நானே வழி நானே சத்தியம் நானே ஜீவன்

இயேசுவே ஒளியானவர் – அவரே வழியானவர்
அவரிடம் ஒளியை பெற்றுக் கொள்ளுங்கள்
வழியைக் கற்றுக் கொள்ளுங்கள்

ஆசிர்வதியும் கர்த்தரே- பாடல் பிறந்த கதை
இப்பாடல் ஒலிக்காத கிறிஸ்தவ திருமணங்களே இல்லை எனலாம். பிரசித்திப் பெற்ற அதே நேரத்தில் அர்த்தச் செறிவுள்ள இப்பாடல் தோன்றிய வரலாறு.1924 ஆம் ஆண்டிலே, இந்திய மிஷனெரி சங்கத்தின் முதல் மிஷனெரியும் பல கீர்த்தனைகளை இயற்றியவருமான அருள்திரு சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்களின் மகன் ஆடிட்டர் அசரியா பாக்கியநாதன் அவர்களுக்கு, சென்னை தூய எப்பா பள்ளியில் ஆசிரியையாக பணிகொண்டிருந்த யுனிஸ் அவர்களை திருமணம் செய்ய நிச்சயக்கப்பட்டது. மணமகளின் தகப்பனார் அருள்திரு. டி. எஸ்.டேவிட் ஐயரவர்கள் ஊழியம் செய்துகொண்டிருந்த பண்ணைவிளை ஆலயத்திலே திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.மணமகனின் உறவினர்கள் மருதகுளத்திலிருந்து பண்ணைவிளை வந்திருந்தார்கள்.திருமணத்திற்கு முந்தைய நாள் மதியம் மணமகனின் உறவினர்கள் பண்ணைவிளை வரும் வழியிலே பெருங்குளத்தில் தங்கி ஓய்வு எடுத்தார்கள். அந்த குளம் உயர்சாதியினர் மட்டுமே குளிக்கக் கூடிய குளம் என்பதை அறியாத அவர்கள் அதில் குளித்தார்கள். இதை அறிந்த அவ்வூரைச் சேர்ந்த உயர்சாதியினர் மணமகனின் உறவினர்களைச் சூழந்து கொண்டு பிரச்சனை செய்ய ஆரம்பித்தார்கள். அவர்களை விட தாழ்ந்த சாதியினரான மணமகனின் உறவினர் குளித்ததால் குளம் தீட்டுப்பட்டு விட்டதாகவும், அதனால் அவர்களின் விக்கிரகங்களை அதில் குளிப்பாட்ட இயலாது என்பதும் அவர்களின் குற்றச்சாட்டு. சிலமணி நேரங்களுக்குப் பிறகு இதைக் கேள்விப்பட்ட உள்ளூர் கிறிஸ்தவர்கள் எப்படியோ மணமகனின் வீட்டாரை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
இச்செய்தி மணமகனின் தந்தை அருள்திரு. சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்கள் காதை எட்டியபோது ஜனங்களின் மனக்கண்கள் சாத்தானால் குருடாக்கப்பட்டிருப்பதை நினைத்து வருந்தினார்.வீசிரோ வான ஜோதி கதிரிங்கே (இருளிலே நடக்கிற ஜனங்கள் வெளிச்சத்திலே நடக்கும்படி உம் ஒளியை வீசச் செய்வீராக) என்னும் வரியை மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருந்தார். அன்றைய நாள் சாயங்காலத்திலேயே முழுப்பாடலையும் எழுதி மறுநாள் மகனின் திருமணத்தில் பாடினார்கள்.
ஒவ்வொரு முறையும் இப்பாடலைப் பாடும் போது, நம்முடைய வாழ்வின் இருளை நீக்க, உலகின் ஒளியாக வந்த இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற பாரத்துடன் எழுதப்பட்டதை நினைவு கூறுவோம்

நாடு முழுவதும் 24 மணிநேரத்தில் புதிதாக 498 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தில் புதிதாக 8 பேர் உட்பட 221 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். வீரியம் இல்லாத கொரோனா என விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், பலி அதிகரிப்பதால் மீண்டும் லாக்டவுன் ஏற்படுமோ என மக்கள் பீதியடைந்துள்ளனர்.

மூத்த குடிமக்களுக்காக மத்திய அரசு அடல் பென்சன் யோஜனாவை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் மாதந்தோறும் ₹5000 வரை ஓய்வூதியம் பெறலாம். ஏழைகள், பொருளாதாரத்தில் நலிவடைந்த தனிநபர்கள், அமைப்பு சாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் (18 – 40 வயதுக்குள்) இத்திட்டத்தில் இணையலாம். இத்திட்டத்தில் தினம் ₹7 வீதம் மாதம் ₹210 முதலீடு செய்தால், 60 வயதை அடையும் போது, ஓய்வூதியமாக ₹5000 வீடு தேடி வரும்.

🔴ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான “8 போடுதல்” பயிற்சி – அதன் பின்னணி தெரியுமா?ஓட்டுநர் உரிமம் (Driving Licence) என்பது, பொதுவெளியில் வாகனம் ஓட்ட உத்தியோகபூர்வமாக அனுமதி தரும் ஆவணம். இந்த உரிமத்தைப் பெறுவதற்கான ஒரு முக்கியத் தேர்வாகவே “8 போடுதல்” பயிற்சி (Figure-8 Test) RTO அலுவலகத்தில் நடத்தப்படுகிறது.
🔴எதற்காக ‘8’ வடிவத்தில் வண்டி ஓட்டச் சொல்கிறார்கள்?
8 என்ற எண் வடிவத்தில் வண்டி ஓட்டச் சொல்வதற்கான காரணம், ஓட்டுநரின் இயக்கத் திறனையும், நிலைத்தன்மையையும் சோதிப்பதற்காக ஆகும். இது ஒரு சவாலான பயிற்சி:
🔹வலப்பக்கம், இடப்பக்கம் திருப்புதல் திறன்
🔹குறைந்த இடைவெளியில் வாகன கட்டுப்பாடு
🔹பாதுகாப்பான யூ-டர்ன் பழக்கவழக்கம்
🔹பதட்டமின்றி வாகனம் ஓட்டும் மனநிலை
🔴ஏன் 8 என்ற வடிவம்?
🔹8 என்பது தொடக்கமும் முடிவும் இல்லாத தொடரும் வடிவம்.
🔹இந்த வடிவத்தில் வாகனத்தை ஓட்டுவது சாலையில் வரும் வளைவுகளுக்கும், கடுமையான சுழற்சி திருப்பங்களுக்கும் தயாராக வைத்துக்கொள்ளும் பயிற்சி.
🔹சைக்கிள் அல்லது டூ வீலர் ஓட்டும் பொழுது, கால்கள் தரையில் பதியாமல் வாகனத்தை நிலைபேறாக கட்டுப்படுத்தி சுழற்ற வேண்டும்.
🔹இது ஓட்டுநரின் பாதுகாப்பு, கவனம், திறமை ஆகியவற்றின் அளவுகோலாக பார்க்கப்படுகிறது.
🔴முக்கிய குறிப்பு:
🔹சிலர் “8 போடாமல்” விலக்குகள் தேட முயற்சிக்கிறார்கள். ஆனால், இது பாதுகாப்பு கற்றலுக்கே உங்களுக்கே தேவையானது என்பதை உணருங்கள்.
🔹“8 போடுதல்” என்பது உரிமம் பெறுவதற்கான ஒரு தேவை மட்டுமல்ல, வாழ்க்கை பாதுகாப்புக்கான முன்னோடியும் ஆகும்
🔴விளக்கம்:ஓட்டுநர் உரிமம் பெறும் முன் செய்யும் “8 போடுதல்” ஒரு கணித வடிவத்தைக் காட்டும் பயிற்சி அல்ல. அது ஒரு பயிற்சி வடிவம். இது, முன்னேற்பாடான சாலை பயணத்திற்கான அறிவாற்றலை வளர்க்கும் பயிற்சி.-