• Wednesday 15 October, 2025 11:17 AM
  • Advertize
  • Aarudhal FM

நான் சேவிக்கிற கர்த்தர்

அப்போஸ்தலர் 27:23
ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று;

1. அவரை மட்டும் தான் சேவிக்க வேண்டும்.

யாத்திராகமம் 23:25
உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள். அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.

2. அவருடைய சந்ததியாய் (பிள்ளையாய்) அவரை சேவிக்க வேண்டும்

சங்கீதம் 22:30
ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.

3.முழு இருதயத்தோடும் , முழு ஆத்துமாவோடும் சேவிக்க வேண்டும்

யோசுவா 22:5
ஆனாலும் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளெல்லாம் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடு சேவிக்கிறதற்காக, கர்த்தரின் தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கற்பனையின்படியேயும் நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யும்படிமாத்திரம் வெகு சாவதானமாயிருங்கள் என்றார்.

4.பயத்துடனே கர்த்தரை சேவியுங்கள்

சங்கீதம் 2:11
பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.

5. அவருக்கு கீழ்படிந்து சேவிக்க வேண்டும்

யோபு 36:11
அவர்கள் அடங்கி அவரைச் சேவித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருஷங்களைச் செல்வவாழ்வாகவும் போக்குவார்கள்.

6.உற்சாக மனதோடு சேவிக்க வேண்டும்

1 நாளாகமம் 28:9
என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி, கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார், நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார், நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.

கர்த்தரை சேவித்தால் கிடைக்கும் நன்மைகள்

1. நிச்சயமாகவே பலன் உண்டாகும்

மாற்கு 9:41
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமல்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

2.பிதாவானவர் கனம்பண்ணுவார்

யோவான் 12:26
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான், ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.

3. கர்த்தர் விடுவிப்பார்

தானியேல் 3:28

அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவா தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.

Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
வட இந்திய ஊழியத்திற்க்கு உதவ வாஞ்சையுள்ளோர் எங்களை தொடர்புக் கொள்ளவும்.
Mobile no – 9437328604

வீட்டிலிருந்தபடியே வேதாகமத்தை கற்றுக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பு – வல்லமை இறையியல் செமினரி

அங்கீகாரமும் & அந்தஸ்தும்: (Accreditation & Affiliation)

நமது வேதபாடசாலை தேவனுடைய அளவற்ற கிருபையினால் கீழ்கண்ட அங்கீகாரங்களையும் & சிலாக்கியங்களையும் பெற்றுள்ளது.

1) நமது இறையியல் செமினரியானது வல்லமை எழுப்புதல் ஊழியங்கள் அறக்கட்டளை மற்றும் சர்வதேச தர சான்று பெற்ற தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் அமைப்புகளால் அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது.

2) கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ISO சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள அமைப்பாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

3) இறையியல் அங்கீகாரத்திற்கான சர்வதேச கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்றுள்ளது.

இந்த வேதபாடசாலையில் யார் பயிலலாம்? (Who can study in this Bible school?)

சபை பாகுபாடின்றி அனைவரும் பயிலலாம். ஆவிக்குரிய அனுபவமும், ஊழிய வாஞ்சையும் மிக அவசிய -மானதாக கருத்தில் கொள்ளப்படும்.

1) ஆண், பெண் இருபாலருக்குமான ஆன்லைன் கல்வி

2) 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே படிக்க அனுமதி.

3) வேதாகமத்தை முறையாக கற்க விரும்புவோர், ஊழிய வாஞ்சையுள்ளவர்கள், முழுநேர ஊழியர்கள் படிக்கலாம்.

4) முழு நேர ஊழிய அழைப்பு பெற்று முறையாக வேதாகம கல்லூரிகளில் தங்கி பயிலும் வாய்ப்பு கிடைக்காதவர் -கள் படிக்கலாம். (தங்கி படிக்கும் வாய்ப்புகள் இருக்குமானால் சிரமமின்றி எங்களை மறந்துவிட்டு அத்தகைய கல்லூரிகளில் போய் தங்கி படிக்கவும்)

5) பகுதி நேரமாக சபையோடு இணைந்து ஊழியம் செய்பவர்கள் (சிறுவர் & வாலிபர் ஊழியங்கள், ஜெபக்குழுக்கள், பராமரிப்பு குழுக்களில் ஈடுபடுவோர், சுவிசேஷ ஊழியங்களில் ஈடுபடுவோர் அவர்களது சபை போதகரின் பரிந்துரையின் பேரில் இந்த வேதபாடசாலையில் படிக்கலாம்.

நமது வேத பாடசாலையின் கூடுதல் விவரங்கள், போதனை முறைகள் மற்றும் கல்வி கட்டணம் வங்கி முகவரி போன்றவற்றை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல் அறிக்கை லிங்க் கிளிக் செய்து அறிந்து கொள்ளவும்

இல்லாவிட்டால்

இல்லாவிட்டால்→

1) இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை – எபி 9:22

2) விசுவாசம் இல்லாமல் தேவனை பிரியப்படுத்த முடியாது – எபி 11:6

3) பரிசுத்தம் இல்லாமல் தேவனை தரிசிக்க முடியாது – எபி 12:14

4) கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்தது – யாக் 2:26

5) அன்பு இல்லாவிட்டால் நான் ஒன்றுமில்லை – 1 கொரி 13:2

6) சிட்சை இல்லாவிட்டால் பிள்ளைகள் இல்லை – எபி 12:8

7) என்னையல்லாமல் (இயேசு) உங்களால் ஒன்றும் செய்ய முடியாது – யோ 15:5

விசுவாசி என்றால் யார் ? பிரசங்க குறிப்பு

விசுவாசி என்றால் யார் ?

விசுவாசிகளாகிய திரளான கூட்டாத் தார் ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர் களாயிருந்தார்கள் அப் 4 : 32

இந்த குறிப்பில் விசுவாசி என்பவர்கள் யார் என்பதைக் குறித்து அப் 12ம் அதிகாரத்தில் 1 to 14 வசனத்தின் மூலம் அறிந்துக் கொள்வோம்

வேதபாடம் அப் 12 : 1 to 14

ஊக்கமாய் ஜெபிக்கிறவனே விசுவாசி அப் 12 : 5

1 . ஊக்கமான ஜெபம் மிகவும் பெலனுள்ளது. யாக் 5 : 16

2 . இயேசு அதிக ஊக்கத்தோடு ஜெபித்தார் லூக்கா 22 : 44

3 . ஊக்கம் சுத்த இருதயத்தை தரும் 1 பேது 1 : 22

4 . ஊக்கமான ஜெபம் அன்பை தரும்  1 பேது 4 : 8

5 . சாமுவேல் இராமுழுவதும் ஊக்கமாய் ஜெபித்தான் 1 சாமு 5 : 11

கூடி ஜெபிக்கிறவன் விசுவாசி அப் 12 : 12

1 . கூடி ஜெபித்தால் இடம் அசையும் அப் 4 : 31

2 . கூடிப் பாடினால் இடம் அசையும் அப் 16 : 25

3 . கூடி வந்தால் பரிசுத்த ஆவி நிறப்பும் அப் 10:44

வார்த்தையை கேட்பவனே விசுவாசி அப் 12 : 13

1 . தேவ வார்த்தையை ஏற்றுக்கொள்பவன் விசுவாசி நீதி 4 : 10

2 . தேவ வார்த்தையை காத்துகொள்பவன் விசுவாசி நீதி 4 : 4

3 . தேவ வார்த்தையே ஜீவனும் பெலனும் எபி 4 : 12

4 . தேவ வார்த்தையை கேட்டவன்யார் ? எரே 23 : 18

5 . தேவ வார்த்தையை கனித்தவன் யார் ? எரே 23 : 18

6 . வார்த்தையை கேட்டு காத்துக்கொள்பவன் விசுவாசி லூக்கா 11 : 28

நற்செய்தி அறிவிக்கிறவன் விசுவாசி அப் 12 : 14.

1 . குஷ்டரோகிகள் நற்செய்தி சொன்னார்கள் 2 இராஜா 7 : 9

2 . தாமதமில்லாமல் சுவிசேஷம் அப் 9 : 20

3 . சந்தோசமான நற்செய்தியை சொல்பவன் விசுவாசி லூக்கா 2 : 10

4 . மற்றவர்களுடன் பேசி நற்செய்தி சொல்லனும் லூக்கா 1 : 9

5 . இயேசு கிராமங்கள் தோறும் நற்செய்தி பிரசங்கித்தார். லூக்கா 8 : 1

ஆவிக்குரிய வாழ்வில் விழ வைக்கும் காரியங்கள்

தேவ பிள்ளைகளை விழ வைக்கும் சில காரியங்கள்:


1) அலப்புகிற வாய் விழ வைக்கும் – நீதி. 10:8.

2) புரட்டு நாவு விழ வைக்கும் – நீதி. 17:20.

3) இடும்பு உள்ளவன் விழுவான் – எரே. 50:32.

4) அக்கிரமம் செய்கிறவன் விழுவான் – ஒசி. 5:5.

5) இரு வழியில் நடக்கிறவன் விழுவான் – நீதி. 28:18.

6) இருதயத்தை கடினப்படுத்துகிறவன் விழுவான் – நீதி. 28:14.

7) பொல்லாத வழியில் நடக்கிறவன் விழுவான் – நீதி. 28:10.

8) மனமேட்டிமை விழ வைக்கும் – நீதி. 16:18.

9) தன் ஐஸ்வர்யத்தை நம்புகிறவன் விழுவான் – நீதி. 11:28.
==================

இந்தியா தேசம் – குடியரசு தினம் பிரசங்க குறிப்புகள்

தேவன் நமக்கு தந்த இந்தியா தேசம் எப்படிப்பட்டது? இந்த பிரசங்க குறிப்பினை குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய முக்கிய தினங்களில் பிரசங்கிக்கலாம்.

தேசத்துக்காக நன்றி

1. கர்த்தர் கொடுத்த தேசம் உபாகமம் 8:1

2. கத்தர் பிரவேசிக்க பண்ணும் நல்ல தேசம் உபாகமம் 8:7

3. குறைவுபடாத தேசம் உபாகமம் 8:9

4.எல்லா ஆசீர்வாத ஊற்றுக்கள் புறப்படும் தேசம் உபா 8: 7

5. புசித்து திருப்தியாகி நல்ல வீடுகளை கட்டி குடியிருக்கும் தேசம் உபாகமம் 8:12

6. எல்லாம் பெருகி நம்மை வர்த்திக்கப்பண்ணும் உபாகமம் 8:13

7. கர்த்தரை ஸ்தோத்தரிக்க வைக்கும் தேசம் உபா 8 :10

நாம் செய்யும் பிரசங்கம் எப்படி இருக்கிறது

இளம் தலைமுறை ஊழியர்களின் பிரசங்கங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன… தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்த்தால் அது துக்கத்தையே ஏற்படுத்துகிறது…..

ஆ…….. ஐ……….. ஊ…… ன்னு கத்துராய்ங்க…. மைக்கை உதட்டில் வைத்து கொண்டு ரிசீவ் பவர்…. ன்னு ஓயாமல் சொல்லி…. சொல்லி கழுதை போல கனைக்கிறார்கள்…. அதிலும் ஒரு பக்கம் ஒன் டு ரிதம் போட்டு காட்டு கத்தம் கத்தி…. ஹார்ட் அட்டாக் வராதவனுக்கெல்லாம் வந்திரும் போல…… டேய் என்னடா பண்றீங்க ன்னு உலகத்தாரின் பரியாசத்திற்கும் கேலி கிண்டலுக்கும் உரியதாக மாறுகிறது.

பிரசங்கம் செய்யும் போது மேடையில் அங்கும் இங்கும் வெறி பிடித்த நாயை போல அலைகிறார்கள்…. ஏன் என்று தெரியவில்லை. ஒரு இடத்தில் நின்று கொண்டு நிதானமாக பேசினால் என்ன…. இதை எங்கிருந்து கற்றுக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.நிதானமாக அழகாக தெளிவாக பேசலாமே… ரொம்பவே வேகம் வேகமாக பேசுகிறார்கள்…. அது மக்கள் மனதில் எப்படி நிற்கும். நிதானமாக பேசினால் தான் எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்கள் மனதில் இருக்கும். அது கிரியை செய்யும்.

எடுக்கிற வசனத்திற்கும் பிரசங்கத்திற்கும் சம்பந்தம் இல்லை… ஏதோ ஒரு வசனத்தை வைத்து பேசுகிறார்கள்…தேவ சமூகத்தில் கிடைக்கும் மன்னா இன்று மண்ணாகி போனது.

மற்ற ஊழியர்களுக்கு கீழ் உட்கார்ந்து கற்றுக் கொள்ள ஆசை இல்லை… மற்றவர்களின் பிரசங்கத்தை கேட்பதும் இல்லை மதிப்பதும் இல்லை…

மொத்தத்தில் வசனத்தை தெளிவாக பேசும் ஊழியர்கள் தேசத்தில் குறைந்து விட்டார்கள்.காரணம் வேதம் வாசிக்கும் தியானிக்கும் பழக்கம் ஊழியர்களிடம் இப்போது குறைந்து விட்டது.

அவரவர்களுக்கு ஏற்றப்படி வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். அதை குறித்து அவர்கள் எவருக்கும் பயப்படுவதில்லை.

நாம் செய்யும் பிரசங்கத்தில்…

இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைப்பட வேண்டும்.
இரட்சிப்பு
மனந்திரும்புதல்
உயிர்மீட்சி
புதுப்பிப்பு
சுத்திகரிப்பு
இயேசு கிறிஸ்துவின் வருகை
ஆத்தும ஆதாயம்
ஞானஸ்நானம்
பரிசுத்தத்தின் அவசியம்.
சபையின் நோக்கங்கள்
பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம்.. அதன் முக்கியத்துவம்.
பரலோகம்
தூதர்களின் பணிகள்
சாத்தானின் பொய்களும் அவனது தந்திரங்கள் என்னென்ன…
அவனின் முடிவு எப்படி இருக்கும்.
நரகம் பாதாளம்… யாருக்கு
கடைசி காலம் எப்படி இருக்கும்.

இப்படி அனைத்து சாரம்சமும் ஒரு பிரசங்கத்தில் இருக்க வேண்டும். ஒரு பிரசங்கி என்பவன் ஒரு துப்பாக்கி வைத்து இருப்பவனை போல அல்ல.. யாரையாவது குறிவைத்து சுட…. மாறாக அவன் ஒரு பெரிய அணுகுண்டை கையில் வைத்திருக்கிறவனுக்கு சமானம். ஒரு அணுகுண்டுக்கு இருக்கும் வல்லமையை விட பிரசங்கத்திற்கு அதிகம் வல்லமை உண்டு. காரணம் எந்த அணுகுண்டும் சரீரத்தை உடைக்க முடியும் ஆனால் இருதயத்தை உடைக்க முடியாது. பிரசங்கம் மட்டுமே மனிதர்களின் இருதயத்தை உடைக்கும் வல்லமை படைத்தது. பிரசங்கிகள் தேவனின் வாயாக இருக்கிறார்கள். தேவனுடைய ஆவியானவரே அந்த பாத்திரத்தில் இருந்து பேசுகிறார். ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் பிரசங்கிகள்.

அது மட்டுமல்ல இப்போது உள்ள கால சூழ்நிலையில் எல்லாருடைய கையிலும் மொபைல் கேமாராவோடு உள்ளது. எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டும் என்றாலும் பதிவு செய்யலாம் ஆகவே மிகவும் கவனத்துடன் பிரசங்கம் செய்ய வேண்டும். இந்த கவனம் இல்லை என்று சொன்னால் கேலிக்கூத்தாக மாறி விடும்.

மொத்தத்தில் பிரசங்க மேடையில் தேவ பிரசன்னம் இல்லை…. தேவனுக்கு பயப்படும் பயம் இல்லை. ஏதோ ஒரு பட்டிமன்ற பேச்சாளர்களை போல பேசும் இவர்களை கொண்டு பரலோக ராஜ்ஜியத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை….

கர்த்தரை துதிப்பது

1) இன்பமானது – சங் 147:1
2) நல்லது – சங் 147:1
3) ஏற்றது – சங் 147:1
4) நலமானது – சங் 92:1,3
5) தகும் – சங் 33:1
6) கர்த்தருக்கு பிரியமானது – சங் 69:30,31
7) கர்த்தர் மகிமைபடுகிறார் – சங் 50:23

அப்பாவின் அன்பை விட ஐபோன் பெரிதா..?

அப்பாவின் அன்பை விட ஐபோன் பெரிதாகிபோன மகாராஷ்ட்ராவில் 10ஆம் வகுப்பு பயிலும் சிறுவன் ஒருவன், தனது தந்தையிடம் ஐபோன் வாங்கி தருமாறு கேட்டுள்ளான். ஏழை விவசாயியான அவனது தந்தையோ, தனது வறுமை நிலையை எடுத்துக் கூறி, அதை வாங்கி தர மறுத்துவிட்டார். இந்த ஆத்திரத்தில் அங்குள்ள மரத்தில் சிறுவன் தூக்கிட்டுக் கொள்ள, அதே மரத்தில் தந்தையும் தூக்கிட்டு உயிரை மாய்த்துவிட்டார். வறுமையிலும் தன்னை படிக்க வைத்த அப்பாவின் அன்பை விட, ஐபோன் பெரிதாகிவிட்டதா?

விசுவாசம் நமது வாழ்க்கையில் எப்போது எல்லாம் காணப்பட வேண்டும்

1) துன்பங்களில் – 2 தெச 1:4
2) உபத்திரவங்களில் – 2 தெச 1:4
3) பொல்லாங்கன் (பிசாசு) உடன் போராடும் போது – எபேசி 6:16
4) வியாதி நேரத்தில் – யாக் 5:15
5) ஜெபிக்கும் போது – மத் 21:21
6) இருதயம் கலங்கும் போது – யோ 14:1