• Thursday 6 November, 2025 05:04 AM
  • Advertize
  • Aarudhal FM

இந்து கோயிலாக மாறிய கிறிஸ்தவ தேவாலயம்

ராஜஸ்தான் கிராம மக்கள் மீண்டும் இந்துக்களாக மாறியதால் கோயிலாக மாறிய தேவாலயம்

அர்ச்சகராக மாறிய கிறிஸ்தவ மத போதகர்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ் வாரா மாவட்டம் சோட்ல குடா கிராமத்தில் பழங்குடியின மக் கள் அதிகளவில் வசிக்கின்றனர்.கவுதம் கராசியா என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றி உள்ளார். இதையடுத்து அந்த கிராமத்தில் தனக்கு சொந்தமான இடத்தில் தேவாலயம் (சர்ச்) கட்டி பிரார்த்தனை செய்து வந் துள்ளார்.இந்த சூழ்நிலையில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய கிராம மக்கள் மீண்டும் இந்து மதத்துக்கு மாற முடிவு செய்தனர். இதையடுத்து, தேவாலயத் துக்கு காவி வண்ணம் தீட்டினர். சுவரில் இருந்த சிலுவை குறி யீட்டை அழித்துவிட்டு இந்து மத குறியீடுகளை வரைந்துள்ளனர்.இந்நிலையில், அந்த கோயி லில் பைரவர் சிலை பிரதிஷ்டை விழா நேற்று முன்தினம் நடை பெற்றது. முன்னதாக, அந்த சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட் டனர். கிறிஸ்தவ மத போதக ராக இருந்த கவுதம், இந்தக் கோயிலின் அர்ச்சகராக இருப் பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு அந்த கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

மிளகாய் பொடி தூவி, கழுத்தை மிதித்து கணவர் கொலை!

மிளகாய் பொடி தூவி, கழுத்தை மிதித்து கணவர் கொலை!

திருமணத்தை மீறிய உறவு, குடும்பங்களை சிதைத்து வருகிறது. அப்படியொரு சம்பவம் கர்நாடகாவின் காடஷெட்டிஹள்ளியில் நடந்துள்ளது. காதலருடன் சேர்ந்து கணவரின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, பின்னர் தனது கால்களால் கழுத்தை மிதித்து மனைவி கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சடலத்தையும் கோணியில் கட்டி 30 கி.மீ அப்பால் எடுத்துச் சென்று வீசி வந்ததையும் கைதான மனைவி ஒப்புக் கொண்டுள்ளார்.

மனைவியை கொன்று சடலத்துடன் உறங்கிய கணவன்

கன்னியாகுமரி கருங்கல் பகுதியில் நடந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மனைவியை கொன்றுவிட்டு சடலத்தின் அருகே 12 மணி நேரம் உறங்கிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்ததால் மரியாதை கிடைக்கவில்லை என்றும், மதுபோதையில் இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கொஞ்ச நேர கோபம் என்ன பண்ணிருக்கு பார்த்தீங்களா?

வாய், மூக்கில் ரத்தம்… பள்ளியில் 7 வயது மாணவன் மரணம்

காலையில் மகிழ்ச்சியாக பள்ளி சென்ற சிறுவன், மாலையில் உயிரிழந்த சம்பவம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடந்துள்ளது. தனியார் CBSE பள்ளியில் 2-ம் வகுப்பு பயின்ற மாணவனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் சென்றபோது, வாய், மூக்கில் ரத்தம் கசிந்தவாறு மாணவன் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இறப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மொபைல் பார்த்துட்டே சாப்பிடுபவர்களா நீங்க? இந்த விளைவுகளை சந்திக்க தயாராகிக்கோங்க

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மொபைல் போன்களில் மூழ்கி இருப்பதை பார்த்து வருகிறோம். வேலை செய்யும் போது, சாப்பிடும் போது என அனைத்து அன்றாட செயல்முறைகளின் போதும் மொபைல் போன்களைப் பார்ப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. அதிலும் தூங்கும் முன் செல்போன் பார்க்கும் பழக்கத்திற்கு பலரும் அடிமையாகி விட்டனர்.

மொபைல் போன்கள் மட்டுமல்லாமல் மடிக்கணினி, தொலைக்காட்சி பார்ப்பது அல்லது வேறு சில திரைகளைப் பார்ப்பது பொதுவானதாக மாறிவிட்டது. ஆனால், சாப்பிடும் போது இந்த திரைகளைப் பார்ப்பது மிகவும் கெடுதலாகும். சாப்பிடும் போது மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் சில பக்கவிளைவுகளைக் காணலாம்.

சாப்பிடும் போது மொபைல் பயன்படுத்துவதன் பக்க விளைவுகள்

உணவு உண்ணும் போது மொபைல் போனைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானதாகும். இதில் உணவு உண்ணும் சமயத்தில் மொபைல் போனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் சிலவற்றைக் காண்போம்

கவனச்சிதறல்

உணவு உண்ணும் போது, டிவி பார்ப்பது, மொபைல் போன் பார்ப்பது போன்றவற்றால் மூளை திசைதிருப்பப்படுகிறது. இதனால் சாப்பிடுவதில் கவனம் இல்லாமல் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. உணவை சரியான முறையில் கவனத்துடன் உட்கொள்வதன் மூலம் மட்டுமே உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற முடியும்.

அஜீரணக் கோளாறு

தொலைக்காட்சி, மொபைல் பயன்பாட்டின் போது சாப்பிடுவதால் சில சமயங்களில் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் இல்லாமல் போகலாம். இதனால் செரிமான கோளாறு ஏற்படுகிறது. இந்த சமயத்தில் உடலால் உண்ணப்படும் உணவின் அளவையோ அல்லது எந்த வகையான உணவையோ சரியாக செரிமானம் செய்ய முடியவில்லையெனில் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

உடல் பருமன் பிரச்சனை

தொலைக்காட்சி அல்லது மொபைல் பார்க்கும் போது எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்த முடியாமல் அதிகம் சாப்பிடும் நிலை ஏற்படலாம். இதனால் சில சமயங்களில் அதிகளவு உணவு உட்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு அதிகம் உணவு உட்கொள்வது உடல் பருமன் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

திருப்தியில்லாமல் இருப்பது

மனம் ஒரே நேரத்தில் இரு விஷயங்களில் கவனம் செலுத்தும் நிலையில், ஒன்றை மட்டும் சரியாக அனுபவிக்க முடியாத நிலை ஏற்படலாம்.

குறைந்த வளர்ச்சிதை மாற்றம்

சாப்பிடும் போது திரைகளைப் பார்ப்பது வளர்ச்சிதை மாற்ற விகிதத்தைக் குறைக்கிறது. இதனால் உணவு மெதுவாக செரிமானம் அடையலாம். மேலும், உடலில் கொலஸ்ட்ராலும் மெதுவாக கரைகிறது.

இவ்வாறு மொபைல், டிவி, மடிக்கணினி போன்ற பல்வேறு திரைகளைப் பார்ப்பது பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

உதவி செய்து மகிழுங்கள் சாதனையாளர்களாக மாறுங்கள்

1896 ஆம் ஆண்டில், மின்சார விளக்கைக் கண்டுபிடித்த சிறந்த கண்டுபிடிப்பாளரான தாமஸ் எடிசன், ஒரு காரை வடிவமைக்கும் யோசனையில் வேலை செய்து கொண்டிருந்தார், அவர் தம்மிடம் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் ஒரு சோதனை காரை உருவாக்கி இருப்பதைக் கேள்விப்பட்டார்.

எடிசன் அந்த இளைஞனை நியூயார்க்கில் நடந்த தனது நிறுவனத்தின் பார்ட்டியில் சந்தித்து கார் பற்றி கேட்டறிந்தார். அவர் அவனது ஐடியாக்களால் ஈர்க்கப்பட்டார்! அந்த இளைஞனைப் போலவே அவருக்கும் ஒரு காரை வடிவமைக்கும் அதே யோசனை இருந்தது.

எடிசன் மின்சார ஆற்றல் மூலமாக அந்த காரை இயக்கும் ஐடியாவில் இருந்தார், ஆனால் அந்த இளைஞன் காரை இயக்குவதற்கு பெட்ரோல் எஞ்சினைப் பயன்படுத்தப்போதாக கூறினான். அவர் ஆச்சர்யத்தில் தனது கையை மேஜை மீது குத்தி, “இளைஞரே, அபாரம், உண்மையில் உனது யோசனை சிறப்பானது. வெற்றிக்கான விஷயங்கள் அனைத்தும் உங்களிடம் உள்ளது! நீங்கள் பெரிய வெற்றி பெறுவீர்கள்” என்றார்.அந்த நேரத்தில் அமெரிக்காவில் மிகவும் மதிக்கப்படும், கொண்டாடப்படும் கண்டுபிடிப்பாளரின் இந்த ஊக்கமூட்டும் வார்த்தைகளால், ஹென்றி ஃபோர்டு தனது வேலையைத் தொடர்ந்தார், ஒரு காரைக் கண்டுபிடித்தார், பிறகு ஒரு கார் தொழிற்சாலையை தொடங்கினார். பெரும் பணக்காரர் ஆனார்.

டிசம்பர் 9, 1914 அன்று, எடிசனின் ஆய்வகம் மற்றும் தொழிற்சாலை தீக்கிரையானது. அவர் 67 வயதானவர் மற்றும் காப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை. எறியும் சாம்பல் அடங்கும் முன், ஹென்றி ஃபோர்டு 7,50,000 டாலர்களுக்கான காசோலையை எடிசனிடம் கொடுத்தார், உங்களுக்கு மேலும் தேவைப்பட்டாலும் உதவ நான் இருக்கிறேன், என்று கூறிச் சென்றார்.1916 ஆம் ஆண்டில், ஹென்றி ஃபோர்டு தனது வீட்டை எடிசனின் வீட்டிற்கு அடுத்த கட்டிடத்திற்கு மாற்றினார்,

சிறிது காலத்தில் எடிசன் நடக்க முடியாமல் சாய்வு நாற்காலியில் அவரது மருத்துவர்களால் உட்கார வைக்கபட்டபோது, ஹென்றி ஃபோர்டு தனது வீட்டில் ஒரு சக்கர நாற்காலியை வாங்கினார், தனது நண்பர் மற்றும் வழிகாட்டிக்காக, அவர் அங்கும் இங்கும் நகர வேண்டும் என்பதற்காக தமது வீட்டில் பெரிய அறையை நிறுவினார்.எடிசன், ஹென்றி ஃபோர்டுக்கு தனது பலத்தை உணர்த்தினார், தன்மீது ஹென்றிக்கு நம்பிக்கை வர காரணமாக இருந்தார். அதனால் வாழ்நாள் முழுவதும் தமக்கான ஒரு நல்ல நண்பரைப் பெற்றார்!

பாடம் :மற்றவர்களின் வெற்றியைக் கண்டு பொறாமை கொள்ளாதீர்கள். உங்களால் பந்தயத்தில் வெற்றிபெற முடியாவிட்டால், சாதனையை முறியடிக்க உங்களுக்கு முன்னால் ஓடுபவர்களுக்கு உதவுங்கள்!உங்கள் மெழுகுவர்த்தி மற்றொரு மெழுகுவர்த்தியை ஏற்றும்போது அதன் ஒளியை இழக்காது!

பெற்ற மகளை அடித்தே கொன்ற கொடூரத் தந்தை!

மகாராஷ்டிராவில் பெற்ற மகளை தந்தையே அடித்துக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. +2 மாணவி சாதனா(17) நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். அதற்கான மாதிரி தேர்வில் குறைவாக மார்க் எடுத்ததால், ஆசிரியரான அவரது தந்தை போன்ஸ்லே ஆத்திரத்தில் பிரம்பால் தாக்கியுள்ளார். இதில், தலையில் காயமடைந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மார்க் வேண்டுமா? மகள் வேண்டுமா? பெற்றோரே சிந்தியுங்கள்..!

காயல்பட்டினத்தில் தீப்பற்றி எரிந்த கார்

திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள காயல்பட்டினம் பகுதியில் உள்ள அம்பலமரைகாயர் தேர்வு பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் கார் ஒன்று தீ பற்றி எரிந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அப்பகுதி மக்கள், உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் வந்து தீயை கட்டுப்படுத்தினர்.

SELF CARE QUESTIONNAIR

Research shows that people who take time to recharge and restore are more creative happier and more successful. This questionnaire will help you identify the areas of your life that are well-tended, and those that could use more time and attention. This is not meant to be a diagnostic assessment. Instead, it is a tool to help you see what you are doing to care for yourself. There are no right or wrong answers to these questions and some of them may require a bit of thought. Take your time and answer each question to the best of your ability based on your self-care practices right now.

For the following question please rank each item on a scale of 0-50-Never1-Rarely2-sometimes3-often4-Regularly5-Always

Physical Wellbeing – How often do you:

1. Eat a whole foods-based diet rich in colourful fruits and vegetables, drink enough water எல்லா வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள், தேவையாள தன்னீர் எடுத்து கொள்கிறீர்களா?

2. Exercise for more than 20 minutes தினமும் உடற்பயிற்சி 20 நிமிடத்திற்கு மேல் செய்கிறீர்களா?

3. Wake feeling refreshed from sleep தூக்கத்திலிருந்து புத்துனர்ச்சியுடன் எழுந்திருக்கிறீர்களா?

4. Engage in stress-reducing activities (excluding TV or screen time) மன அழுத்தத்தை குறைக்கும் காரியங்களில் ஈடுபடுத்தி கொள்ளுகிறீர்களா? இவை தவிர (mobile tv, laptop )

5. Spend time in nature.‌ இயற்கையோடு நேரம் செலவு பண்ணுகிறீர்களா?

Emotional Wellbeing – Do You:

1. Give and receive affection regularly? பிறருக்கு அன்பு காட்டுவதும், பிறர் உங்களுக்கு அன்பு காட்டுவதும் வழக்கமாக இருக்கிறதா?

2. Feel gratitude on a daily basis? தினமும் நன்றியுணர்வை உணர்கிறீர்களா?

3. Find meaning in life even during difficult times? கடினமான காலங்களிலும் வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டறிய முடிகிறதா?

4. Treat yourself with kindness? உங்களை அன்புடன் நடத்துகிறீர்களா?

5. Remember to make your dreams and goals a priority? உங்கள் கனவுகளையும் இலட்சியங்களையும் முக்கியத்துவப்படுத்த மறக்காமல் இருக்கிறீர்களா?

Ministry life-Do you

1. Find a sense of meaning and enjoyment in your work? உங்கள் வேலையில் தொழில் அர்த்தத்தையும் மகிழ்ச்சியையும் காண்கிறீர்களா?

2. Empathize and connect with believers, new people and co-pastors? விசுவாசிகள் புதிய மக்கள் மற்றும் சக போதகர்களுடன் உணர்வுகளை புரிந்து தொடர்பு கொள்ளுகிறீர்களா?

3. Have confidence in your ability to address challenges in your ministry life? உங்கள் ஊழிய வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ளும் திறனில் உங்களுக்கு நம்பிக்கையுள்ளதா ?

4. Have someone you can rely on if you need help or guidance? உங்களுக்கு உதவி அல்லது வழிகாட்டுதல் தேவைப்பட்டால் நீங்கள் நம்பக்ககூடிய ஒருவர் இருக்கிறார்களா?

5. Take vacation or holiday breaks to allow for some down time? சோர்வான தளர்ந்த நேரங்களில் விடுமுறை அல்லது ஓய்வு எடுத்துக் கொள்ளுகிறீர்களா?

Social life-Do you

1. Have a dependable person who listens to you? உங்கள் பேச்சைக் கேட்கும் நம்பகமான நபர் இருக்கிறாரா?

2. Get enough social time with people who make you happy? உங்களை மகிழ்விப்பவர்களுடன் போதுமான நேரத்தை செலவிடுகிறீர்களா?

3. Spend time with people who make you laugh? உங்களை சிரிக்க வைப்பவர்களுடன் நேரத்தை செலவிடுகிறீர்களா?

4. Have the ability to comfortably say no? இல்லை அல்லது இயலாது என்று சொல்லும் திறன் உள்ளதா?

5. Do something fun with family or fiends at least once a week? வாரத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு சேர்ந்து சந்தோஷமாக நேரம் செலவு பண்ணுவதுண்டா?

6. Feel like your personal life brings balance to your professional life? உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை கொண்டு உங்கள் அலுவலக வாழ்க்கையை சம நிலையாக வைத்திருக்க முடிகிறதா?

7. Feel comfortable asking for help when you need it? உங்களுக்கு உதவி தேவைபடுகிறபோது மற்றவர்களிடம் தயக்கமில்லாமல் கேட்க முடிகிறதா?

The higher the score, the better you may be at taking time for self-care and wellness in each aspect of your life. Trying to improve your scores can help creat more balance in your life.Consider items on which you scored 3 or lower. How can you modify your behaviour to improve your self-care practices? What goals might you need to set in order to make these changes?

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் மறுகூட்டல் இன்று வெளியீடு

+2 மறுகூட்டல் இன்று வெளியீடு

  • 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியாகும் என்று தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. தேர்வு துறையின் – www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மறுகூட்டல், மறுமதிப்பீடு குறித்த விவரங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். இந்த பட்டியலில் இடம்பெறாதவர்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.