• Friday 24 January, 2025 03:28 PM
  • Advertize
  • Aarudhal FM
செங்குத்துப் பாறை மேல் குகைக் தேவாலய கட்டிடம்

செங்குத்துப் பாறை மேல் குகைக் தேவாலய கட்டிடம்

அபுனா யெமடா குஹ் என்பது வடக்கு எத்தியோப்பியாவின் டைக்ரே பகுதியில் அமைந்துள்ளது. ஒரு பெரிய மலைப் பாறையைக் குடைந்து செதுக்கிக் கட்டப்பட்ட ஒரு தனித்துவமான வரலாற்றுச் சிறப்புமிக்க கிருஸ்துவ மத தேவாலயமாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,580 மீட்டர் (8,460 அடி) உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கட்டடம் கெரால்டா மலைகளில் உள்ள அமைதியும் தூய்மையும் கொண்ட ஒரு குன்றின் மேல் பகுதியில் அமைந்துள்ளது, இது உலகின் எளிதில் அணுக முடியாத தேவாலயங்களில் ஒன்றாகும்.

தேவாலயம் ஒரு குன்றின் விளிம்பில் உள்ள திடமான பாறையால் செதுக்கப்பட்டது. அதை அடைய, பார்வையாளர்கள் செங்குத்துப் பாறை முகத்தில் ஏற வேண்டும். பல நூற்றாண்டுகளாகப் பாறையில் அமைந்திருக்கும் கைப்பிடிகள் மற்றும் கால்தடங்களைத் தான் பயன்படுத்தித் தான் ஏறுக்கிறார்கள். இதற்கு நல்ல உடல் தகுதி தேவை.

6ஆம் நூற்றாண்டில் பைசண்டைன் பேரரசில் இருந்து எத்தியோப் பியாவிற்கு கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப வந்த ஒன்பது பேரில் ஒருவரான அபுனா யெமாதா குஹ் என்பவரால் இது உருவாக்கப்பட்டுள்ளது. தேவாலயம் இன்னும் செயலில் உள்ள வழிபாட்டுத் தலமாக உள்ளது. பாதிரியார்களும் சுற்றுலாப் பயணிகளும் இதைக் காண்பதற்கான பயணத்தைத் தவறாமல் மேற்கொள்கின்றனர்.