• Monday 16 June, 2025 09:38 AM
  • Advertize
  • Aarudhal FM

பள்ளிகளுக்கு 115 நாட்கள் விடுமுறை

பள்ளிகளுக்கு 115 நாட்கள் விடுமுறை

2025-26 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “2025-26 ஆம் கல்வியாண்டின் மொத்த வேலை நாட்கள் 210. அனைத்து சனி, ஞாயிறு விடுமுறை, அரசு விடுமுறை, காலாண்டு, அரையாண்டு மற்றும் கோடை விடுமுறை என அனைத்தும் சேர்த்து 115 நாட்கள் விடுமுறை ஆகும். இதுதவிர உள்ள நாட்கள் தேர்வுகள் நடைபெறும் நாட்களாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மகளிர் உரிமை தொகை டெபாசிட்! என்ன மகிழ்ச்சியா?

பெண்களின் வங்கிக் கணக்கில், மாதந்தோறும் 15-ம் தேதி மகளிர் உரிமைத் தொகையான ₹1,000 அரசால் டெபாசிட் செய்யப்படும்.

அதன்படி நாளை 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும். அதனால் இன்று பெண்களின் வங்கிக் கணக்கில் ₹1,000 டெபாசிட் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான எஸ்எம்எஸ் வந்ததும் ₹1,000 டெபாசிட் செய்யப்பட்டதை பெண்கள் தெரிந்து கொள்ளலாம்

அகமதாபாத் விமான விபத்து… டாடா நிறுவனத்திற்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு

ஏர் இந்தியா விமான விபத்தைத் தொடர்ந்து, குறிப்பிட்ட ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த டாடா நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘போயிங் 787- 8 டிரீம்லைனர்’ விமானம் விபத்திற்குள்ளானதில், அதில் இருந்த 242 பேரில் 241 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகலை ஏற்படுத்தியுள்ள சூழலில், இது ”டாடா குழும வரலாற்றின் இருண்ட நாள்…” எனக் குறிப்பிட்டுள்ளார் அக்குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன்.

இந்த நிலையில், ’ஏர் இந்தியா’ நிறுவனம் இயக்கும் ‘போயிங் 787- 8’, ‘போயிங் 787- 9’ ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, எரிபொருள் சோதனை, கேபினின் காற்றழுத்தம், எலக்ட்ரானிக் என்ஜின் கட்டுப்பாடு சார்ந்த அமைப்புகள், Take off தொடர்பான சோதனை, ஹைட்ராலிக் சோதனை உள்ளிட்ட 6 வகையான சோதனைகளை விமானம் புறப்படும் முன்பு மேற்கொள்ள வேண்டும் எனவும், விமான கட்டுப்பாட்டு ஆய்வுகளை மறு உத்தரவு வரும் வரை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மின்னணு கட்டுப்பாடு சார்ந்த அமைப்புகளை 15 நாட்களுக்கு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான அறிக்கையை விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே, அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை ஏர் இந்தியா தலைமைச் செயல் அதிகாரி காம்பெல் வில்சன் சந்தித்துப் பேசினார்.  சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, விமான விபத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் காம்பெல் வில்சன் விவரித்ததாகக் கூறப்படுகிறது

திருச்செந்தூர் தனியார் பள்ளி முதல் மாடியிலிருந்து 9 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சி

திருச்செந்தூர் மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் ஆகாஷ் (14). இவர் திருச்செந்தூரில் உள்ள செந்தில்குமரன் என்ற தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். பள்ளி திறந்த நாள் முதல் பள்ளிக்குச் சென்று வரும் ஆகாஷிடம் ஆசிரியர்கள் வீட்டுப்பாடம் உள்பட பள்ளி பாடங்களை முறையாக படிக்க வேண்டும் மற்ற மாணவர்களை விட ஆகாஷை கடுமையாக நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவன் ஆகாஷ் மன உலைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது பெற்றோரிடம் மாணவன் கூறியுள்ளார். இதையடுத்து இன்று (ஜூன் 13) பள்ளியில் ஆசிரியர்களை பார்த்து விபரத்தை கூறுவதாக பெற்றோர் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலையிலும் பள்ளி வகுப்பையில் வைத்து மாணவனை பள்ளி ஆசிரியர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவன் காலை 9.50 மணியளவில் பள்ளியின் முதல் தளத்தில் இருந்து திடீரென ஆகாஷ் கீழே குதித்துள்ளார். இதில் அவருக்கு முதுகு மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாணவன் ஆகாஷை கார் மூலம் திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வெளியே வந்த மாணவன் பள்ளியில் அதிக அளவு டார்ச்சர் செய்வதாக கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா போலீசார் பள்ளி முதல்வர் சத்யா மற்றும் ஆகாஷின் வகுப்பு ஆசிரியர் பொன்ராணி உள்பட ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீட்(UG) நுழைவுத் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது!

MBBS, BDS உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட்(UG) நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது. தேர்வர்கள் www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் ‘NEET UG 2025 RESULT’ என்ற லிங்க்கை கிளிக் செய்து உங்களது விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வேர்டை பதிவிட்டு முடிவுகளை அறியலாம். கடந்த 4-ம் தேதி நடைபெற்ற இந்தத் தேர்வை தமிழகத்தை சேர்ந்த 1.5 லட்சம் பேர் உள்பட நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.

கோவிலில் பரிமாறப்பட்ட உணவை சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு

விருதுநகர் மாவட்டம், திருச்சுளி தாலுகா, கல்லுமடை கிராமத்தில் உள்ள கோயிலில் திருவிழா நடந்தபோது, அன்னதானத்தில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 20க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உணவுப் பொருளில் ஏதாவது ஒரு விஷயம் இருந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 

விவரங்கள்:

  • விஷயம்:விருதுநகர் மாவட்டம், திருச்சுளி தாலுகா, கல்லுமடை கிராமத்தில் உள்ள கோயிலில் திருவிழா நடந்தபோது அன்னதானத்தில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 20க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
  • விசாரணை:உணவுப் பொருளில் ஏதாவது ஒரு விஷயம் இருந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 
  • சிகிச்சை:பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
  • கூடுதல் விவரம்:மானாமதுரையில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மீன் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டபோது, ​​இரண்டு நாட்களுக்கு முன்பு கிராமத்தில் கோயில் திருவிழாவை கொண்டாடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

498 பேருக்கு கொரோனா 8 பேர் மரணம்!

நாடு முழுவதும் 24 மணிநேரத்தில் புதிதாக 498 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தில் புதிதாக 8 பேர் உட்பட 221 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். வீரியம் இல்லாத கொரோனா என விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், பலி அதிகரிப்பதால் மீண்டும் லாக்டவுன் ஏற்படுமோ என மக்கள் பீதியடைந்துள்ளனர்.

சாத்தான்குளம் கிணற்றில் மூழ்கி இறந்த 5 பேரின் உடல்களுக்கு கனிமொழி அஞ்சலி! கதறிய உறவினர்கள்

சாத்தான்குளத்தில் கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது உடல் வைக்கப்பட்டுள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.

வாகனத்தில் மொத்தம் இருந்த 8 பேரில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 4 மணி நேர மீட்புப் பணிக்குப் பின் 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்று (18/05/2025) திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்து உயிரிழந்த 5 பேரின் உடலுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும், அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார். தஞ்சையை சேர்ந்த 8 பேர் கொண்ட குடும்பத்தினர் சாத்தான்குளம் அருகே வெள்ளாளன்விளை பகுதியில் இன்று நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக ஆம்னி காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.

சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்து கார் நிலைத்தடுமாறு ஓடியது. அப்போது அங்கிருந்த சாலையோர கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக கார் விழுந்தது.

இதில் காரில் இருந்த ஒரு குழந்தை உள்பட 8 பேர் கிணற்றுக்குள் மூழ்கினர். அப்போது காருக்குள் இருந்த இரு ஆண்களும் ஒரு பெண்ணும் கார் கதவை திறந்து கிணற்றில் இருந்து தப்பி வெளியே வந்துவிட்டனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்களிடம் நடந்ததை கூறி கதறியுள்ளனர்.

உடனே மீரான்குளம் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். கிணறு சுமார் 50 அடி ஆழத்திற்கு இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் இறங்கி காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சாத்தான்குளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

அந்த 5 பேரின் சடலங்களுக்கும் கனிமொழி அஞ்சலி செலுத்திய போது அவர்களது உறவினர் கதறி அழுத போது கனிமொழி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று ராணுவம் முக்கிய அறிவிப்பு

புதுடில்லி: இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு பிறகு, நடந்தது என்ன என்பது குறித்து இன்று (மே 11) ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். அப்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது.

கடந்த நான்கு நாட்களாக இந்தியா – பாகிஸ்தான் மோதல் உச்சத்தில் இருந்தது. போர் மேலும் தீவிரமடைய இருந்த நிலையில், நேற்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டன என மத்திய வெளியுறவு துறை செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார்.

ஆனாலும் நேற்றிரவு பல இடங்களில் வெடிகுண்டுகள் சத்தம் கேட்கிறது. இது என்ன போர் நிறுத்தம் என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பி இருந்தார். பல்வேறு இடங்களில் வானில் ட்ரோன்கள் பறந்தது. நமது பாதுகாப்பு படையினர் வானில் இடைமறித்து துல்லியமாக சுட்டு வீழ்த்தினர்.

போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி பெறுவதற்கு ராணுவத்தினருக்கு தகுந்த உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்திருந்தது. அதன்படி ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வந்தது. நள்ளிரவுக்கு மேல் மெல்ல மெல்ல இயல்பு நிலை துவங்கியது. காஷ்மீரில் பூஞ்ச், ஜம்மு, ரஜோரி, அக்னூரில் இயல்பு நிலை திரும்பியது.

தற்போது தான் ட்ரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல் ஏதும் நடக்கவில்லை. இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு பிறகு, நடந்தது என்ன என்பது குறித்து இன்று (மே 11) ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். அப்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது

நம் திருச்சபையில் அரசாங்க வேலைக்கு காத்திருப்பவர்களுக்காக

✅TNPSC Group 1 Recruitment 2025
✅காலி இடங்கள்: 70 Deputy Collector, Deputy Superintendent of Police, District Employment Officer, Assistant Director of Rural Development, District Employment Officer, Assistant Commissioner of Labour Posts
✅உடனே விண்ணப்பிக்க Link: https://tamilanguide.in/tnpsc-recruitment-2025-70-group-1-posts-apply-now/
✅கல்வி தகுதி: Any Degree
✅இறுதி நாள்: 30.04.2025
💒 நமது திருச்சபையைச் சார்ந்த, பட்டப்படிப்பு படித்துள்ள அனைத்து பிள்ளைகளையும் இந்தத் தேர்வை எழுத ஊக்குவிக்கும்படி / வழிகாட்டும்படி அன்போடு வேண்டுகிறேன். 🙏