- 63
- 20250709
- by KIRUBAN JOSHUA
- 12 months ago
- 0
வேதாகமத்தில் தேவன் பயன்படுத்திய முதியவர்கள்
1) தேவன் நோவாவை காப்பாற்றிய போது வயது 600. நீதிமானாக இருந்த நோவாவை நீரில் மூழ்காமல் இருக்கும் கப்பல் கட்டும் பொறியாளனாக தேவன் பயன்படுத்தினார்.
2) தேவன் ஆபிரகாமை கானான் தேசம் அழைத்த போது வயது 75. விக்கிரக ஊரில் கணவனாக இருந்தவனை #கானான் அழைத்து விசுவாச தகப்பன் ஆக்கினார்.
3) தேவன் இஸ்ரவேலரை விடுதலையாக்க மோசேயை அழைத்த போது வயது 80. ஆடு மேய்த்தவனை இருபது லட்சம் மனிதர்களை மேய்க்கும் தலைவன் ஆக்கினார்.
4) தேவன் காலேப்பை நிலத்தினால் ஆசீர்வதித்த போது 85 வயது. 40 வருஷம் கால்நடையாக நடந்தவனுக்கு மலைதேசம் கொடுத்து கானானின் குடிமகனாக்கினார்.
5) அன்னாள் 84 வயதானபோது கைம்பெண்ணாக இருந்தவளை தீர்க்கதரிசி ஆக்கினார்.
6) சகரியா – எலிசபெத் வயதான பின்பும் குழந்தை இல்லாமல் இருந்தார்கள். பிள்ளை இல்லாதவர்களுக்கு நல்ல குழந்தையை கொடுத்தார்.
முதியவர்களையும் தனது பணிக்கு பயன்படுத்தியவர் தான் நம் தேவன்.
Elderly people used by God