• Sunday 13 July, 2025 07:28 AM
  • Advertize
  • Aarudhal FM

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து 3 பேர் பலி

கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவர் உள்பட இருவர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியுள்ளது.ரயில் மோதியதில் பள்ளி வேன் 50 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்ததில் இருவர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.இந்த விபத்தில் படுகாயமடைந்த வாகன ஓட்டுநர், பள்ளிக் குழந்தைகள் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள் அளித்துள்ள தகவலின் படி, ஓட்டுநர் மற்றும் 5 பள்ளிக் குழந்தைகள் வேனில் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.கேட் கீப்பரின் கவனக் குறைவால் ரயில்வே கேட் மூடப்படாததே விபத்துக்குக் காரணம் என்றும் முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரா ரயில் விபத்து.. தீவிபத்து அச்சம், இறங்கி ஓடிய போது பகீர்- பலர் உடல் சிதறி பலி

புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் எதிர்பாராத விதமாக தண்டவாளத்தை கடக்கையில் கர்நாடகா எக்ஸ்பிரஸ் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிலர் உயிரிழக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இம்மாநிலத்தின் ஜல்கோவன் மாவட்டத்தில் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில் பெட்டிகளில் தீவிபத்து ஏற்பட்டிருப்பதாக பயணிகள் அச்சப்பட்டுள்ளனர். இதனால் தாங்கள் பாதிக்கப்படக் கூடாது என்று கருதி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.

இதையடுத்து பயணிகள் பலரும் கீழே இறங்கினர். பின்னர் அருகிலிருந்த தண்டவாளத்தை கடக்க முற்பட்டனர். அப்போது அந்த வழித்தடத்தில் அதிவேகமாக வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் பயணிகள் பலரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுவரை 10 பயணிகள் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.