• Monday 8 September, 2025 10:23 AM
  • Advertize
  • Aarudhal FM

பல்லி கற்றுத் தரும் பாடம்

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவனித்தார்.வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 5 வருடம் ஆகி இருக்கும்.எப்படி இந்த பல்லி 5 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்காணித்து கொண்டு இருந்தார்.சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார்.அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் அடித்திருந்த மரத்தின் இடையே சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார்.அவருக்கு தூக்கி வாரிப்போடது 5 ஆண்டுகளாக இந்த பல்லி சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது. இது ஒரு அதிசயமான செயல் மட்டும் அல்ல எவ்வாறு மற்ற இனங்கள் தங்களின் இனத்தை அன்புடன் நடத்தி காப்பாற்றி வருகின்றன என்ற ஒருஉயர்த்த படிப்பினை.ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 5 ஆண்டுகள் உணவளித்துவந்துள்ளது. ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா.உனக்கு உயிர் அளித்து உன்னை 10 மாதம் சுமந்து உனக்கு தனது தொப்பிள் கொடிமூலம்உணவளித்து நீ பிறந்தவுடன் தன் உதிரத்தை பாலாக்கி உனக்கு அளித்து நீ வளர்ந்தவுடன் தான் பசியோடிருந்தாலும் உன் பசியை போக்கி உன் நம்மைக்காகவே பாடுபட்ட உன் தாய்க்கு அவர்கள் முடியாத காலக்கட்டத்தில் உணவளிக்க முடியாதா,உன் தந்தை கால் கை தளர்ந்து தன்னிலை இல்லாத பொழுது அவருக்கு ஆறுதலாக இருந்து உணவளிக்க முடியாதா உனது தாரம் (கணவன்) (இருபாலருக்கும் பொருந்தும்) ஊனமாயின் அவளுக்கு/அவருக்கு உன்னால் உணவளிக்க முடியாதா.மனிதராக பிறந்த நாம் மற்ற ஜீவராசிகளை விட உயர்ந்தவர்களாக கருதப்படுகிறோம். சிந்திப்போம் செயலில் இறங்குவோம் நம் முதியோர்களை அன்புடன் நடத்தி காப்போம்..மூதாதையர்கள் நன்றாக கவனிக்கப்பட்டால் அவர்களது ஆசீர்வாதம் அவர்கள்மறைந்த பின்னும் பல தலைமுறைகளுக்கு நன்மைகளை செய்யும்.அவர்கள் கவனிக்கப்படாமல் துன்பத்தோடு இருந்து மனம் வருந்தி மறைந்தால் அவர்களது தாபம் நம் தலைமுறையில் பல விதமான துன்பங்களைக் கொடுக்கும் . நாம் நம் தலைமுறைக்கு நன்மையையே விரும்புவதால் நல்ல முடிவை எடுத்து முதியோரைக் காப்போம்.

TCN Media

சென்னை YMCA மைதானத்தில் நண்பர்களுடன் மகிழ்ச்சியில் இருந்த இளைஞர் மரணம்

சென்னை YMCA மைதானத்தில் நண்பர்களுடன் மகிழ்ச்சியில் இருந்த இளைஞர் மரணம்

சென்னை நந்தனம் YMCA மைதானத்தில், இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர், சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்த, திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த கார்த்திக் எனத் தெரியவந்துள்ளது. கிரிக்கெட் போட்டியில் தனது நண்பர்கள் வெற்றி பெற்றதை, ஆரவாரத்துடன் கொண்டாடிய போது, திடீரென இந்த இளைஞர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். உடனடியாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

விழித்திடு சபையே விழித்தெழு!

விழித்திடு சபையே விழித்தெழு!

தேவாலயத்தில் ஆராதனையில் பாலரைத் தேடுகிறேன் காணவில்லை!

அந்தநாள் குழந்தைகள் இல்லாத தொழுகை கண்டதில்லை இன்றோ முதியோருக்காய் ஆராதனைகள்!

இறையருளால் பெற்ற மகவு இன்நாளில் ஆண்டவனைவிட்டு
தூரமாய்!

ஆராதனை ஒழுங்றியாமல் பிள்ளையை வளர்த்தால் நாளை ஆலய கூடுகை அழிந்துபோகும்!

திரும்பிப் பாருங்கள் பெற்றவரே ஏதும் புரியாவிட்டால் தாத்தா பாட்டியை கேழுங்கள்!

வீட்டின் செல்வங்கள் ஆலயம் செல்வது கட்டாயம் பாலருக்கென தனியிடம்!

பாலர் பாடலுண்டு ஜெபம் கதையென்று தனியாய் ஓர் ஒழுங்கு கண்ணிக்க மூப்பர்!

முழங்காலிட வேண்டும் வாய்திறந்து பாடவேண்டும் வசனத்தை சத்தமாய் வாசித்தல் முக்கியம்!

ஆராதனைக்கே முதலிடம் அதில் கற்கும் ஞானப்பாட்டு கீர்த்தனையே வாழ்வில் நிரந்தரம்!

ஆலய ஆராதனை நடைமுறைகளைக் கல்லாது எதைக் கற்றும் பயனில்லை அவை கானல் நீரே!

ஓய்வுநாள் பாடசாலை தேவை ஆராதனையில் கலந்து கொள்ளாமல் வெறும் ஓய்வுநாள் பள்ளிப்படிப்பு உதவிடுமா?

ஆராதனை வேளையிலே மறு பக்கம் ஓய்வுநாள் வகுப்பு பிள்ளைகளை கூட்டிச் செல்ல படியெங்கும் கூடி திண்ணைப் பேச்சு!

குழந்தைகளை ஆலயம் அழைத்து வருதல் பெற்றோரின் கடமை பரிசுத்த ஓய்வுநாளை பரிசுத்த குலைச்சலாககின் மடமை!

பலகாலமாய் சொல்ல நினைத்து சொல்லாமல் இருந்ததை சொல் என்றது ஓர் அழகு குழந்தை!

கஸ்பாசபையின் இருநூற்றி ஆறாவது ஆண்டு நிறைவு நாள்
ஆராதனையில் பாடல்குழுவோடு அங்கத்தினர் பாட!

ஏடறியா எழுத்தறியா பாட்டறியா பொருளறியா சின்னஞ்சிறிய பிஞ்சிக் குழந்தையொன்று!

ஞானப்பாட்டு கீர்த்தனை புத்தகத்தை தலைகீழாய் திறந்து வைத்து ஏதோ பாடியது கண்டிப்பாய் இறைவன் கேட்டிருப்பார்!

அத்தனை சபை அங்கத்தினரும் குழந்தைகளை ஆராதனைக்கு அழைத்து வந்தால் தவளலாய் தத்தி நடத்தலாய் கற்கும் யாவும்!

பிள்ளைகளை ஆலய ஆராதனைக்கு அழைத்துவரத் தவறினால் சிறுவர் சிறுமியரின் ஆன்மீக அறிவை பறிக்கும் அநீதியை செய்கிறோம்!

போதகர்கள் மூப்பர்கள் பெற்றோர் இதை உணரின் எதிர்காலம் அன்பால் கட்டப்படும்!

வாழ்த்துக்களுடன்

டி.ஜி.வி.பி.சேகர்
முன்னாள் நிர்வாகக்குழு உறுப்பினர்
கன்னியாகுமரி சி.எஸ்.ஐ.பேராயம்

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று முதல்

12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு தொடக்கம்12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு (Lab Test) இன்று தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று முதல் 14ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், வரும் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் செய்முறைத் தேர்வு நடக்கவுள்ளது. இதில் அனைத்து மாணவர்களுக்குக் கட்டாயம் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. All the Best Students

மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 வரையிலான காலங்களில் மருத்துவம் / மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் மற்றும் 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையினை மாணாக்கர்களிடமிருந்து வசூலிக்க இயலாததன் காரணமாகவும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும் மற்றும் வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும், ரூ.48,95,00,000/-ஐ (ரூபாய் நாற்பத்தெட்டு கோடியே தொண்ணூற்று ஐந்து லட்சம்) சிறப்பினமாகக் கருதி முழுவதும் தள்ளுபடி செய்து அரசு ஆணையிடுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவிக்குரிய வாழ்வில் விழ வைக்கும் காரியங்கள்

தேவ பிள்ளைகளை விழ வைக்கும் சில காரியங்கள்:


1) அலப்புகிற வாய் விழ வைக்கும் – நீதி. 10:8.

2) புரட்டு நாவு விழ வைக்கும் – நீதி. 17:20.

3) இடும்பு உள்ளவன் விழுவான் – எரே. 50:32.

4) அக்கிரமம் செய்கிறவன் விழுவான் – ஒசி. 5:5.

5) இரு வழியில் நடக்கிறவன் விழுவான் – நீதி. 28:18.

6) இருதயத்தை கடினப்படுத்துகிறவன் விழுவான் – நீதி. 28:14.

7) பொல்லாத வழியில் நடக்கிறவன் விழுவான் – நீதி. 28:10.

8) மனமேட்டிமை விழ வைக்கும் – நீதி. 16:18.

9) தன் ஐஸ்வர்யத்தை நம்புகிறவன் விழுவான் – நீதி. 11:28.
==================

குடியரசு தினம் குறித்த முக்கிய வரலாறு

இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) இந்திய ஆட்சிக்கான ஆவணமாக, இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றமாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும். இந்தியாவின் முக்கிய தேசிய விடுமுறை நாட்களில் இதுவும் ஒன்று

வரலாறு

குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் (குதிரை வண்டியில்) முதல் குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்ள தயாராகிறார்.ராஜ்பத், புது தில்லி, 1950.1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர சனவரி 26ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

  1. பொருளாதாரம்,
  2. அரசியல்,
  3. கலாச்சாரம்,
  4. ஆன்மீகம்

ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்.

“12ஆம் நாள் டிசம்பர் மாதம் 1946 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார் அந்த குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4ஆம் நாள் அரசியமைப்பு சட்டவாக்கயவையில் சமர்ப்பித்தது.2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் எழுதி முடிக்கப்பட்டது.

பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.

அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில் சனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.

1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

கொண்டாடும் முறை

தேசியத் தலைநகரில்

  1. நாட்டின் தலைநகர் தில்லியில் இந்தியப் பிரதமர், மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடுகிறார்.
  2. தலைநகர் தில்லியில் குடியரசு நாள் அன்று குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும்.
  3. கடந்த ஆண்டில் நாட்டுக்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படுகின்றன.

மாநிலத் தலைநகரங்களில்

  1. மாநிலங்களில் மாநில ஆளுநர் கொடியேற்றுவதுடன் காவலர் அணிவகுப்பையும், அரசுத்துறை மிதவைகளையும், பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் பார்வையிடுகிறார்.
  2. சிறந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

குடியரசு நாள் கொண்டாட்டங்கள்

ஒளியூட்டப்பட்ட ராஷ்டிரபதி பவன்

ஒளியூட்டப்பட்ட ராஷ்டிரபதி பவன். மூவண்ணங்களுடனான ஊதுபைகளைக் காணலாம்.

சிறப்பு விருந்தினர்

குடியரசு நாள் அணிவகுப்பிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட நாடுகள். இரண்டு முறை அழைக்கப்பட்ட முந்தைய யுகோசுலாவியா இந்த நிலப்படத்தில் காட்டப்படவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாளன்று சிறப்பு விருந்தினர் ஒருவர் அழைக்கப்படுவார்.

தேசத்திற்காக ஜெபிக்க

  1. தேவன் தந்த இந்திய தேசத்தை நினைத்து கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்
  2. தேசத்தை வழிநடத்தி செல்கிற தேச தலைவர்களுக்காக ஜெபிப்போம்
  3. தேசத்தில் உள்ள பாவம் சாபம் வியாதி அக்கிரமங்கள் மாற, அடிமைத்தனங்கள் மாற மூடநம்பிக்கைகள் மாற ஊக்கமாய் ஜெபிப்போம்
  4. தேசத்தில் சமாதானம், ஒற்றுமையும், ஆசிர்வாதமும் செழிப்பும் உண்டாகும் படியாக பாரத்தோடு ஜெபிப்போம்

76 வது இந்திய குடியரசு தின நல்வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறோம்

தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் ஊடகம்

இந்தியா கொண்டாடும் 76வது குடியரசு தினம்

இந்தியா தனது 76வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2025 அன்று கொண்டாடும், இது 1950 ஆம் ஆண்டின் முதல் குடியரசு தினத்திலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும்

இந்த ஆண்டு கொண்டாட்டம் ‘ஸ்வர்னிம் பாரத்: விராசத் அவுர் விகாஸ்’ (தங்க இந்தியா: பாரம்பரியம் மற்றும் முன்னேற்றம்) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும், இந்திய அரசாங்கம் இந்த நிகழ்விற்காக ஒரு குறிப்பிட்ட கருப்பொருளைத் தேர்ந்தெடுக்கிறது, மேலும் இந்த ஆண்டு தீம் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் அதன் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியின் பயணத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

2025 ஆம் ஆண்டு குடியரசு தினத்திற்காக, ஆந்திரப் பிரதேசம், பீகார், சண்டிகர், கோவா, குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து டேபிள்யூக்கள் கர்தவ்ய பாதை அணிவகுப்பில் இடம்பெறும். மேலும், 11 மத்திய அரசின் குழுக்கள் இந்த மாபெரும் நிகழ்வில் பங்கேற்கின்றன.  

ஜனவரி 26, 2025 அன்று நடைபெறும் குடியரசு தின விழாவிற்கு இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தலைமை விருந்தினராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவசர ஜெப விண்ணப்பம்

உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த போதகர்.ஜோஸ் பாப்பச்சன் மற்றும் அவரது மனைவி ஷீஜா ஜோஸ் ஆகியோருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும், ஒவ்வொரு மதமாற்ற முயற்சிக்கும் தலா ரூ.25,000/- அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்பதையும் மிகுந்த பாரத்துடன் தெரிவிக்க விரும்புகிறோம்.முன்னதாக, 24/01/2023 அன்று கைது செய்யப்பட்டிருந்த அவர்கள், 8 மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். ஏறக்குறைய 30 வழக்கு விசாரணைகளுக்குப்பிறகு, மாண்புமிகு நீதிமன்றத்தால் தற்போது தண்டிக்கப்பட்ட நிலையில், 18/01/25 அன்று, போதகர்.ஜோஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், சகோதரி ஷீஜா மட்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தயவு செய்து சபையாய் தொடர்ந்து அவர்களுக்காக உபவாசம் இருந்து, தேவன் ஒரு அதிசயத்தைச் செய்யவும், முன்பு போல ஒரு வரலாற்றுத் தீர்ப்பு அவர்களுக்கு ஆதரவாக வழங்கப்படவும் ஜெபிப்போம். போதகர் ஜோஸுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் உள்ள நிலையில், கர்த்தர் தாமே அவர்களை சரீர அளவிலும் உள்ளத்திலும் பலப்படுத்தவும், அவர்கள் மூலம் தேவனுடைய நாமம் மகிமைப்படவும் ஜெபிப்போம்.

IAS மற்றும் IPS உள்ளிட்ட உயர் பணியில் சேர அழைப்பு

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 24 வகையான குடிமை பணிகளின் 979 பணியிடங்களுக்கு ஒன்றிய அரசின் மத்திய பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இன்று முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.பெண்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு (SC/ ST) விண்ணப்ப கட்டணம் இல்லை என்றும் மற்றவர்கள் ரூ. 100/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.21 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.கல்வித் தகுதி ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.முதல் நிலை தேர்வு வருகிற மே 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இது பற்றிய மேலும் விவரங்களை,https;//upsc.gov.in/sites/default/files/NOTIF-CSP-2025-Engl-220125-pdf என்ற முகவரியில் இணையத்தில் அறிந்து கொள்ளலாம்.தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிக அளவில் விண்ணப்பித்து நன்கு படித்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்.அன்புடன்,(மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி) முழுநேர உறுப்பினர்,மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம்,தமிழ்நாடு.