸ்து கன்னிகையின் குமாரனாய் பிறந்தார் (ஏசா 7:14). அதாவது, அவர் பரிசுத்தமுள்ளவராய் பிறந்தார்.

    1. பாலகனாய் பிறந்தார். (ஏசா 9:6)

    தேவன் மனிதனானார். “பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்” எபி 2:14

    1. இயேசு என்ற நாமத்திலே பிறந்தார். (மத் 1:16)

    “அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (மத் 1:21).

    1. இரட்சகராக பிறந்தார். (லூக் 2:11)

     “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” (1 தீமோ 1:15). மனுகுலத்தை பாவத்திலிருந்து இரட்சிக்க சிலுவையில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்.

    1. இராஜாவாகப் பிறந்தார் (மத் 2:2)

    அவரை உள்ளத்தில் ஆண்டவரும் (ஆளுகை செய்கிறவர்) இரட்சகருமாக ஏற்றுக் கொள்கிறவர்களின் வாழ்வில் இராஜாவாய் வீற்றிருந்து பராமரித்து, பாதுகாத்து, வழிநடத்துவார்.

    1. மரித்தோரிலிருந்து முதற் “பிறந்தவர்” வெளி 1:5)

    மரித்தோரிலிருந்து முதற் “பிறந்தவர்” என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறித்து சொல்லப்படவில்லை என்றாலும், மரித்தவர்களின் நடுவிலிருந்து உயிரோடு எழுந்தவராய் இருக்கின்றார் என்பதை காட்டுகிறது. அவர் இன்றும் ஜீவிக்கின்றார். இனி இந்த பூமியை நியாயம் தீர்க்கவராக வரப்போகின்றார்

    அவர் பிறந்ததை நினைவு கூறும் சந்தர்ப்பத்தில் அவர் மரித்தார், அவர் உயிர்தெழுந்தார், அவர் மறுபடியும் வருவார் என்பதையும் நாம் நினைவு கூற வேண்டியது அவசியம்.

    இயேசு கிறிஸ்து “உங்களுக்காக பிறந்தார்” என்பதை மறக்க வேண்டாம் (லூக் 2:10,11).

    Thanks to – கே. விவேகானந்த்

    இந்தியாவில் உள்ள மாரடைப்பிற்கான காரணங்களும், தடுக்கும் வழிமுறைகளும்

    இந்தியாவில் பெரும்பாலான இறப்புகள் அதிக கொலஸ்ட்ரால் காரணமாக மாரடைப்பால் ஏற்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    உங்கள் சொந்த வீட்டில் எடை மற்றும் கொலஸ்ட்ரால் உள்ள பலரை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பல அமெரிக்க பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் இதய நோயாளிகளுக்கு கோடிக்கணக்கில் மருந்துகளை விற்கின்றன. ஆனால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யுமாறு மருத்துவர் கூறுவார்.

    இந்த அறுவை சிகிச்சையில், மருத்துவர் இதயக் குழாயில் ஸ்டென்ட் எனப்படும் ஸ்பிரிங் ஒன்றைச் செருகுகிறார். இந்த ஸ்டென்ட் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது மற்றும் தயாரிப்பதற்கு வெறும் $3 (ரூ. 150-180) ஆகும். இந்த ஸ்டென்ட் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு 3-5 லட்சத்திற்கு விற்று கொள்ளையடிக்கப்பட்டது. டாக்டர்கள் லட்சக்கணக்கில் கமிஷன் பெறுகிறார்கள் அதனால்தான் ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய திரும்பத் திரும்ப கேட்கிறார்கள். கொலஸ்ட்ரால், பிபி அல்லது மாரடைப்புக்கு ஆஞ்சியோபிளாஸ்டி ஆபரேஷன் ஒரு முக்கிய காரணம். யாரும் வெற்றி பெறுவதில்லை. ஏனென்றால் வசந்தம் என்பது மருத்துவர் இதயக் குழாயில் வைக்கும் பேனா போன்றது. சில மாதங்களுக்குள், அந்த கிணற்றின் இருபுறமும் அடைப்புகள் (கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு) சேர ஆரம்பிக்கின்றன.

    இதைத் தொடர்ந்து இரண்டாவது மாரடைப்பு ஏற்படுகிறது. மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய வேண்டும் என்கிறார் டாக்டர். உங்கள் லட்சக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது, உங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    இப்போது படியுங்கள் அதன் ஆயுர்வேத சிகிச்சை

    இஞ்சி சாறு –

    இது இரத்தத்தை மெல்லியதாக்குகிறது.
    இது இயற்கையாகவே வலியை 90% குறைக்கிறது.

    பூண்டு சாறு

    இதில் உள்ள அல்லிசின் கொலஸ்ட்ரால் மற்றும் பிபியை குறைக்கிறது.
    இது இதயத்தின் தடையை நீக்குகிறது.

    எலுமிச்சை சாறு

    இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஆகியவை ரத்தத்தை சுத்திகரிக்கும்.
    இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    ஆப்பிள் சாறு வினிகர்

    உடலில் உள்ள அனைத்து நரம்புகளையும் திறந்து, வயிற்றை சுத்தப்படுத்தி, சோர்வை நீக்கும் 90 வகையான பொருட்கள் இதில் உள்ளன.

    இந்த நாட்டுப்புற வைத்தியம் – இதை இப்படி பயன்படுத்துங்கள்

    1- ஒரு கப் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளுங்கள்;
    2- ஒரு கப் இஞ்சி சாறு எடுத்துக் கொள்ளுங்கள்;
    3- ஒரு கப் பூண்டு சாறு எடுத்துக் கொள்ளுங்கள்;
    4-ஒரு கப் ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்துக் கொள்ளுங்கள்;

    நான்கையும் கலந்து குறைந்த தீயில் சூடாக்கி, 3 கப் இருக்கும் போது, ​​ஆறவிடவும்;
    இப்போது நீங்கள் அதனுடன் 3 கப் தேன் சேர்க்கவும் இந்த மருந்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
    இரத்தத்தில் கலந்து புது இரத்தம் ஊற வழி வகுக்குகிறது.

    இச்செய்தியை இயன்றவரை பரப்புமாறு கூப்பிய கரங்களுடன் கேட்டுக்கொள்கிறேன், இதன் மூலம் அனைவரும் இம்மருந்து மூலம் குணமடையலாம்; நன்றி! இரவு 7:25 ஆகிறது, ஒருவர் தனியாக வீட்டிற்கு செல்கிறார். அத்தகைய சூழ்நிலையில், திடீரென்று உங்கள் மார்பில் ஒரு கூர்மையான வலியை உணர்கிறீர்கள், அது உங்கள் கைகளை கடந்து செல்கிறது.
    தாடைகளை அடைகிறது. நீங்கள் அருகிலுள்ள மருத்துவமனையிலிருந்து உங்கள் வீட்டிற்கு 5 மைல் தொலைவில் உள்ளீர்கள், துரதிர்ஷ்டவசமாக நீங்கள் அங்கு செல்ல முடியுமா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாது. அதை நீங்களே எவ்வாறு பயன்படுத்துவது என்று உங்களுக்குக் கற்பிக்கப்படவில்லை.

    மாரடைப்பை எவ்வாறு தவிர்ப்பது? – இந்த தீர்வுகள் தெரிந்து கொள்ளுங்கள். பெரும்பாலான மக்கள் மாரடைப்பின் போது தனியாக இருப்பதால், உதவியின்றி சுவாசிப்பது கடினம். அது அப்படியே நடக்கும். அவை சரிந்து 10 வினாடிகள் மட்டுமே நீடிக்கும்.

    அத்தகைய நிலையில், பாதிக்கப்பட்டவர் தீவிரமாக இருமல் மூலம் தன்னை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். ஒரு பெருமூச்சு ஒவ்வொரு இருமலையும் முதலில் எடுக்க வேண்டும். மற்றும் இருமல் மிகவும் வலுவானது மார்பிலிருந்து துப்பியது. உதவி வரும் வரை இரண்டு விநாடிகளுக்கு செயல்முறையை மீண்டும் செய்யவும் அதனால் துடிப்பு சாதாரணமானது இதை செய்வோம். நுரையீரலில் உரத்த சுவாசம் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது சத்தமாக இருமலும் ஒரு காரணம்
    அது இதயத்தை மூழ்கடிக்கச் செய்கிறது சீரான இரத்த ஓட்டம் ஓடு.

    தயவு செய்து இந்த செய்தியை முடிந்தவரை பலருக்கு பரப்புங்கள். ஒவ்வொருவரும் 10 பேருக்கு இந்த செய்தியை அனுப்பினால் ஒருவரின் உயிரை காப்பாற்ற முடியும் என்கின்றனர் இதயநோய் நிபுணர்கள்.

    ஜெபத்தில் எது இருக்க வேண்டும்? எது இருக்க கூடாதது? முக்கியமான குறிப்புகள்

    என் கைகளிலே கொடுமை இல்லாதிருக்கையிலும் என் ஜெபம் சுத்தமாயிருக்கையிலும் அப்படியாயிற்று. யோபு 16 : 17

    தேவன் ஜெபத்தைக் கேட்கிறவர். அநேகரது ஜெபம் கேட்கப்படவில்லை காரணம் ஜெபத்தில் இருக்க வேண்டிய விஷயங்கள் அறியாமல் இருப்பதால் ஜெபம் கேட்கபடவில்லை. இந்தக் குறிப்பில் ஜெபத்தில் இருக்க வேண்டிய விஷயங்களையும் ஜெபத்தில் இருக்கக்கூடாத விஷயங்களையும் நாம் இதில்அறிந்துக்கொள்வோம்.

    ஜெபத்தில் இருக்க வேண்டியவைகள்

    1 .பாவ அறிக்கை
    நெகே 1 : 4
    தானி 9 : 4 , 20

    2 . தாழ்மை
    2 நாளாக 7 : 14

    3 . பொருத்தனை
    சங் 50 : 14 , 15

    4 . தேவசித்தம்
    1 யோவா 5 : 14

    5 . இயேசுவின் நாமம்
    யோவா 14 : 14,
    யோவா 16 : 24

    6 . விசுவாசம்
    மாற்கு 11 : 24

    7 . தேவன் பலன் கொடுக்கிறார் என்ற நம்பிக்கையோடுள்ள விசுவாசம். எபி 11 : 6

    8 . ஸ்தோத்திரம்
    பிலி 4 : 6

    ஜெபத்தில் இருக்க கூடாதவைகள்

    1 . அவிசுவாசம்
    மாற்கு 9 : 22 , 23

    2 . இச்சைகளை நிறைவேற்ற ஜெபித்தல்
    யாக் 4 : 3

    3 . இருமனம், சந்தேகம் யாக் 1 : 6 , 7

    4 . சுயநலமாக கேட்காமல் தேவனுக்கென்று கேட்கவேண்டும்
    உதாரணமாகஅன்னாள் ஜெபம்
    1 சாமு 1 : 11

    5 . சோர்வு லூக் 18 : 1

    6 . பெருமை லூக் 18:11

    7 .வீண்வார்த்தைகள்
    யோபு 35 : 13
    மத் 6 : 79 , 9

    8 .மற்றவர்கள் குற்றத்தை மன்னிக்காத தன்மை மாற் 11 : 25

    இந்தக் குறிப்பில் ஜெபத்தில் இருக்க வேண்டியவைகளும் இருக்கக்கூடாதவைகளையும் குறித்து
    இதில் சிந்தித்தோம்

    ஆமென் !