• Friday 5 September, 2025 06:45 AM
  • Advertize
  • Aarudhal FM

தேவன் பயன்படுத்திய முதியவர்கள்

வேதாகமத்தில் தேவன் பயன்படுத்திய முதியவர்கள்

1) தேவன் நோவாவை காப்பாற்றிய போது வயது 600. நீதிமானாக இருந்த நோவாவை நீரில் மூழ்காமல் இருக்கும் கப்பல் கட்டும் பொறியாளனாக தேவன் பயன்படுத்தினார்.

2) தேவன் ஆபிரகாமை கானான் தேசம் அழைத்த போது வயது 75. விக்கிரக ஊரில் கணவனாக இருந்தவனை #கானான் அழைத்து விசுவாச தகப்பன் ஆக்கினார்.

3) தேவன் இஸ்ரவேலரை விடுதலையாக்க மோசேயை அழைத்த போது வயது 80. ஆடு மேய்த்தவனை இருபது லட்சம் மனிதர்களை மேய்க்கும் தலைவன் ஆக்கினார்.

4) தேவன் காலேப்பை நிலத்தினால் ஆசீர்வதித்த போது 85 வயது. 40 வருஷம் கால்நடையாக நடந்தவனுக்கு மலைதேசம் கொடுத்து கானானின் குடிமகனாக்கினார்.

5) அன்னாள் 84 வயதானபோது கைம்பெண்ணாக இருந்தவளை தீர்க்கதரிசி ஆக்கினார்.

6) சகரியா – எலிசபெத் வயதான பின்பும் குழந்தை இல்லாமல் இருந்தார்கள். பிள்ளை இல்லாதவர்களுக்கு நல்ல குழந்தையை கொடுத்தார்.

முதியவர்களையும் தனது பணிக்கு பயன்படுத்தியவர் தான் நம் தேவன்.

விசுவாசித்தை அறிக்கை செய்தவர்கள்

விசுவாசித்தை அறிக்கை செய்தவர்கள்

1) ஆபிரகாம் (கர்த்தர் பார்த்து கொள்வார்) – ஆதி 22:8

2) தரியு ராஜா (நீ இடைவிடாமல் ஆராதிக்கிற தேவன் உன்னை தப்புவிப்பார்) – தானி 6:16

3) சாதுராக், மேஷாக், ஆபேத்நேகோ (எங்கள் தேவன் எங்களை தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்) – தானி 3:17

4) தாவீது (கர்த்தர் இந்த பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார்) – 1 சாமு 17:37

5) பவுல் (தப்புவித்தார், தபபுவிக்கிறவர், தப்புவிப்பார்) – 2 கொரி 1:10

6) 100 க்கு அதிபதி – ஒரு வார்த்தை சொல்லும் என் வேலைக்காரன் பிழைப்பான் – லூக் 7:7

நாமும் நமது துயர நேரத்தில் நமது விசுவாசத்தை அறிக்கை செய்வோம்

வேதத்தில் என்னென்ன மாடுகள் இருக்கிறது தெரியுமா?

வேதத்தில் உள்ள மாடுகள்

1) அடிக்கபடும்படி செல்லும் மாடு (நீதி 7:22) = தேவ ஜனங்கள் அடிக்கபடுகிற மாடு போல காணப்பட வேண்டும். இது பாடுகளின் பாதையை காட்டுகிறது. கசாப்பு கடைக்கு செல்லும் மாடுகள் கூட்டம் கூட்டமாக அழைத்து செல்லபடும். இயேசு சென்ற பாதை இது (அப் 8:32). தம்முடைய அடிச்சுவடியை தொடர்ந்து வரும் படி மாதிரியை வைத்து போனார்( 1 பேது 2:21) தேவ ஐனமே எனக்கு ஏன் பாடுகள் என்று நினனக்காதே. அநேக உபத்திரவங்களின் வழியாக தேவ ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும் (அப் 14:22)

2) புல்லை தின்னும் மாடு (ஏசா 1:3) = மாடுகள் வழியில் புல்லை வேகமாக உண்டு செல்லும். மாலையில் புல்லை வாய்க்கு கொண்டு வந்து அசை போடும். அது போல தேவ பிள்ளைகள் சபையில் கேட்ட சத்தியங்களை வீட்டிற்கு சென்று தியானிக்க வேண்டும். இரவும் பகலும் தியானமாய் இருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங் 1:2) அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் சங் 1:3)

3) எருது பலமுள்ளது (சங் 144:14) = வசனத்தை தியானிக்க தியானிக்க பெலன் அடைகிறோம். சீயோனில் தேவ சந்ததியில் காணப்பட பெலன் தேவை (சங் 84:7)

4) நிலத்தை உழுகிற எருது (ஏசா 30:24) = இது தேவ சித்தத்தை காட்டுகிறது.

5) சர்வாங்க தகனபலியான மாடு (எண்ணாக 7-35) = நாமும் நமது அவயங்களை தேவனுக்கு ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும் – ரோ 12:1

6) மேய்ப்பனை குறித்து அறிந்த மாடு (ஏசா 1:3) = மாட்டுக்கு தன் மேய்ப்பனை குறித்து நல்ல அறிவு உண்டு. கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார். நான் தாழ்ச்சி அடையேன் (சங் 23:1) என்ற அறிவு ஒவ்வொரு தேவ பிள்ளைகளுக்கு வேண்டும்.

7) மாடுகள் நல்ல மேய்ச்சல் உள்ள இடத்தில் மேயும் (ஏசா 30:23) = அது போல நாமும் சத்தியத்தை போதிக்கிற சபையை தேடி செல்ல வேண்டும். கடமைக்கு (Sunday) சபைக்கு செல்ல கூடாது. சத்தியத்தை கேட்டு ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர வேண்டும்

8) ஒய்வு நாளில் வேலை செய்யாத மாடுகள் (யாத் 23:12) = தேவபிள்ளைகள் ஒய்வு நாளில் சொந்த பேச்சை கூட பேசக்கூடாது (ஏசா 58:13). ஏனென்றால் ஒய்வு நாள் கர்த்தருக்குரியது. Seventh day Adventist கார்ர்கள் ஓய்வு நாளுக்கான சாப்பாட்டை ஒரு நாள் முன்னாடியே (புளியோதரை, லெமன்) ஆயத்தம் செய்து விடுவார்கள். ஒய்வு நாள் அன்று வீட்டில் சமையல் கூட செய்ய மாட்டார்கள். அதுமட்டுமல்ல சில கிறிஸ்தவ குடும்பங்களில் Sunday பிளளைகளை படிக்ககூட அனுமதிக்க மாட்டார்கள். பரிசுத்த ஒய்வு நாளில் உங்கள் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற முற்படாதிருங்கள். ஒய்வு நாளில் திருமண நிகழ்ச்சிக்கு செல்லுதல், நண்பர்கள் வீடுகளுக்கு செல்லுதல், களியாட்டுகளில் ஈடுபடுதல் போன்றவற்றை தவிர்க்கவும். இந்த நாளை கர்த்தருக்கென்று பிரித்து வைத்து கர்த்தருக்குள் மகிழ்ந்து இருங்கள்
ஒய்வு நாளை கனப்படுத்தினால் நாம் ஆசிர்வதிக்கபடுவோம் (ஏசா 53:14) ஒய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாயாக (யாத் 20:8)

9) நுகத்தை சுமக்கும் மாடு (மத் 11:29) = இது தாழ்மையான ஜிவியத்தை காட்டுகிறது. இயேசுவும் மாட்டை போல ஜிவித்து இருக்கிறார் (என் நுகத்தை ஏற்றுக் கொண்டு – மத் 11:29)

10) மாடுகள் கூட்டம் கூட்டமாக செல்லும் = இது பரிசுத்தவான்களின் ஐக்கியத்தை காட்டுகிறது. சகல பரிசுத்தவான்களோடு கூட கிறிஸ்துவின் அன்பை அறிய வேண்டும் (எபேசி 3:18). வேத வாசிப்பு, ஜெபம், பரிசுத்தவான்களின் ஐக்கியம் ஆகிய இந்த மூன்றும் நமக்கு சந்தோஷத்தை தருகிறது.

11) களஞ்சியங்களை நிரப்பும் எருது (நீதி 14:4) = சபை ஆத்துமாக்களால் நிரப்பபட வேண்டும். ஜனங்கள் இரட்சிக்கபட நாம் அவர்களுக்கு சுவிஷேம் சொல்ல வேண்டும், அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.

கர்த்தர் நம் ஜெபத்தைக் கேட்கிறவர்.


(சங்கீதம்21:2)
அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்கு தந்தருளி,அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தை தள்ளாதிருக்கிறீர்.

கர்த்தர் நம் பிள்ளைகளுக்காக ஜெபிக்கும் ஜெபத்தை கேட்கிறார்.

ஆபிரகாம் – கர்த்தர்

(ஆதியாகமம்17:20(18-20)
இஸ்மவேலுக்காகவும் நீ செய்த “விண்ணப்பத்தைக் கேட்டேன்”; நான் அவனை ஆசீர்வதித்து,அவனை மிகவும் அதிகமாக பலுகவும் பெருகவும் பண்ணுவேன்.
அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான்.
அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்.

ஆபிரகாமிடம் கர்த்தர் எதிர்பார்த்த குணங்கள் இல்லாமல் இருந்தது.
1)ஆபிரகாம் கர்த்தர் சொன்னதை நிறைவேற்றும் வரை காத்திருக்கவில்லை.

கர்த்தர் சொன்னதை நிறைவேற்றுகிறவர்.
(ஆதியாகமம்28:15)
நான் உனக்குச் சொன்னதை செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை.


2)கர்த்தருடைய வார்த்தையைவிட மனைவியின் வார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தான்.
(1சாமுவேல்2:29)
நீ என்னைப் பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன்.

3)உனக்கு ஒரு மகன் பிறந்துவிட்டான் என்பதற்காக என்னை மறந்து விட்டாயோ?பதின்மூன்று வருடமாக என்னைத் தேடவில்லையே?ஒரு குழந்தைக்காகத்தான் என்னை நம்பினாயா?
கர்த்தர் சொல்லுகிறார்:-
நீ என்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை(ஏசாயா 49:15)
உன்னை அழைத்தது நான் அல்லவா?(மத்தேயு7:11)
++++++++++++++++++++
நாம் தவறு செய்துவிட்டால் கர்த்தர் நம்மிடம் பாராமுகமாய் இருந்துவிடுவதில்லை,திரும்பவும் நம்மைத் தேடிவருகிறார்.
நம் விண்ணப்பத்தைக் கேட்கிறார். அரைகுறை மனதோடு அல்ல,ஏதோ,நீ கேட்டுவிட்டாய் என்பதற்காக அவனையும் ஆசீர்வதிக்கிறேன் என்று சொல்லவில்லை; முழுமனதோடு கேட்கிறார்,செய்கிறார்.

கர்த்தருக்கு நம் சூழ்நிலை தெரியும்,எந்த நிலையி்ல் தவறு செய்தோம் என்று கர்த்தர் அறிவார்.
(சங்கீதம் 103:14)
நாம் மண்ணென்று நினைவு கூறுகிறார்.
ஆகவேதான்,ஆபிரகாமை மறுபடியும் தேடி வந்தார்,அவன் விண்ணப்பத்தைக் கேட்டார்,இஸ்மவேலை ஆசீர்வதித்தார்,இஸ்மவேலின் வம்சத்தார் இன்றுவரை ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.
(எண்ணாகமம் 23:19)
பொய்சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல;மனம்மாற அவர் மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?

கர்த்தர் நம் பிள்ளைகளுக்காக ஏறெடுக்கும் விண்ணப்பங்களை நிச்சயமாக கேட்பார்,நம்முடைய எதிர்பார்ப்புக்கும் மேலாய் ஆசீர்வதிப்பார்.

GOD BLESS YOU.

போதகர் N.இக்னேஷியஸ் உலகநாதன்.
9841517622
மதுரவாயல்,சென்னை-95.

பெண்கள் பெறக்கூடாத சில பெயர்கள்

1) சண்டைக்காரி – நீதி 21:19
2) கோபக்காரி – நீதி 21:19
3) வாயாடி – நீதி 7:11
4) அடங்காதவள் – நீதி 7:11
5) இலச்சை உண்டு பண்ணுகிறவள் – நீதி 12:4
6) வீட்டை இடித்து போடுகிறவள் – நீதி 14:1
7) எலும்புருக்கி – நீதி 12:4
8) அகங்காரி – நீதி 15:25
9) சாவிலும் அதிகம் கசப்பு உள்ளவள் – பிரச 7:26

இவற்றையெல்லாம் அனுபவி

1) பாடுகளை – 2 தீமோ 1:12
2) தீங்குகளை – 2 தீமோ4:5
3) உபத்திரவத்தை – எபி 11:37
4) துன்பத்தை – எபி 11:25
5) நிந்தைகளை – எபி 11:36
6) தீமைகளை – லூக் 16:25
7) வருத்தங்களை – யோபு 5:7

நாளுக்குநாள் முன்னேறுங்கள்

1.நாளுக்குநாள் வளருங்கள்

2 சாமுவேல் 5:10; 1நாளாகமம் 11:9
[10]தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.
ஆதியாகமம் 26:12,13 ஈசாக்கு
ஆதியாகமம் 30:43 யாக்கோபு
லூக்கா 2:52 இயேசு கிறிஸ்து

2.நாளுக்குநாள் பெருகுங்கள்

அப்போஸ்தலர் 16:5
[5]சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின.
அப்போஸ்தலர் 6:7 சீஷருடைய தொகை பெருகிற்று
அப்போஸ்தலர் 12:24 வசனம் பெருகிற்று
1தீமோத்தேயு 1:14; ரோமர் 5:20 கிருபை பெருகிற்று

3.நாளுக்குநாள் புதிதாகுங்கள்

2 கொரிந்தியர் 4:16
[16]ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
ரோமர் 12:2 மனம் புதிதாகுதல்
எசேக்கியேல்36:26 ஆவி புதிதாகுதல்
2கொரிந்தியர் 5:17 புது சிருஷ்டி
எபேசியர் 4:23 புதிதான ஆவி
கொலோசெயர் 3:10 புதிய மனுஷன்

4.நாளுக்குநாள் அறிவியுங்கள்

சங்கீதம் 96:2; 1நாளாகமம் 16:23
[2]கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.
ஏசாயா 12:4 செய்கைகளை அறிவியுங்கள்

ரோமர் 15:21 சொல்லப்பட்டிராத இடங்களில் அறிவியுங்கள்

தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
🍇🍋🍇🍊🍇🍐🍇

நமக்காக கர்த்தர் இருக்கிறார்

1. தேற்றுவதற்கு கர்த்தர் இருக்கிறார்

பிரசங்கி 4:1; புலம்பல் 1:2,9,17,21
ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை.
ஏசாயா 66:13
தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்.
சங்கீதம் 94:19 உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது

2. விசாரிப்பதற்கு கர்த்தர் இருக்கிறார்

சங்கீதம் 142:4; எசேக்கியேல் 34:6
விசாரிப்பார் ஒருவருமில்லை
1பேதுரு 5:7
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலை களையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். சங்கீதம் 68:5

3. பரிதபிப்பதற்கு கர்த்தர் இருக்கிறார்

சங்கீதம் 69:20
பரிதபிக்கிறவன் ஒருவனும் இல்லை
சங்கீதம் 135:14; உபாகமம் 32:26
ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார். மத்தேயு 15:32
இயேசு: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன் (5 அப்பம் 2 மீன்)

4. நன்மைசெய்வதற்கு கர்த்தர் இருக்கிறார்

சங்கீதம் 14:3; சங்கீதம் 53:1; ரோமர் 3:12
நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
அப்போஸ்தலர் 10:38
நன்மைசெய்கிறவராய் சுற்றித்திரிந்தார்
லூக்கா 6:35
அவர் நன்றியறியாதவர்களுக்கும் நன்மை செய்கிறாரே

5. பரிந்துபேசுவதற்கு கர்த்தர் இருக்கிறார்

எசேக்கியேல் 22:30
தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும்… ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்.
1யோவான் 2:1
இயேசுகிறிஸ்து நமக்காக பிதாவினிடத்தில் பரிந்துபேசு…
லூக்கா 23:34
இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும்.

6. துணை செய்வதற்கு கர்த்தர் இருக்கிறார்

ஏசாயா 63:5
துணை செய்வார் ஒருவனும் இல்லை;
ஏசாயா 50:7,9
கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்
சங்கீதம் 46:1
ஆபத்துகாலத்தில் அனுகூலமான துணையுமானவர்
சங்கீதம் 70:5; 115:10-11; 2தீமோத்தேயு 4:17; ஏசாயா 41:13-14

7. விண்ணப்பம்பண்ணுவதற்கு கர்த்தர் இருக்கிறார்

ஏசாயா 59:16
ஒருவனும் விண்ணப்பம்பண்ணுகிறவன் இல்லை
ரோமர் 8:34
நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே
யோவான் 17:1,9,15,20இயேசுகிறிஸ்து நமக்காக விண்ணப்பம்பண்ணுகிறார்

ஆவியினாலே

நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும் எபே 3: 16

1 . ஆவியினாலே ஆராதனை செய்யுங்கள். பிலி 3 : 3, எபே 5 : 18 — 21, 6: 18, 1 கொரி 14 : 14 – 16, யூதா 1 : 20

2 . ஆவியினாலே சத்தியத்திற்கு கீழ்படியுங்கள் 1 பேது 1 : 22

3 . ஆவியினாலே சரீரத்தின் கிரியை அழியுங்கள் ரோமர் 8 : 13

4 . ஆவியினாலே உள்ளான மனுஷரில் பலப்படுங்கள் எபே 3 : 16.

5 . ஆவியினாலே அனலாயிருங்கள் ரோம 12 : 11, அப் 18 : 5

6 . ஆவியினாலே நிருணயம் பண்ணுங்கள் அப் 19:21

7 . ஆவியினாலே நடத்தப்படுங்கள் ரோம 8 : 14

8 . ஆவியினாலே காத்துகொள்ளுங்கள். 2 தீமோ 1 : 14, 1 யோவா 3 : 24

9 . ஆவியினால் வைராக்கியமாயிருங்கள். அப் 17 : 16 , 18 : 5

10 ஆவியினாலே பிரசங்கியுங்கள் 1 பேது 1 : 12, 2 பேது 1 : 21, அப். 4 : 1 , 31, 6 : 5, அப் 13 : 9

வேதத்தில் காற்றின் பெயர்கள்

  1. கீழ்காற்று – யாத் – 10:13 ; யோபு – 38 : 24
  2. பலத்த பெங்காற்று – 1இராஜா – 19 : 11
  3. பெருங்காற்று – யோபு – 1 : 19
  4. கொண்டல் காற்று – யோபு – 27 : 21 ; எரே – 18 : 17
  5. சுழல் காற்று – சங் – 83 : 13 ; நீதி – 10 : 25
  6. வடக்காற்று – நீதி – 25 : 23
  7. தீக்காற்று – எரே – 4 : 11
  8. பலமான காற்று – எரே – 4 : 12
  9. கோரா வாரிக் காற்று அல்லது பெருங்காற்று – எரே – 30 : 23
  10. புசல் காற்று – எசே – 1 : 4; எசே – 13 : 11
    கொண்டற் காற்று – எசே – 27 : 26
  11. சூறைக்காற்று – தானி – 11 : 40
  12. பலத்த சூழல் காற்று – தானி – மாற் – 4 : 37
  13. பலத்த காற்று – அப் – 2 : 2
  14. கடுங்காற்று – அப் -27 : 14; யாக் – 3 : 4
  15. அனல் காற்று
  16. இளவேனிர் காற்று
  17. வாயுக்காற்று
  18. பனிக்காற்று
  19. மூச்சுக்காற்று
  20. பேய்க்காற்று
  21. வளிக்காற்று

திசை பொருந்தி காற்றின் பெயர்கள்:-

  1. தெற்கிலிருந்து வீசுவது – தென்றல் காற்று
  2. வடக்கிலிருந்து வீசும் காற்று – வாடை காற்று
  3. கீழ்க்கிலிருந்து வீசும் காற்று – கொண்டல் காற்று
  4. மேற்கிலிருந்து வீசும் காற்று – கச்சான் காற்று , கூதல் காற்று

காற்று வீசும் வேகம் பொருந்தும் பெயர்கள்:-

  1. மென்காற்று 6 கி.மீ வேகத்தில் வீசும்
  2. இளந்தென்றல் காற்று – 12 – 9 கி.மீ வேகத்தில் வீசும்
  3. புழுதிக்காற்று – 20 – 29 கி.மீ வேகத்தில் வீசும்
  4. ஆடிக்காற்று – 30 – 39 வேகத்தில் வீசும்
  5. கடுங்காற்று – 100 -கி.மீ வேகத்தில் வீசும்
  6. புயற்காற்று – 101 – 120 கி.மீ வேகத்தில் வீசும்
  7. சூறாவளிக்காற்று – 120 கி.மீ வேகத்தில் வீசும்

காற்றின் வேறு பெயர்கள் என்னவென்றால்:-

  1. கால் காற்று
  2. காற்றழுத்தம்
  3. காற்றாடி
  4. காற்றாலை
  5. காற்றோட்டம்
  6. காற்று மண்டலம்
  7. காற்றடி, காற்றடக்கு