• Sunday 6 July, 2025 01:34 PM
  • Advertize
  • Aarudhal FM

யாரை கனம் பண்ண வேண்டும் ?

1) தாய், தகப்பனை – யாத் 20:12
2) புருஷனை – எஸ்தர் 1:20
3) மனைவியை – 1 பேதுரு 3:7
4) முதிர் வயது உள்ளவர்களை – லேவி 19:32
5) முடி நரைத்தவர்களை – லேவி 19:32
6) கர்த்தரை – நிதி 3:9
7) ராஜாவை – 1 பேது 2:17
8) கர்த்தருக்கு பயந்தவர்களை – சங் 15:4
9) உத்தம விதவைகளை – 1 திமோ 5:3
10) எல்லாரையும் – 1 பேது 2:17

கொள்ளையடிக்கிறவர்களுக்கு மாத சம்பளம் இலவச உணவு, பயண செலவு

IT-யில் வேலை பார்ப்பவர்களுக்கு இணையாக கொள்ளை கும்பலிலும் சலுகைகள் இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? உ.பி.யில் செல்போன் திருடும் கும்பல் மாதம் ₹15,000, இலவச உணவு, பயணச் செலவு என சலுகைகள் வழங்குகிறது. கொள்ளை சம்பவத்தில் ஒன்றில் கைதான பிறகு, ஜார்கண்டை சேர்ந்த மனோஜ்குமார் என்பவரது இந்த கும்பல் பற்றி தகவல் வெளிவந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்- கடும் தண்டனை வழங்கும் சட்டத்திருத்த மசோதா: முழு விவரம்

  • பெண்களை பின் தொடர்ந்து சீண்டுபவர்களுக்கும் 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படும்.
  • பெண்களை பாதுகாக்கும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

2025-ம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள், பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற சட்ட திருத்த மசோதாவை அவர் தாக்கல் செய்தார். அதில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையிலும் திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன.

அதன் விவரம் வருமாறு:-

2023-ம் ஆண்டு பி.என்.எஸ். சட்டம் தமிழகத்துக்கு பொருந்தும் வகையில் 2025-ம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள் (தமிழ்நாடு திருத்த சட்டம்) என்று அழைக்கப்படும். இதன்படி குற்றம் சாட்டப்பட்ட நபர் பிணையில் வெளியே வர முடியாது.12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் 18 வயதுக்கு உள்பட்ட இளம்பெண்கள் மற்றும் பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை வன்புணர்ச்சி செய்பவர்களுக்கு ஆயுள் காலத்திற்கும் கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். வன்புணர்ச்சி மற்றும் மரணத்தை விளைவிக்கும் அல்லது காயத்தை ஏற்படுத்தும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும் ஆயுள் கால சிறை தண்டனை மற்றும் மரண தண்டனை கிடைக்கும்.கூட்டு வன்புணர்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் காலத்துக்கும் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

18 வயதுக்கு உள்பட்ட பெண்களிடம் கூட்டு வன்புணர்ச்சியில் ஈடுபட்டால் ஆயுள் காலத்திற்கும் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும். சம்பந்தப்பட்ட நபரின் இயற்கையான ஆயுள் காலம் வரையில் நீட்டிக்கப்படும். மேலும் அபராதம், மரண தண்டனை ஆகியவையும் விதிக்கப்படும்.மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கும் மரண தண்டனை அல்லது ஆயுள்கால சிறை தண்டனை விதிக்கப்படும்.

வன்புணர்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ஆயுள் கால சிறை ஆகியவையும் விதிக்கப்படும். காவல்துறை அலுவலர், அரசு பணியாளர், ஆயுதப்படை உறுப்பினர், சிறைச் சாலைகள், தடுப்பு காவல் இல்லம் ஆகியவற்றில் பெண்கள் அல்லது குழந்தைகள் குறிப்பிட்ட நிறுவனத்தின் பணியாளர்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டாலோ, அதிகாரம் மிக்க நபர் அல்லது நெருங்கிய உறவினர்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டாலோ 20 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் சிறை தண்டனை, ஆயுள் காலத்துக்கும் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலும், பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் தாக்குதல் அல்லது பலத்தை பயன்படுத்தினாலும் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும்.பெண்களின் ஆடைகளை அகற்றி தாக்குதலில் ஈடுபடுபவர்கள், மறைந்திருந்து பார்த்து பாலியல் கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் ஆகியோருக்கும் 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை கிடைக்கும்.பெண்களை பின் தொடர்ந்து சீண்டுபவர்களுக்கும் 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படும்.

ஆசிட் வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டு கொடுங்காயத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஆயுள் தண்டனை, கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். ஆசிட்டை வீசுபவர்களுக்கும், வீச முயற்சிப்பவர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கும் குறையாத மற்றும் ஆயுள் காலம் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

மேற்கண்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் ஜாமினில் வெளிவர முடியாது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்புணர்ச்சி மற்றும் பாலியல் குற்றங்கள் ஆகியவற்றில் சட்டம் முழு வேகத்துடன் கையாளப்படுவதற்கும், அது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் விதமாகவும் இதுபோன்ற தண்டனைகள் வழங்கப்படுவது அவசியமாகிறது.

இதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களை உறுதியாக தடுக்க இந்த சட்டத் திருத்தம் முன் மாதிரியாக இருக்கும் என்று மாநில அரசு நம்புகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சட்டத்திருத்தத்தை தாக்கல் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு தமிழக அரசு முழு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. பெண்களை பாதுகாக்கும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு உரிய தண்டனையும் வாங்கி கொடுத்துள்ளோம். ரெயில் முன்பு தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனையை வாங்கி கொடுத்திருக்கிறோம்.

தமிழக அரசின் இது போன்ற பெண்களுக்கு எதிரான 80 சதவீத வழக்குகளில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக 2 லட்சத்து 39 ஆயிரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளோம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் யாராலும் மன்னிக்க முடியாத குற்றங்கள் என்பதை கருத்தில் கொண்டு புதிய சட்டத்திருத்தத்தை இன்று நான் தாக்கல் செய்துள்ளேன்.இவ்வாறு அவர் பேசினார்

பல் வலிக்கு நிரந்தர தீர்வு!

25 மிளகு (நன்றாக இடித்து), சிறிது பட்டையை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும்.

1 டம்ளர் அளவுக்கு நீர் சுண்டியதும் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து, மேலும் 1 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.

அந்த சுடுநீரில் நறுக்கி வைத்த இஞ்சி துண்டுகளை (சிறிதளவு) சேர்த்து 20 நிமிடங்கள் கழித்து குடிக்கவும்.

தொடர்ந்து 3 நாட்கள் இந்த கசாயத்தை குடித்துவர பல் வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

ஹெர்னியா என்னும் குடலிறக்கம் உங்களுக்கு வரக்கூடாதா? இதை முதலில் செய்யுங்க

ஹெர்னியா என்னும் குடலிறக்கம் ஏற்படாமல் தண்ணீரை இப்படி குடிங்க!


தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதி வேகமாக செல்லும். அதனால் ஹெர்னியா ஏற்படும்

நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.


சிறுநீரக பாதிப்பு
தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், அதனால் சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை அல்லது இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்கி, அதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் அதுவே உட்கார்ந்து குடித்தால், நீரானது உடலின் அனைத்து இடங்களிலும் நுழைந்து நச்சுக்களை அடித்துக் கொண்டு சிறுநீரகங்களுக்கு கொண்டு சென்று, நச்சுக்களை உடலில் இருந்து முறையாக வெளியேற்றிவிடும்.

ஆர்த்ரிடிஸ்
சில ஆய்வுகளில் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால், ஆர்த்ரிடிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக சொல்கிறது. அதுவும் தண்ணீரை நின்றவாறு குடிப்பதால், அது உடலின் மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. இப்படியே நீண்ட நாட்கள் இப்பழக்கத்தைக் கொண்டால், நாளடைவில் அது மூட்டு வலிக்கு உட்படுத்தி, ஆர்த்ரிடிஸ் ஏற்பட வழிவகுத்துவிடும்.


பொதுவாக நின்று கொண்டிருக்கும் போது சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது செயல்பட ஆரம்பிக்கும். சிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்தால், இதயத் துடிப்பு அதிகமாகும், இரத்த நாளங்கள் விரியும், நரம்புகள் அதிகமாக டென்சனாகும், கல்லீரலில் இருந்து சர்க்கரை வெளியேற்றப்படுவது என்று உடலே சுறுசுறுப்புடன் வேகமாக இயங்கும். அந்நேரம் குடித்தால், நீரானது நேரடியாக சிறுநீர்ப்பையை அடைந்து வெளியேறும். ஆனால் உட்கார்ந்து இருக்கும் போது பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்து, உடல் ரிலாக்ஸ் ஆகி, செயல்பாடுகளின் வேகம் குறைந்து, நரம்புகள் அமைதியாகி, உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் நீரை அனைத்தும் மெதுவாக செரிமான மண்டலத்தில் இருந்து வெளியேற்றப்படும்.
அண்ணாந்திச் குடித்தால் காது நோய் ஏற்படுத்தும்

டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும். தண்ணீரைத் தலை அண்ணாந்திச் குடித்தால் காது நோய்களுக்கு வழிவகுக்கும். தண்ணீரை அண்ணாத்திக் குடித்ததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன.

சில குறிப்புகள்
உடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற, போதிய அளவில் தண்ணீரை உட்கார்ந்து குடிக்க வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு குடித்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

காலையில் எழுந்ததும் 1-3 டம்ளர் தண்ணீர் குடிக்கவும்.

மதிய உணவுக்கு முன் 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் குடிக்கவும்.

இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் குடிக்கவும்.

டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும்.

அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும்.

வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.

நம்மில் பலரும் நின்று கொண்டு நீர் அருந்துவதும் , இடது கையால் அருந்துவதும், ஒரே மூச்சில் அவசரமாக அருந்துவதும் சர்வ சாதாரணமாகவே செய்கிறோம்.

திபெத் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 95 தாண்டியது ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்

திபெத் பகுதியில் உள்ள மலைத்தொடரில் செவ்வாய்க்கிழமை அன்று காலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 130 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.திபெத்தில் உள்ள புனித நகரமான ஷிகாட்சேயில் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.5 என்ற அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.மேலும், அமெரிக்க புவியியல் ஆய்வின் தரவுகளின்படி, பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு சிறிய நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளன

திபெத் பகுதியில் உள்ள மலைத்தொடரில் செவ்வாய்க்கிழமை அன்று காலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 130 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

திபெத்தில் உள்ள புனித நகரமான ஷிகாட்சேயில் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.5 என்ற அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க புவியியல் ஆய்வின் தரவுகளின்படி, பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு சிறிய நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளன

திபெத்தின் புனித நகரங்களில் ஒன்றாக ஷிகாட்சே கருதப்படுகிறது. இது திபெத்திய புத்த மதத்தின் முக்கிய நபரான பஞ்சன் லாமாவின் பாரம்பரிய இடமாகும். அவரது ஆன்மீக அதிகாரம் தலாய் லாமாவுக்கு அடுத்தபடியாக உள்ளதுசீன அரசு ஊடகங்கள் ஒளிபரப்பிய வீடியோ பதிவுகளில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்ததையும், இடிபாடுகளுக்குள் சென்று மீட்புப் பணியாளர்கள் அங்கு சிக்கி உள்ள மக்களுக்கு தடிமனான போர்வைகளை வழங்குவதைக் காட்டுகின்றன.

கடன் தொல்லையால் பரிதாபம் ஜூஸில் விஷம் கலந்து குடித்து போதகர், தாய் தற்கொலை

கன்னியாகுமரி: கடன் தொல்லையால் போதகர், தனது தாயுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். குமரி மாவட்டம் தக்கலை அருகே பரைக்கோடு கோவில்விளையை சேர்ந்தவர் தங்கராஜ் (60). இவரது மனைவி அமுதலதா (50). இவர்களுக்கு சுமாராணி (25) என்ற மகளும், மெல்பின் ராஜ் (23) என்ற மகனும் உள்ளனர்.

இதில் மெல்பின்ராஜ் முண்டவிளையில் உள்ள கிறிஸ்தவ சபையில் போதகராக இருந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. சுமாராணிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி கணவருடன், தக்கலை அருகே வசித்து வருகிறார்.சகோதரி திருமணத்துக்காக மெல்பின் ராஜ், வங்கியில் கடன் வாங்கி இருந்தார். பின்னர் வங்கி கடன் வாங்கி வீடு கட்டினார்.

இதனால் ரூ.20 லட்சம் வரை கடன் தொகை அதிகரித்துள்ளது. கடனை அடைக்க பெரும் சிரமப்பட்டுள்ளார். வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மெல்பின் ராஜ் மனம் உடைந்தார். பெற்றோரிடம் ஆலோசித்தார். ஆசையாக கட்டிய வீட்டை விற்று கடனை அடைக்கவும் மனம் இல்லாமல் தவித்துள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் ஜூஸில் விஷம் கலந்து தந்தை தங்கராஜிடம் கொடுத்துள்ளார். விஷம் கலந்திருப்பது தெரியாமல் அவர் பனி அதிகமாக இருப்பதால் காலையில் குடிக்கிறேன் என கூறி விட்டார். பின்னர் தாய்க்கு கொடுத்து தானும் குடித்துவிட்டு உறங்க சென்றார். மற்றாரு அறையில் படுத்திருந்த தங்கராஜ் நேற்று அதிகாலை தண்ணீர் குடிக்க எழுந்து வந்தபோது, மனைவியும் மகனும் வாயில் நுரை தள்ளியபடி கிடந்ததை பார்த்து கதறினார்.சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனையில் இருவரும் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் ஜூஸில் விஷம் கலந்து குடித்தது தெரிய வந்தது. ஜூஸில் விஷம் கலந்து இருப்பது தெரிந்திருந்தால் நானும் அவர்களுடன் குடித்து இறந்திருப்பனே என தங்கராஜ் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது

தேவன் பயன்படுத்திய முதியவர்கள்

வேதாகமத்தில் தேவன் பயன்படுத்திய முதியவர்கள்

1) தேவன் நோவாவை காப்பாற்றிய போது வயது 600. நீதிமானாக இருந்த நோவாவை நீரில் மூழ்காமல் இருக்கும் கப்பல் கட்டும் பொறியாளனாக தேவன் பயன்படுத்தினார்.

2) தேவன் ஆபிரகாமை கானான் தேசம் அழைத்த போது வயது 75. விக்கிரக ஊரில் கணவனாக இருந்தவனை #கானான் அழைத்து விசுவாச தகப்பன் ஆக்கினார்.

3) தேவன் இஸ்ரவேலரை விடுதலையாக்க மோசேயை அழைத்த போது வயது 80. ஆடு மேய்த்தவனை இருபது லட்சம் மனிதர்களை மேய்க்கும் தலைவன் ஆக்கினார்.

4) தேவன் காலேப்பை நிலத்தினால் ஆசீர்வதித்த போது 85 வயது. 40 வருஷம் கால்நடையாக நடந்தவனுக்கு மலைதேசம் கொடுத்து கானானின் குடிமகனாக்கினார்.

5) அன்னாள் 84 வயதானபோது கைம்பெண்ணாக இருந்தவளை தீர்க்கதரிசி ஆக்கினார்.

6) சகரியா – எலிசபெத் வயதான பின்பும் குழந்தை இல்லாமல் இருந்தார்கள். பிள்ளை இல்லாதவர்களுக்கு நல்ல குழந்தையை கொடுத்தார்.

முதியவர்களையும் தனது பணிக்கு பயன்படுத்தியவர் தான் நம் தேவன்.

வேதத்தில் என்னென்ன மாடுகள் இருக்கிறது தெரியுமா?

வேதத்தில் உள்ள மாடுகள்

1) அடிக்கபடும்படி செல்லும் மாடு (நீதி 7:22) = தேவ ஜனங்கள் அடிக்கபடுகிற மாடு போல காணப்பட வேண்டும். இது பாடுகளின் பாதையை காட்டுகிறது. கசாப்பு கடைக்கு செல்லும் மாடுகள் கூட்டம் கூட்டமாக அழைத்து செல்லபடும். இயேசு சென்ற பாதை இது (அப் 8:32). தம்முடைய அடிச்சுவடியை தொடர்ந்து வரும் படி மாதிரியை வைத்து போனார்( 1 பேது 2:21) தேவ ஐனமே எனக்கு ஏன் பாடுகள் என்று நினனக்காதே. அநேக உபத்திரவங்களின் வழியாக தேவ ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும் (அப் 14:22)

2) புல்லை தின்னும் மாடு (ஏசா 1:3) = மாடுகள் வழியில் புல்லை வேகமாக உண்டு செல்லும். மாலையில் புல்லை வாய்க்கு கொண்டு வந்து அசை போடும். அது போல தேவ பிள்ளைகள் சபையில் கேட்ட சத்தியங்களை வீட்டிற்கு சென்று தியானிக்க வேண்டும். இரவும் பகலும் தியானமாய் இருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங் 1:2) அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் சங் 1:3)

3) எருது பலமுள்ளது (சங் 144:14) = வசனத்தை தியானிக்க தியானிக்க பெலன் அடைகிறோம். சீயோனில் தேவ சந்ததியில் காணப்பட பெலன் தேவை (சங் 84:7)

4) நிலத்தை உழுகிற எருது (ஏசா 30:24) = இது தேவ சித்தத்தை காட்டுகிறது.

5) சர்வாங்க தகனபலியான மாடு (எண்ணாக 7-35) = நாமும் நமது அவயங்களை தேவனுக்கு ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும் – ரோ 12:1

6) மேய்ப்பனை குறித்து அறிந்த மாடு (ஏசா 1:3) = மாட்டுக்கு தன் மேய்ப்பனை குறித்து நல்ல அறிவு உண்டு. கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார். நான் தாழ்ச்சி அடையேன் (சங் 23:1) என்ற அறிவு ஒவ்வொரு தேவ பிள்ளைகளுக்கு வேண்டும்.

7) மாடுகள் நல்ல மேய்ச்சல் உள்ள இடத்தில் மேயும் (ஏசா 30:23) = அது போல நாமும் சத்தியத்தை போதிக்கிற சபையை தேடி செல்ல வேண்டும். கடமைக்கு (Sunday) சபைக்கு செல்ல கூடாது. சத்தியத்தை கேட்டு ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர வேண்டும்

8) ஒய்வு நாளில் வேலை செய்யாத மாடுகள் (யாத் 23:12) = தேவபிள்ளைகள் ஒய்வு நாளில் சொந்த பேச்சை கூட பேசக்கூடாது (ஏசா 58:13). ஏனென்றால் ஒய்வு நாள் கர்த்தருக்குரியது. Seventh day Adventist கார்ர்கள் ஓய்வு நாளுக்கான சாப்பாட்டை ஒரு நாள் முன்னாடியே (புளியோதரை, லெமன்) ஆயத்தம் செய்து விடுவார்கள். ஒய்வு நாள் அன்று வீட்டில் சமையல் கூட செய்ய மாட்டார்கள். அதுமட்டுமல்ல சில கிறிஸ்தவ குடும்பங்களில் Sunday பிளளைகளை படிக்ககூட அனுமதிக்க மாட்டார்கள். பரிசுத்த ஒய்வு நாளில் உங்கள் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற முற்படாதிருங்கள். ஒய்வு நாளில் திருமண நிகழ்ச்சிக்கு செல்லுதல், நண்பர்கள் வீடுகளுக்கு செல்லுதல், களியாட்டுகளில் ஈடுபடுதல் போன்றவற்றை தவிர்க்கவும். இந்த நாளை கர்த்தருக்கென்று பிரித்து வைத்து கர்த்தருக்குள் மகிழ்ந்து இருங்கள்
ஒய்வு நாளை கனப்படுத்தினால் நாம் ஆசிர்வதிக்கபடுவோம் (ஏசா 53:14) ஒய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாயாக (யாத் 20:8)

9) நுகத்தை சுமக்கும் மாடு (மத் 11:29) = இது தாழ்மையான ஜிவியத்தை காட்டுகிறது. இயேசுவும் மாட்டை போல ஜிவித்து இருக்கிறார் (என் நுகத்தை ஏற்றுக் கொண்டு – மத் 11:29)

10) மாடுகள் கூட்டம் கூட்டமாக செல்லும் = இது பரிசுத்தவான்களின் ஐக்கியத்தை காட்டுகிறது. சகல பரிசுத்தவான்களோடு கூட கிறிஸ்துவின் அன்பை அறிய வேண்டும் (எபேசி 3:18). வேத வாசிப்பு, ஜெபம், பரிசுத்தவான்களின் ஐக்கியம் ஆகிய இந்த மூன்றும் நமக்கு சந்தோஷத்தை தருகிறது.

11) களஞ்சியங்களை நிரப்பும் எருது (நீதி 14:4) = சபை ஆத்துமாக்களால் நிரப்பபட வேண்டும். ஜனங்கள் இரட்சிக்கபட நாம் அவர்களுக்கு சுவிஷேம் சொல்ல வேண்டும், அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.

கர்த்தர் நம் ஜெபத்தைக் கேட்கிறவர்.


(சங்கீதம்21:2)
அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்கு தந்தருளி,அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தை தள்ளாதிருக்கிறீர்.

கர்த்தர் நம் பிள்ளைகளுக்காக ஜெபிக்கும் ஜெபத்தை கேட்கிறார்.

ஆபிரகாம் – கர்த்தர்

(ஆதியாகமம்17:20(18-20)
இஸ்மவேலுக்காகவும் நீ செய்த “விண்ணப்பத்தைக் கேட்டேன்”; நான் அவனை ஆசீர்வதித்து,அவனை மிகவும் அதிகமாக பலுகவும் பெருகவும் பண்ணுவேன்.
அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான்.
அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்.

ஆபிரகாமிடம் கர்த்தர் எதிர்பார்த்த குணங்கள் இல்லாமல் இருந்தது.
1)ஆபிரகாம் கர்த்தர் சொன்னதை நிறைவேற்றும் வரை காத்திருக்கவில்லை.

கர்த்தர் சொன்னதை நிறைவேற்றுகிறவர்.
(ஆதியாகமம்28:15)
நான் உனக்குச் சொன்னதை செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை.


2)கர்த்தருடைய வார்த்தையைவிட மனைவியின் வார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தான்.
(1சாமுவேல்2:29)
நீ என்னைப் பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன்.

3)உனக்கு ஒரு மகன் பிறந்துவிட்டான் என்பதற்காக என்னை மறந்து விட்டாயோ?பதின்மூன்று வருடமாக என்னைத் தேடவில்லையே?ஒரு குழந்தைக்காகத்தான் என்னை நம்பினாயா?
கர்த்தர் சொல்லுகிறார்:-
நீ என்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை(ஏசாயா 49:15)
உன்னை அழைத்தது நான் அல்லவா?(மத்தேயு7:11)
++++++++++++++++++++
நாம் தவறு செய்துவிட்டால் கர்த்தர் நம்மிடம் பாராமுகமாய் இருந்துவிடுவதில்லை,திரும்பவும் நம்மைத் தேடிவருகிறார்.
நம் விண்ணப்பத்தைக் கேட்கிறார். அரைகுறை மனதோடு அல்ல,ஏதோ,நீ கேட்டுவிட்டாய் என்பதற்காக அவனையும் ஆசீர்வதிக்கிறேன் என்று சொல்லவில்லை; முழுமனதோடு கேட்கிறார்,செய்கிறார்.

கர்த்தருக்கு நம் சூழ்நிலை தெரியும்,எந்த நிலையி்ல் தவறு செய்தோம் என்று கர்த்தர் அறிவார்.
(சங்கீதம் 103:14)
நாம் மண்ணென்று நினைவு கூறுகிறார்.
ஆகவேதான்,ஆபிரகாமை மறுபடியும் தேடி வந்தார்,அவன் விண்ணப்பத்தைக் கேட்டார்,இஸ்மவேலை ஆசீர்வதித்தார்,இஸ்மவேலின் வம்சத்தார் இன்றுவரை ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.
(எண்ணாகமம் 23:19)
பொய்சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல;மனம்மாற அவர் மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?

கர்த்தர் நம் பிள்ளைகளுக்காக ஏறெடுக்கும் விண்ணப்பங்களை நிச்சயமாக கேட்பார்,நம்முடைய எதிர்பார்ப்புக்கும் மேலாய் ஆசீர்வதிப்பார்.

GOD BLESS YOU.

போதகர் N.இக்னேஷியஸ் உலகநாதன்.
9841517622
மதுரவாயல்,சென்னை-95.