• Friday 4 July, 2025 06:14 AM
  • Advertize
  • Aarudhal FM

காயல்பட்டினத்தில் தீப்பற்றி எரிந்த கார்

திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள காயல்பட்டினம் பகுதியில் உள்ள அம்பலமரைகாயர் தேர்வு பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் கார் ஒன்று தீ பற்றி எரிந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அப்பகுதி மக்கள், உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் வந்து தீயை கட்டுப்படுத்தினர்.

SELF CARE QUESTIONNAIR

Research shows that people who take time to recharge and restore are more creative happier and more successful. This questionnaire will help you identify the areas of your life that are well-tended, and those that could use more time and attention. This is not meant to be a diagnostic assessment. Instead, it is a tool to help you see what you are doing to care for yourself. There are no right or wrong answers to these questions and some of them may require a bit of thought. Take your time and answer each question to the best of your ability based on your self-care practices right now.

For the following question please rank each item on a scale of 0-50-Never1-Rarely2-sometimes3-often4-Regularly5-Always

Physical Wellbeing – How often do you:

1. Eat a whole foods-based diet rich in colourful fruits and vegetables, drink enough water எல்லா வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள், தேவையாள தன்னீர் எடுத்து கொள்கிறீர்களா?

2. Exercise for more than 20 minutes தினமும் உடற்பயிற்சி 20 நிமிடத்திற்கு மேல் செய்கிறீர்களா?

3. Wake feeling refreshed from sleep தூக்கத்திலிருந்து புத்துனர்ச்சியுடன் எழுந்திருக்கிறீர்களா?

4. Engage in stress-reducing activities (excluding TV or screen time) மன அழுத்தத்தை குறைக்கும் காரியங்களில் ஈடுபடுத்தி கொள்ளுகிறீர்களா? இவை தவிர (mobile tv, laptop )

5. Spend time in nature.‌ இயற்கையோடு நேரம் செலவு பண்ணுகிறீர்களா?

Emotional Wellbeing – Do You:

1. Give and receive affection regularly? பிறருக்கு அன்பு காட்டுவதும், பிறர் உங்களுக்கு அன்பு காட்டுவதும் வழக்கமாக இருக்கிறதா?

2. Feel gratitude on a daily basis? தினமும் நன்றியுணர்வை உணர்கிறீர்களா?

3. Find meaning in life even during difficult times? கடினமான காலங்களிலும் வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டறிய முடிகிறதா?

4. Treat yourself with kindness? உங்களை அன்புடன் நடத்துகிறீர்களா?

5. Remember to make your dreams and goals a priority? உங்கள் கனவுகளையும் இலட்சியங்களையும் முக்கியத்துவப்படுத்த மறக்காமல் இருக்கிறீர்களா?

Ministry life-Do you

1. Find a sense of meaning and enjoyment in your work? உங்கள் வேலையில் தொழில் அர்த்தத்தையும் மகிழ்ச்சியையும் காண்கிறீர்களா?

2. Empathize and connect with believers, new people and co-pastors? விசுவாசிகள் புதிய மக்கள் மற்றும் சக போதகர்களுடன் உணர்வுகளை புரிந்து தொடர்பு கொள்ளுகிறீர்களா?

3. Have confidence in your ability to address challenges in your ministry life? உங்கள் ஊழிய வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ளும் திறனில் உங்களுக்கு நம்பிக்கையுள்ளதா ?

4. Have someone you can rely on if you need help or guidance? உங்களுக்கு உதவி அல்லது வழிகாட்டுதல் தேவைப்பட்டால் நீங்கள் நம்பக்ககூடிய ஒருவர் இருக்கிறார்களா?

5. Take vacation or holiday breaks to allow for some down time? சோர்வான தளர்ந்த நேரங்களில் விடுமுறை அல்லது ஓய்வு எடுத்துக் கொள்ளுகிறீர்களா?

Social life-Do you

1. Have a dependable person who listens to you? உங்கள் பேச்சைக் கேட்கும் நம்பகமான நபர் இருக்கிறாரா?

2. Get enough social time with people who make you happy? உங்களை மகிழ்விப்பவர்களுடன் போதுமான நேரத்தை செலவிடுகிறீர்களா?

3. Spend time with people who make you laugh? உங்களை சிரிக்க வைப்பவர்களுடன் நேரத்தை செலவிடுகிறீர்களா?

4. Have the ability to comfortably say no? இல்லை அல்லது இயலாது என்று சொல்லும் திறன் உள்ளதா?

5. Do something fun with family or fiends at least once a week? வாரத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு சேர்ந்து சந்தோஷமாக நேரம் செலவு பண்ணுவதுண்டா?

6. Feel like your personal life brings balance to your professional life? உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை கொண்டு உங்கள் அலுவலக வாழ்க்கையை சம நிலையாக வைத்திருக்க முடிகிறதா?

7. Feel comfortable asking for help when you need it? உங்களுக்கு உதவி தேவைபடுகிறபோது மற்றவர்களிடம் தயக்கமில்லாமல் கேட்க முடிகிறதா?

The higher the score, the better you may be at taking time for self-care and wellness in each aspect of your life. Trying to improve your scores can help creat more balance in your life.Consider items on which you scored 3 or lower. How can you modify your behaviour to improve your self-care practices? What goals might you need to set in order to make these changes?

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் மறுகூட்டல் இன்று வெளியீடு

+2 மறுகூட்டல் இன்று வெளியீடு

  • 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியாகும் என்று தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. தேர்வு துறையின் – www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மறுகூட்டல், மறுமதிப்பீடு குறித்த விவரங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். இந்த பட்டியலில் இடம்பெறாதவர்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இன்று (20 ஜூன் 2025) விமான சேவையில் ஏற்பட்ட முக்கிய கோளாறுகள்


🛫 சரிந்த விமான பயன்பாடுகள்

Air India – பல உள்நாட்டு மற்றும் சர்வதேச சேவைகள் அனுப்ப முடியாமல் இருத்தப்பட்டுள்ளன. கட்டாய பராமரிப்பு, வானிலை காரணமாக குறைபாடு ஏற்பட்டுள்ளது மற்றும் ஏழு முதல் ஒன்பது வரை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது .

தனித்துறை விமானங்களில் Boeing 787/777 மாடல்கள் பயன்படுத்தப்படுவதால் அவற்றிற்கான அதிகமான பராமரிப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

குறிப்பாக: டுபாய்–சென்னை (AI906), டெல்லி–மெல்போர்ன் (AI308), மெல்போர்ன்–டெல்லி (AI309), டுபாய்–ஹைதராபாத் (AI2204) சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன .

SpiceJet – ஹைதராபாத்திலிருந்து Renigunta (Tirupati அருகில்) புறப்பட்ட விமானம் தெஜ்னீக்கு பறக்கும் பத்தே நிமிடங்கள் கழித்து தொடர்ந்தது. எட்டுப்பேர்கள் நலமாக இருக்கின்றனர் .


🛩️ சென்னை (MAA) விமான நிலைய தடைகள்

Chennai விமான நிலையத்தில் தற்போது பரவலான தாமதங்கள் குறைவு; இது சிறந்த நிலையை காட்டுகிறது .

ஆனால் Air India மற்றும் SpiceJet சில விமானங்கள் சென்னை–டெல்லி, சென்னை–மும்பய், சென்னை–தூத்துக்குடி, ஹைதராபாத்–சென்னை வழிகள் ரத்து செய்யப்பட்டன .


🧭 ஏன் இத்தகைய கோளாறு?

  1. Boeing 787 விமானங்களின் பராமரிப்பு சோதனை:

12 ஜூன் AI171 விமான விபத்துக்குப் பிறகு டிஜிஏசிஏ ஆரோக்கிய ஆய்வுகளை அதிகரித்தது .

  1. வானிலை மற்றும் வானப் பாதை கட்டுப்பாடுகள்:

மධ්‍යமத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா–கிழக்கு ஆசிய வான்பாதையில் கட்டுப்பாடுகள் உள்ளன .

  1. சாதாரண பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள்:

சில விமானங்கள் (இயந்திர பிரச்சினைகள் போன்றவை) பறக்க முடியாமல் கொண்டிருந்தன .


✅ பாதிக்கப்பட்ட பயணிகளுக்கான ஆலோசனைகள்

பரிந்துரை பகுதி விளக்கம்

சமீபத்திய தகவல்களை பார் உங்கள் விமான நிலைய செயல்பாட்டிற்கான அதிகாரப்பூர்வ App அல்லது இணையதளத்தில் (அல்லது உங்கள் விமான நிறுவனம்) செல்லவும்
மாற்று வழி ஏற்பாடுகள் Air India – ரீபுக்கிங், ரீஃபண்ட் குறித்த செயல்களை வழங்குகிறது
விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நேரம் தவறாமல், முன்கூட்டியே சென்று நிலையை சரிபார்க்கவும்
மதிப்பிட்ட கையாளுவோரிடம் தொடர்பு விமான நிலைய உதவி அல்லது Airline counters–ல் செல்லவும்


✈️ சுருக்கமாக:

இன்று (20 ஜூன் 2025) Air India பல விமானங்களை பராமரிப்பு மற்றும் வானிலை காரணங்களால் ரத்து செய்துள்ளது.

SpiceJet Q400 விமானம் வழித்தவறி திரும்பியது, ஆனால் பயணிகள் பாதுகாப்பாக இருக்கின்றனர்.

சென்னை விமான நிலையம் தாமதங்கள் மிகவும் குறைவாகச் செயல்படுகிறது, ஆனால் Air India மற்றும் SpiceJet–ஐ தொடர்ந்து த்ருக்கு பாதிக்கப்பட்டுள்ளது.


🛠️ சிவப்பு அடிப்படையிலான நடவடிக்கை:

உங்கள் விமானங்கள் அல்லது பயணங்கள் இன்று பாதிக்கப்பட்டிருந்தால்:

  1. Airline–இன் அதிகாரப்பூர்வ தகவல்தளத்தை மீண்டும் சரிபார்க்கவும்
  2. ரீபுக்கிங்/ரீஃபண்ட்–க்கு உடனடியாக முடிவு எடுக்கவும்
  3. விமான நிலைய உதவி/எயர்லைன் டெஸ்க்–க்கு முன்கூட்டியே சென்று தேவையான உதவி பெறவும்

பள்ளிகளுக்கு 115 நாட்கள் விடுமுறை

பள்ளிகளுக்கு 115 நாட்கள் விடுமுறை

2025-26 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “2025-26 ஆம் கல்வியாண்டின் மொத்த வேலை நாட்கள் 210. அனைத்து சனி, ஞாயிறு விடுமுறை, அரசு விடுமுறை, காலாண்டு, அரையாண்டு மற்றும் கோடை விடுமுறை என அனைத்தும் சேர்த்து 115 நாட்கள் விடுமுறை ஆகும். இதுதவிர உள்ள நாட்கள் தேர்வுகள் நடைபெறும் நாட்களாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மகளிர் உரிமை தொகை டெபாசிட்! என்ன மகிழ்ச்சியா?

பெண்களின் வங்கிக் கணக்கில், மாதந்தோறும் 15-ம் தேதி மகளிர் உரிமைத் தொகையான ₹1,000 அரசால் டெபாசிட் செய்யப்படும்.

அதன்படி நாளை 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும். அதனால் இன்று பெண்களின் வங்கிக் கணக்கில் ₹1,000 டெபாசிட் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான எஸ்எம்எஸ் வந்ததும் ₹1,000 டெபாசிட் செய்யப்பட்டதை பெண்கள் தெரிந்து கொள்ளலாம்

இவர்களை விட்டு விலகுங்கள் அது உங்களுக்கு நல்லது

கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வரும்

மனிதர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவனறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேசத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்

இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.2 தீமோத்தேயு 3:1-5

இன்றைய கிறிஸ்தவத்தில் இவ்வசனம் 100% அப்படியே நிறைவேறிவிட்டதை நாம் பார்த்து வருகிறோம்.ஆக, இப்படிப்பட்டவர்களை விட்டு விலகுங்கள். அது உங்களுக்கு நல்லது.

அகமதாபாத் விமான விபத்து… டாடா நிறுவனத்திற்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு

ஏர் இந்தியா விமான விபத்தைத் தொடர்ந்து, குறிப்பிட்ட ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த டாடா நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘போயிங் 787- 8 டிரீம்லைனர்’ விமானம் விபத்திற்குள்ளானதில், அதில் இருந்த 242 பேரில் 241 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகலை ஏற்படுத்தியுள்ள சூழலில், இது ”டாடா குழும வரலாற்றின் இருண்ட நாள்…” எனக் குறிப்பிட்டுள்ளார் அக்குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன்.

இந்த நிலையில், ’ஏர் இந்தியா’ நிறுவனம் இயக்கும் ‘போயிங் 787- 8’, ‘போயிங் 787- 9’ ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, எரிபொருள் சோதனை, கேபினின் காற்றழுத்தம், எலக்ட்ரானிக் என்ஜின் கட்டுப்பாடு சார்ந்த அமைப்புகள், Take off தொடர்பான சோதனை, ஹைட்ராலிக் சோதனை உள்ளிட்ட 6 வகையான சோதனைகளை விமானம் புறப்படும் முன்பு மேற்கொள்ள வேண்டும் எனவும், விமான கட்டுப்பாட்டு ஆய்வுகளை மறு உத்தரவு வரும் வரை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மின்னணு கட்டுப்பாடு சார்ந்த அமைப்புகளை 15 நாட்களுக்கு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான அறிக்கையை விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே, அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை ஏர் இந்தியா தலைமைச் செயல் அதிகாரி காம்பெல் வில்சன் சந்தித்துப் பேசினார்.  சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, விமான விபத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் காம்பெல் வில்சன் விவரித்ததாகக் கூறப்படுகிறது

திருச்செந்தூர் தனியார் பள்ளி முதல் மாடியிலிருந்து 9 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சி

திருச்செந்தூர் மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் ஆகாஷ் (14). இவர் திருச்செந்தூரில் உள்ள செந்தில்குமரன் என்ற தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். பள்ளி திறந்த நாள் முதல் பள்ளிக்குச் சென்று வரும் ஆகாஷிடம் ஆசிரியர்கள் வீட்டுப்பாடம் உள்பட பள்ளி பாடங்களை முறையாக படிக்க வேண்டும் மற்ற மாணவர்களை விட ஆகாஷை கடுமையாக நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவன் ஆகாஷ் மன உலைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது பெற்றோரிடம் மாணவன் கூறியுள்ளார். இதையடுத்து இன்று (ஜூன் 13) பள்ளியில் ஆசிரியர்களை பார்த்து விபரத்தை கூறுவதாக பெற்றோர் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலையிலும் பள்ளி வகுப்பையில் வைத்து மாணவனை பள்ளி ஆசிரியர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவன் காலை 9.50 மணியளவில் பள்ளியின் முதல் தளத்தில் இருந்து திடீரென ஆகாஷ் கீழே குதித்துள்ளார். இதில் அவருக்கு முதுகு மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாணவன் ஆகாஷை கார் மூலம் திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வெளியே வந்த மாணவன் பள்ளியில் அதிக அளவு டார்ச்சர் செய்வதாக கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா போலீசார் பள்ளி முதல்வர் சத்யா மற்றும் ஆகாஷின் வகுப்பு ஆசிரியர் பொன்ராணி உள்பட ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீட்(UG) நுழைவுத் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது!

MBBS, BDS உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட்(UG) நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது. தேர்வர்கள் www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் ‘NEET UG 2025 RESULT’ என்ற லிங்க்கை கிளிக் செய்து உங்களது விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வேர்டை பதிவிட்டு முடிவுகளை அறியலாம். கடந்த 4-ம் தேதி நடைபெற்ற இந்தத் தேர்வை தமிழகத்தை சேர்ந்த 1.5 லட்சம் பேர் உள்பட நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.