- 15
- 20250626

இந்து கோயிலாக மாறிய கிறிஸ்தவ தேவாலயம்
- ராஜஸ்தான்
- 20250626
- 0
- 15
ராஜஸ்தான் கிராம மக்கள் மீண்டும் இந்துக்களாக மாறியதால் கோயிலாக மாறிய தேவாலயம்
அர்ச்சகராக மாறிய கிறிஸ்தவ மத போதகர்
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ் வாரா மாவட்டம் சோட்ல குடா கிராமத்தில் பழங்குடியின மக் கள் அதிகளவில் வசிக்கின்றனர்.கவுதம் கராசியா என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றி உள்ளார். இதையடுத்து அந்த கிராமத்தில் தனக்கு சொந்தமான இடத்தில் தேவாலயம் (சர்ச்) கட்டி பிரார்த்தனை செய்து வந் துள்ளார்.இந்த சூழ்நிலையில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய கிராம மக்கள் மீண்டும் இந்து மதத்துக்கு மாற முடிவு செய்தனர். இதையடுத்து, தேவாலயத் துக்கு காவி வண்ணம் தீட்டினர். சுவரில் இருந்த சிலுவை குறி யீட்டை அழித்துவிட்டு இந்து மத குறியீடுகளை வரைந்துள்ளனர்.இந்நிலையில், அந்த கோயி லில் பைரவர் சிலை பிரதிஷ்டை விழா நேற்று முன்தினம் நடை பெற்றது. முன்னதாக, அந்த சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட் டனர். கிறிஸ்தவ மத போதக ராக இருந்த கவுதம், இந்தக் கோயிலின் அர்ச்சகராக இருப் பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு அந்த கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது
Christian church turned into Hindu temple