• Saturday 6 September, 2025 10:53 PM
  • Advertize
  • Aarudhal FM

போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று ராணுவம் முக்கிய அறிவிப்பு

புதுடில்லி: இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு பிறகு, நடந்தது என்ன என்பது குறித்து இன்று (மே 11) ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். அப்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது.

கடந்த நான்கு நாட்களாக இந்தியா – பாகிஸ்தான் மோதல் உச்சத்தில் இருந்தது. போர் மேலும் தீவிரமடைய இருந்த நிலையில், நேற்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டன என மத்திய வெளியுறவு துறை செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார்.

ஆனாலும் நேற்றிரவு பல இடங்களில் வெடிகுண்டுகள் சத்தம் கேட்கிறது. இது என்ன போர் நிறுத்தம் என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பி இருந்தார். பல்வேறு இடங்களில் வானில் ட்ரோன்கள் பறந்தது. நமது பாதுகாப்பு படையினர் வானில் இடைமறித்து துல்லியமாக சுட்டு வீழ்த்தினர்.

போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி பெறுவதற்கு ராணுவத்தினருக்கு தகுந்த உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்திருந்தது. அதன்படி ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வந்தது. நள்ளிரவுக்கு மேல் மெல்ல மெல்ல இயல்பு நிலை துவங்கியது. காஷ்மீரில் பூஞ்ச், ஜம்மு, ரஜோரி, அக்னூரில் இயல்பு நிலை திரும்பியது.

தற்போது தான் ட்ரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல் ஏதும் நடக்கவில்லை. இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு பிறகு, நடந்தது என்ன என்பது குறித்து இன்று (மே 11) ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். அப்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது

இல்லாவிட்டால்

இல்லாவிட்டால்→

1) இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை – எபி 9:22

2) விசுவாசம் இல்லாமல் தேவனை பிரியப்படுத்த முடியாது – எபி 11:6

3) பரிசுத்தம் இல்லாமல் தேவனை தரிசிக்க முடியாது – எபி 12:14

4) கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்தது – யாக் 2:26

5) அன்பு இல்லாவிட்டால் நான் ஒன்றுமில்லை – 1 கொரி 13:2

6) சிட்சை இல்லாவிட்டால் பிள்ளைகள் இல்லை – எபி 12:8

7) என்னையல்லாமல் (இயேசு) உங்களால் ஒன்றும் செய்ய முடியாது – யோ 15:5

பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பபட்டவர்கள்

பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பபட்டவர்கள்

1) மோசே – எண்ணாகமம் 11:17,25
2) இஸ்ரவேலின் 70 மூப்பர் – எண் 11:25,26
3) பிலேயாம் – எண்ணாகமம் 24:2
4) ஒத்னியேல் – நியாயாதிபதி 3:9,10
5) கிதியோன் – நியாயாதிபதி 6:34
6) யெப்தா – நியாயாதி 11:29
7) சிம்சோன் – நியாயாதிபதி 14:6,19/15:14
8) சவுல் – 1 சாமுவேல் 10:10, 11:6, 19:23
9) தாவீது- 1 சாமுவேல் 16:13, 2 சாமு 23:1,2
10) சவுலின் சேவகர் – 1 சாமுவேல் 19:20
11) எலிசா – 2 இராஜா 2:9-15
12) அமாசாயி – 1 நாளாகமம் 12:18
13) அசரியா – 2 நாளாகமம் 15:1
14) சகரியா – 2 நாளாகமம் 24:20
15) யோசேப்பு – ஆதியாகமம் 41:38
16) காலேப் – எண்ணாகம் 14:2
17) யோசுவா – எண்ணாகமம் 27:18
18) ஆரோன் – சங்கீதம் 133:2,3 & லேவியராகமம் 21:12
19)தானியேல் – தானியேல் 5:11,12,
6:3, 4:8

கத்தியில் பறிபோன உயிர்… இன்று +2 தேர்வில் பாஸ்!

கத்தியில் பறிபோன உயிர்… இன்று +2 தேர்வில் பாஸ்! கொலை செய்யப்பட்ட இவரின் மார்க்தான் அனைவரின் மனதையும் கணக்க வைத்துள்ளது. கரூர் குளித்தலையில், தேர்வு எழுதிவிட்டு முடிவிற்காக காத்திருந்த ஷியாம் சுந்தர் மகா மாரியம்மன் கோயில் திருவிழாவில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், +2 தேர்வில் ஷியாம் 351 மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். இன்று மார்க்கை பார்த்த பெற்றோரும், நண்பர்களும் கண்ணீரில் மூழ்கி இருக்கின்றனர்.

தந்தை உயிரிழந்த சோகத்துடன் 12ம் வகுப்புதேர்வு எழுதிய மாணவன் – எவ்வளவு மார்க் தெரியுமா?

தந்தை உயிரிழந்த சோகத்துடன் தேர்வெழுதி அதில் தேர்ச்சியடைந்த மாணவனுக்கு பொது மக்கள் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சிவகங்கையில் தந்தை உயிரிழந்த சோகத்துடன் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பொது தேர்வெழுதிய நிலையில் 341 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்:

மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, தேர்வு எழுதிய 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகளில் பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். ஒட்டுமொத்தமாக அரசு பள்ளிகள் சதவிகிதமும், தனியார் பள்ளிகள் சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் பதிவான 94.56 தேர்ச்சி சதவிகிதத்தை காட்டிலும், நடப்பாண்டில் 0.49 சதவிகிதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. இந்நிலையில் சிவகங்கையில் தந்தை உயிரிழந்த சோகத்துடன் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பொது தேர்வெழுதிய நிலையில் 341 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டுநராக பணிபுரிந்த அப்பா

சிவகங்கை ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் செந்தில்வேலன் சிவகங்கை மன்னர் மேல் நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு உயிரி கணிதம் பயின்று வந்த நிலையில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொது தேர்வு துவங்கி நடைபெற்று முடிந்த நிலையில் செந்தில்வேலனும் அதற்கு தன்னை தயார் படுத்தி தேர்வெழுத காத்திருந்தபோது முதல் நாளான 3 ஆம் தேதி தமிழ் தேர்வெழுத காலையில் தயாரானபோது நிலையில் திடிரென செந்தில்வேலனின் தந்தை தர்மலிங்கம் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார்.

தந்தை இறுதிச்சடங்கில் பங்கேற்ற மாணவன்

இருந்தபோதிலும் அந்த துக்கத்தையும் மறந்து செந்தில்வேலன் தேர்வு மையம் சென்று தமிழ் தேர்வை எழுதியதுடன் தேர்வு முடிந்து வீட்டிற்கு திரும்பியதும் தந்தை தர்மலிங்கத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார். இன்று தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் செந்தில்வேலன் 341 மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றியடைந்துள்ளார். இதனை தனது தாயிடம் மாணவன் தெரிவித்த நிலையில் கனவரின் புகைப்படம் முன்பு கதறி அழுத தாய் அவருக்கு ஆறுதல் கூறியதுடன் மாணவனுக்கு ஆசீர்வாதம் செய்தார். மாணவன் செந்தில்வேலன் தனது தந்தையின் கனவான மருத்துவத்துறையில் சிறந்து விளங்குவதே தனது லட்சியமென சூளுரைத்தார். தந்தை உயிரிழந்த சோகத்துடன் தேர்வெழுதி அதில் தேர்ச்சியடைந்த மாணவனுக்கு பொது மக்கள் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று மரணம்… இன்று தேர்ச்சி… தேர்வு பயத்தில் தற்கொலை செய்த மாணவியின் மதிப்பெண்கள் 413

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் புண்ணியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஆர்த்திகா பாபநாசத்தில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதி இருந்தார். இன்று ரிசல்ட் வெளியான நிலையில் நேற்று மாணவி தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி வீட்டின் மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று ரிசல்ட் வெளியான நிலையில் மாணவி தேர்ச்சி பெற்றுள்ளார். அந்த மாணவி 600 மதிப்பெண்களுக்கு மொத்தம் 413 மார்க் எடுத்துள்ளார்.

அதன்படி தமிழ் பாடத்தில் 72 மதிப்பெண்களும், ஆங்கில பாடத்தில் 42 மதிப்பெண்களும், பிசிக்ஸ் பாடத்தில் 65 மதிப்பெண்களும், கெமிஸ்ட்ரியில் 78 மதிப்பெண்களும், பாட்டனியில் 70 மதிப்பெண்களும், ஸ்வாலஜியில் 80 மதிப்பெண்களும் எடுத்துள்ளார்.

மேலும் மாணவி அவசரப்பட்டு தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று அதிகமாக மார்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

TN 12th Result 2025: சாலை விபத்தில் உயிரிழந்த மாணவன் +2 தேர்வில் தேர்ச்சி.. சோகத்தில் குடும்பத்தினர்

வேடசந்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 12-ம் வகுப்பு மாணவன் பொது தேர்வில் 443 மதிப்பெண்கள் பெற்றார்.

தமிழகத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றன. பிளஸ் 2 தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள், 3316 தேர்வு மையங்களில் எழுதியிருந்தனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்கூட்டியே இன்றே வெளியாகியுள்ளன. தமிழகத்தில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 91.94 சதவீதமும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.71 சதவீதமும் தனியார் பள்ளிகளில் 98.88 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் +2 தேர்வு எழுதியவர்கள் 20,725அதில் மாணவர்கள் 9,716 பேர், மாணவிகள் 11,009. இத்தேர்வில் 19,668 பேர் தேர்ச்சி  பெற்றுள்ளனர். தேர்வு எழுதியதில் மொத்தம் 94.90% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களும், 92.70% பேரும், மாணவிகளும் 96.84% தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 94.90% தேர்ச்சி பெற்று தமிழக அளவில்  20வது திண்டுக்கல் மாவட்டம் இடத்தில் உள்ளது. 

இந்த நிலையில், திண்டுக்கல், வேடசந்தூர் அருகே உள்ள மல்வார்பட்டி ஊராட்சி ஒத்தையூரை சேர்ந்தவர்கள் பாலமுருகன் அமராவதி தம்பதி. பாலமுருகன் வேடசந்தூரில் கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ளார். அமராவதி வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சத்துணவு ஆர்கனைசராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சுகுமார் என்ற மகனும் சுபாஷினி என்ற மகளும் உள்ளனர். சுபாஷினி மாரம்பாடியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

சுகுமார்(18) திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் குரூப் படித்து பொதுதேர்வு எழுதி முடித்திருந்தார். இந்தநிலையில் கடந்த 6-ம் தேதி சுகுகுமார் இருசக்கர வாகனத்தில் வேடசந்தூர் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கி விட்டு ஊருக்கு திரும்பும் போது, தட்டாரப்பட்டி பிரிவு அருகே ஆட்டோ மோதி படுகாயம் அடைந்தார். அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் இருந்த சுகுமார் சிகிச்சை பலனின்றி கடந்த 21ஆம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் சுகுமார் 433 மதிப்பெண்கள் (74 சதவீதம்) பெற்றிருந்தார். சிறு வயது முதலே கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்ற கனவில் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், சாலை விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TN 12th Result 2025 Live : 95.03% பேர் தேர்ச்சி.. முதலிடத்தைப் பிடித்த அரியலூர்.. சாதித்து காட்டிய மாணவர்கள்!

TN Board 12th Result 2025 Live : தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9 மணிக்கு வெளியாகியது. மாணவர்கள் https://results.digilocker.gov.in/ மற்றும் https://tnresults.nic.in/ என்ற இணையதள முகவரிகள் மூலம் முடிவுகளை அறிந்துகொள்ளலாம். முடிவுகள் குறித்த உடனுகுடன் செய்தி இதில் நேரலையில் இந்த பதிவில் மூலம் வழங்கப்படுகிறது.

TN 12th Result 2025 at tnresults.nic.in : தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்களில் முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் முடிவுகளை https://tnresults.nic.in/https://results.digilocker.gov.in/ மற்றும் https://www.dge.tn.gov.in/ என்ற இணைய முகவரிகள் மூலம் ஆன்லைனில் அறிந்துகொள்ளலாம்.

இந்தாண்டு மாணவர்கள் – 3,47,670, மாணவியர்கள் – 4,05,472 என மொத்தம் 7,53,14 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டு மொத்தம் 95.03% தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு தேர்ச்சி 0.47% அதிகம் ஆகும். இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகள் 3.54 % அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு மதிப்பெண்கள் பட்டியல் வரும் மே 12-ம் முதல் விநியோகிக்கப்படும்.

வேதாகமும் அறிவியலும் 02 – மழை எப்படி பெய்கிறது?

அறிவியலுடன் வேதாகமத்தின் அரிய முத்துக்களை இணைத்து நோக்கும் இணையில்லா ஓர் தொகுப்பு இது..!

மேகங்கள் நிறைந்திருந்தால் பூமியின் மேல் புவியீர்ப்பு விசை மூலம் மழையாக பொழிகிறது என அறிவியல் சொல்வதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வேதாகாமத்தில் சொல்லப்பட்டுள்ளது

(பிரசங்கி :11:3)

மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின்மேல் பொழியும் (பிரசங்கி 11:3)

வேதாகமும், அறிவியலும்!! 01

நாம் விண்வெளியில் காணும் ஒவ்வொரு நட்சத்திரமும் வேறுபட்டது, அவைகள் தனித்துவமிக்கது என அறிவியல் இன்றளவும் சொல்லி வருகிறது. இதை நம் கைகளில் வைத்திருக்கும் பரிசுத்த வேதாகமத்தில் பல ஆண்டு முன்னதாகவே சொல்லப்பட்டிருக்கிறது

சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.(1 கொரிந்தியர் 15:41)