• Thursday 3 July, 2025 06:27 PM
  • Advertize
  • Aarudhal FM

திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரண வழக்கை இப்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனப் பல்வேறு எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தினர். இதற்கிடையே அஜித் குமார் மரண வழக்கு சிபிஐக்கு மாற்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

சிவகங்கை மாவட்டத்தில் வழக்கு ஒன்றில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் உயிரிழந்தார். போலீசார் தாக்குதலே அவரது மரணத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இந்த வழக்கு ஏற்கனவே சிபிஐசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையே திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரண வழக்கு சிபிஐக்கு மாற்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், விசாரணைக்குத் தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்இது தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், கடந்த 28-6-2025 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவர், திருப்புவனம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் வேதனையடைந்தேன்.இது யாராலும் நியாயப்படுத்தப்பட முடியாத, காரணம் சொல்லித் தப்பிக்க முடியாத செயல். இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாகச் சம்பவம் நடந்த அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இத்தகைய வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகளின்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு அரசு நடவடிக்கைநேற்றைய தினம் , 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கும் மாற்றப்பட்டது. இன்று சம்பந்தப்பட்ட மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். துணைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்படி சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து எத்துக்கப்பட்டு வருகிறது.துயர மரணத்தை அடைந்துள்ள அஜித்குமார் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு நான் பேசினேன். நடைபெற்ற துயரச் சம்பவத்திற்கு எனது வருத்தத்தை அவர்களிடம் தெரிவித்தேன். நியாயமான, ஒளிவுமறைவற்ற, எவ்விதப் பாரபட்சமுமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அஜித்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளேன்.சிபிஐக்கு மாற்றம்சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இவ்வழக்கில் சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் காவல் துறையைச் சேர்ந்த ஐவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிடுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பைத் தமிழ்நாடு அரசு வழங்கும்.