• Monday 5 May, 2025 01:58 AM
  • Advertize
  • Aarudhal FM

பொதுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு… விண்ணப்பிக்க ரெடியா?

இந்தியாவிலுள்ள அரசு வங்கிகளுக்குத் தேவையான ஊழியர்களும் அதிகாரிகளும் வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS- Institute of Banking Personnel Selection) மூலமாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் (Clerk) பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள் விவரம்: இந்திய அளவில் 6,128 காலிப்பணியிடங்களுக்கும், தமிழ்நாட்டில் 665 காலிப்பணியிடங்களுக்கும் ஆள்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கான தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஜூலை 21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி:இந்தப் பணிக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இளங்கலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:விண்ணப்பதாரர் ஜூலை 1ஆம் தேதி 20 வயது நிரம்பியவராகவும், 28 வயது அல்லது 28 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. இது குறித்த விரிவான தகவல்களுக்கு வங்கிப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ரூ. 850 பதிவுக் கட்டணம் செலுத்தி, தங்களது அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து, விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.175 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதி: ஜூலை 21ஆம் தேதிக்குள் இணைய வழியில் மட்டும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பட்டியலினத்தவர், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இத்தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 12 முதல் 17ஆம் தேதி வரை இப்பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களிலுள்ள மையங்களில் அல்லது இணைய வழியில் இப்பயிற்சி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த இறுதியான விவரங்கள் www.ibps.in இணையதளத்தில் பதிவிடப்படும்.

பயிற்சியை அடுத்து, முதல் நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதத்திலும், முதன்மைத் தேர்வு அக்டோபர் மாதத்திலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையம்:நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: இணைய வழியில் மட்டும் நடைபெறும் முதல் நிலை, முதன்மைத் தேர்வுகளின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இத்தேர்வுகளைத் தமிழ் அல்லது அங்கில மொழிகளில் எழுதலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.ibps.in/wp-content/uploads/CRP_Clerks_XIV_Final_Notification_28.6.24.pdf என்கிற இணைப்பைப் பார்வையிடவும்.

வளைகுடாநாட்டில்கார்பென்டர், பெயின்டர்களுக்குவேலை: சென்னையில் 19-ம்தேதிநேர்காணல்

சென்னை: தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் மா.லதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்ற கார்பென்டர், ஸ்டீல் பிக்ஸர், ஹெல்பர், மேசான், அலுமினியம் பேப்ரிகேட்டர், டக்ட்மேன், பர்னிச்சர் பெயின்டர், பர்னிச்சர் கார்பென்டர், பிளம்பர், ஏசி டெக்னீசியன் ஆகிய பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம். வயது 40-க்குள் இருக்க வேண்டும்.

ஊதியத்துடன் உணவு, விசா, தங்கும் வசதி ஆகியவையும் வழங்கப்படும். இப்பணிகளுக்கான நேர்காணல் ஜூலை19-ம் தேதி (வெள்ளிக்கிழமை)அன்று காலை 9 மணிக்கு சென்னை கிண்டி தொழிற்பேட்டை ஒருங்கிணைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள (தொழிற்பேட்டை பஸ் நிலையம் அருகில்) அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடைபெறும்.

நேர்காணலுக்கு வருவோர் தங்கள் சான்றிதழ்கள் (பயோடேட்டா, பாஸ்போர்ட் ஒரிஜினல் மற்றும் நகல்),ஆதார் நகல், போட்டோ ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் கூடுதல் விவரங்களுக்கு 044-22505886, 22502267 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். (வாட்ஸ் அப் எண் 95662-39685).

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு செல்வோர் வேலை கிடைத்த பின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு சேவை கட்டணமாக ரூ.35,400 மட்டும் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் 1,000 கூடுதல் காலியிடங்கள்

சென்னை: இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1,768 காலி பணியிடங்களுடன் கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்த்து நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2023-24-ம் கல்வி ஆண்டுக்காக 1,768 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு கடந்த பிப்.9-ம் தேதி அறிவிப்புவெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர் பதவியில் கூடுதலாக 1,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.

இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு வரும் 21-ம் தேதி (ஞாயிறு) தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வை 26,510 பேர் எழுதஉள்ளனர். தற்போது புதிதாக 1,000 காலியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் டிஆர்பி மூலம் நிரப்பப்படும் மொத்த காலி ணியிடங்களின் எண்ணிக்கை 2,768 ஆக அதிகரித்துள்ளது.

அரசு வேலைக்கு செல்ல வேண்டுமா? டிஎன்பிஎஸ்சியில் தேர்வாவது ரொம்ப ஈஸி! நிறைய படிக்க வேண்டாம்!

Sunday, July 28, 2024, 10:15

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கட் ஆப் வாங்குவது மிகவும் எளிதானது. இந்த பயிற்சியை பெற்றிருந்தால் போதுமானது. அரசு வேலை நிச்சயம் கிடைக்கும் என்கிறார்கள். இதனால் ஏராளமான மாணவர்கள் தற்போது பழைய முறைக்கு திரும்புவது போல் இந்த பயிற்சியை பெறுகிறார்கள். தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணி நியமனம் செய்ய தமிழக அரசு தேர்வாணையம் என்ற டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளை நடத்தி ஆட்களை பணியமர்த்தி வருகிறது. விஏஓ முதல் உயர் பதவி வரை அனைத்துக்கும் இந்த ஆணையம் தேர்வு நடத்துகிறது. மத்திய அரசில் செம ஜாப்.. 2006 பணியிடங்கள்.. பிளஸ் டூ முடிச்சிருந்தால் போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க அரசு பணியில் சேருவதற்கான டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வில் தட்டச்சு பயிற்சிக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இதனால் டைப் ரைட்டிங் எனப்படும் தட்டச்சு பயிற்சி படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதாவது தட்டச்சு பயிற்சியில் சேர்க்கை சதவீதம் 10 சதவீதம் ஆகும் என பயிற்சி நிறுவனத்தினர் தெரிவிக்கிறார்கள். தமிழக அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளை நடத்துகிறது. Advertisement இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இதில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகளை முடித்தவர்கள், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதி வருகிறார்கள். அப்போது அவர்கள் இந்த தொழில்நுட்பச் சான்றிதழை பெற்றிருப்பதன் மூலம் எளிதில் கட் ஆப் மதிப்பெண்களைப் பெற்று அரசு வேலை வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

Thanks to  one india news

கார் தருவாங்க.. பெரிய அதிகாரம்.. பல ஆயிரம் சம்பளம்! டிஎன்பிஎஸ்சி தரும் சான்ஸ்.. நெருங்கும் டெட் லைன்

Thursday, July 25, 2024, 16:00

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளுக்கான விண்ணப்பம் செய்யும் கால அவகாசம் முடிந்துவிட்டது. இந்த தேர்வு விரைவில் நடக்க உள்ளது. இன்னும் சில நாட்களே உள்ளன தேர்வு நடக்க. குருப் 2, 2ஏ பணிகளில் அடங்கிய 2,327 காலிப் பணியிடங்களுக்கான இந்த விண்ணப்பங்களை செய்து உள்ளது. இந்த போட்டித் தேர்விற்கு 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பம் அனுப்பி உள்ளனர். . குருப் 2 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு இதனால் மிக கடுமையானதாக இருக்க போகிறது. போட்டி உச்சத்தில் இருக்கும். இதனால் சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு பணியிடத்திற்கு 340 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். மத்திய அரசில் செம ஜாப்.. 2006 பணியிடங்கள்.. பிளஸ் டூ முடிச்சிருந்தால் போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க இலவச பயிற்சி: அதோடு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கி விட்டன. மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட தலைநகரங்களில் இதற்கான வகுப்புகள் தொடங்க உள்ளன. இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் இதற்கான ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2 வாரங்களில் இதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிநடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. Advertisement பதவிகள் என்னென்ன?: இந்த தேர்வு மூலம் கிடைக்கும் பதவிகள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம். ஸ்டாலின் டேபிளுக்கு போன லெட்டர்.. எத்தனை வருடமாக அரசு ஊழியர்கள் ஏங்குறாங்க.. வருது குட்நியூஸ் ஜூனியர் வேலைவாய்ப்பு அதிகாரி (மாற்றுத் திறனாளிகள் அல்லாதவர்கள்) சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் திணைக்களத்தில் நன்னடத்தை அதிகாரி தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் துணைப் பதிவாளர், பதிவுத் துறையில் தரம்-II வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சியில் (வேலைவாய்ப்பு பிரிவு) இளைய வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத் திறனாளிகள்) விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளர் காவல் ஆணையர் அலுவலகத்தின் புலனாய்வுப் பிரிவில் சிறப்புப் பிரிவு உதவியாளர் குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புப் பிரிவில் சிறப்புக் கிளை உதவியாளர் (மாநில உளவுப் பிரிவு) கோவை புது பேருந்து நிலையம்.. பேருக்குதான் ஹைடெக்! பஸ் நிக்காது, லைட் எரியாது, கழிவறை பக்கம் “ம்ஹூம்” இதில் விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளர், துணைப் பதிவாளர், பதிவுத் துறையில் தரம்-II, குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புப் பிரிவில் சிறப்புக் கிளை உதவியாளர் (மாநில உளவுப் பிரிவு), காவல் ஆணையர் அலுவலகத்தின் புலனாய்வுப் பிரிவில் சிறப்புப் பிரிவு உதவியாளர் ஆகிய பதவிகள் நல்ல பவர் நிறைந்த பதவிகள் ஆகும். இவற்றில் சிலவற்றிற்கு அரசின் கார் கிடைக்கும். அதேபோல் சில பதவிகளுக்கு 40 – 60 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். டிஎன்பிஎஸ்சி அறிவித்த குரூப்-2 பதவிகளில் 116 இடங்களுக்கும், குரூப்-2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 413 இடங்களுக்கும் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் முதல்நிலைத் தேர்வை எழுதினார்கள். அதில் வெற்றி பெற்ற 57 ஆயிரத்து 641 பேர் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு எழுத அழைக்கப்பட்டார்கள். அவர்களில் 51 ஆயிரத்து 987 பேர் முதன்மைத் தேர்வை கடந்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 25-ந் தேதி எழுதி இருந்தார்கள். கோவையையே மிரள வைத்த.. ஐஏஎஸ், ஐபிஎஸ்.. விசாரித்த போலீசுக்கு ஷாக்.. அத்தனையும் போலி! இவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் கடந்தாண்டு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மதியம் என இரு வேளைகளில் 186 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடந்தன. குறிப்பாக காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது. முதன்மைத் தேர்வு எழுதிய தேர்வர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு நீண்ட தாமதத்திற்கு பிறகு நிறைவு பெற்றது. அரசு வெளியிட்ட தகவலின்படி, குரூப்-2 பதவிகளில் 161 இடங்களும், குரூப்- 2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 990 இடங்களும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 15:12.2022 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வாணைய ஆண்டுத்திட்டம் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதையடுத்து குரூப்-2 தேர்வு முடிவுகள் 2024 ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. விதிகள் மாற்றம்: இப்படிப்பட்ட நிலையில்தான் மீண்டும் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நிலையில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிநடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. இந்த தேர்வுக்கு ஜூலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 19ம் தேதி கட்டணம் செலுத்த கடைசி நாள் ஆகும். 2327 காலிப்பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடக்கிறது.

Thanks to one india news

டிகிரி + இன்ஜினியரிங் முடித்திருந்தாலே போதும்.. பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை! சான்ஸை மிஸ் பண்ணாதீங்க

July 25, 2024, 10:39

 சென்னை: பிரபல ஐடி நிறுவனத்தில் டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். சர்க்கரை அட்டைதாரர்களுக்கு ஹேப்பி.. இனி ரேஷனில் நிம்மதி.. திண்டுக்கல் ரேசன் கடையில் அதிரடியை பாருங்க நம் நாட்டில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் குவாட்ரண்ட் டெக்னாலஜிஸ் (Quardrant Technologies). இந்த நிறுவனம் என்பது தகவல் தொழில்நுட்பத்துறையில் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. கல்லீரல் காக்கும் கற்பகவிருட்சம் அமிர்தவல்லி இலை.. இதய நோயாளிகளின் அருமருந்தாகும் சீந்தில் இலைகள் குறிப்பாக கூற வேண்டும் என்றால் Cloud, Data & Analytics, Accessibility, Business Intelligence, Quality Testing, DevOps, AI & ML, CRM, ERP, Big Data மற்றும் Application Development உள்ளிட்ட முக்கிய பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ZOHOவின் அடுத்த ஆஃபர்.. விண்ணப்பிக்க ஜுலை 31 கடைசி நாள்.. ஆகஸ்ட் 3ல் இண்டர்வியூ.. தென்காசியில் பணி இந்நிலையில் தான் தற்போது குவாட்ரண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் ஜாவா டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இளங்கலை பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டல் இன்ஜினியரிங் அல்லது அது சார்ந்த துறையில் படிப்பை முடித்திருக்க வேண்டும். Advertisement HCL வேலைவாய்ப்பு.. அனுபவம் எதுவும் வேண்டாம்.. BBA முடித்தவர்களுக்கு ‛ஜாக்பாட்’ விண்ணப்பம் செய்வோருக்கு Primary Skills ஆக Jaa, Spring, Boot, MVC, Hibernate மற்றும் SQL தெரிந்திருக்க வேண்டும். அதில் பணியாற்றி இருந்தால் இன்னும் சிறப்பானதாக இருக்கும். கன்டரி ஸ்கீல்ஸாக எச்டிஎம்எல், சிஎஸ்எஸ், ஜாவா ஸ்கிரிப்ட் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதில் பணியாற்ற தெரிந்திருந்தால் பிளஸ் பாயிண்டாக இருக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ZOHO -வின் புதிய வேலைவாய்ப்பு.. அனுபவம் வேண்டாம்.. டிகிரி மட்டுமே போதும்.. சென்னையிலேயே பணி நியமனம் இதுதவிர ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். Debugging திறமை மற்றும் பிரச்சனைகளை சமாளிக்கும் திறமை கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி இந்த பணிக்கான சம்பளம் குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். மேலும் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Quadranttechnologies.com என்ற இணையதளம் சென்று ஆன்லைனில் இப்போதே விண்ணப்பம் செய்வது நல்லதாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

கோவையில் ஐடி வேலை.. Accenture நிறுவனம் தரும் அசத்தலான வாய்ப்பு.. சீக்கிரம் தேதி முடியப்போகிறது

July 28, 2024, 10:59

கோவை: கோவையில் செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனமான Accenture ஐடி நிறுவனத்தில் பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

ஆக்சென்ச்சர் (Accenture).. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் ஐடி துறையில் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங், அனலிட்டிக்ஸ், மெபிலிட்டி, சாப்ட்வேர் டெக்னாலஜி, க்ளைவ்ட் சர்வீசஸ் உள்பட பிற சேவைகளை வழங்கி வருகிறது.

இந்த ஆக்சென்ச்சர் நிறுவனம் இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னை மற்றும் கோவையில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது கோவையில் உள்ள ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:

ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் தற்போதைய அறிவிப்பின் படி Application Lead பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 15 ஆண்டு கல்வி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதாவது பிளஸ் 2 படித்து கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிளஸ் 2விற்கு பிறகு சாப்ட்வேர் இன்ஜினியரிங் அல்லது அது சார்ந்த பிரிவில் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி Regulatory Compliance and Software Development பிரிவில் ஏழரை ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

டெக்னிக்கல் ஸ்கில்ஸை பொறுத்தவரை regulatory compliance requirements பற்றி புரிந்து கொண்டிருக்க வேண்டும். மேலும் compliance strategies for software applications என்பதில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர சாப்ட்வேர் டெவலப்மென்ட் மெத்தடலாஜிஸ்களான Agile அல்லது Waterfall அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், பிழையின்றி எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன், அனலிட்டிக்கல் திறமை, சாப்ட்வேர் டெவலப்மென்ட்டில் ஏற்படும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு தீர்க்கும் தன்மையை பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான மாதசம்பளம் என்ன? என்பது தற்போதைய அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் பணி அனுபவம் மற்றும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை.

இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் பணி குறித்த விண்ணப்பம் செய்யும் நாள் எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் நியமனம் செய்யப்படுவார்கள். அவர்கள் பணி தொடர்பான விபரங்களை பெங்களூரில் உள்ள ஆக்சென்ச்சர் நிறுவனத்துக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டியிருக்கும்.

Thanks to One India News

நேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு.. இதைவிட பெரிய சான்ஸ் கிடைக்காது.. லட்டு மாதிரி.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

July 28, 2024, 9:45

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகள் நெருங்கி உள்ளன. ஏற்கனவே இலவச பயிற்சி வகுப்புகளில் பெறாதவர்கள் இந்த வாரம் முதல் இந்த வகுப்புகளில் சேர்ந்து கொள்ள முடியும். இந்த தேர்வுகளுக்கான விண்ணப்பம் செய்யும் கால் அவகாசம் நேற்றோடு முடிந்துவிட்டது. அதோடு  இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கி விட்டன. மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட தலைநகரங்களில் இதற்கான வகுப்புகள் தொடங்க உள்ளன.

இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் இதற்கான ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2 வாரங்களில் இதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிநடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.

டிஎன்பிஎஸ்சி அறிவித்த குரூப்-2 பதவிகளில் 116 இடங்களுக்கும், குரூப்-2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 413 இடங்களுக்கும் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் முதல்நிலைத் தேர்வை எழுதினார்கள். அதில் வெற்றி பெற்ற 57 ஆயிரத்து 641 பேர் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு எழுத அழைக்கப்பட்டார்கள். அவர்களில் 51 ஆயிரத்து 987 பேர் முதன்மைத் தேர்வை கடந்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 25-ந் தேதி எழுதி இருந்தார்கள்.

இவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் கடந்தாண்டு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மதியம் என இரு வேளைகளில் 186 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடந்தன. குறிப்பாக காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது.

முதன்மைத் தேர்வு எழுதிய தேர்வர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு நீண்ட தாமதத்திற்கு பிறகு நிறைவு பெற்றது. அரசு வெளியிட்ட தகவலின்படி, குரூப்-2 பதவிகளில் 161 இடங்களும், குரூப்- 2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 990 இடங்களும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

15.12.2022 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வாணைய ஆண்டுத்திட்டம் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதையடுத்து குரூப்-2 தேர்வு முடிவுகள் 2024 ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டது.

விதிகள் மாற்றம்: இப்படிப்பட்ட நிலையில்தான் மீண்டும் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நிலையில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிநடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.

இந்த தேர்வுக்கு ஜூலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 19ம் தேதி கட்டணம் செலுத்த கடைசி நாள் ஆகும். 2327 காலிப்பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடக்கிறது.

நாளை வகுப்பு: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை முதல் தொடங்க உள்ளன. மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட தலைநகரங்களில் இதற்கான வகுப்புகள் தொடங்க உள்ளன.

ஆட்சியர் அலுவலகம் வாயிலாக இதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

குரூப் 2 தேர்வு: இந்த நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் புதிதாக இன்வேலிட் மதிப்பெண் முறை மீண்டும் கடைப்பிடிக்கப்பட உள்ளது. குரூப் 4 தேர்வில் இந்த புதிய முறை பயன்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் குருப் 2 தேர்வில் இதே முறை பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த முறைப்படி ஒரே கேள்விக்கு தவறான பதிலை முதலில் தேர்வு செய்து பின்னர் ஷெட்டில் அதை அடித்து விட்டு பிறகு வேறு பதிலை தேர்வு செய்ய கூடாது.

அப்படி குறித்தால் அந்த கேள்விக்கான மதிப்பெண் இன்வேலிட் ஆகிவிடும். அதாவது மாற்றி சரியான விடையை கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓஎம்ஆர் ஷீட்டில் எது சரியான விடையோ அதை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிநடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.

Thanks to Oneindia news

பாதுகாக்கும் தேவன்

பாதுகாக்கும் தேவன் (1 சாமுவேல் 19ம் அதிகாரம்)

சவுல் தாவீதின் மேல் பொறாமை கொண்டு தந்திரத்தினாலும் வஞ்சனையினாலும் அழித்துப்போட முயற்சித்தான் (1 சாமு 18 அதி). ஆனால், கர்த்தர் தாவீதோடிருந்தபடியால் (1 சாமு 18:12, 14, 28) அவரை காப்பாற்றி கனப்படுத்தினானர் (1 சாமு 18:30).

வஞ்சனையும் சூழ்ச்சியும் கைகொடாதபடியினால், தற்போது சவுலே களத்தில் இறங்கி தாவீதை கொன்றுபோட முயற்சிக்கின்றான் (1 சாமு 19:1). அந்த தீமையான யோசனைகளில் தேவன் தாவீதை எவ்விதமாக பாதுகாத்தார் என்பதை இந்த அதிகாரம் நமக்கு கற்றுத் தருகிறது.

“இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை” (சங் 121:4) என்கிற வேத வசனத்தின்படி, நம்மையும் நம்முடைய சூழ்நிலைகளின் நடுவே, “பாதுகாக்கும் தேவன்” உண்டு என்பதை நாம் அறிந்து, அவரை மகிமைப்படுத்துவோம்.

தாவீதை நான்கு வித சூழ்நிலைகளில் இந்த பகுதியில் கர்த்தர் பாதுகாத்தார்.

1. தீமையான யோசனையை “தடுத்து நிறுத்தினார்.” (1 சாமு 19:1-7)

சவுல் யோனத்தானோடும், தன் ஊழியக்காரர்களோடும் பேசி தாவீதை கொலை செய்ய முயன்ற போது, யோனத்தானின் ஆலோசனையின் மூலம் (1 சாமு 19:4,5) தாவீதுக்கு ஏற்பட இருந்த “தீமையை தடுத்து நிறுத்தினார்.”

நம்முடைய வாழ்விலும் நமக்கு நேரிட இருந்த தீமைகளை தடுக்கும் படிக்கு, நல்ஆலோசனை கொடுக்க தேவனால் அனுப்பப்பட்ட யோனத்தான்களுக்காக கர்த்தரை துதிப்போம்.

2. சதித் திட்டத்திலிருந்து “தப்புவித்தார்.” (1 சாமு 19:8-10)

தாவீதை கொன்றுபோடுவதில்லை என்று கர்த்தருடைய நாமத்தில் ஆணையிட்ட சவுல், தாவீதின் உயர்வைக் கண்டு, மறுபடியும் அவனை கொன்று போட வேண்டும் என்று மனம் மாறினார். ஆகையால், தன் வீட்டில் இருந்த போது, தன் ஈட்டியை கையில் பிடித்து (வீட்டில் இருக்கும் போது சவுலின் கையில் ஆயுதம் எதற்கு), தாவீதை குத்தி போடுவதற்கு திட்டமிட்டு அதை முயற்சித்தான்.

தேவனோ, சவுலின் சதி திட்டத்திலிருந்து, “தன்னை தப்புவித்துக் கொள்ள தாவீதிற்கு ஞானத்தை கொடுத்தார்.” 

  • சவுல் இரண்டாம் முறை ஈட்டியை எறிகிறதற்கு தாவீது இடம் கொடுக்கவில்லை. (ஒப்பிடுக: 1 சாமு 18:11= 1 சாமு 19:10)

நமக்கு எதிரான சதி திட்டங்களில் இருந்து “தப்புவித்துக்கொள்ள” ஞானத்தை அருளுகின்ற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

3. பூரணமற்ற மனிதர்கள் மூலமும் “தயவு செய்கிறார்.” (1 சாமு 19:11-18)

தாவீதை அவன் வீட்டிலேயே கொன்று போடும்படி சவுல் சேவகர்களை அனுப்புகின்றான். ஒருவேளை தன் மகள் மீகாள் தனக்கு ஒத்தாசையாக இருப்பாள் என்று சவுல் எண்ணி இருக்கலாம் (1 சாமு 19:17). ஆனால் மீகாளோ, தாவீதை எச்சரித்து, தப்பி ஓட பண்ணினாள்.

தாவீதிற்கு மீகாளின் மூலமாக தயவு கிடைத்தாலும், தாவீதை தப்புவிக்க அவள் நாடகமாடுகிறாள், பொய் சொல்லவும் தயங்கவில்லை (1 சாமு 19:13, 17). தன் வீட்டிலே சுரூபத்தை வைத்திருந்த மீகாள் தேவபக்தியுள்ள ஒரு பெண்ணாக தோன்றவில்லை.

இதனால், நாம் நம்மை பாதுகாக்க பொய் சொல்லி நாடகமாடலாம் என்று அர்த்தமல்ல. நன்மையை பயக்கும் என்றாலும் பொய் பொய்யே, பாவம் பாவமே. 

ஆனால், நாம் கற்றுக் கொள்ளும் பாடம். தேவன் தம்முடைய பிள்ளைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு நன்மை செய்யவும் பூரணமற்ற மனிதர்களையும் பயன்படுத்த முடியும் என்பதை உணர்ந்து கொள்வோம்.

எ.கா:-

  • வேசியாகிய ராகாப் (யோசு 2:1-13)
  • பெர்சிய ராஜாவாகிய கோரேஸ் (எஸ் 1:1,2)

சிந்தனைக்கு: தேவபக்தியுள்ள யோனத்தானின் மூலமும் தாவீதை தப்புவித்தார். தேவபக்தி இல்லாத மீகாளின் மூலமாகவும் தாவீதை தப்புவித்தார். இதற்காக, “அவர்கள் இருவரும் கையாண்ட முறைகள்” அவர்கள் யார் என்பதை நமக்கு காண்பிக்கிறது.

நம்முடைய வாழ்வின் சூழ்நிலைகளில் எவரைக் கொண்டும் நமக்கு “தயவு செய்கின்ற” தேவனுக்கு ஸ்தோத்திரம்.

4. எதிராய் வந்தவர்களை “தாண்டிப்போக செய்கிறார்.” (1 சாமு 19:18-24)

இறுதியாக தாவீது தன்னை தப்புவித்துக் கொள்ள சாமுவேலிடத்தில் அடைக்கலம் புகுந்தான். இதனை அறிந்த சவுல் தாவீதை பிடித்து வரும்படி தனது சேவகர்களை மூன்று கூட்டமாய் அனுப்புகின்றான். ஆனால் அவர்களோ தேவ ஆவியானவரால் கட்டுப்படுத்தப்பட்டு தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அதாவது தாங்கள் செய்ய வந்த வேலையை விட்டுவிட்டு, வேறொரு காரியத்தை செய்யும் படியாய் தேவன் அவர்களைத் தாண்டிப்போக பண்ணினார். சவுலுக்கும் அதே கதி தான் நேர்ந்தது.

எதிராய் வந்தவன் தான் எதற்காக வந்தேன் என்பதை மறந்து, வஸ்திரம் இல்லாது ஒரு நாள் முழுவதும் விழுந்து கிடக்கிறான். இது தாவீது தப்பி போக ஏதுவாக இருந்தது.

நமக்கு எதிராய் வருகிறவர்களையும் கட்டுப்படுத்தி, அவர்களை திசை திருப்பி! நம்மை அவர்கள் தாண்டி போகச் செய்து, நம்மை பாதுகாக்கின்ற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

பாதுகாக்கும் தேவன்

1. தீமையான யோசனையை “தடுத்து நிறுத்துகின்றார்.”

2. சதித் திட்டத்திலிருந்து “தப்புவிக்கின்றார்.” 

3. பூரணமற்ற மனிதர்கள் மூலமும் “தயவு செய்கிறார்.”

4. எதிராய் வருகின்றவர்களை “தாண்டிப்போக செய்கிறார்.”

கே. விவேகானந்த்

மாபெரும் விலை

தேவனுடைய பிரமாணத்தை மீறி சாத்தானுடைய தூண்டுதலினாலே, தாவீது ஜனங்களை தொகையிட்டார் (1 நாளாகமம் 21). தாவீது செய்த இந்த புத்தியீனமான காரியம், கர்த்தரின் பார்வைக்கு ஆகாதபடியினாலே அவர் இஸ்ரவேலை வாதித்தார். தேசத்தின் மேலே நியாயத்தீர்ப்பு வந்தது.

கர்த்தர் மூன்று காரியங்களை தாவீதுக்கு முன்பாக வைத்தார். மூன்று வருஷ பஞ்சமோ? பகைஞரின் பட்டயம் பின்தொடர சத்துருக்களுக்கு முன்பாக முறிந்தோடும் மூன்று மாத சங்காரமோ? அல்லது கர்த்தருடைய தூதன் இஸ்ரவேலெங்கும் சங்காரமுண்டாகும்படி தேசத்தில் நிற்கும் கர்த்தருடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில் ஒன்றை தெரிந்துகொள்ளும்படி தாவீதிடமே விடப்பட்டது. மூன்றும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. கொடிய இடுக்கண்ணில் அகப்பட்ட தாவீது கர்த்தருடைய கரத்தில் விழுந்தார். கர்த்தர் தேசத்தின் மீது கொள்ளை நோயை வரப்பண்ணினதினால் இஸ்ரவேலிலே 70,000 பேர் மடிந்து போனார்கள் (1 நாளாகமம் 21:1,7-14). பாவத்திற்கு எதிரான தேவனுடைய நியாயத்தீர்ப்பு நிறைவேறியது.

தேவனுடைய பிரமாணம் எங்கெல்லாம் மீறப்படுகிறதோ அங்கெல்லாம் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் பட்டயம் நீட்டப்படுகிறது. முதல் மனிதனும் தேவனுடைய கட்டளைய மீறி பாவம் செய்தபோது, ஏதேனிலே சுடரொளிப்பட்டயம் வைக்கப்பட்டு, மனுகுலமும் தேவ கோபாக்கினைக்கு என்று நியமிக்கப்பட்டது (ஆதியாக. 3:24), அவ்விதம் ஒரு மனிதனுடைய மீறுதலினாலே, பாவமும், பாவத்தின் சம்பளமாகிய மரணமும் நம் எல்லோரையும் ஆண்டுகொண்டது (ரோமர் 5:17).

எருசலேமுக்கு வந்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்ட கர்த்தர், கர்த்தருடைய தூதன் நின்ற ஓர்னானின் களத்திலே பலிசெலுத்தும்படி தாவீதுக்கு கட்டளையிட்டார் (1 நாளா. 21:15,18). தேவனுடைய நியாயத்தீர்ப்பு நிறுத்தப்பட பலி செலுத்த வேண்டும், இதுவே பிரமாணம். தாவீது போய், ஓர்னானிடத்திலே அந்த களத்தை கேட்டார், இலவசமாக அல்ல, அதுபெறும் விலையை (அதற்குரிய சரியான விலையை) தருவேன் என்றார். 600 சேக்கல் பொன்னை நிலத்திற்குரிய பெறும் விலையாக கொடுத்து, நிலத்தை வாங்கி அங்கே கர்த்தருக்கு பலியிட்டார், வாதை நிறுத்தப்பட்டது (1நாளா 21:24-28). வாதை நிறுத்தப்பட விலை கொடுக்கப்பட வேண்டியதாக இருந்தது (1நாளா. 21:22).

பாவத்தினிமித்தம் நாமும் கோபாக்கினைக் கென்று நியமிக்கப்பட்டிருந்தோம், தேவனுடைய நியாயத்தீர்ப்பின் பட்டயம் நமக்கு விரோதமாக நீட்டப்பட்டதாக இருந்தது. ஆனால் எருசலேமுக்கு வந்த தீங்கை கண்டு மனஸ்தாபப்பட்ட கர்த்தர் (1 நாளாகமம் 21:15) நமக்காகவும் மனமிறங்கினார்.

அன்றைக்கு கோபாக்கினை மாற்றப்பட பலிசெலுத்தும்படி எருசலேமிலே ஓர்னானின் களம் தெரிந்துகொள்ளப்பட்டது. நமக்கோ கொல்கொதாவின் கொலைக்களம் தெரிந்து கொள்ளப்பட்டது. அன்றைக்கு நிலத்திற்கு பெறும்விலை கொடுக்கப்பட்டது. நமக்கோ “மாபெரும் விலை” கொடுக்கப்பட்டது. அது 600 சேக்கல் பொன்னல்ல, தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தமே!

“அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” (1 பேதுரு 1:18,19).

மாபெரும் விலையாக, நம்மை மீட்கும் பொருளாக தம்முடைய ஜீவனையே இயேசு கிறிஸ்து நமக்காக கொடுத்தார் (மாற். 10:45). இஸ்ரவேலிலே வாதை நிறுத்தப்பட விலைகொடுக்க வேண்டியதாயிருந்தது. நம்மேலிருந்த கோபாக்கினை மாற்றப்பட தேவகுமாரன் தன்னையே பதில் விலையாக கொடுத்தார்.

நாம் பெற்ற இரட்சிப்பு இலவசமானாலும் அதை நமக்கு சம்பாதித்து கொடுக்கும்படி மாபெரும் விலை சிலுவையில் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

நம்மை மீட்க தன்னையே பலியாக கொடுத்த கிறிஸ்து இயேசுவை நினைவுகூர்ந்து பிதாவாகிய தேவனை தொழுதுகொள்வோம்! ஆமென்.

Thanks to Bro.Vivekananth