• Thursday 6 November, 2025 05:08 PM
  • Advertize
  • Aarudhal FM

TN 12th Result 2025: சாலை விபத்தில் உயிரிழந்த மாணவன் +2 தேர்வில் தேர்ச்சி.. சோகத்தில் குடும்பத்தினர்

வேடசந்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 12-ம் வகுப்பு மாணவன் பொது தேர்வில் 443 மதிப்பெண்கள் பெற்றார்.

தமிழகத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றன. பிளஸ் 2 தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள், 3316 தேர்வு மையங்களில் எழுதியிருந்தனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்கூட்டியே இன்றே வெளியாகியுள்ளன. தமிழகத்தில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 91.94 சதவீதமும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.71 சதவீதமும் தனியார் பள்ளிகளில் 98.88 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் +2 தேர்வு எழுதியவர்கள் 20,725அதில் மாணவர்கள் 9,716 பேர், மாணவிகள் 11,009. இத்தேர்வில் 19,668 பேர் தேர்ச்சி  பெற்றுள்ளனர். தேர்வு எழுதியதில் மொத்தம் 94.90% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களும், 92.70% பேரும், மாணவிகளும் 96.84% தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 94.90% தேர்ச்சி பெற்று தமிழக அளவில்  20வது திண்டுக்கல் மாவட்டம் இடத்தில் உள்ளது. 

இந்த நிலையில், திண்டுக்கல், வேடசந்தூர் அருகே உள்ள மல்வார்பட்டி ஊராட்சி ஒத்தையூரை சேர்ந்தவர்கள் பாலமுருகன் அமராவதி தம்பதி. பாலமுருகன் வேடசந்தூரில் கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ளார். அமராவதி வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சத்துணவு ஆர்கனைசராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சுகுமார் என்ற மகனும் சுபாஷினி என்ற மகளும் உள்ளனர். சுபாஷினி மாரம்பாடியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

சுகுமார்(18) திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் குரூப் படித்து பொதுதேர்வு எழுதி முடித்திருந்தார். இந்தநிலையில் கடந்த 6-ம் தேதி சுகுகுமார் இருசக்கர வாகனத்தில் வேடசந்தூர் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கி விட்டு ஊருக்கு திரும்பும் போது, தட்டாரப்பட்டி பிரிவு அருகே ஆட்டோ மோதி படுகாயம் அடைந்தார். அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் இருந்த சுகுமார் சிகிச்சை பலனின்றி கடந்த 21ஆம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் சுகுமார் 433 மதிப்பெண்கள் (74 சதவீதம்) பெற்றிருந்தார். சிறு வயது முதலே கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்ற கனவில் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், சாலை விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TN 12th Result 2025 Live : 95.03% பேர் தேர்ச்சி.. முதலிடத்தைப் பிடித்த அரியலூர்.. சாதித்து காட்டிய மாணவர்கள்!

TN Board 12th Result 2025 Live : தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9 மணிக்கு வெளியாகியது. மாணவர்கள் https://results.digilocker.gov.in/ மற்றும் https://tnresults.nic.in/ என்ற இணையதள முகவரிகள் மூலம் முடிவுகளை அறிந்துகொள்ளலாம். முடிவுகள் குறித்த உடனுகுடன் செய்தி இதில் நேரலையில் இந்த பதிவில் மூலம் வழங்கப்படுகிறது.

TN 12th Result 2025 at tnresults.nic.in : தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்களில் முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் முடிவுகளை https://tnresults.nic.in/https://results.digilocker.gov.in/ மற்றும் https://www.dge.tn.gov.in/ என்ற இணைய முகவரிகள் மூலம் ஆன்லைனில் அறிந்துகொள்ளலாம்.

இந்தாண்டு மாணவர்கள் – 3,47,670, மாணவியர்கள் – 4,05,472 என மொத்தம் 7,53,14 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டு மொத்தம் 95.03% தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு தேர்ச்சி 0.47% அதிகம் ஆகும். இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகள் 3.54 % அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு மதிப்பெண்கள் பட்டியல் வரும் மே 12-ம் முதல் விநியோகிக்கப்படும்.

வேதாகமும் அறிவியலும் 02 – மழை எப்படி பெய்கிறது?

அறிவியலுடன் வேதாகமத்தின் அரிய முத்துக்களை இணைத்து நோக்கும் இணையில்லா ஓர் தொகுப்பு இது..!

மேகங்கள் நிறைந்திருந்தால் பூமியின் மேல் புவியீர்ப்பு விசை மூலம் மழையாக பொழிகிறது என அறிவியல் சொல்வதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வேதாகாமத்தில் சொல்லப்பட்டுள்ளது

(பிரசங்கி :11:3)

மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின்மேல் பொழியும் (பிரசங்கி 11:3)

வேதாகமும், அறிவியலும்!! 01

நாம் விண்வெளியில் காணும் ஒவ்வொரு நட்சத்திரமும் வேறுபட்டது, அவைகள் தனித்துவமிக்கது என அறிவியல் இன்றளவும் சொல்லி வருகிறது. இதை நம் கைகளில் வைத்திருக்கும் பரிசுத்த வேதாகமத்தில் பல ஆண்டு முன்னதாகவே சொல்லப்பட்டிருக்கிறது

சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.(1 கொரிந்தியர் 15:41)

நம் திருச்சபையில் அரசாங்க வேலைக்கு காத்திருப்பவர்களுக்காக

✅TNPSC Group 1 Recruitment 2025
✅காலி இடங்கள்: 70 Deputy Collector, Deputy Superintendent of Police, District Employment Officer, Assistant Director of Rural Development, District Employment Officer, Assistant Commissioner of Labour Posts
✅உடனே விண்ணப்பிக்க Link: https://tamilanguide.in/tnpsc-recruitment-2025-70-group-1-posts-apply-now/
✅கல்வி தகுதி: Any Degree
✅இறுதி நாள்: 30.04.2025
💒 நமது திருச்சபையைச் சார்ந்த, பட்டப்படிப்பு படித்துள்ள அனைத்து பிள்ளைகளையும் இந்தத் தேர்வை எழுத ஊக்குவிக்கும்படி / வழிகாட்டும்படி அன்போடு வேண்டுகிறேன். 🙏

மியான்மார் நிலநடுக்கம் 1000க்கும் மேல் பலி இந்தியாவும் காரணம் என அறிக்கை

மியான்மர்: மியான்மரில் நேற்று ரிக்டர் அளவுகோலில் 7.7 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. மியான்மர் உருக்குலைந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், மியான்மரில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கும், இந்தியாவுக்கும் புவி அமைப்பு அடிப்படையில் ஒரு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று மியான்மர். வடகிழக்கு மாநிலங்களுடன் எல்லைகளை பகிர்ந்துள்ள மியான்மரில் நேற்று பகலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான நிலநடுக்கத்தால் தாய்லாந்தும் குலுங்கியது. மியான்மர் நாட்டின் நிலநடுக்க நகரமாக கருதப்படும் மண்டலே நகரத்தில் இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

பலி எண்ணிக்கை 1,000

அதைத்தொடர்ந்து 6.4 ரிக்டரில் மீண்டும் அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. கடுமையான இந்த நிலநடுக்கத்தால் மியான்மர் உருக்குலைந்தது. அண்டை நாடான தாய்லாந்தும் தப்பவில்லை. தாய்லாந்து தலைநகர் பாங்காக் பகுதியில் வானுயர்ந்த ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது. அந்த கட்டிடத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியானார்கள். அதே கட்டிடத்தில் பணியில் இருந்த 90 பேர் மாயமானார்கள். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

நிலநடுக்கத்தினால் கடிடங்கள் குலுங்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்கள் வைரலாகி வருகின்றன. நிலநடுக்கத்தால் மியான்மரில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மியான்மரில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கும் இந்தியாவுக்கும் புவி அமைப்பு அடிப்படையில் ஒரு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் வெளியிட்ட தரவுளின் விவரம் வருமாறு:-

மியான்மர் நாடு இரண்டு டெக்டானிக் பிளேட்டுகளுக்கு இடையே உள்ளது. அதாவது, இந்தியா மற்றும் யுரேசிய பிளேட்டுகளுக்கு இடையில் அமைந்து இருக்கிறது. இதனால், இந்த நாடு நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் அபாயம் மிக்க பகுதிகளில் இருக்கிறது. இந்தியா மற்றும் யுரேசிய பிளேட்கள் ஒன்றுக்கொன்று பக்கவாட்டில் உரசிக்கொண்டதே மியான்மரில் நேற்றைய தினம் ஏற்பட்ட அதிபயங்கர நிநடுக்கத்திற்கு காரனமாக சொல்லப்படுகிறது.

மியான்மரில் தொடர்ந்து நடக்கும் மீட்பு பணிமியான்மருக்கு பல்வேறு நாடுகளும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. இந்தியாவும் மியான்மருக்கு உதவ முன்வந்துள்ளது. ஆபரேஷன் பர்மா என்ற பெயரில் மியான்மருக்கான உதவி நிவாரண பணிகளை இந்தியா முன்னெடுத்துள்ளது. மியான்மருக்கு முதன் முதலில் ஆதரவுக்கரம் நீட்டிய நாடு இந்தியாதான் என்பது கவனிக்கத்தக்கது. இந்தியாவில் இருந்து நிவாரணப்பொருட்களுடன் குழுவினர் போர் விமானத்தில் மியான்மருக்கு சென்றுள்ளது.

சீனாவும், ரஷ்யாவும் மியான்மருக்கு மீட்புக் குழுவினரையும் உதவிகளையும் அளித்துள்ளது. பல்வேறு நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் அளித்து வந்த நிதியை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்துள்ள போதிலும், மியான்மர் பாதிப்புக்கு உதவிகள் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பின் அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து தொடர்ந்து மக்கள் மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்படுவது ஏன்

நாம் வாழும் இந்த பூமியானது மூன்று முக்கிய அடுக்குகளை கொண்டது. மேலோடு, மேன்டில், மற்றும் கோர் என மூன்று அடுக்குகள் உள்ளன. மேலோடு பூமியின் வெளிப்புறப் பகுதி, மேன்டில் நடுப்பகுதி, மற்றும் கோர் பூமியின் மையப் பகுதியாக உள்ளது. மேலோடு எனப்படும் பூமியின் மேற்பரப்பு பல பெரிய தட்டுகளால் ஆனது. இந்த தட்டுகள் நகரும்போது ஏற்படும் உராய்வு மற்றும் அழுத்தம் காரணமாக, பாறைகள் உடைந்து ஆற்றல் வெளியிடுகிறது. இவை நிலநடுக்கங்களை உருவாக்குகிறது.

10ம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களுக்காக

தேர்வு எழுத அமர்ந்திருக்கும் எந்தவொரு மாணவருக்கும், தேர்வு தொடங்குவதற்கு முந்தைய கடைசி சில நிமிடங்கள் நம்பமுடியாத அளவிற்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது தெரியும்.

நான் உண்மையில் போதுமான அளவு படித்தேனா?

நான் நினைப்பது போல் எனக்குப் பொருள் நன்றாகத் தெரியுமா?

நான் சரியான கேள்விகளுக்குத் தயாரானேனா?

மிகவும் புத்திசாலி மற்றும் திறமையான மாணவர்களின் மனதிலும் கூட சுய சந்தேகமும் பதட்டமும் ஊடுருவுகின்றன, குறிப்பாக எதிர்கால வெற்றி இந்த ஒற்றைத் தேர்வின் முடிவைப் பொறுத்தது என்று உணருவதால்.

அதிர்ஷ்டவசமாக, மன அழுத்த காலங்களில் கடவுள் நமக்கு அமைதியைத் தருகிறார், மேலும் தேர்வுக்கு முன் ஜெபத்தில் நேரத்தைச் செலவிடுவது ஒரு பெரிய யதார்த்தத்தை நமக்கு நினைவூட்ட உதவும்: கடவுள் நம்மை நேசிக்கிறார், அவரை நேசிப்பதும் அந்த அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் நாம் எந்தப் பள்ளியில் சேருகிறோம் அல்லது நமக்கு என்ன வேலை இருக்கிறது என்பதை விட மிக முக்கியமானது.

நாம் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு நம்மை நேசிக்கும் நம் கடவுளிடமிருந்து அமைதி, பாதுகாப்பு மற்றும் அன்பை உணர உதவும் தேர்வுகளுக்கு முன் ஜெபிக்க சில பிரார்த்தனைகள் இங்கே.

நீங்கள் ஒரு தேர்வு அல்லது தேர்வுக்கு அமரும் முன் எந்த நேரத்திலும் இந்த எளிய பிரார்த்தனைகளில் ஒன்றைச் சொல்லுங்கள்:

எல்லாம் அறிந்தவரும், எப்போதும் இருப்பவருமான பரலோகத் தகப்பனே, என் மனதை மன அழுத்தத்திலிருந்து விடுவித்து, ஒரு சிறிய கணம் நின்று உமது பிரசன்னத்தை உணர அனுமதித்தருளும். உமது சித்தத்தைச் செய்ய என்னைப் பலப்படுத்துங்கள், நீர் என்னை வழிநடத்தும் வழிகளில் பரிசுத்த ஆவியானவர் என்னை வழிநடத்த அனுமதித்தருளும். உமது சித்தம் இன்றும் எப்போதும் நிறைவேறட்டும். ஆமென்.

அன்புள்ள கடவுளே, எல்லா சத்தியங்களுக்கும் மூலகாரணரே, இன்று இந்தத் தேர்வுக்கு முன் என்னைப் பலப்படுத்தி, உம்மிடமிருந்து வந்த பரிசுகளான என் திறமைகளை பிரகாசிக்க அனுமதிக்கும்படி நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

உமக்கு மரியாதை செலுத்த என் திறமைகளை எப்போதும் தைரியமாகப் பயன்படுத்த நான் பாடுபடுவேன். பூமியில் எந்தப் பாடமோ அல்லது தேர்வோ மிக முக்கியமானவற்றில் என்னை மதிப்பிட முடியாது என்பதை நான் அறிந்திருந்தாலும், இன்று என்னால் முடிந்ததைச் செய்ய உமது ஆசீர்வாதத்தை நான் இன்னும் கேட்கிறேன். இயேசுவின் நாமத்தில், நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

ஆண்டவரே, இன்று என் தேர்வு நெருங்கி வருவதால், அமைதியையும் சமாதானத்தையும் தரும்படி நான் வேண்டுகிறேன். என் மனதை அமைதிப்படுத்தி, என் பதட்டத்தைத் தணித்தருளும். நான் என் தேர்வை எழுதும்போது என்னுடன் இருப்பீராக. என் கல்வி முயற்சிகள் அனைத்திலும், என் வாழ்க்கையிலும், எதிர்காலத்தில் என்ன நடந்தாலும் உம்மை முழுமையாக நம்ப எனக்கு அருள் புரிவீராக. ஆமென்.

ஆபத்தான போலி வார்த்தைகள்

நீ அழகா இருக்கே..

உன் கேரக்டர் புடிச்சிருக்கு..

Friendly-யா பேசுறதுல என்ன தப்பிருக்கு..

இதெல்லாம் இந்த காலத்துல ரொம்ப சகஜம்..

சரியான பட்டிக்காடா இருக்கியே..

Whatsapp, Facebook-ல தானே பேசுறாங்க..

சும்மா பேசிப்பாரு..

என்னது BoyFriend-டே இல்லையா..

எனக்கெல்லாம் ரெண்டு மூணு பேரு இருக்காங்க..

இந்த காலத்துல எந்த பொண்ணு தப்பு பண்ணாம இருக்கு..

Teenage-ன்னா அப்படி இப்படி தாம்பா இருக்கும். இதெல்லாம் சகஜம்..

சீரியஸா
நீ அந்த மாதிரி
ஒரு வீடியோ கூட பார்த்ததே இல்லையா..?

Friend கூட சினிமா போனா என்ன தப்பு..?

இதெல்லாம் கூடவா வீட்ல சொல்வாங்க..

சும்மா ஜாலி டிரிப் தானே..

Hot வேணாம் Beer வேணா லைட்டா சாப்பிட்டு பாரு, ஜூஸ் மாதிரி தான் அது..

தயவு செஞ்சி வீட்ல மட்டும் சொல்லிடாத
அப்புறம் வெளியவே விடமாட்டாங்க.
எல்லாத்துக்கும் சந்தேகப்படுவாங்க..

Photo வச்சி என்ன பண்ண போறான், அதெல்லாம் ஒண்ணும் இல்ல அனுப்பு..

சும்மா லவ் பண்ணி பாரு
Set ஆனா ஓகே.
இல்லன்னா Breakup பண்ணிடு
அவ்ளோதானே.
இதுக்கு ஏன் பயப்புடுறே..

Etc etc etc..

=> இவையெல்லாம் வெறும் வார்த்தைகள் இல்லை..
அத்தனை பாலியல் பிரச்சனைகளும் இது போன்ற சாதாரண உரையாடல்களில்
இருந்து தான் தொடங்குகிறது.
வளர்கிறது.
அல்லது தூண்டப்படுகிறது..

சபை ஜனங்களாகிய நாமும் இந்த பொல்லாத உலகத்தில் இருக்க வேண்டியது இருப்பதால், காமுகர்களைப்பற்றிய போதுமான
விழிப்புணர்வு இல்லாமல் மிக ஆபத்தான சமூகவலைதளங்களில் உலாவருவதும், ஒழுக்கத்தின் மீதான மதிப்பை இழந்துவிட்டதும், சினிமாவை வாழ்க்கையோடு பொருத்தி வாழ்வதும், பொறுப்பற்ற வளர்ப்பும்,
பொய் பேசுவதும், தவறை மறைப்பதும்
தாமே தீர்வு தேடுவதும் போன்ற
பலப்பல காரணங்கள் சேர்ந்து
இரக்கமற்ற நவீன கொடூர இளைஞர்களிடம்
சிக்கி நாசமாக போக காரணமாக இருக்கிறது..

எது நடந்தாலும் ஆரம்பத்திலேயே
பெற்றோரிடம் சொல்லிவிடும்
பெண் பிள்ளைகள் பெரும்பாலும்
இதுபோன்ற நரகத்தில் சிக்குவதில்லை..

இழந்ததை திரும்ப பெற முடியாது,
இனி இருக்கின்ற பெண்களாவது மேலே சொன்ன ஆபத்தான போலி வார்த்தைகளை நம்பி ஏமாறாமல் இருக்க வேண்டும்..

40- வயதுக்கு மேற்பட்டவர்களின் கவனத்திற்கு

நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஆரோக்கியமாக இருக்க இவை அனைத்தையும் கவனியுங்கள்:
::::::::::::::::::::::::::::::::::
உங்கள் தேநீரில் பால் குறைவாக குடிக்கவும். அதற்கு பதிலாக, எலுமிச்சை அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

பகல் நேரத்தில், அதிக தண்ணீர் குடிக்கவும்; இரவு நேரத்தில், குறைவாக குடிக்கவும்.

பகலில் 2 கப் காபிக்கு மேல் குடிக்க வேண்டாம் அல்லது முற்றிலும் நிறுத்தவும் என அறிவுறுத்தப்படுகிறது.

எண்ணெய் உணவுகளை குறைவாக உண்ணுங்கள்

சிறந்த தூக்க நேரங்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை.

மாலையில்,மாலை 5 அல்லது 6 மணிக்குப் பிறகு ஏதாவது சிறிது சாப்பிடுங்கள்

குளிர்ந்த நீரில் மருந்துகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். படுக்கைக்குச் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன் உங்கள் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். மருந்துகளை உட்கொண்டு உடனடியாக படுத்துக்கொள்ளாதீர்கள்

நீங்கள் மேலும் குளிர்ந்த தண்ணீரைக் குடிப்பதை நிறுத்துங்கள் ஆனால் அறை வெப்பநிலையில் தண்ணீரை மட்டுமே குடிக்கவும்

ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணிநேரம் தூங்க முயற்சி செய்யுங்கள்.

முடிந்தால் மதியம் முதல் மாலை 3 மணி வரை அரை மணி நேரம் தூங்குவது, மன அழுத்தத்தைக் குறைக்கும். இளமையாகவும் , எளிதில் வயதாகாமல் இருக்கும்.

உங்கள் மொபைல் ஃபோன் பேட்டரியில் குறைவான சார்ஜில் அழைப்புகளை செய்ய வேண்டாம், ஏனென்றால் ஆபத்தான கதிர்வீச்சு மற்றும் அலைகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.

உங்களால் முடிந்தவரை அடிக்கடி சரிபார்க்க வேண்டிய இரண்டு விஷயங்கள்:

(1) உங்கள் இரத்த அழுத்தம்

(2) உங்கள் இரத்த சர்க்கரை.

தேவை ஏற்படின் யூரியா கிரியாட்டினின் அளவு உங்கள் உணவுகளில் குறைந்தபட்சமாக குறைக்க வேண்டிய ஆறு விஷயங்கள்:

(1) உப்பு

(2) சர்க்கரை

(3) பாதுகாக்கப்பட்ட இறைச்சி மற்றும் உணவுகள்

(4) குறிப்பாக வறுத்த சிவப்பு இறைச்சி

(5) பால் பொருட்கள்

(6) மாவுச்சத்துள்ள பொருட்கள்

உங்கள் உணவில் அதிகரிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்:

(1) கீரைகள்/ காய்கறிகள்(2) பீன்ஸ்(3) பழங்கள்(4)கொட்டைகள்

நீங்கள் மறக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்:

(1) உங்கள் வயது

(2) உங்கள் கடந்த காலம்

(3) உங்கள் கவலைகள்/குறைகள்

(4) மது புகை மாது சூது

(5)அடுத்தவர்களை பார்த்து இலக்கு நிர்ணயிப்பது நீங்கள் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் அல்லது எவ்வளவு வலிமையாக இருந்தாலும் உங்களிடம் இருக்க வேண்டிய மூன்று விஷயங்கள்:

(1) உங்களை உண்மையாக நேசிக்கும் நண்பர்கள்

(2) அக்கறையுள்ள குடும்பம்

(3) நேர்மறை எண்ணங்கள் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் செய்ய வேண்டிய ஏழு விஷயங்கள்:

(1) பாடுதல்

(2) நடனம்

(3) உண்ணாவிரதம்

(4) புன்னகை/சிரித்தல்

(5) மலையேற்றம்/உடற்பயிற்சி

(6) உங்கள் எடையைக் குறைக்கவும்.

நீங்கள் காத்திருக்க கூடாத ஐந்து விஷயங்கள்:

(1) நீங்கள் சாப்பிட பசி எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம்

(2) நீங்கள் குடிக்க தாகம் எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம்

(3) நீங்கள் தூங்குவதற்கு தூக்கம் வரும் வரை காத்திருக்க வேண்டாம்

(4) நீங்கள் ஓய்வெடுக்க சோர்வாக உணரும் வரை காத்திருக்க வேண்டாம்

(5) மருத்துவப் பரிசோதனைக்காகச் செல்ல உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் வரை காத்திருக்காதீர்கள், இல்லையெனில் வாழ்க்கையில் நீங்கள் வருத்தப்படுவீர்கள்

இந்த சுகாதார உதவிக்குறிப்புகளைப் படித்த பிறகு நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று:

(1) இதை உங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களுக்கு தயவுசெய்து கட்டாயம் பகிருங்கள், நீங்கள் அவ்வாறு செய்யும்போது, உங்களுடைய சமுதாயம் ஆரோக்கியமான புரிதலுடன் கூடிய வாழ்க்கை அமையும். உங்களின் இயல்பான பணிகளை,வியாபாரத்தை மேற்கொள்ளும் போது, நீங்கள் எவ்வளவு உடல் தகுதியுடன் இருக்கிறீர்கள் என்பதை அறிய, எப்பொழுதும் உங்கள் உடலைச் சரிபார்த்துக்கொள்ள மறக்காதீர்கள்,

மருத்துவ தகுதிகள்:

உயர் இரத்த அழுத்தம்

120/80 — இயல்பானது

130/85 –இயல்பான (கட்டுப்பாடு)

140/90 — உயர்

150/95 — மிக அதிகம்

பல்ஸ்

நிமிடத்திற்கு 72 (தரநிலை)

60 — 80 p.m. (சாதாரண)

40 — 180 p.m.(அசாதாரண)

உடல் வெப்ப நிலை

98.4 F (சாதாரண)

99.0 F மேலே ( காய்ச்சல்)

உங்கள் உறவினர்கள், நண்பர்கள் இந்த தகவலை பகிர்ந்து உதவுங்கள்….

மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படாமல் இருக்க இரவில் இரத்தம் உறைவதைத் தவிர்க்க நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும்.

தயவு செய்து உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இந்தக் கட்டுரையை பகிரவும்.
நன்றி.

கிறிஸ்தவ மதபோதகரின் உடலை அடக்கம் செய்த இந்து, முஸ்லிம்கள்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதரவற்ற கிறிஸ்தவ மத போதகரின் உடலை இந்து, முஸ்லிம்கள் இணைந்து அடக்கம் செய்திருக்கிறார்கள். மனிதநேயத்துக்கு சிறந்த எடுத்துக்கட்டாக இந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் போற்றுகிறார்கள்.

தமிழ்நாடு எப்போதுமே மத ரீதியான பிரிவினைகளை ஏற்காது. எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக வாழும் மாநிலம் ஆகும். சாதி மத வேறுபாடுகள் மூலம் இங்கு அரசியல் செய்ய முடியாது. இன்ன சாதி என்றோ, இன்ன மதம் என்றோ கூறி, தமிழ்நாட்டில் ஜெயிக்க முடியாது. மக்கள் தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்கள் அடிப்படையில் வாக்களிக்கிறார்கள்.

இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் மிகவும் ஒற்றுமையாக வாழும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கோயில் திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்குவது இங்கு தான். இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு திருவிழாவிற்கு முதல் வரிசையில் செல்வது இந்துக்கள் தான். இதுபோல் வேளாங்கண்ணி மேரி மாத ஆலயம் தொடங்கி பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மக்கள் செல்வார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை இந்துக்களுக்கு அடுத்தபடியாக கிறிஸ்தவர்கள் கணிசமான அளவு இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மிக ஒற்றுமையாக இருக்கிறார்கள். இங்கு மனித நேயத்திற்கு சிறந்த உதாரணம் என்கிற அளவில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் 90 வயதாகும் இயேசு ரத்தினம் (வயது 90). இவர் தென்காசி பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் மத போதகராக இருந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இயேசு ரத்தினம் கடந்த 30 ஆண்டுகளாக குடும்பத்தினரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக கடையநல்லூர் அருகே திரிகூடபுரம் இந்திரா காலனியில் வசித்து வந்திருக்கிறார். அவருக்கு அப்பகுதியினர் உணவு வழங்கி வந்தார்கள்.

இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக இயேசு ரத்தினம் நேற்று முன்தினம் இறந்து விட்டார். இதுகுறித்து அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தும் யாரும் அவரை பார்க்கவே வரவில்லை. இதனை அறிந்த சொக்கம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உடையார்சாமி, திரிகூடபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் செய்யது மீரான் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த இந்து, முஸ்லிம்களும் சென்று, கிறிஸ்தவ மதச்சடங்கின்படி இயேசு ரத்தினம் உடலை அடக்கம் செய்தனர். கிறிஸ்தவ மத போதகரின் உடலை இந்து, முஸ்லிம்கள் இணைந்து அடக்கம் செய்த நிகழ்ச்சி மனிதநேயத்துக்கு எடுத்துக்காட்டாகவும், நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது.