• Monday 15 September, 2025 10:32 AM
  • Advertize
  • Aarudhal FM
தைரியமாயிரு

தைரியமாயிரு

கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக.. 2சாமுவேல் 10:12

கலங்கி போய் இருக்கிறீங்களா… மனதில் அமைதி இல்லாமல் காணப்படுறீர்களா… என் காரியத்தை குறித்து யார் எனக்காக செயல்படுவார்கள் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறீர்களா..மனம் தளர்ந்து சோர்ந்து போய் இருக்கிறீங்களா.. கவலைப்படாதீங்க.. உங்கள் பார்த்து ஆண்டவர் சொல்லுகிறார்..தைரியமாயிரு என்று ஆண்டவர் உரிமையோடு உங்களை பார்த்து சொல்லுகிறார்..நீங்க நன்றாக இருக்க வேண்டும் என்று மனிதன் நினைக்க மாட்டான் ஆனால் நீங்க நன்றாக இருக்கவேண்டும் நன்றாக வாழவேண்டும் என்று நினைக்கிறவர் ஆண்டவர் மட்டுமே.. உங்கள் காரியம், தொழில், வேலை, ஊழியம் எல்லாவற்றிலும் நலமானதை செய்வார்.. சோர்ந்து போகாதீங்க.. ஆண்டவரின் பார்வைக்கு நலமானதை உங்க வாழ்க்கையில் செய்வார்.. உங்களை சந்தோஷப்படுத்துவார்.. ஆண்டவரை மாத்திரம் நோக்கி கூப்பிடுங்க.செல்வின் 👉🏻