• Saturday 5 July, 2025 11:08 PM
  • Advertize
  • Aarudhal FM

கத்தியில் பறிபோன உயிர்… இன்று +2 தேர்வில் பாஸ்!

கத்தியில் பறிபோன உயிர்… இன்று +2 தேர்வில் பாஸ்! கொலை செய்யப்பட்ட இவரின் மார்க்தான் அனைவரின் மனதையும் கணக்க வைத்துள்ளது. கரூர் குளித்தலையில், தேர்வு எழுதிவிட்டு முடிவிற்காக காத்திருந்த ஷியாம் சுந்தர் மகா மாரியம்மன் கோயில் திருவிழாவில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், +2 தேர்வில் ஷியாம் 351 மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். இன்று மார்க்கை பார்த்த பெற்றோரும், நண்பர்களும் கண்ணீரில் மூழ்கி இருக்கின்றனர்.

நேற்று மரணம்… இன்று தேர்ச்சி… தேர்வு பயத்தில் தற்கொலை செய்த மாணவியின் மதிப்பெண்கள் 413

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் புண்ணியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஆர்த்திகா பாபநாசத்தில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதி இருந்தார். இன்று ரிசல்ட் வெளியான நிலையில் நேற்று மாணவி தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி வீட்டின் மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று ரிசல்ட் வெளியான நிலையில் மாணவி தேர்ச்சி பெற்றுள்ளார். அந்த மாணவி 600 மதிப்பெண்களுக்கு மொத்தம் 413 மார்க் எடுத்துள்ளார்.

அதன்படி தமிழ் பாடத்தில் 72 மதிப்பெண்களும், ஆங்கில பாடத்தில் 42 மதிப்பெண்களும், பிசிக்ஸ் பாடத்தில் 65 மதிப்பெண்களும், கெமிஸ்ட்ரியில் 78 மதிப்பெண்களும், பாட்டனியில் 70 மதிப்பெண்களும், ஸ்வாலஜியில் 80 மதிப்பெண்களும் எடுத்துள்ளார்.

மேலும் மாணவி அவசரப்பட்டு தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று அதிகமாக மார்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

TN 12th Result 2025 Live : 95.03% பேர் தேர்ச்சி.. முதலிடத்தைப் பிடித்த அரியலூர்.. சாதித்து காட்டிய மாணவர்கள்!

TN Board 12th Result 2025 Live : தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9 மணிக்கு வெளியாகியது. மாணவர்கள் https://results.digilocker.gov.in/ மற்றும் https://tnresults.nic.in/ என்ற இணையதள முகவரிகள் மூலம் முடிவுகளை அறிந்துகொள்ளலாம். முடிவுகள் குறித்த உடனுகுடன் செய்தி இதில் நேரலையில் இந்த பதிவில் மூலம் வழங்கப்படுகிறது.

TN 12th Result 2025 at tnresults.nic.in : தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்களில் முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் முடிவுகளை https://tnresults.nic.in/https://results.digilocker.gov.in/ மற்றும் https://www.dge.tn.gov.in/ என்ற இணைய முகவரிகள் மூலம் ஆன்லைனில் அறிந்துகொள்ளலாம்.

இந்தாண்டு மாணவர்கள் – 3,47,670, மாணவியர்கள் – 4,05,472 என மொத்தம் 7,53,14 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டு மொத்தம் 95.03% தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு தேர்ச்சி 0.47% அதிகம் ஆகும். இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகள் 3.54 % அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு மதிப்பெண்கள் பட்டியல் வரும் மே 12-ம் முதல் விநியோகிக்கப்படும்.

10ம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களுக்காக

தேர்வு எழுத அமர்ந்திருக்கும் எந்தவொரு மாணவருக்கும், தேர்வு தொடங்குவதற்கு முந்தைய கடைசி சில நிமிடங்கள் நம்பமுடியாத அளவிற்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது தெரியும்.

நான் உண்மையில் போதுமான அளவு படித்தேனா?

நான் நினைப்பது போல் எனக்குப் பொருள் நன்றாகத் தெரியுமா?

நான் சரியான கேள்விகளுக்குத் தயாரானேனா?

மிகவும் புத்திசாலி மற்றும் திறமையான மாணவர்களின் மனதிலும் கூட சுய சந்தேகமும் பதட்டமும் ஊடுருவுகின்றன, குறிப்பாக எதிர்கால வெற்றி இந்த ஒற்றைத் தேர்வின் முடிவைப் பொறுத்தது என்று உணருவதால்.

அதிர்ஷ்டவசமாக, மன அழுத்த காலங்களில் கடவுள் நமக்கு அமைதியைத் தருகிறார், மேலும் தேர்வுக்கு முன் ஜெபத்தில் நேரத்தைச் செலவிடுவது ஒரு பெரிய யதார்த்தத்தை நமக்கு நினைவூட்ட உதவும்: கடவுள் நம்மை நேசிக்கிறார், அவரை நேசிப்பதும் அந்த அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் நாம் எந்தப் பள்ளியில் சேருகிறோம் அல்லது நமக்கு என்ன வேலை இருக்கிறது என்பதை விட மிக முக்கியமானது.

நாம் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு நம்மை நேசிக்கும் நம் கடவுளிடமிருந்து அமைதி, பாதுகாப்பு மற்றும் அன்பை உணர உதவும் தேர்வுகளுக்கு முன் ஜெபிக்க சில பிரார்த்தனைகள் இங்கே.

நீங்கள் ஒரு தேர்வு அல்லது தேர்வுக்கு அமரும் முன் எந்த நேரத்திலும் இந்த எளிய பிரார்த்தனைகளில் ஒன்றைச் சொல்லுங்கள்:

எல்லாம் அறிந்தவரும், எப்போதும் இருப்பவருமான பரலோகத் தகப்பனே, என் மனதை மன அழுத்தத்திலிருந்து விடுவித்து, ஒரு சிறிய கணம் நின்று உமது பிரசன்னத்தை உணர அனுமதித்தருளும். உமது சித்தத்தைச் செய்ய என்னைப் பலப்படுத்துங்கள், நீர் என்னை வழிநடத்தும் வழிகளில் பரிசுத்த ஆவியானவர் என்னை வழிநடத்த அனுமதித்தருளும். உமது சித்தம் இன்றும் எப்போதும் நிறைவேறட்டும். ஆமென்.

அன்புள்ள கடவுளே, எல்லா சத்தியங்களுக்கும் மூலகாரணரே, இன்று இந்தத் தேர்வுக்கு முன் என்னைப் பலப்படுத்தி, உம்மிடமிருந்து வந்த பரிசுகளான என் திறமைகளை பிரகாசிக்க அனுமதிக்கும்படி நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

உமக்கு மரியாதை செலுத்த என் திறமைகளை எப்போதும் தைரியமாகப் பயன்படுத்த நான் பாடுபடுவேன். பூமியில் எந்தப் பாடமோ அல்லது தேர்வோ மிக முக்கியமானவற்றில் என்னை மதிப்பிட முடியாது என்பதை நான் அறிந்திருந்தாலும், இன்று என்னால் முடிந்ததைச் செய்ய உமது ஆசீர்வாதத்தை நான் இன்னும் கேட்கிறேன். இயேசுவின் நாமத்தில், நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

ஆண்டவரே, இன்று என் தேர்வு நெருங்கி வருவதால், அமைதியையும் சமாதானத்தையும் தரும்படி நான் வேண்டுகிறேன். என் மனதை அமைதிப்படுத்தி, என் பதட்டத்தைத் தணித்தருளும். நான் என் தேர்வை எழுதும்போது என்னுடன் இருப்பீராக. என் கல்வி முயற்சிகள் அனைத்திலும், என் வாழ்க்கையிலும், எதிர்காலத்தில் என்ன நடந்தாலும் உம்மை முழுமையாக நம்ப எனக்கு அருள் புரிவீராக. ஆமென்.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று முதல்

12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு தொடக்கம்12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு (Lab Test) இன்று தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று முதல் 14ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், வரும் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் செய்முறைத் தேர்வு நடக்கவுள்ளது. இதில் அனைத்து மாணவர்களுக்குக் கட்டாயம் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. All the Best Students