• Wednesday 17 September, 2025 12:30 AM
  • Advertize
  • Aarudhal FM

கிறிஸ்தவ பள்ளியில் படித்த.. நிர்மலா சீதாராமனை மதம் மாற்றினார்களா?

டெல்லி: மதமாற்ற புகாரில் கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றன. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய சிபிஎம் கட்சியின் கேரள எம்பி ஜான் பிரிட்டாஸ், “நிர்மலா சீதாராமன் கிறிஸ்தவ பள்ளியில் படித்தார் அவரை யாராவாது மதம் மாற்றினார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் துர்க் ரயில் நிலையத்தில், கேரளாவை சேர்ந்த மூன்று கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது மத மாற்றம் செய்தல் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இவர்கள் ஊழியம் செய்வதற்காக நாராயண்பூர் என்கிற ஊருக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு பழங்குடியின குடும்பத்தினருக்கு கிறிஸ்தவ மதம் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அந்த குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு கன்னியாஸ்திரிகள் வேலைவாய்ப்பு பெற்று கொடுத்திருக்கிறார்கள். மூன்று கன்னியாஸ்திரிகள் மற்றும் நாராயண்பூரை சேர்ந்த 21 வயது பழங்குடி சமூகத்தை சேர்ந்த இளம்பெண் ஆகியோர் துர்க் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்திருக்கின்றனர்.

அப்போது அங்கு வந்த இந்துத்துவா அமைப்பை சேர்ந்த நபர்கள், இளம்பெண்ணை மதமாற்றம் செய்து கடத்துவதாக ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் கன்னியாஸ்திரிகளை கைது செய்திருக்கின்றனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில் 21 வயது இளம்பெண், தன்னை யாரும் கடத்தவில்லை, விருப்பப்பட்டுதான் கன்னியாஸ்திரிகளுடன் சென்றேன் என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சிபிஎம் கட்சியின் கேரள எம்பியனா ஜான் பிரிட்டாஸ் குரல் எழுப்பியிருக்கிறார். அவர் பேசியதாவது, “பாஜக தலைவர்களான ஜே.பி. நட்டா, பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் அனைவரும் கிறிஸ்தவப் பள்ளிகளில் படித்தவர்கள்தான். நீங்கள் கிறிஸ்தவராகிவிட்டீர்களா? இல்லையே, இந்துவாகத்தானே இருக்கிறீர்கள்.

அதேபோல, மருத்துவ சேவை மற்றும் கல்வித் துறைகளில் பாராட்டத்தக்க சேவை வழங்கும் கிறிஸ்தவர்களையும், கன்னியாஸ்திரிகளையும் நீங்கள் துன்புறுத்தக் கூடாது. இத்தகைய செயல்கள் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும். நாட்டில் ஒவ்வொருவருக்கும் மத சுதந்திரம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

கேரள பாஜக இந்த விவகாரத்தில் கடுமையான நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. கன்னியாஸ்திரிகள் ஜாமீன் கோரி துர்க் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். சத்தீஸ்கரில் ஆளும் கட்சியாக பாஜக இருக்கிறது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜாமீன் மனுவை எதிர்க்கவில்லை என்று கேரள பாஜக கூறி வந்திருந்தது. ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜாமீனை எதிர்த்தனர். எனவே, கேரள பாஜகவின் கூற்று பொய் என நிரூபணம் ஆகி இருப்பதாக சிபிஎம் விமர்சித்திருக்கிறது.

கிறிஸ்தவ மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தகவல்

சென்னை: கிறிஸ்தவ ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், சுகாதாரமற்ற தொழில் புரிவோர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் உள்ளிட்ட பல கல்வி உதவித் தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

2024-2025ம் கல்வியாண்டிற்கு கல்லூரிகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஏற்கனவே கல்லுரியில் சேர்க்கை பெற்று பயின்று வரும் புதுப்பித்தல் மாணாக்கர்கள் கல்வி உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. புதுப்பித்தல் மாணாக்கர்கள் கல்லூரிகளில் பயில்வதை சம்மந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

2024-2025ம் கல்வியாண்டில் கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற மாணாக்கர்கள் மற்றும் சென்ற வருடத்தில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி UMIS (https://umis.tn.gov.in) என்ற இணையதளத்தில் கல்லூரி மூலம் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் புதிய கல்லூரி மாணாக்கர்கள், வருமானச் சான்றிதழ் (பெற்றோர் ஆண்டு வருமானம் ₹2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்). சாதிச் சான்றிதழ் (வருமானச் சான்று மற்றும் சாதிச் சான்று ஆகியவை இணைய சான்றுகளாக இருத்தல் அவசியம்.

கல்வி உதவித் தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா சேவை எண் 1800-599-7638 அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 31.1.2025 ஆகும் என அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்கள் மீது தொடுக்கப்படும் பயங்கரவாதம்

இந்தியாவில் சகிப்பின்மை மற்றும் விரோதப்போக்கு உச்சத்தை அடைந்துவருவதாக தாமஸ் ஆப்ரஃகாம், டேவிட் ஒனேசிமு, ரிச்சர்டு ஹாவல், மேரி ஸ்கேரியா, ஜான் தயால் உள்ளிட்ட பிரபல கிறிஸ்தவத் தலைவர்கள், பத்திரிக்கை செய்தியில்தங்களது வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகரித்துவரும் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி , சுமார் 400 கிறிஸ்தவ தலைவர்கள் மற்றும் 30 தேவாலயக் குழுக்களின் சார்பில் பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தையொட்டி, நாடு முழுவதும் நடைபெற்ற கூட்டங்களில், சுமார் 14 இடங்களில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து இந்த முறையீடு செய்யப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சகிப்பின்மை மற்றும் விரோதப்போக்கு உச்சத்தை அடைந்துவருவதாக தாமஸ் ஆப்ரஃகாம், டேவிட் ஒனேசிமு, ரிச்சர்டு ஹாவல், மேரி ஸ்கேரியா, ஜான் தயால் உள்ளிட்ட பிரபல கிறிஸ்தவத் தலைவர்கள், பத்திரிக்கை செய்தியில்தங்களது வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர்.

2024 ஜனவரி மற்றும் நவம்பருக்கு இடைப்பட்டக் காலத்தில் கிறிஸ்தவ மக்களைக் குறிவைத்து நடைபெற்ற 720  தாக்குதல் சம்பவங்களை “எவன்ஜெலிக்கல் ஃபெல்லோஷிப் ஆப் இந்தியா” (Evangelical Fellowship of India) எனும் நிறுவனம் பதிவு செய்துள்ளது . அதேபோன்று “யுனைட்டெட் கிறிஸ்டியன் ஃபோரம்” (United Christian Forum) சார்பில் 760 தாக்குதல் சம்பவங்கள் பதியப்பட்டுள்ளன.

மதமாற்றத் தடைச் சட்டத்தை தவறான வழியில் பயன்படுத்துவது, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள் அதிகரித்துவருவது, மதச் சுதந்திரத்திற்கு எதிராக பெருகிவரும் அச்சுறுத்தல்கள், தலித் கிறிஸ்தவர்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்க மறுக்கும் கொள்கை ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மே 2023 முதல் சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் மணிப்பூர் கலவரத்திற்கு முடிவுக் கொண்டுவந்து அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மோடியை வலியுறுத்தியுள்ளனர்.

இறுதியாக, மதச்சிறுபான்மையினர் மீது ஏவப்படும் வன்முறைகளை விசாரிப்பது, மதச்சுதந்திரம் தொடர்பான அரசமைப்புச் சட்டங்களை பாதுகாத்திட மாநில அரசுகளுக்கு தெளிவான வழிக்காட்டுதல்களை வகுப்பது போன்ற  நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆகிய இருவருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாசிச மோடி ஆட்சி காலத்தில் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மதச்சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. அதன் உச்சமாக, மணிப்பூரில் குக்கி இனத்தைச் சார்ந்த கிறிஸ்தவர்களாகிய இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊரின் நடுவே வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது; மேலும் கட்டாய மதமாற்றம் செய்யும் வேலையில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி கடந்த செப்டம்பர் மாதம் ஒடிசாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியது போன்றவற்றை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங்தள் ஆகிய இந்துத்துவ மதவெறிக் கும்பல் அரங்கேற்றியது.

மேலும், கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தை காரணம் காட்டி இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது  இந்துமதவெறிக் கும்பல் தாக்குதல் நடத்துவதும் மதக்கலவரத்தை உண்டாக்குவதும் தொடர்கதையாகி வருகிறது.

சாதி, மத, இன ரீதியான ஒடுக்குமுறைகளை எதிர்க்கும் சமூக செயற்பாட்டாளர்கள், ஜனநாயக சக்திகள் மற்றும் உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு” என்ற மாற்றை முன்வைத்து பாசிச எதிர்ப்புப் போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலமாக மட்டுமே சிறுபான்மையினர் மீது தொடுக்கப்படும் வன்முறைகள் தடுத்து நிறுத்தப்படும்.

மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி தஞ்சையில் கிறிஸ்தவர்கள் ஜெப நடை பயணம்

மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து கலவரங்கள் நீடித்து வருகிறது. இதனால் அம்மாநில பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று தஞ்சை மிஷனரி தெருவில் அகில இந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி ஜெப நடை பயணம் நடந்தது.

இதற்கு கூட்டமைப்பின் சேர்மன் பிஷப் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறும் போது :- மணிப்பூர் மாநிலத்தில் அமைதியும், சமாதானமும் ஏற்பட வேண்டும். இயல்பு நிலை திரும்ப வேண்டும். இதனை வலியுறுத்தி அனைத்து கிறிஸ்தவ கூட்ட மைப்பு சார்பில் ஜெப நடை பயணம் மேற்கொண்டோம். மேலும் தஞ்சை மாவட்ட த்தில் கிறிஸ்துவ பணி மேற்கொண்ட மிஷனரிகளுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்றார்.

இந்த ஜெப நடை பயணத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர் .

கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனி விழா

கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாளான குருத்தோலை ஞாயிறு, திருநாள் நிகழ்ச்சி இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றது.

கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனி விழா! title=

கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாளான குருத்தோலை ஞாயிறு, திருநாள் நிகழ்ச்சி இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றது

குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு இன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையில் உள்ள பழமையான புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தில் நான்கு கிலோமீட்டர் தூரம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் குருத்தோலை கையில் ஏந்தி பவனியாக ஊர்வலம் வந்து தேவாலயத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர் .

வண்ணாரப்பேட்டை ஆரோக்கியநதர் ஆலயம் பங்குத்தந்தை வர்கீஸ் ரோசாரியோ தலைமையில் 1000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு ஆராதனையில் ஈடுபட்டனர். குருத்தோலை முக்கிய பிரார்த்தனையின் போது வருகின்ற 19 ஆம் தேதி நடக்கக்கூடிய தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்கவும் என பங்குத் தந்தை கிறிஸ்தவ பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். 

கோவையிலும், பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். கோவை காந்திபுரம் சி எஸ் ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் சார்பில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் ஆலயம் முன்பாக துவங்கியது. இதில், ஆயர் தலைவர் டேவிட் பர்னபாஸ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயச்சந்திரன் பொருளாளர் ரவி இன்பசிங்,உதவி ஆயர் சாம் ஜெபசுந்தர்,சபை ஊழியர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காந்திபுரம் சி‌ எஸ் ஐ‌ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் இருந்து துவங்கிய ஊர்வலத்தில், ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் குருத்தோலைகளை கையில் ஏந்திக்கொண்டு ஓசன்னா ஓசன்னா எனும் இயேசுவின் திரு நாமத்தை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.